Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters
Page 16 of 24
Page 16 of 24 • 1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24
சதுரகிரி பயணம்.....
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்
Re: சதுரகிரி பயணம்.....
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதன் முறை அங்கு சென்று வந்த பிறகு இந்த கஞ்சி மடத்தைபற்றி நினைத்து, நினைத்து வெகு நாட்கள் வியந்து கொண்டிருந்தேன்.krishnaamma wrote: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
'நம் சுமையை தூக்கிப்போகவே ஆளைத்தேடும் நாம் எங்கே... அடுத்தவர்களின் பசியை போக்குவதற்காகவே சுமந்து சென்ற இவர்கள் எங்கே.....' என்று, இன்னமும் என் வியப்பு அகலாமல் தான் இருக்கிறது. அதிலும் இந்த மலையில் சுமை தூக்குபவர்களை நினைத்தால்.... பெரும்பேறு பெற்றவர்கள் என்று பொறாமை கொள்வதா அல்லது அவர்களின் வறுமையின் காரணமாக இவ்வளவு மெய்வருத்தும் வேலைகளை செய்கிறார்களே என்று வருத்தம் கொள்வதா என்றே தெரியவில்லை. எல்லாமே அவன் லீலை என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
ஒருமுறை சதுரகிரி சென்று வந்ததற்கே, என்னவோ அந்த பரமனை நேரிலேயே தரிசித்துவிட்டு வந்தது போன்ற ஒரு மதர்ப்பில் உள்ளம் புளங்காகிதம் கொள்கிறதே.... அனுதினமும் ஒரு நாளைக்கு நாலுமுறை ஏறி இறங்கும் இவர்களை என்னவென்று சொல்வது...? இந்த புண்ணியத்திற்காகவே இவர்களுக்கு மறுஜென்மம் என்று உண்டானால் மிக உன்னதமான பிறவியையே அந்த ஆண்டவன் அருள்வான்.
மேலும் நீங்கள் கேட்டது போல நன்கொடை அளிக்கும் விவரங்களை அனைவரும் அறிந்து கொள்வதற்காக தான், பதிவு - 145 ல்
இந்த படத்தினை பதிவிட்டு இருந்தேன். அதில் கஞ்சிமடத்தின் வெப் சைட் இருக்கிறது பாருங்கள். அதில் நம் ராஜா கொடுத்துள்ள விவரம் இருக்கும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
தங்கும் இடம் என்று குறிப்பிடும் படி எதுவும் கிடையாது கிருஷ்ணாம்மா. கூட்டம் இல்லையென்றால் மடத்தில் இரவு தங்கிக்கொள்ளலாம். கூட்டமிருக்கும் காலங்களில் மடங்களில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே நினைக்கிறேன். கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி கொள்ளவேண்டியது தான். எங்கு தங்கினாலும் இயற்கை உபாதைகளுக்கு நான் ஏற்கனவே சொன்ன இடங்களுக்கு தான் வரவேண்டும்.krishnaamma wrote:இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா?
அனாலும் இப்போது நிறைய சத்திரங்கள் சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிகள் இன்னும் கூட்டப்பட சாத்தியமிருக்கிறது என்று தோன்றுகிறது.
மேலும், நாம் ஆற அமர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், நாங்கள் சென்றது போல் அமாவாசைக்கு மறுநாள் மலையேறினால் எந்த குறுக்கீடும் இல்லாமல் நிம்மதியாக ஆண்டவனை தரிசித்து விட்டு வரலாம். மகாலிங்கத்துக்கும் நமக்கும் அதிக இடைவெளி இருக்காது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
முகவரி, பதிவு - 145 ல் இருக்கிறது ஐயா.T.N.Balasubramanian wrote:எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
ஆமாம், மிக நல்ல மனிதர். மதியம் மடத்தில் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்த போதே அது புலப்பட்டது. மடத்தின் பின்புறம் பக்தர்கள் சாப்பிட வசதியாக டேபிள் - சேர் போட்டிருப்பது குறித்து மிகப்பெருமையாக பேசினார். (சமீபத்தில் தான் இந்த வசதி செய்யப்பட்டு இருக்கிறது) கூடவே, "இத்தனை நாளா பக்தர்கள எப்படித்தான் கீழ உக்காரவைத்து சாப்பாடு போட்டோமோ தெரியல... இப்ப நினைச்சாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு...." என்று என்னவரிடம் வருத்தப்பட்டு பேசினார். பிறவியிலேயே இப்படி ஒரு தாயாள குணம் இருந்தால் மட்டுமே இந்த வருத்தம் சாத்தியப்படும். அவருக்கு நிறையவே இருக்கிறது.ராஜா wrote:இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்
இல்லையென்றால் இந்த சேவையை இவ்வளவு வெற்றிகரமாக இவரால் செயல்படுத்த முடிந்திருக்காது. எல்லாம் அந்த மகாலிங்கத்தின் அருள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
படம் : இணையம்
சந்தன மகாலிங்கம் இந்த சதுரகிரியில் குடிகொண்டது எப்படி என்று தெரியுமா? ஈஸ்வரன் இங்கே சந்தன மகாலிங்கமாய் குடிகொண்டு இன்று நமக்கெல்லாம் அருள் பாலித்துக்கொன்டிருக்க காரணமான பிருங்கி முனிவருக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும்.
கைலாயத்தில் ஒருநாள் அம்மையும், அப்பனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இருந்த போது வழக்கம் போல அனைத்து தேவாதி தேவர்களும் இறைவன் – இறைவிவை வணங்கி சென்றவண்ணமிருந்தார்கள்.
அப்பொழுது ஈசனைத்தவிர வேறு எவரையும் கை தொழுது அறியாத பிருங்கி முனிவர் அங்கே வந்தார். வந்தவர், தன் இறைவன் இல்லாளுடன் மிக அருகே அமர்ந்திருப்பதை கண்டு, தான் ஈசனை மட்டும் வலம் வரமுடியாது என்பதால் ஒரு வண்டாக மாறி அவர் தான் வணங்கும் ஈசனை மட்டும் வலம் வந்து வணங்கினார்.
இதனை கண்ட தேவி ஆவேசமானாள். மறுமுறை இப்படி ஒரு அவமானம் தனக்கு நேரக்கூடாது இதற்கு ஒரே வழி இறைவனின் திருமேனியில் ஒரு பாகத்தை கேட்டுப்பெறவேண்டும். அப்படி இருவரும் அர்த்தநாரீஸ்வரராக இணைத்திருக்கும் பட்சத்தில் இந்த பிருங்கி போன்றவர்களால் இப்படிப்பட்ட அவமானம் தனக்கு நேராதல்லவா என்று முடிவெடுத்த சக்தி, அதற்கு ஒரே வழியாக கடுந்தவம் இருந்து ஈசனின் அருளைப்பெற நினைத்து அன்னையவள் தேர்வு செய்த இடம் தான் சதுரகிரி மலை.
படம் : இணையம்
அங்கே சந்தன மரம் ஒன்றின் அடியில் லிங்கத்திருமேனியை தோற்றுவித்து சந்தனக்குழம்பால் அபிஷேகம் செய்து அதற்காக அருகிலேயே ஆகாச கங்கையையும் தோன்ற செய்து தன் தவத்தினை ஆரம்பித்தாள்.
மனைவியின் பிடிவாதத்திற்கு செவி சாய்க்காத கணவனும் உண்டோ...? பூலோகத்திலும் இல்லை, தேவலோகத்திலும் இல்லை. அதற்கு ஈசன் மட்டும் விதிவிலக்கா என்ன?
தேவியின் கடுந்தவத்தில் அகமகிழ்ந்து உமையவள் கேட்ட வரத்தினை தந்து அர்த்தநாரீஸ்வரரானார் ஈசன்.
சந்தன மரத்தின் அடியில் உமையம்மையால் பிரதிஷ்டை ஆனபடியால் சந்தன மகாலிங்கம் என்றழைக்கப்படுகிறார் இங்கிருக்கும் பெருமான். உமையவள் பூஜித்த லிங்கத்திருமேனி பிறகு சித்த புருஷரான சட்டை முனிவரால் பூஜிக்கப்பட்டு வந்தது.
இதுவே வழி, வழியாக தொடரப்பட்டு பிரம்மச்சாரிகளான பூசாரிகள் மட்டுமே சந்தன மகாலிங்கத்தை பூஜித்து வருகிறார்கள். இதுவே இன்றும் தொடர்கிறது.
படம் : இணையம் - சந்தன மகாலிங்கம் – பழைய படம்.
முதன் முதலில் சதுரகிரி வருபவர்கள், ஏறிவந்த களைப்பிலும், ஆயாசத்திலும் மேலும் முண்னூறு படி ஏற பயந்து கொண்டோ அல்லது தயங்கியோ சந்தன மகாலிங்கத்தை தரிசிப்பதை தவிர்த்துவிடக்கூடாது. சென்ற முறை வந்த போது எனக்கே அப்படித்தான் தோன்றியது.
இந்த புண்ணியப்பயணம் என்பது ரெட்டை லிங்கம், கருப்பர் சந்நிதி, சுந்தரலிங்கம், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என்று அனைத்து தெய்வங்களையும் தரிசிப்பதில் தான் பூர்த்தியாகிறது.
ஆகவே, எந்த தெய்வங்களையும் தரிசிப்பதை தவறவிடாமல், மனப்பூர்வமாக தரிசித்துவிட்டு வரவேண்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209249krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .
ரமணியன்
முகவரி கேட்டு அனுப்புங்கள் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1209288ராஜா wrote:krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்
மிக்க நன்றி ராஜா .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1209307விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா. முதன் முறை அங்கு சென்று வந்த பிறகு இந்த கஞ்சி மடத்தைபற்றி நினைத்து, நினைத்து வெகு நாட்கள் வியந்து கொண்டிருந்தேன்.krishnaamma wrote: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
'நம் சுமையை தூக்கிப்போகவே ஆளைத்தேடும் நாம் எங்கே... அடுத்தவர்களின் பசியை போக்குவதற்காகவே சுமந்து சென்ற இவர்கள் எங்கே.....' என்று, இன்னமும் என் வியப்பு அகலாமல் தான் இருக்கிறது. அதிலும் இந்த மலையில் சுமை தூக்குபவர்களை நினைத்தால்.... பெரும்பேறு பெற்றவர்கள் என்று பொறாமை கொள்வதா அல்லது அவர்களின் வறுமையின் காரணமாக இவ்வளவு மெய்வருத்தும் வேலைகளை செய்கிறார்களே என்று வருத்தம் கொள்வதா என்றே தெரியவில்லை. எல்லாமே அவன் லீலை என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
ஒருமுறை சதுரகிரி சென்று வந்ததற்கே, என்னவோ அந்த பரமனை நேரிலேயே தரிசித்துவிட்டு வந்தது போன்ற ஒரு மதர்ப்பில் உள்ளம் புளங்காகிதம் கொள்கிறதே.... அனுதினமும் ஒரு நாளைக்கு நாலுமுறை ஏறி இறங்கும் இவர்களை என்னவென்று சொல்வது...? இந்த புண்ணியத்திற்காகவே இவர்களுக்கு மறுஜென்மம் என்று உண்டானால் மிக உன்னதமான பிறவியையே அந்த ஆண்டவன் அருள்வான்.
மேலும் நீங்கள் கேட்டது போல நன்கொடை அளிக்கும் விவரங்களை அனைவரும் அறிந்து கொள்வதற்காக தான், பதிவு - 145 ல்
இந்த படத்தினை பதிவிட்டு இருந்தேன். அதில் கஞ்சிமடத்தின் வெப் சைட் இருக்கிறது பாருங்கள். அதில் நம் ராஜா கொடுத்துள்ள விவரம் இருக்கும்.
நன்றி விமந்தினி. பார்த்துவிட்டேன், குறித்துக் கொண்டும் விட்டேன்..............அனுப்பிவிடுகிறோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1209308விமந்தனி wrote:தங்கும் இடம் என்று குறிப்பிடும் படி எதுவும் கிடையாது கிருஷ்ணாம்மா. கூட்டம் இல்லையென்றால் மடத்தில் இரவு தங்கிக்கொள்ளலாம். கூட்டமிருக்கும் காலங்களில் மடங்களில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே நினைக்கிறேன். கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி கொள்ளவேண்டியது தான். எங்கு தங்கினாலும் இயற்கை உபாதைகளுக்கு நான் ஏற்கனவே சொன்ன இடங்களுக்கு தான் வரவேண்டும்.krishnaamma wrote:இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா?
அனாலும் இப்போது நிறைய சத்திரங்கள் சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிகள் இன்னும் கூட்டப்பட சாத்தியமிருக்கிறது என்று தோன்றுகிறது.
மேலும், நாம் ஆற அமர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், நாங்கள் சென்றது போல் அமாவாசைக்கு மறுநாள் மலையேறினால் எந்த குறுக்கீடும் இல்லாமல் நிம்மதியாக ஆண்டவனை தரிசித்து விட்டு வரலாம். மகாலிங்கத்துக்கும் நமக்கும் அதிக இடைவெளி இருக்காது.
ஒ... நீங்க அப்படித்தான் தங்கிநீங்களா?....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 16 of 24 • 1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24
Similar topics
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
Page 16 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|