புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
48 Posts - 51%
heezulia
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
48 Posts - 51%
heezulia
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தராசு பதில்கள் (கல்கி) Poll_c10தராசு பதில்கள் (கல்கி) Poll_m10தராசு பதில்கள் (கல்கி) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தராசு பதில்கள் (கல்கி)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:05 am

மா. உலகநாதன், திருநீலக்குடி:
தர்மபுரி பஸ் எரிப்புக் குற்றவாளிகளுக்கு மரண
தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருக்கிறதே?

-
ராஜீவ் கொலை வழக்கிலேயே மரண தண்டனையை
ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றமே
குறைத்திருக்கும்போது இது எதிர்பார்க்கக்கூடியதே.

தீர்ப்பில், 'கூட்டத்தினரின் வெறி காரணமாக ஏற்பட்ட
உயிரிழப்பு இது, முன்விரோதம் ஏதுமில்லை' என்று
நீதிபதி குறிப்பிட்டிருப்பது கவனத்துக்குரியது.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தற்போது
தமிழக அரசு முயற்சி மேற்கொள்வது போல் இந்தக்
குற்றவாளிகளையும் சில காலம் சென்று விடுவிக்க
வேண்டும் என்ற கோரிக்கை எழாமலிருந்தாலே
ஆச்சரியம்தான்.

நம் தலைவர்களிடம் கருணை கட்டுக்கடங்காமல்
பெருகிவருவதற்கான காரணத்தை மனோதத்துவ
நிபுணர்கள்தான் விளக்க வேண்டும்.
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:06 am


ஏ. சுகுமார், காட்பாடி:
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கலாசார விழாவுக்கு மத்திய
அரசு தனிப்பிரியம் காட்டுவதாக சர்ச்சை பற்றி?

-
இந்து மதமும் அதன் இந்திய கலாசாரமும்
உன்னதமானவை. அதன் எளிமையே அதன் சிறப்பு.
இயற்கை வழிபாடே அதில் முதலிடம் பெறுகிறது.
அவ்வாறிருக்க அதற்கு ஆடம்பர விழா எதற்கு?

அதுவும் யமுனையின் வௌ்ளச் சமவெளிப்
பகுதியை ராணுவத்தைக் கெண்டு சீர் குலைத்து
பாலம் கட்டி பாழ்படுத்தும்போது பசுமைத் தீர்ப்பாயம்
கேள்விகள் எழுப்பவே செய்யும்.

உலக மக்களிடையே இந்துமத விழுமியங்களை
எடுத்துச் செல்லும் பணியில், ஸ்ரீஸ்ரீயும் இன்னபிற
ஆன்மிகத் தலைவர்களும் ஏற்கெனவே முழு
ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பிரம்மாண்ட கலாசார விழா, சர்ச்சைக்கு வழி
வகுத்தது மட்டுமே மிச்சம். அடக்கத்துடன்
இருந்திருந்தால் அதிகம் சாதித்திருக்கலாம்.

ஸ்ரீஸ்ரீ - மோடி நெருக்கம் மஜோகர் பாரிக்கரை
பரவசப்படுத்தித் தவறிழைக்கச் செய்திருக்கிறது.
முன் ஜாக்கிரதையாகக் கழன்றுகொண்ட புத்திசாலி
பிரணாப் முகர்ஜியே!
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:06 am



கே.சூர்யா, வேங்கைவாசல்:
தமிழக தேர்தல் தேதி அறிவித்த முதல் நாளிலேயே
108 விதிமீறல் புகார்கள்?

-
108 விதி மீறல் மட்டுமல்ல; 108 விதிகளை
மீறுவார்கள் நம் அரசியல்வாதிகள்! பணமூட்டைகள்
பயணத்தைத் தொடங்கி விட்டன!

விதி என்று ஒன்றை வகுத்தால், அதை மீறுவது
நம் அரசியல் கட்சியனரின் முதல் கொள்கை,
என்றைக்கு இவர்கள் விதிகளை அனுசரித்து
நடந்திருக்கிறார்கள்?

தீவிர நடவடிக்கை, கடுமையான தண்டனை என்று
வீரியம் காட்டினால்தான் குறைந்தபட்ச நெறி
முறையையேனும் கட்சிக்காரர்கள் பின்பற்றுவார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க ராஜேஷ் லக்கோனி நிலை
மேலும் பரிதாபமாகும்!
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:07 am



எஸ். கண்ணன், நெய்வேலி:
தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணம்
கைப்பற்றப்பட்டு வருகிறதே, அத்தனையுமே
கணக்கில் வராத பணம்தானா?

-
கணக்கில் வந்திருந்தால், பறக்கும் படை அவற்றைப்
பிடித்தே இராதே. 1.73 கோடி ரூபாய் பிடிபட்டதாக
சமீபத்திய செய்தி. உரிய ஆவணங்கள் இல்லாமல்
இவ்வளவு தொகை வெளியே புழங்குவது ஆச்சர்யம்
அளிக்கவில்லை.

கறுப்புப் பண பொருளாதாரம் கட்சிகளிடம் கொடி
கட்டிப் பறக்கிறது! மேலும், ஜெ. ஸ்டிக்கர் ஒட்டிய
காலணிகள் என்று பல ரகப் பொருள்களும்
பிடிபட்டுள்ளன. தேர்தலுக்கு 60 நாட்களுக்கு முன்பே
இவ்வளவு வேகமா? ஐயோடா சாமி!
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:07 am



ஜி. வசந்தா, ஐயப்பன்தாங்கல்:
இந்தியா பாக்., போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்?

-
இந்திய அரசின் உயர்மட்ட அளவில் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் கொடுத்தால்தான், வீரர்களை அனுப்ப
முடியும் என்று பாக். பிடிவாதம் பிடித்து
பின்னர் ஜகா வாங்கியது. எல்லை கடந்த பயங்கரவாதம்
நிற்கும்வரை பாக். அணியுடன் இந்திய வீரர்கள்
விளையாடக் கூடாது என்று சிவசேனை முஷ்டி

உயர்த்தியது. ஹிமாலய பிரதேசத்தில் போட்டியை
நடத்த ஒப்புக் கொள்ளாமல், பா.ஜ.க., அரசாங்கத்தின்
மதவாதத்தை அடி கோடிட்டுக் காட்ட முயன்றார்
காங்கிரஸ் முதல்வர் வீரபத்ர சிங்.

பாக். அணியை கொல்கத்தாவுக்கு அழைத்து, தன
துணியை வெளிப்படுத்தி, கிரிக்கெட் ஆர்வலர்களின்
பாராட்டைப் பெற்றுக் கொண்டார் மம்தா.
கிரிக்கெட்டுக்குள் ஒவ்வொருவரும் அரசியல் லாபம்
ஈட்ட முயற்சிப்பது வெட்கக்கேடு!
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:07 am



எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்:
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா
ஒருவழியாக நிறைவேறிவிட்டதே?

-
தனியுரிமை (பிரைவசி) தொடர்பான பிரச்னை தவிர,
ஆதார் விஷயத்தில் வேறு எந்தப் பிரச்னையும்
இல்லை. அந்த உரிமை காக்கப்படும் என்று அரசு
உறுதி அளித்திருக்கிறது.

மடியில் கனம் இல்லாதோர் இதுபற்றி கவலைப்படப்
போவதில்லை. உலக நாடுகள் பலவற்றிலும் இது
போன்ற ஒற்றை அடையாள அட்டை புழக்கத்தில்
உள்ளது. காங்கிரஸ் அரசில் ஆதாரை எதிர்த்த
பா.ஜ.க.வே அதற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம்
பெற்றுத் தந்துள்ளது வரவேற்கத்தக்கது.

எனினும், 'ஆதார் அட்டை இல்லாததால் ஒருவரது
மான்யம் பெறுதல் போன்ற இதர உரிமைகளும்
பறிபோகாமல் காக்கப்படும்' என்றும் அரசு உறுதி
அளித்தால் நல்லது.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:08 am



எஸ். ஸ்ரீகாந்த், பெங்களூரு:
குஜராத் கக்ரபார் அணுமின் நிலையத்தில் கசிவு?

-
2012ல் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட முதலாம்
அலகில் ஏற்பட்ட கசிவால், உடனடியாக அந்த
உலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே
கல்பாக்கத்தில் ஒரு அலகில் உற்பத்தி நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கசிவு செய்திகள்
வெளியாகும்போது ஏற்படும் அச்சம் அபரிதமானது.
அந்த உலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு
எவ்வளவு தூரம் தற்காப்புப் பயிற்சிகள் கொடுக்கப்
பட்டுள்ளன.

