புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
44 Posts - 63%
heezulia
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
2 Posts - 3%
viyasan
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
236 Posts - 43%
heezulia
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
21 Posts - 4%
prajai
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிணத்துக்குள்ளே....... Poll_c10கிணத்துக்குள்ளே....... Poll_m10கிணத்துக்குள்ளே....... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணத்துக்குள்ளே.......


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 12:37 am

ஊத்தங்கரை என்னும் ஊரில் தங்கமணி என்ற விறகு வெட்டி இருந்தான். நாள்தோறும் அவன் காட்டிற்குச் செல்வான். தன்னால் இயன்ற அளவு விறகை வெட்டி எடுத்து வருவான். நல்லவனாகவும், பொறுமைசாலியுமாக இருந்த அவனுக்கு, அடங்காப்பிடாரியான மனைவி வாய்த்து இருந்தாள்.

அவன் 'எவ்வளவு விறகைத் தூக்கி வந்தாலும், இவ்வளவுதானா கிடைத்தது? இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது?' என்று அவனைத் திட்டுவாள்.

அவள் என்ன திட்டினாலும், அவன் எதிர்த்துப் பேச மாட்டான். பொறுமையாக இருந்து விடுவான். இதனால் அவள் ஏச்சும், பேச்சும் நாளுக்கு நாள் அதிகமாகியது.

பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்த அவன், 'இவளுடன் வாழ்வதை விட சாவது மேல்' என்று நினைத்தான்.

ஒருநாள்- மாலை நேரம் நீண்ட கயிறு ஒன்றை எடுத்தவாறு காட்டை நோக்கிச் சென்றான் தங்கமணி.

இதைக் கவனித்த அவன் மனைவி, 'ஏன் கயிற்றை எடுத்துச் செல்கிறான்?' என்று ஐயம் கொண்டாள். அவன் அறியாமல் பின்தொடர்ந்தாள்.

பாழடைந்த கிணறு ஒன்றை நெருங்கினான். அங்கிருந்த பெரிய மரத்தில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டினான்; இன்னொரு முனையைக் கிணற்றுக்குள் விட்டான்.

கயிற்றைப் பிடித்துக் கிணற்றுக்குள் இறங்குவோம். அங்கேயே கிடந்து இறந்து விடுவோம் என்று நினைத்தான் அவன்.அப்போது அவன் மனைவி அவன் முன்னால் வந்தாள்.

''இங்கே என்ன செய்கிறாய்? எதற்காக இந்த மரத்தில் கயிற்றைக் கட்டினாய்? கிணற்றுக்குள் ஏன் கயிற்றை விட்டாய்?'' என்று அதட்டும் குரலில் கேட்டாள்.

உண்மையைச் சொன்னால், அவள் நம்ப மாட்டாள். ஏதேனும் பொய் சொல்லி அவளை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தான் தங்கமணி.

இந்தக் கிணற்றுக்குள் புதையல் இருக்கிறது. யாரும் அறியாமல் அதை எடுத்துச் செல்லவே இங்கு வந்தேன். கிணற்றுக்குள் இறங்கத்தான் கயிற்றை மரத்தில் கட்டினேன்,'' என்றான் தங்கமணி.

''நீ கிணற்றுக்குள் இறங்க வேண்டாம். நானே இறங்கிப் புதையலை எடுத்து வருகிறேன்,'' என்று அவள் கயிற்றைப் பிடித்தவாறு கிணற்றுக்குள் இறங்கினாள்.

அவளிடம் இருந்து தப்பிக்க நல்ல வாய்ப்பு என்று நினைத்த தங்கமணி, மரத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றின் முடிச்சை அவிழ்த்தான். அந்தக் கயிற்றைக் கிணற்றுக்குள் எறிந்தான்.

''இனி உன் தொல்லை இல்லை. கிணற்றுக்குள் கிடந்து துன்பப்படு,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

வீட்டிற்கு வந்து படுத்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. மனைவி கொடியவளாக இருக்கலாம். இருப்பினும் அவளிடம் இப்படி நடந்து கொண்டது தவறு என்று நினைத்தான். பொழுது விடிந்தது -

'இரவு முழுவதும் கிணற்றுக்குள் கிடந்து துன்பப்பட்ட அவள் திருந்தி இருப்பாள். இந்தத் தண்டனை அவளுக்கு போதும். காட்டிற்குச் சென்று அவளை அழைத்து வர வேண்டும்' என்று முடிவு செய்தான்.
இன்னொரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டிற்கு வந்தான்.

அந்தக் கயிற்றின் ஒரு முனையை மரத்தில் கட்டினான். இன்னொரு முனையைக் கிணற்றுக்குள் ஏறிந்தான்.
''இந்தப் பாடம் உனக்குப் போதும். கயிற்றைப் பிடித்து மேலே ஏறி வா. இனி ஒழுங்காக இருப்பாய் என்று நினைக்கிறேன்,'' என்று குரல் கொடுத்தான் தங்கமணி.

கயிற்றைப் பிடித்து யாரோ ஏறி வருவதைப் பார்த்தான் அவன். பேய் ஒன்று அந்தக் கயிற்றைப் பிடித்து ஏறி வந்து கொண்டிருந்தது.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 12:38 am

ஐயோ! என்ன செய்வேன்? பேய் அருகில் வந்து விட்டதே... தப்ப வழி இல்லையே' என்று நடுங்கினான் தங்கமணி.

''மேலே வந்த பேய் அவனைப் பார்த்து, கிணற்றுக்குள் இருப்பவள் உன் மனைவியா?'' என்று கேட்டது.
''ஆமாம்,'' என்று நடுக்கத்துடன் சொன்னான் அவன்.

''பெண்ணா அவள்? அவளைப் போன்ற அரக்கியை நான் பார்த்ததே இல்லை. இந்தக் கிணற்றில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். நேற்றிரவு அவள் வந்தாள். அவளின் கூச்சலையும், ஆர்ப்பாட்டத்தையும் என்னால் தாங்க முடியவில்லை.

''நல்லவேளை. நீ கயிற்றை விட்டாய். இன்னும் ஒருநாள் அவளோடு இருக்க நேர்ந்தால், நான் செத்தே போயிருப்பேன்.

''எப்படித்தான் நீ அவளோடு இவ்வளவு காலம் வாழ்க்கை நடத்தினாயோ? பேயாகிய என்னாலேயே அவளோடு ஒருநாள் இருக்க முடியவில்லையே...

''நீ செய்த இந்த உதவிக்கு நான் பதில் உதவி செய்ய விரும்புகிறேன்,'' என்றது.
அதன் பேச்சைக் கேட்டு, அவன் அச்சம் சிறிது நீங்கியது.

''நான் இந்த நாட்டு அரசரின் மகளைப் பிடித்துக் கொள்கிறேன். நீ வந்தால்தான் அவளை விட்டு நீங்குவேன்,'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து மறைந்தது. சொன்னது போலவே அது அந்நாட்டு அரசரின் மகளைப் பிடித்துக் கொண்டது.

'இளவரசியைப் பேய் பிடித்துக் கொண்டது. அவள் செய்கின்ற ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை' என்ற செய்தி நாடெங்கும் பரவியது.

இளவரசியைப் பிடித்த பேயை விரட்ட மந்திரவாதிகள் பலர் முயற்சி செய்தனர். ஆனால் யாராலும் முடியவில்லை.

'இளவரசியைப் பிடித்த பேயை யார் விரட்டினாலும் ஆயிரம் பொற்காசுகள் பரிசு!' என்று அறிவித்தார் அரசர்.
தங்கமணிக்கு இந்தச் செய்தி தெரிந்தது.

''அரசனிடம் சென்ற தங்கமணி, இளவரசியை நான் குணப்படுத்துகிறேன்,'' என்றான்.
அவன் பேச்சில் அரசன் நம்பிக்கை கொள்ளவில்லை.

''முயற்சி செய்து பார்,'' என்று சலிப்புடன் சொன்னான். அவனை இளவரசியிடம் அழைத்து சென்றனர் வீரர்கள். இளவரசியைப் பிடித்து இருந்த பேய் அவனைப் பார்த்தது.

''நான் சொன்னது போலவே இவளை விட்டுச் செல்கிறேன். அரசனின் பரிசுப் பொருளைப் பெற்று வளமாக வாழ்க்கை நடத்து. இனி, நீ என் வழியில் குறுக்கிடக்கூடாது. குறுக்கிட்டால், நான் பொல்லாதவனாகி விடுவேன்,'' என்று எச்சரித்தது.

''பேயே! நீ செய்த உதவிக்கு நன்றி. நான் ஏன் உன் வழிக்கு வரப் போகிறேன்? இனி மேல் வரவே மாட்டேன்,'' என்றான் தங்கமணி.

இளவரசியை விட்டு அந்தப் பேய் நீங்கியது. அவளும் பழையபடி நலம் அடைந்தாள்.
மகிழ்ந்த அரசன் அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்தான்.

அங்கிருந்து சென்ற பேய் கலிங்கப் பேரரசரின் மகளைப் பிடித்துக் கொண்டது. பயங்கரமாக ஆர்ப்பாட்டம் செய்தது.

பல மந்திரவாதிகள் இளவரசியைக் குணப்படுத்த முயற்சி செய்தனர். யாராலும் முடியவில்லை.
பேயை விரட்டிய தங்கமணியை பற்றிக் கேள்விப்பட்ட கலிங்க பேரரசர், அவனைத் தன் நாட்டிற்கு வரவழைத்தார்.

''நீதான் இளவரசியைப் பிடித்த பேயை விரட்ட வேண்டும். நீ என்ன கேட்டாலும் தருகிறேன்,'' என்றார் அரசர்.
பேய் பிடித்திருந்த இளவரசியிடம் அவனை அழைத்துச் சென்றனர். அவனைப் பார்த்ததும், அந்தப் பேய் கோபம் கொண்டது.

''ஏமாற்றுக்காரனே! என் வழிக்கே வர மாட்டேன் என்று நல்லவன் போல நடித்தாயே.

''பேராசை பிடித்தவனே! நான் தந்த ஆயிரம் பொற்காசுகள் உனக்குப் போதாதா? என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நீ சாவதற்காகவே இங்கு வந்திருக்கிறாய்,'' என்று கத்தியது.

தொடரும்.........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 12:39 am

''பேயே! என்னை நம்பு. நீ நினைப்பது போல நான் கெட்டவன் இல்லை. கட்டாயத்தின் பேரில்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். எனக்காக இளவரசியை விட்டு ஓடிவிடு. மீண்டும் உன் வழிக்கே வர மாட்டேன்,'' என்று கெஞ்சினான்.

''உன் பேச்சை கேட்க, நான் ஏமாளி அல்ல. உன் உயிர் போவதைப் பார்த்து விட்டுத்தான் இங்கிருந்து போவேன். என்னை விரட்ட உன்னால் ஆகுமா?'' என்று திமிராகப் பேசியது.
அவன் எவ்வளவு கெஞ்சியும் எந்தப் பயனும் இல்லை.

''அரசரிடம் வந்த தங்கமணி, என்னால் இளவரசியை பிடித்த பேயை விரட்ட முடியவில்லை,'' என்றான்.
''இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு உனக்குத் தருகிறேன். இளவரசியைப் பிடித்த பேயை நீ விரட்ட வேண்டும். இல்லையேல், உனக்குத் தூக்குத் தண்டனைதான்,'' என்றார் அரசர்.

'பேயோ இளவரசியை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. பேரரசரோ கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். உயிர் பிழைக்க வழி இல்லையே... என்ன செய்வது? இளவரசியைப் பிடித்த பேயை எப்படி விரட்டுவது என்று சிந்தித்தபடி' இருந்தான் அவன்.

நல்லவழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. மறுநாள் இளவரசியிடம் வந்தான் அவன்.

அவனைப் பார்த்த பேய், ''மீண்டும் ஏன் இங்கே வந்தாய்? நீ சாகாமல் இவளை விட்டுப் போக மாட்டேன் என்றேனே.... எதற்காக வந்து தொல்லை தருகிறாய்? இனியும் உன்னைப் பார்த்தால் இளவரசியை மேலும் ஆட்டி வைப்பேன்,'' என்று கோபத்துடன் மிரட்டியது.

''ஐயோ! பேயே! என்ன செய்வேன்? நம் இருவருக்கும் ஆபத்து வந்து விட்டது. நான் இந்த நாட்டை விட்டு ஓடப் போகிறேன். அதற்கு முன் உன்னிடம் செய்தி சொல்ல வந்தேன். என்ன செய்வேன்?'' என்று கதறினான்.
''எனக்கு ஆபத்தா? எதுவாக இருந்தாலும் சொல்லித் தொலை,'' என்றது அந்தப் பேய்.

''பேயே! அந்தக் கிணற்றில் இருந்து என் மனைவி வெளியே வந்து விட்டாள். என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறாள். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்து விடுவாள்,'' என்று அழுது புலம்பினான்.

''உன் மனைவியா? அந்த அடங்காப் பிடாரியா? இங்கே வருகிறாளா? ஐயோ,'' என்று அலறியது அந்தப் பேய்.

இளவரசியை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது. அதன் பிறகு அந்தப் பேயை யாரும் அங்கே பார்க்கவில்லை.
இளவரசியை விட்டுப் பேய் ஓடி விட்டது என்பதை அறிந்தார் பேரரசர்.

தங்கமணியை பாராட்டிய அரசர், அவனுக்கு ஏராளமான பொருள்களைப் பரிசாகத் தந்தார். தங்கமணி மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

சிறுவர்மலர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 12:40 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக