Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
80 வயதிலும் இணையற்ற சாதனை!
5 posters
Page 1 of 1
80 வயதிலும் இணையற்ற சாதனை!
-
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலைஅமைப்பின்
சார்பில் சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற
மாபெரும் உலக கலாசாரத் திருவிழாவில்,
1700 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பரத
நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்து சாதனை
புரிந்துள்ளார் பிரபல பரதநாட்டிய கலைஞர்
சரோஜா வைத்தியநாதன்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத நாடக
அகாடமி, தில்லி சாஹித்ய கலா பரிஷித், காளிதாஸ்
சம்மேளன், போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள
80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த
நாட்டியமணி, சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு
தடையில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
தில்லியிலுள்ள கணேச நாட்டியாலயாவின் நிறுவனரும்,
தலைவருமான சரோஜா வைத்தியநாதனைச் சந்தித்து,
'வாழும் கலை அமைப்பின் சார்பில் மார்ச் 11-12
தேதிகளில் தில்லியில் நடைபெற்ற உலக கலாசாரத்
திருவிழாவில் தாங்க வடிவமைத்த பிரம்மாண்டமான
நடன நிகழ்ச்சி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றது.
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
-
அதுகுறித்து தங்களின் அனபவங்களை எங்களுடன்
பகிர்ந்து கொள்ளலாமே..' என்று கேட்டோம்.
இந்த நிகழ்ச்சிக்காக ஆறு மாதங்களுக்கு முன்பே
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னை தொடர்பு கொண்டார்.
ஏற்கெனவே பல நடன நிகழ்ச்சிகளை வடிவமைத்த
அனுபவம் எனக்கு இருந்தாலும் 1700 பேர்களை
ஒன்று சேர்க்க வேண்டும் என்றவுடன்
மலைப்பாகத்தான் இருந்தது.
தமிழகத்தின் சென்னை உட்பட பல ஊர்களிலும்,
புதுச்சேரி, அஸ்ஸாம், புனே, லக்னோ, முசொரி,
பெங்களூரு, தில்லி போன்ற இடங்களிலும், பரத
நாட்டியப் பள்ளிகள் நடத்தும் ஆசிரியர்களைத்
தொடர்பு கொண்டேன். ஆடவேண்டிய இரண்டு
உருப்படிகளையும் வீடியோவில் பதிவு செய்து
எல்லா ஊர்களுக்கும் அனுப்பினேன்.
எந்த நிறத்தில், எப்படி உடை தைக்க வேண்டும்,
என்னென்ன ஆபரணங்கள் அணிந்து கொள்ள
வேண்டும் என்று விவரமாகப் படங்கள் மூலம்
விளக்கினேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பே தில்லிக்கு வந்த
1700 பேர்களை ஒன்றுதிரட்டி ஒத்திகை பார்ப்பது
பிரம்மப்பிரயத்தனமாகவே இருந்தது.
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
-
இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றியதில் தாங்கள்
சந்தித்த சவால்கள் என்னென்ன?
பள்ளித் தேர்வு நேரம் என்பதால் நடனம் ஆடுவதற்குக்
குழந்தைகளை வரவழைப்பதே கடினமாக இருந்தது.
யமுனை நதிக்கரையில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நடை
பெற்ற இந்த மாபெரும் விழாவிற்கு சுற்றுச்சூழல்
சம்பந்தமாக பலத்த எதிர்ப்பு; விழா நடக்குமா என்று
கடைசி வரையில் சந்தேகம்.
நிகழ்ச்சிக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு,
இரண்டு முறை மழை வேறு கொட்டித் தீர்த்து விட்டது.
அங்கு குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்களும்,
37000 கலைஞர்களும் தொப்பமாக நனைத்துவிட்டார்கள்.
ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த மேடை
சேரும் சகதியுமாக ஆகிவிட்டிருந்தது. ஆடும்போது யாரும்
வழுக்கி விழுந்து விடக்கூடாதே என்ற கவலை ஒரு பக்கம்,
இவை எல்லாவற்றையும் கடந்து,
1700 பேரும் ஈர உடையில் 'ஆங்கிகம் புவனம் யஸ்யா'
மற்றும் 'குரு பிரும்மா குரு விஷ்ணு' என்ற சுலோகங்களுக்கு
மிகப் பிரமாதமாக ஆடிவிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள்
தொலைக்காட்சிகள் மூலமாகவும், 150 நாடுகளிலிருந்து
வந்திருந்த தலைவர்கள் மற்றும் பத்து இலட்சம் மக்கள்
நேரிலும் கண்டு களித்தார்கள்.
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
-
-
தங்களது இளமை பருவம் பற்றி?
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை திருவல்லிக்
கேணியில்தான். பாலசரஸ்வதி, கமலா லக்ஷ்மணன்
போன்றவர்களின் நடனத்தால் கவரப்பட்டு, ஏழாவது வயதில்
சென்னை சரஸ்வதி கான நிலையத்தில் நடனப் பயிற்சியைத்
தொடங்கினேன். எனது குரு லலிதா, தஞ்சாவூர்
காட்டுமன்னார்குடி முத்துக்குமரனின் சிஷ்யை. குடும்பப்
பெண்கள் நாட்டியம் ஆடுவதை அவ்வளவாக விரும்பாத
அன்றைய காலகட்டத்திலும், எனது தாயார் கனகமும்,
தந்தை தர்மராஜனும் என் ஆசைக்குத் தடைபோடவில்லை.
பன்னிரெண்டாவது வயதில் அரங்கேற்றம் செய்தேன்.
பேராசிரியர் சாம்பாமூர்த்தியிடம் கர்நாடகச் சங்கீதமும்
கற்றுக் கொண்டேன். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து
இசையில் டிப்ளமோ பெற்றுள்ளேன்...
பதினாறு வயதிலேயே எனக்குத் திருமணமாயிற்று.
கணவர் வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. 1972ஆம் ஆண்டு
தில்லிக்கு வந்த பிறகுதான் முழுமூச்சாக இந்தக் கலைபணியில்
இறங்கினேன்.
தங்களது நாட்டியப் பள்ளியைப் பற்றி..?
1974ல் தொடங்கப்பட்ட கணேச நாட்டியாலயா நடனப் பள்ளி,
1988லிருந்து தெற்கு தில்லியில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி
வருகிறது. எனது நாட்டியப் பள்ளியில் பயில்பவர்களில்
பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே.
உலக நாடுகள் பலவற்றிலிருந்து நேரடியா ஐசிசிஆர்
மூலமாகவும் வந்து எங்கள் பள்ளியில் பயிலுகிறார்கள்.
என்னிடம் பயின்றவர்கள், இந்தியா ம்டடுமின்றி, உலகின் பல
இடங்களிலும் பரதநாட்டிய வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.
மறக்க முடியாத அனுபவம்?
எனது இரண்டாவது மருமகள் ரமா வைத்தியநாதன்,
சிறந்த பரதநாட்டிய கலைஞர். எனது பேத்தி தட்சிணா
வைத்தியநாதன், வளர்ந்து வரும் நாட்டியமணி,
ஒரே மேடையில் மாமியார், மருமகள், பேத்தி என்று மூன்று
தலைமுறைகளைச் சார்ந்த நாங்கள் சேர்ந்து ஆடியதும், எனது
பேத்தி தட்சிணாவுடன் பாட்டியும், பேத்தியமாக ஆப்பிரிக்காவில்
ஆடியதும் மறக்க முடியாத அனுபவங்கள்.
-
--------------------------------
- ரமாமணி சுந்தரம்
கல்கி
புகைப்படங்கள் - இணையம்
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
நல்ல பகிர்வு, படங்களைத்தான் பார்க்க முடியவில்லை அண்ணா ........இப்போ தான் போன மாதம் வீணைக் கலைஞர்களை வைத்து பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
நல்ல பகிர்வு ஐயா. சவால்களை சந்திக்க வயது தடை இல்லை என்பதற்கு சான்று.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
படம்போட முடியல ; படம்பார்க்க முடியல
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
மேற்கோள் செய்த பதிவு: 1204819M.Jagadeesan wrote:படம்போட முடியல ; படம்பார்க்க முடியல
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?
சிவாவிடமும் ராஜாவிடமும் சொல்லி இருக்கு ஐயா, தீர்வு விரைவில் வரும் என்று நினைக்கிறேன் ...கொஞ்சம்காத்திருப்போம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!
ஸ்ரீமதி சரோஜா வைத்யநாதன் அவர்களுக்கு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» 80 வயதிலும் சாதனை
» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்
» இணையற்ற சகோதரன் இலக்குவன்
» இல்வாழ்வின் இணையற்ற மகிழ்ச்சிக்கு
» 20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்
» இணையற்ற சகோதரன் இலக்குவன்
» இல்வாழ்வின் இணையற்ற மகிழ்ச்சிக்கு
» 20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|