அணு உலைகள் பற்றிய ஞானம் ஊட்டப்பட்டுள்ளது
என்றெல்லாம் சந்தேகம் எழுகிறது. விபத்து,
முன் அனுமதி பெற்று வருவதல்ல; மனிதனுக்கு
கவனக் குறைவு எப்போது நேரும் என்பதையும்
நிர்ணயிப்பதில்லை.

ஆக, அணுமின் உலைகள் நிறுவுவது மரணத்தை
மடியில் கட்டிக் கொண்டு தூங்குவது போன்றதே!
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:08 am



கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்:
அதிமுகவின் பினாமிதான் மக்கள் நல கூட்டணி
என்கிறாரே மு.க. ஸ்டாலின்?

-
ம.ந.கூ. உருவான காலத்திலிருந்தே இத்தகைய
அவதூறு பரப்பப்படுகிறது. அ.தி.மு.க. எதிர்ப்பு
வாக்குள் அனைத்தும் தனக்கே வரவேண்டும்
என்று தி.மு.க. விரும்புவதில் தவறில்லை.

ஆனால், மாற்றுக் கூட்டணி உருவாகிவிடக் கூடாது,
அப்படி உருவாவதெல்லாம், அ.தி.மு.க.வுக்குச்
சாதகமானவையே என்று பேசுவது தி.மு.க.வின்
அச்சத்தையே காட்டுகிறது.

ம.ந.கூ. மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு.
அதன் வாழ்வும் சரிவும் மக்களிடமே,
அவதூறுகளால் வலுவடைகிறது ம.ந.கூ.
பேராசையால் பெருநஷ்டம் கண்டது தி.மு.க. -
காங்கிரஸ் கூட்டணி.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:08 am



ச. வள்ளுவன், வேம்பார்:
தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்ற விஜயகாந்தின்
அறிவிப்பு பற்றி?

-
தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் சொன்னதை
'கேப்டன் தலைமையில் அமையும் அணி' என்று
விளக்கமளித்தார் பிரேமலதா. அதாவது, 'விஜயகாந்த்
எந்த அணியிலும் போய்ச் சேர மாட்டார்;

அவரே ஒரு அணிக்கத் தலைவராக இருப்பார்'
என்பதையே அன்று விஜயகாந்தும் பிரேமலதாவும்
தெரிவித்தனர். 'பழம் கனிந்து விட்டது. கையில் வந்து
விழும்' என்று காத்திருந்த கலைஞர் பழத்துக்குப்
பதில் ஏமாற்றத்தை மென்று விழுங்கிக்
கொண்டிருக்கிறார்!

பா.ஜ.க.வோ, மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த
கட்சிக்காரர்களோ, விஜயகாந்த் பின்னே அணி
திரள இன்னும் நேரம் இருக்கிறது. ஆறுமுனை
என்பது தேர்தலுக்கு முன்னதாக நான்கு முனைப்
போட்டியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 10:09 am



ஜி. மஞ்சரி, கிருஷ்ணகிரி:
இந்தத் தேர்தலிலாவது இலவச அறிவிப்புகள்
இல்லாமல் போகுமா?

-
அது இல்லாமலா? ரெஃப்ரிஜிரேட்டர் கொடுக்கப்
போகிறார்களாமே! ஆனால், இம்முறை தேர்தல்
ஆணையத்தின் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
அதாவது, கொடுக்கப்படும் வாக்குறுதியை நிறை
வேற்ற போதுமானநிதி ஆதாரங்கள் எங்கே
என்பதை விவரிக்க வேண்டுமாம்.

இது ஒரு கட்டுப்பாடா என்று சிரிக்கின்றன
அரசியல் கட்சிகள். தங்கள் ஏழ்மை கொச்சைப்
படுத்தப்படுவது கண்டு மக்கள் வெகுண்டெழுந்து,
இவற்றை நிராகரித்தால் மட்டுமே. இலவசங்களுக்கு
தீர்வு கிடைக்கும்.

அது வரை, நம் மக்களின் இயலாமையை,
இல்லாமையைச் சுரண்டும் மனப் போக்கு மாறப்
போவதில்லை.
-
------------------------------------

--கல்கி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக