புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
1 Post - 50%
heezulia
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
20 Posts - 3%
prajai
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 9:58 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் YOZ5CuSAd8pEWDdHLdQO+sagayamvc2
-
நாமக்கல் மக்களின் மனிதநேயத்திற்கு இதைவிட சிறந்த
சான்று இருக்க முடியாது. 'நம்பிக்கை இல்லம்' என்ற
பெயரில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சகாயம் ஐ.ஏ.எஸ்
திறந்த கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் மனிதநேயம்
நிரம்பி வழிகிறது.
-
நாமக்கல் கலெக்டராக சகாயம் இருந்த சமயத்தில், ஆதரவற்ற
குழந்தைகளுக்காக உதயமான சிறிய யோசனை, இன்று
ஆலமரமாக கிளைபரப்பி வளர்ந்து நிற்கிறது. மோகனூர் செல்லும்
வழியில் உள்ள விவசாய கிராமம் லத்துவாடி. இந்தக் கிராமத்தில்,
ஐம்பது சென்ட் நிலத்தில் நம்பிக்கை இல்லம் கட்டப்பட்டுள்ளது.
வருகிற தமிழ்புத்தாண்டு தினத்தன்று திறப்பு விழாவை நடத்த
இருக்கிறார்கள்.
-
சகாயம் ஐ.ஏ.எஸ், இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 9:59 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் MOPGPzeuQhmCai1l9sNN+sagayamvc1
-

" பல மொழிகளைக் கற்கக் கூடிய இடமாகவும், தொழிற்பயிற்சி,
விளையாட்டுப் பயிற்சி, விஞ்ஞானப் பயிற்சி என நமது
பிள்ளைகளை வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும்
விதமாகவும் புதிய கட்டடத்தை வடிவமைத்திருக்கிறோம்.
-
எதிர்காலத்தில், தமிழ்வழியில் பாடம் நடத்தும் தரமான
பள்ளியாகவும், ஜப்பான், ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட உலக
மொழிகளை கற்கும் இடமாகவும் மாற்றுவோம். கிராமத்துப்
பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்யும் விதமான
பயிற்சிகளை வழங்க இருக்கிறோம்.
-
மனப்பாட சக்தியை வளர்க்கும் கல்வியாக இல்லாமல், சிந்திக்கக்
தூண்டும் கல்வியைக் கொடுக்கும் வகையிலான திட்டங்களை
வைத்திருக்கிறோம். எங்கள் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில்
25 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல்,
சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள ஏழைப் பிள்ளைகள் அனைவரும்
எங்கள் இல்லத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்" - என
நெகிழ்ச்சியாகத் தொடங்கினார் சகாயம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 10:00 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் E6YUXERRR0me5Dj6JFD2+sagayamvc3
-

'இப்படியொரு முயற்சி எப்படி சாத்தியமானது?' என்ற கேள்வியை
அவரிடம் கேட்டோம்.
-
" 2009-ம் ஆண்டு நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, ஒருநாள்
ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆதரவற்ற
குழந்தைகள் இருவருக்கு அரசின் உதவித் தொகை கொடுப்பது
தொடர்பான கடிதம் ஒன்று வந்திருந்தது.
-
அவர்களுக்கு ஏன் இந்த நிலை வந்தது? என சம்பவத்தைப் படித்த
போது, அதிர்ந்து போனேன். நான் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓவாக
இருந்து வெளிவந்த நேரத்தில், ஒரு வழக்கில் போலீஸின்
நடவடிக்கை சரியில்லை என்றுகூறி, ஒரு பெண் தீக்குளித்து
தற்கொலை செய்து கொண்டார். இது நடந்தது 2003-ம் ஆண்டு.
அதன்பிறகு அந்தப் பெண்ணின் கணவர் நாமக்கல்லுக்கு வந்து
விட்டார்.
-
அவருக்கு நிலத்தில் நீர் உள்ளதா? என கண்டுபிடிக்கும் வேலை.
இரண்டு குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டிருந்தார். ஒரு
கட்டத்தில் அவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த இரண்டு
குழந்தைகளையும் யாரோ ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தார்.
இவர்களுக்கு உதவித் தொகை கேட்டு வந்த கடிதத்தைத்தான் நான்
பார்த்தேன். உடனே, அந்தக் குழந்தைகளை காப்பகம் ஒன்றில்
சேர்த்துவிட்டேன். அந்த இல்லத்தில் இருந்து அந்தக் குழந்தைகள்
ஓடிப் போய்விட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்
என்பதற்காக, கலெக்டர் அலுவலகத்திற்கு அருகிலேயே ஓர்
இடத்தைத் தேர்வு செய்து அந்தக் குழந்தைகளை பராமரித்து
வந்தேன். அப்படித்தான் என்னுடைய முயற்சி தொடங்கியது"
என்று சொல்லி நிறுத்தியவர்,
-
"அந்த இல்லத்தில் மூன்று நேரம் உணவுகள், பராமரிப்புக்கு
ஆட்கள், அருகில் உள்ள அரசு பள்ளியில் படிப்பு என அனைத்த
வசதிகளையும் செய்து வந்தோம். இதைப் பார்த்து மேலும் சில
ஆதரவற்ற பிள்ளைகள் உதவி கேட்டு வந்தார்கள். அப்படி சிறிது
சிறிதாக வந்தவர்கள், இப்போது 25 குழந்தைகள் வரை
இருக்கிறார்கள். இவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய
ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டும் என மனதில் நினைத்துக்
கொண்டே இருந்தேன்.
-
இவர்களைப் போல வசதியற்ற ஆயிரக்கணக்கான ஏழைப்
பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்
புதிய கட்டடம் கட்டும் முயற்சியைத் தொடங்கினோம். நண்பர்கள்
ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு லத்துவாடியில் 50 சென்ட் இடம்
வாங்கிவிட்டோம்.
-
ஆனால், கட்டடம் கட்ட நிதி வேண்டுமே? மக்களிடமே போனோம்.
என் பெயரைச் சொன்னதும், மக்கள் மறுபேச்சில்லாமல் தங்கள்
உழைப்பில் ஒரு பகுதியை தாராளமாக கொடுத்து உதவினார்கள்.
இதுவரையில் நாற்பத்தைந்து லட்ச ரூபாய் வரைக்கும் கொடுத்து
உதவியிருக்கிறார்கள்.
-
நாமக்கல் மக்களின் கருணை உள்ளத்தால் நெகிழ்ந்து போனேன்.
கட்டடம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. புத்தாண்டுக்குப் பிறகு
ஏழைப் பிள்ளைகளுக்கு நம்பிக்கைகளை விதைக்கும் இடமாக
லத்துவாடி இருக்கும்" என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.
-
சகாயம் இருக்கும் இடத்தில் எப்போதும் புதிய நம்பிக்கைகள்
பிறக்கும். லத்துவாடியிலும் அவை கிளை விட்டு பரவட்டும்.
-
--------------------------------------------

-ஆ.விஜயானந்த்
விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக