ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 22 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!




சதுரகிரி பயணம்..... - Page 22 SxCdjytQQzO4vVLM3L0G+001


Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total


சதுரகிரி பயணம்..... - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:33 am

krishnaamma wrote:மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//

தாழம்பூ சிவனுக்கு உதவாதே?............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1210278

தாழம்பூ குங்குமம் , தாழம்பூ மணத்துடன் கிடைக்கும் /தயாரிக்கப்படும் குங்குமம் . மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலும் கிடைக்கும் என எண்ணுகிறேன் .
தாழம்பூ + குங்குமம் இல்லை . இரு வேறு பொருள்கள் இல்லை . தாழம்பூகுங்குமம் ஒரே பொருள் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jun 09, 2016 10:36 am; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by M.Jagadeesan Thu Jun 09, 2016 11:32 am

இனிதே முடித்துவிட்டீர்கள் ! ஒருமுறை போய்வரலாம் என்று எண்ணுகிறேன் . நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by M.Jagadeesan Thu Jun 09, 2016 11:34 am

தாழம்பூ சிவனுக்கு ஏன் உதவாது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Thu Jun 09, 2016 11:57 am

இணையத்தில் இருந்து:

படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா, பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக் கூறினார். தனது அடி முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.

தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல், பிரம்மாவுக்கு ஆச்சரியம். பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்த தெப்படி என்பதே அது.

பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் தனது நான்கு தலைகளில் உள்ள மூளையை வைத்துப் பொய் நாடகம் ஒன்றைக் கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக, தான் கூறப் போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன். இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும், பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம் பூவை நான் தரிக்க மாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார். அக்னி ரூபமே அண்ணாமலை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Thu Jun 09, 2016 11:58 am

கூடுதல் தகவல்:

அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by M.Jagadeesan Thu Jun 09, 2016 1:14 pm

இனியவனுக்கு ......

இந்தக் கதையை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை . காரணம் ...


சிவபர தத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள், 'தாழம்பூ கதை'யை ஏற்கமாட்டார்கள். 'உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்ததாகக் கொண்டால்... அந்தப் பேரொளி, ஒரு வரைமுறைக்கு உட்பட்ட வடிவமாகி விடும். இது தவறு; பேரொளி யாக நின்ற சிவனாரின் லிங்கோத்பவ வடிவம் வரைமுறைக்கு உட்பட்டது அல்ல' என்பது அவர்களது கருத்து!

( நன்றி - இணையம் )

உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்தது என்றாலே , சிவனுக்கு மேல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றுதானே பொருள் .

ஆனால் சிவனை

ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றுதானே திருவாசகம் கூறுகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Thu Jun 09, 2016 1:30 pm

அய்யா நன்றி விளக்கத்திற்கு.

(நமக்கும் இதற்கும் ரொம்ப ரொம்ப தூரம் அய்யா)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by krishnaamma Fri Jun 10, 2016 1:38 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//

தாழம்பூ சிவனுக்கு உதவாதே?............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1210278

தாழம்பூ குங்குமம் , தாழம்பூ மணத்துடன் கிடைக்கும் /தயாரிக்கப்படும் குங்குமம் . மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலும் கிடைக்கும் என எண்ணுகிறேன் .
தாழம்பூ + குங்குமம் இல்லை .  இரு வேறு பொருள்கள் இல்லை . தாழம்பூகுங்குமம் ஒரே பொருள் .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210317

தெரியும் ஐயா, எந்த ரூபத்திலும் தாழம்பு சிவனுக்கு ஆகாது என்று எங்க அப்பா சொல்வார்......தாழம்பூ குங்குமம், ஊதுபத்தி என்று எதுவுமே கிட்டே வரக்கூடாது என்று சொல்வார் புன்னகை ...முன்பே சொல்லி இருக்கேன் எங்காத்தில், அப்பா மற்றும் தம்பிகள் ஸ்படிக லிங்க பூஜைகள் தவறாமல் செய்வார்கள் என்று புன்னகை ..........அதனால் , நாங்கள் தாழம்பூ வைத்துக்கொள்ளவும் , ஜடை தைத்துக்கொள்ளவும்  கூட ஆட்சேபிப்பார்.......அதனால் தான் கேட்டேன் சிவன் கோவிலில் எப்படி தாழம் பூ குங்கும பிரசாதம் என்று?..............
.
.
.
ஸ்பெஷல் தாழம்பூ குங்குமத்தை, மதுரை லிருந்து நாங்கள் தருவித்துக் கொள்வோம் ஐயா அந்த குங்குமத்தை, வெள்ளிகிழமை லக்ஷ்மி பூஜைக்கும், நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும் நாங்கள்
உபயோகிக்கிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by krishnaamma Fri Jun 10, 2016 1:43 am

யினியவன் wrote:கூடுதல் தகவல்:

அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1210323

பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்று கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் தாழம்பூ பற்றிய இந்த செய்தி , நான் கேட்டறியாத ஒன்று இனியவன்.....பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Fri Jun 10, 2016 7:27 am

yiniyavan wrote:ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.

அறியாத விஷயம் . சதுரகிரி பயணம்..... - Page 22 1571444738 சதுரகிரி பயணம்..... - Page 22 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 22 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum