ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கவலை மாற்றல் எளிது!

2 posters

Go down

மனக்கவலை மாற்றல் எளிது! Empty மனக்கவலை மாற்றல் எளிது!

Post by krishnaamma Mon Apr 25, 2016 1:38 am

மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர். மன்னிக்க வேண்டும் ஐயனே! மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனே! கவலை என்பதை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். முதலாவது, தீர்வு உள்ளது; இரண்டாவது, தீர்வு அற்றது.

உயிர் இழப்பு என்பது மட்டும் தான், கவலைகளுள் தீர்வு அற்றதாக இருக்கிறது. ரத்த உறவுகளை, நெருங்கிய சொந்த பந்தங்களை, உயிர் நட்பைப் பிரிந்து வாடுகிற போது, ஒரு தீர்வும் இல்லை; இழந்தால் இழந்தது தான்!
இந்த மோசமான இழப்பை கூட, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நம் மதங்கள் சொல்லி தந்து விட்டன.

'இறந்தவர்களுக்காக அழாதே... அவர்கள் இந்த உலக துன்பங்களிலிருந்து விடுபட்டு விட்டனர்...' என்று ஒரு மதம் சொல்கிறது.

மற்றொரு மதமோ, 'பிறப்பும், இறப்பும் வாழ்வின் இருநிலைகள்; தவிர்க்க முடியாதவை. அழுது தீர்த்து, கண்ணீர் உகுத்து, உன் மனத் துன்பக் கட்டியை கரைத்து, வெளியே ஓடவிடு...' எனக் கூறுகிறது.
இன்னொரு மதம், 'இது இறைவனது அழைப்பு; எவரும் தடுக்க முடியாது. அவனது விருப்பம் அதுவென்றால், நீ என்ன செய்துவிட முடியும்!' என்கிறது.

மரணத்திற்கு வேறு மனச் சமாதானங்களே கிடையாது. இதை தத்துவார்த்த பார்வைகளால், அவரவர் பின்பற்றும் மத வழிகளால், பகுத்தறிவு சிந்தனையால் வென்று, வெளிவந்து விட முடியும்; வெளிவர வேண்டும். வேறு வழியே இல்லை.

இரண்டாவது வகை கவலையை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, தீர்வு உள்ள கவலையை தொலைவதால், வரும் கவலையை முதலாவதாகவும், இழப்பதால் வரும் கவலையை இரண்டாவதாகவும் கொள்வோம். எந்த ஒரு பொருள் மீதும் (கரன்சிகள் உட்பட) அளவு கடந்த ஈடுபாடு கூடாது; ஈடுபாடு அதிகரிக்க அதிகரிக்க, கவலையின் விகிதாசாரமும் உயர்ந்து கொண்டே போகும்.

'மொபைல் போன் தொலைந்து விட்டது...' என்று ரொம்பவும் கவலைப்பட்டார் நண்பர் ஒருவர். ஒரு மாதம் கழித்து பார்த்தேன். 'புது செல் வாங்கிட்டேன்; இதுல நிறைய வசதி இருக்கு. ரொம்ப புடிச்சுப் போச்சு; பழைய போனோட படு அவதி...' என்று சொல்லி சிரித்தார்.

எல்லாவற்றிற்கும் மாற்று இருக்கிறது. இவர் கடந்து வந்த ஒரு மாத காலம் மட்டுமே கஷ்ட காலம். இக்கஷ்ட காலத்தை மனப்பக்குவத்தால் கடக்கும் கலையை கற்றுக் கொண்டுவிட்டால் போதும்; தொலைந்த பொருளால் நமக்கு துன்பம் வராது.

ராசி பேனா, ராசியான பர்ஸ், ராசியான வாகனம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது. நாமாக ஏற்படுத்தி கொள்ளும் மன சவுகரியங்களே இவை. எது தொலைந்தாலும், மனதால் தலை முழுகி, மாற்று ஏற்பாடு செய்து விடுங்கள், போதும்.

அடுத்து, சொத்து இழப்பு... 'என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு...' என்கிறது கீதை. புறப்பட்டுப் போகும் போது, அருணாக் (அரைஞாண்) கயிற்றைக்கூட, அறுத்து விடுகிற இந்த வாழ்க்கையில், நாம் அவற்றின் தற்காலிக உரிமையாளர்களே! வரவும், செலவும் வாழ்வில் தவிர்க்க இயலா கணக்குகள்.

'புத்திசாலித்தனத்தால் நிறைய சம்பாதித்தோம்; ஒரு மடத்தனத்தால் சற்று இழந்தோம். போகட்டும் விடு...' என்று, நம் மனதை நாமே தேற்றி கொள்ள வேண்டியது தான். இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை, தன்னம்பிக்கை உணர்வு, தத்துவார்த்தப் பார்வை கொண்டு நிரப்புங்கள்.

மீட்டெடுக்கப்பட்ட சாம்ராஜ்யங்களையும், மீண்டெழுந்து சிம்மாசனங்களில் அமர்ந்த மனிதர்களையும், நினைவிற்கு கொண்டு வாருங்கள்.

செருப்பு தொலைந்து போனவர்கள், கால்களற்ற மனிதர்களை பார்த்து, சமாதானம் அடைந்த கதையாய், ஒவ்வொருவரும் மனம் தேறி, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமே தவிர, உருகி உருகி உருக்குலைந்து போய்விடக் கூடாது.

சட்டத் திருத்தம் போல, கவலைகளைப் பற்றிய பார்வைகளில், நமக்குள் சிறுசிறு திருத்தங்களை செய்து கொண்டால் போதும், மனக்கவலை மாற்றல் எளிது!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனக்கவலை மாற்றல் எளிது! Empty Re: மனக்கவலை மாற்றல் எளிது!

Post by ayyasamy ram Mon Apr 25, 2016 10:24 am

மனக்கவலை மாற்றல் எளிது! 103459460
-
மனக்கவலை மாற்றல் எளிது! Q1zUT5o2R6eve4PaNPMF+muruga
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனக்கவலை மாற்றல் எளிது! Empty Re: மனக்கவலை மாற்றல் எளிது!

Post by krishnaamma Tue Apr 26, 2016 12:29 am

பட பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனக்கவலை மாற்றல் எளிது! Empty Re: மனக்கவலை மாற்றல் எளிது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum