Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
-
ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் –
காற்றை கவுரவப்படுத்தும் குரல்!
–
சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை
அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே’என்னும் பாடலுக்கு
எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு
பொருத்தமாக இருக்கும்.
இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம்
பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு,
`மௌன கீதங்கள்’படத்தில் ‘டாடி.. டாடி.. ஓ மை
டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே…’
பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய
சந்தோஷம் பொங்கியது.
காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல்
எஸ்.ஜானகினுடையது!
குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின்
ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, `பழைய நெனப்புடா
பேராண்டி.. பழைய நெனப்புடா..’ எனப் பாடும்
கிழவியின் விசனமா? இப்படி எந்த உணர்ச்சியையும்
குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த
எஸ். ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம்,
கன்னடம் எனத் தென்னிந்திய
இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக
இருந்தார்.
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
பிரபலப்படுத்திய பாடல்
1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி,
சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி,
ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன்,
படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில்
வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில்
இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா…’ என்ற
பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக
அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக்
காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில்
பதிவானது.
தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில்
(மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக
ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி
அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து
2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங்
செய்யப்பட்ட பாடல் அது.
இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ்
பரவியது.
1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி,
சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி,
ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன்,
படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில்
வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில்
இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா…’ என்ற
பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக
அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக்
காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில்
பதிவானது.
தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில்
(மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக
ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி
அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து
2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங்
செய்யப்பட்ட பாடல் அது.
இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ்
பரவியது.
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
எஸ். ஜானகியின் குரல் தனித்துவமானது.
பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப்
பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை.
தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும்
எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே
உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார
வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்
படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே
நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த
பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால்
அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில்
கொடுத்தார்.
இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என
உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்
கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு
கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை.
தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில்
எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல்
எவருமில்லை.
பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப்
பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை.
தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும்
எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே
உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார
வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்
படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே
நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த
பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால்
அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில்
கொடுத்தார்.
இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என
உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்
கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு
கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை.
தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில்
எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல்
எவருமில்லை.
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
இளையராஜாவின் பெருந்துணை
இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு
உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும்
திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக்
கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும்
இளையராஜாதான்.
கிராமியப் பாடலாக இருந்தாலும்,
கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும்
ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததை
விட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில்
பங்களிப்புச் செய்தார்.
சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார்.
ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற
சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து
நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக்
கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான
உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப்
பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.
இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு
உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும்
திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக்
கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும்
இளையராஜாதான்.
கிராமியப் பாடலாக இருந்தாலும்,
கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும்
ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததை
விட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில்
பங்களிப்புச் செய்தார்.
சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார்.
ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற
சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து
நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக்
கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான
உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப்
பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
ஹம்மிங் பேர்ட்
பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய
ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார்.
ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே
நிறைய இருக்கின்றன.
“லல்லா லல்லா லல்லா லல்லா … சின்ன சின்ன
வண்ணக்குயில்… (மெளனராகம்), “ லால லால ல …
ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது…( கிராமத்து
அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா …
எந்தப் பூவிலும் வாசம் உண்டு… (முரட்டுக்காளை) “
என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும்
அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.
எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும்
வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி,
சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை,
தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்
படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும்
என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப்
பெறுகின்றன.
“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது”
என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின்
மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும்.
தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில்
ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .
–
————————-
-ஜெ.செல்வராஜ்
தமிழ் தி இந்து காம்
பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய
ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார்.
ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே
நிறைய இருக்கின்றன.
“லல்லா லல்லா லல்லா லல்லா … சின்ன சின்ன
வண்ணக்குயில்… (மெளனராகம்), “ லால லால ல …
ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது…( கிராமத்து
அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா …
எந்தப் பூவிலும் வாசம் உண்டு… (முரட்டுக்காளை) “
என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும்
அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.
எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும்
வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி,
சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை,
தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்
படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும்
என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப்
பெறுகின்றன.
“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது”
என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின்
மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும்.
தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில்
ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .
–
————————-
-ஜெ.செல்வராஜ்
தமிழ் தி இந்து காம்
பாடகி எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று !
எஸ்.ஜானகி பிறந்தநாள் !
தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவியான எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று. ஈடுஇணையில்லாத பாடகியான எஸ்.ஜானகியின் இசைமேதமையைக் கொண்டாடுவதுடன்,பாடும் முறையில் அவரின் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும். தென்னிந்திய திரையிசையுலகில் எஸ்.ஜானகி போல பாட எவருமில்லை அன்றும் இன்றும். பாடும் முறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை வைத்து பல Phdகள் வாங்கலாம்.
ஜானகியின் திறமைகளில் மிகவும் வசீகரிக்கக்கூடிய திறமை , தமிழ் மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம் தான். திரையிசைப்பாடல்களில் 1980 கள் வரை ஓரளவு திருத்தமாக ஒலித்த தமிழ் , 80 களுக்கு பிறகு இன்று வரை திருத்தமில்லாமல் பிழைகளுடனே பாடப்படுகின்றன. லகரம் (ல , ள, ழ ) ,ரகரம் ( ர, ற ), ணகரம் ( ண, ன ) போன்றவை பல ஆண்டுகளாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை. எந்த வெகுஜன இதழ்களும் பிழையான தமிழுன் வெளிவருவதில்லை.எழுத்து மொழியில் ஆங்காங்கே எழுதப்படும் வாசகங்களில் இருக்கும் எழுத்துப்பிழையைச் சுட்டிக் காட்டுகிறோம். அதே சமயம் நமது பேச்சு மொழியிலோ , கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் திரையிசைப்பாடல்களிலோ பிழைகளை எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.
எஸ்.ஜானகி பாடிய அனைத்துப் பாடல்களிலும் (கிராமிய பாடலாக இருந்தாலும் ) தமிழை திருத்தமாக பிழையின்றி பாடியுள்ளார். அவரின் குரல் இனிமையுடன் , தமிழின் இனிமையும் சேர்ந்ததால் தான் நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இளையராஜாவின் இசையுன் ஜானகியின் குரலையும் சேர்த்தே ரசிக்கிறோம்.
பாடும் எந்தப்பாடலையும் சிறப்பாக பாடும் ஜானகியின் திறமையைக் கொண்டாடுவதுடன். திரையிசைப்பாடல்களில் திருத்தமான உச்சரிப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும்.
நண்பர்களே ! எஸ்.ஜானகியின் பாடல்கள் உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ஜானகியைக் கொண்டாடுவோம் ! #SJ
தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவியான எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று. ஈடுஇணையில்லாத பாடகியான எஸ்.ஜானகியின் இசைமேதமையைக் கொண்டாடுவதுடன்,பாடும் முறையில் அவரின் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும். தென்னிந்திய திரையிசையுலகில் எஸ்.ஜானகி போல பாட எவருமில்லை அன்றும் இன்றும். பாடும் முறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை வைத்து பல Phdகள் வாங்கலாம்.
ஜானகியின் திறமைகளில் மிகவும் வசீகரிக்கக்கூடிய திறமை , தமிழ் மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம் தான். திரையிசைப்பாடல்களில் 1980 கள் வரை ஓரளவு திருத்தமாக ஒலித்த தமிழ் , 80 களுக்கு பிறகு இன்று வரை திருத்தமில்லாமல் பிழைகளுடனே பாடப்படுகின்றன. லகரம் (ல , ள, ழ ) ,ரகரம் ( ர, ற ), ணகரம் ( ண, ன ) போன்றவை பல ஆண்டுகளாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை. எந்த வெகுஜன இதழ்களும் பிழையான தமிழுன் வெளிவருவதில்லை.எழுத்து மொழியில் ஆங்காங்கே எழுதப்படும் வாசகங்களில் இருக்கும் எழுத்துப்பிழையைச் சுட்டிக் காட்டுகிறோம். அதே சமயம் நமது பேச்சு மொழியிலோ , கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் திரையிசைப்பாடல்களிலோ பிழைகளை எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.
எஸ்.ஜானகி பாடிய அனைத்துப் பாடல்களிலும் (கிராமிய பாடலாக இருந்தாலும் ) தமிழை திருத்தமாக பிழையின்றி பாடியுள்ளார். அவரின் குரல் இனிமையுடன் , தமிழின் இனிமையும் சேர்ந்ததால் தான் நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இளையராஜாவின் இசையுன் ஜானகியின் குரலையும் சேர்த்தே ரசிக்கிறோம்.
பாடும் எந்தப்பாடலையும் சிறப்பாக பாடும் ஜானகியின் திறமையைக் கொண்டாடுவதுடன். திரையிசைப்பாடல்களில் திருத்தமான உச்சரிப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும்.
நண்பர்களே ! எஸ்.ஜானகியின் பாடல்கள் உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ஜானகியைக் கொண்டாடுவோம் ! #SJ
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
ஏற்கனவே இந்த திரி இருக்கு , இதையும் அத்துடன் இணைத்து விடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
வணக்கம் கிருஷ்ணம்மா அவர்களே ,நீங்கள் கேட்ட தற்போது பிரசுரமாகியுள்ள கட்டுரை தான் மேலே அய்யாசாமி ராம் அவர்கள் பதிவிட்டு உள்ளார்.
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
மேற்கோள் செய்த பதிவு: 1204325seltoday wrote:வணக்கம் கிருஷ்ணம்மா அவர்களே ,நீங்கள் கேட்ட தற்போது பிரசுரமாகியுள்ள கட்டுரை தான் மேலே அய்யாசாமி ராம் அவர்கள் பதிவிட்டு உள்ளார்.
ம்ம், நான் ஹிந்துவிலேயே பார்த்தேன் செல்வராஜ், அருமையாக எழுதி இருக்கீங்க ............... மனமார்ந்த வாழ்த்துகள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
" சிங்கார வேலனே தேவா " என்ற பாடல் கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கு நல்ல விருந்து !இப்போது கேட்டாலும் நம்மையறியாமல் தலை ஆடும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» முன்னாள் தமிழக முதல்வர் வி.என்.ஜானகி மறைந்த தினம்: மே 19, 1996
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» முன்னாள் தமிழக முதல்வர் வி.என்.ஜானகி மறைந்த தினம்: மே 19, 1996
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|