Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
3 posters
Page 1 of 1
மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
-
திருப்பதி பெருமாள், ஏழுமலை ஏறிவந்து
தன்னை தரிசிக்க முடியாதவர்களுக்காக
வேறு சில தலங்களிலும் எழுந்தருளியுள்ளார்.
அப்படித் தன் பக்தருக்காக இரங்கி, இறங்கி
வந்த தலம், கோபசந்திரம்.
பசுக்கள் நிறைந்த ஊர் என்பதால் கோபசந்திரம்
என்று அழைக்கப்படுகிறதாம்.
அக்காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியில்
வசித்து வந்த சகோதரர்கள், ஏராளமான மாடுகளை
வைத்திருந்தனர். தீவிர பெருமாள் பக்தர்களாகிய
அவர்கள் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் போட்டுக்
கொண்டனர்.
அதன்படி தம்பி ஆறுமாதம் மாடுகளை பராமரிப்பது
என்றும், அப்போது அண்ணன் திருப்பதி சென்று
திருவேங்கடவனை தரிசிப்பதோடு கோயில்
கைங்கரியங்களில் ஈடபடுவதென்றும்; அவர் ஊர்
திரும்பியதும், தம்பி திருப்பதி செல்ல, மாடுகளை
அண்ணன் ஆறுமாதம் பார்த்துக் கொள்வதாகவும்
முடிவு செய்து கொண்டனர்.
–
நாட்கள் நகர்ந்தன. வயதான காலத்தில் அண்ணனால்
திருப்பதி செல்லமுடியவில்லை. பெருமாளை
சேவிக்காமல் வாழ்ந்தென்ன பயன் என நினைத்தவர்,
வேங்கடவனிடம் தனக்கு முக்தியளிக்குமாறு வேண்டிக்
கொண்டார்.
Re: மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய பெருமாள்,
‘கவலைவேண்டாம். உன் ஊரிலேயே நான் எழுந்தருளி
இருக்கிறேன். இனி நீ அங்கேயே என்னை தரிசிக்கலாம்’
என்றார்.
–
இருந்தாலும் ஊர் முழுக்கத் தேடியும் பெருமாள்
இருக்கும் இடத்தை அவரால் அறியமுடியவில்லை.
சிலநாட்களுக்குப் பிறகு வேங்கடவனிடம் மீண்டும்
வேண்ட, அன்றிரவு அவரது கனவில் தோன்றிய
பெருமாள், ‘நீ மேய்க்கும் பசுக்களில் ஒன்று நான்
இருக்கும் இடத்தைக் காட்டிடும்’ என்றார்.
–
அந்த நாள் மேய்ச்சலுக்காக மாடுகளை அவர்
அழைத்துச் செல்ல, ஒன்று மட்டும் கூட்டத்தை விட்டு
விலகி, சிறிய மலைமேல் செல்வதைக் கவனித்தார்.
அதைப் பின் தொடர்ந்து மலையேற புதர் ஒன்றில் அது
படுத்துக் கொண்டது. அங்கிருந்த செடி, கொடிகளை
அப்புறப்படுத்திப் பார்த்தபோது அந்த பசு தலை
வைத்திருந்த இடத்தில் திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தம்
இருந்தது கண்டு மகிழ்ந்தார்.
–
பின்னர் ஊருக்குள் வந்து விஷயத்தைச் சொல்ல,
அந்த இடத்தில் பந்தல் அமைத்து ஆரம்பத்தில் மிகச்
சிறிய அளவில் அமைக்கப்பட்ட ஆலயம்.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் பெரிதாக உருப்
பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணதேவராயர்
காலத்திற்குப் பின்னர் மைசூர் மகாராஜா கட்டுப்பாட்டில்
இருந்த கோயில், தற்போது இந்து சமய அறநிலையத்
தறையால் நிர்வகிக்கப்படுகிறது.
–
தென்பெண்ணையாற்றின் அருகில் சிறிய மலையில்
கோயில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து உச்சியில்,
உள்ள கோயிலை அடைய சாலை வசதி உள்ளது.
பலிபீடமும், துவஜஸ்தம்பம் முன்னே இருக்க, தெற்கு
வாயில் வழியாக நுழைந்தால் மகாமண்டபத்தில்
கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் மூலவரை நோக்கி
சேவை சாதிக்கிறார்.
அர்த்தமண்டபத்திற்கு வெளியே இருபுறமும்
துவாரபாலகர்கள் வீற்றிருக்க, உள்ளே ஸ்ரீதேவி-பூதேவி
சமேதராக வெங்கடேஸ்வர சுவாமியின் உற்சவ
விக்ரகம் உள்ளது.
கருவறை நாயகனாக சேவை சாதிக்கிறார் மூலவர்
வெங்கடேஸவர சுவாமி, திருப்பதி பெருமாளைப்
போல் காட்சிதரும் இவர், 2004ம் ஆண்டு திருப்பதி
தேவஸ்தானத்தால் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்
தக்கது.
அதற்கு முன்புவரை சிறிய வடிவில், சுயம்பாலான
மூலவர் மட்டுமே கருவறையில் இருந்திருக்கிறார்.
வித்தியாசமாக திருநாமம் துலங்க லிங்க வடிவில்
காட்சிதரும் ஆதிமூலவரான இவரை சிலாரூப
பெருமாளின் திருவடியருகே இன்றும் தரிசிககலாம்.
இருவருக்குமே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பல ஆண்டுகள் வரை ‘வெங்கடரமண சுவாமி’ என்றே
மூலவர் அழைக்கப்படடு, பின்னர் ‘வெங்கடேஸ்வர
சுவாமி’ ஆனார்.
மணப்பேறு, மகப்பேறு, பெண்கள் சம்பந்தமான
பிரச்னைகளில் நல்ல தீர்வு, விரும்பிய வாகன வசதி
கிட்டுதல், காணாமல் போன பொருட்கள் திரும்பக்
கிடைத்தல், கல்வியில் சிறப்புநிலை என நம்
கோரிக்கைகள் எதுவானாலும் அதைநிறைவேற்றி
வைக்கும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்,
வெங்கடேஸ்வர சுவாமி.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநில
எல்லைகளும் அருகருகே இருப்பதால் அந்த
மாநிலங்களைச் சேர்ந்த 93 கிராம மக்களுக்கு
குலதெய்வமாகவும் இவர் விளங்குகிறார்.
திருவிழாக் காலங்களில் மூன்று மொழிகளில் துண்டுப்
பிரசுரங்கள் அச்சிடப்படுவதும், இனப் பாகுபாடினறி
அம்மாநில மக்கள் குடும்பத்தோடு இங்கு வந்து ஒன்று
கூடி வழிபாடு செய்வதும் கலைநிகழ்ச்சிகள் தமிழ்,
தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் நடத்தப்
படுவதும் சிறப்பு.
யுகாதியன்று துவங்கி 13 நாட்கள் நடைபெறும்
பிரம்மோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொள்கின்றனர். அதில் 10ம் நாள் கல்யாண
உற்சவம், 11ம் நாள் தேரோட்டம், 12ம் நாள்
தென்பெண்ணை ஆற்றில் தெப்போற்சவம், 13ம் நாள்
சயன உற்சவமும் முக்கிய நிகழ்வுகள்.
இங்குள்ள தேர் மிகப்பழமையானது பொதுவாக தேரின்
சக்கரங்கள் மரத்தாலோ, உலோகத்தாலோ அமைக்கப்
பட்டிருக்கும். ஆனால் 1872ல் உருவாக்கப்பட்ட இந்தத்
தேரில் சக்கரங்கள் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது
சிறப்பாகக் கருதப்படுகிறது. தற்போது புதிய தேருக்கான
திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்த்திருவிழா நடக்கும் நாளில் சுற்றிலும் உள்ள,
மூன்று மாநிலங்களிலும் உள்ள நூற்றியெட்டு
கோயில்களில் தேர்த்திருவிழா நடக்கும் என்பது தனிச்
சிறப்பு.
ஆங்கிலப் புத்தாண்டு தினம், சிரவண (தெலுங்கு
புரட்டாசி) மாதத்தில் மூன்று மற்றும் நான்காம் சனிக்
கிழமைகள், வைகுண்ட ஏகாதசி உள்பட பெருமாளுக்குரிய
அனைத்து சிறப்பு நாட்களிலும் விசேஷ வழிபாடுகள்
உண்டு.
கோயிலுக்கு சற்று தள்ளி ஆஞ்சநேயர் கோயில் ஒன்று
உள்ளது.
திருப்பதி செல்ல முடியாதவர்கள், திருப்பதியிலிருந்து
வந்த இந்தப் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதால்
இது தட்சிண திருப்பதி என அழைக்கப்படுகிறது.
திருப்பதி சென்று வந்த பலனைப் பெற நீங்களும்
ஒருமுறை கோபசத்திரம் வெங்கடேஸ்வர சுவாமியை
வழிபட்டு வரலாமே!
எங்கே இருக்கு:
கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில்
ஓசூர் செல்லும் வழியில் காமன்தொட்டி ஊராட்சியில்
கோபசந்திரம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்
தட்சிண திருப்பதி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
அங்குள்ள கோயில் வளைவிலிருந்து அரை கி.மீ.
தொலைவில் மலைமேல் ஆலயம் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 7.30 – 12.30; மாலை 4 – இரவு 7.30.
சனிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில் காலை
6 – இரவு 7.30
–
————————
மு. வெங்கடேசன்
குமுதம் பக்தி
‘கவலைவேண்டாம். உன் ஊரிலேயே நான் எழுந்தருளி
இருக்கிறேன். இனி நீ அங்கேயே என்னை தரிசிக்கலாம்’
என்றார்.
–
இருந்தாலும் ஊர் முழுக்கத் தேடியும் பெருமாள்
இருக்கும் இடத்தை அவரால் அறியமுடியவில்லை.
சிலநாட்களுக்குப் பிறகு வேங்கடவனிடம் மீண்டும்
வேண்ட, அன்றிரவு அவரது கனவில் தோன்றிய
பெருமாள், ‘நீ மேய்க்கும் பசுக்களில் ஒன்று நான்
இருக்கும் இடத்தைக் காட்டிடும்’ என்றார்.
–
அந்த நாள் மேய்ச்சலுக்காக மாடுகளை அவர்
அழைத்துச் செல்ல, ஒன்று மட்டும் கூட்டத்தை விட்டு
விலகி, சிறிய மலைமேல் செல்வதைக் கவனித்தார்.
அதைப் பின் தொடர்ந்து மலையேற புதர் ஒன்றில் அது
படுத்துக் கொண்டது. அங்கிருந்த செடி, கொடிகளை
அப்புறப்படுத்திப் பார்த்தபோது அந்த பசு தலை
வைத்திருந்த இடத்தில் திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தம்
இருந்தது கண்டு மகிழ்ந்தார்.
–
பின்னர் ஊருக்குள் வந்து விஷயத்தைச் சொல்ல,
அந்த இடத்தில் பந்தல் அமைத்து ஆரம்பத்தில் மிகச்
சிறிய அளவில் அமைக்கப்பட்ட ஆலயம்.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் பெரிதாக உருப்
பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணதேவராயர்
காலத்திற்குப் பின்னர் மைசூர் மகாராஜா கட்டுப்பாட்டில்
இருந்த கோயில், தற்போது இந்து சமய அறநிலையத்
தறையால் நிர்வகிக்கப்படுகிறது.
–
தென்பெண்ணையாற்றின் அருகில் சிறிய மலையில்
கோயில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து உச்சியில்,
உள்ள கோயிலை அடைய சாலை வசதி உள்ளது.
பலிபீடமும், துவஜஸ்தம்பம் முன்னே இருக்க, தெற்கு
வாயில் வழியாக நுழைந்தால் மகாமண்டபத்தில்
கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் மூலவரை நோக்கி
சேவை சாதிக்கிறார்.
அர்த்தமண்டபத்திற்கு வெளியே இருபுறமும்
துவாரபாலகர்கள் வீற்றிருக்க, உள்ளே ஸ்ரீதேவி-பூதேவி
சமேதராக வெங்கடேஸ்வர சுவாமியின் உற்சவ
விக்ரகம் உள்ளது.
கருவறை நாயகனாக சேவை சாதிக்கிறார் மூலவர்
வெங்கடேஸவர சுவாமி, திருப்பதி பெருமாளைப்
போல் காட்சிதரும் இவர், 2004ம் ஆண்டு திருப்பதி
தேவஸ்தானத்தால் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்
தக்கது.
அதற்கு முன்புவரை சிறிய வடிவில், சுயம்பாலான
மூலவர் மட்டுமே கருவறையில் இருந்திருக்கிறார்.
வித்தியாசமாக திருநாமம் துலங்க லிங்க வடிவில்
காட்சிதரும் ஆதிமூலவரான இவரை சிலாரூப
பெருமாளின் திருவடியருகே இன்றும் தரிசிககலாம்.
இருவருக்குமே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பல ஆண்டுகள் வரை ‘வெங்கடரமண சுவாமி’ என்றே
மூலவர் அழைக்கப்படடு, பின்னர் ‘வெங்கடேஸ்வர
சுவாமி’ ஆனார்.
மணப்பேறு, மகப்பேறு, பெண்கள் சம்பந்தமான
பிரச்னைகளில் நல்ல தீர்வு, விரும்பிய வாகன வசதி
கிட்டுதல், காணாமல் போன பொருட்கள் திரும்பக்
கிடைத்தல், கல்வியில் சிறப்புநிலை என நம்
கோரிக்கைகள் எதுவானாலும் அதைநிறைவேற்றி
வைக்கும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்,
வெங்கடேஸ்வர சுவாமி.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநில
எல்லைகளும் அருகருகே இருப்பதால் அந்த
மாநிலங்களைச் சேர்ந்த 93 கிராம மக்களுக்கு
குலதெய்வமாகவும் இவர் விளங்குகிறார்.
திருவிழாக் காலங்களில் மூன்று மொழிகளில் துண்டுப்
பிரசுரங்கள் அச்சிடப்படுவதும், இனப் பாகுபாடினறி
அம்மாநில மக்கள் குடும்பத்தோடு இங்கு வந்து ஒன்று
கூடி வழிபாடு செய்வதும் கலைநிகழ்ச்சிகள் தமிழ்,
தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் நடத்தப்
படுவதும் சிறப்பு.
யுகாதியன்று துவங்கி 13 நாட்கள் நடைபெறும்
பிரம்மோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொள்கின்றனர். அதில் 10ம் நாள் கல்யாண
உற்சவம், 11ம் நாள் தேரோட்டம், 12ம் நாள்
தென்பெண்ணை ஆற்றில் தெப்போற்சவம், 13ம் நாள்
சயன உற்சவமும் முக்கிய நிகழ்வுகள்.
இங்குள்ள தேர் மிகப்பழமையானது பொதுவாக தேரின்
சக்கரங்கள் மரத்தாலோ, உலோகத்தாலோ அமைக்கப்
பட்டிருக்கும். ஆனால் 1872ல் உருவாக்கப்பட்ட இந்தத்
தேரில் சக்கரங்கள் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது
சிறப்பாகக் கருதப்படுகிறது. தற்போது புதிய தேருக்கான
திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்த்திருவிழா நடக்கும் நாளில் சுற்றிலும் உள்ள,
மூன்று மாநிலங்களிலும் உள்ள நூற்றியெட்டு
கோயில்களில் தேர்த்திருவிழா நடக்கும் என்பது தனிச்
சிறப்பு.
ஆங்கிலப் புத்தாண்டு தினம், சிரவண (தெலுங்கு
புரட்டாசி) மாதத்தில் மூன்று மற்றும் நான்காம் சனிக்
கிழமைகள், வைகுண்ட ஏகாதசி உள்பட பெருமாளுக்குரிய
அனைத்து சிறப்பு நாட்களிலும் விசேஷ வழிபாடுகள்
உண்டு.
கோயிலுக்கு சற்று தள்ளி ஆஞ்சநேயர் கோயில் ஒன்று
உள்ளது.
திருப்பதி செல்ல முடியாதவர்கள், திருப்பதியிலிருந்து
வந்த இந்தப் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதால்
இது தட்சிண திருப்பதி என அழைக்கப்படுகிறது.
திருப்பதி சென்று வந்த பலனைப் பெற நீங்களும்
ஒருமுறை கோபசத்திரம் வெங்கடேஸ்வர சுவாமியை
வழிபட்டு வரலாமே!
எங்கே இருக்கு:
கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில்
ஓசூர் செல்லும் வழியில் காமன்தொட்டி ஊராட்சியில்
கோபசந்திரம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்
தட்சிண திருப்பதி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
அங்குள்ள கோயில் வளைவிலிருந்து அரை கி.மீ.
தொலைவில் மலைமேல் ஆலயம் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 7.30 – 12.30; மாலை 4 – இரவு 7.30.
சனிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில் காலை
6 – இரவு 7.30
–
————————
மு. வெங்கடேசன்
குமுதம் பக்தி
Re: மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
ஏற்கனவே 1028க்கு இதே தலைப்பில் ஒரு பதிவு உள்ளதே .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
மேற்கோள் செய்த பதிவு: 1200751T.N.Balasubramanian wrote:ஏற்கனவே 1028க்கு இதே தலைப்பில் ஒரு பதிவு உள்ளதே .
ரமணியன்
-
http://www.eegarai.net/t129188-டொபிக்
பதிவுடன் இணைத்து விடலாம்...
-
Re: மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
பல ஆயிரம்ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக உருவான பெருமாள் என்று வரலாற்றார் கூறுகின்றனர். எனவே அனைவருக்கும் அள்ளி கொடுக்கும் குலதெய்வமாக விளங்குகிறது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014
Re: மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
மேற்கோள் செய்த பதிவு: 1200758ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200751T.N.Balasubramanian wrote:ஏற்கனவே 1028க்கு இதே தலைப்பில் ஒரு பதிவு உள்ளதே .
ரமணியன்
-
http://www.eegarai.net/t129188-டொபிக்
பதிவுடன் இணைத்து விடலாம்...
-
மாறுதல் இல்லா ஒரே விஷயமாதலால் , அதை நீக்கி விடுகிறேன் ,ராம் ! இணைக்கவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» குலதெய்வம்
» குலதெய்வம்
» நம்ம குலதெய்வம்
» குலதெய்வம் தெரியலையா?
» திருப்பதியில் உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு?
» குலதெய்வம்
» நம்ம குலதெய்வம்
» குலதெய்வம் தெரியலையா?
» திருப்பதியில் உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|