Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
First topic message reminder :
மேஷம்
பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள்.உதவும் குணம் கொண்ட நீங்கள்,பலரின் நம்பகத்தன்மையைப் பெற்றிறுருப்பீர்கள். இந்த துர்முகி ஆண்டுபிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய்8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேறும்.
பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருப்பதுடன், புதனும் உங்கள் ராசியில்அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள்நல்ல விதத்தில் முடியும். புது வாய்ப்புகள் தேடிவரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தில் சிலமாற்றங்கள் செய்வீர்கள்.
அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடையராசிக்கு 3ம் வீட்டில் சந்திரன்அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். மனோ பலம் அதிகரிக்கும்.வருடப் பிறப்பு முதல்ஆவணி மாதம் பிற்பகுதி வரை ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிறுசிறு விபத்துகள், ரத்த சோகை, முன்கோபம்,வீண் பகை, சகோதர வகையில்செலவுகள் வந்துச் செல்லும்.
வீடு,மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வருடப்பிறப்பு முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் நிற்பதால் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 2.8.2016முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல்13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு6ல் மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.
சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர்வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.
இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள்வந்து போகும். எவ்வளவு பணம்வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். திடீர் பயணங்கள் அதிகமாகும்.பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தங்க ஆபரணங்களை யாருக்கும்இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.உங்களை விட தகுதியில் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்கள் அல்லது ஒரு காலத்தில்உங்கள் உதவியால் முன்னேறியவர்களில் சிலர் உங்களை மதிக்காமல்போவார்கள். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும்,வக்ரகதியிலும் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் மறைந்துக்கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல்,குழப்பங்கள் விலகும்.
இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைமாற்றிக் கொள்ளப்பாருங்கள். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவிப்பீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோஅல்லது உங்களது தவறுகளை சுட்டிக்காட்டினாலோ அதை பொறுமையாக ஏற்றுக்கொள்வது நல்லது.
இரவு நேரப்பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிடவேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். வழக்கு வியாஜ்யம் என்றெல்லாம் வீண் செலவுகள் செய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.
பணம், திருமண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். அரசுக்குசெலுத்த வேண்டிய வரிகளில் தாமதம்வேண்டாம். 26.8.2016 முதல் 18.9.2016 வரை உங்களின் தன-சப்தமாதிபதியான சுக்ரன் 6ல் சென்று மறைவதால்வாகன விபத்து, வழக்கால் நெருக்கடிகள், மனைவிக்கு கர்ப்பப்பை வலி வந்து நீங்கும்.
இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு5ம் வீட்டிலேயே அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போவதுநல்லது. சில சமயங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். கோபப்படாதீர்கள். அவர்களின் திருமணம், உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தை சரியாக பராமரிக்க முடியாமல் போகும்.
கூடாப்பழக்கமுள்ளவர்களுடன் எந்த நட்பும்வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவதுநல்லது. ஆனால், கேது இந்தாண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.கோவயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
புதுப் பதவிக்கு உங்களதுபெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமாநிலத்தவர்கள், மாற்று மதத்தவர்களால் திடீர்திருப்பம் உண்டாகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும்பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் கடினமாக உழைத்து ஒரளவுலாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.வெளிமாநிலத்தை சார்ந்தவர்களை வேலைக்கு வைக்கும் போது கவனமாக இருங்கள்.பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இருப்பதை வைத்து சம்பாதிக்கப் பாருங்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம்.
பங்குதாரர்கள் உங்களது கருத்துக்களை முதலில்மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்.கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள்,கடல் வாழ் உயிரினம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, புரட்டாசி, தை,மாசி மாதங்களில் பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெறவேண்டி வரும். சக ஊழியர்கள்கூட சில நேரங்களில் சாதகமாகவும்,பல நேரங்களில் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வார்கள். புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிகசம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடிவரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல்கசந்து இனிக்கும். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். இரவில்அதிக நேரம் கண் விழித்திருக்கவேண்டாம். கண்ணிற்கு கீழ் கருவளையம்,மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில்வலி வந்து போகும். திருமணம் நிச்சயமாகும்.
மாணவ-மாணவிகளே! மொழித் திறனை வளர்த்துக்கொள்வீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில்கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்களால் முன்னேற்றம்உண்டாகும். கலை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! தொகுதி மக்களை மறக்காதீர்கள்.உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராகசெயல்படுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
கலைத்துறையினரே! போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பளவிஷயத்தில் கறாராக இருங்கள். திரையிடப்படாமல்முடங்கிக் கிடந்த உங்களுடைய படைப்புகள்வெளியாகும்.
விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்றுகவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இந்த துர்முகி வருடம்வளைந்து கொடுத்துப் போவதன் மூலமாகவும், சகிப்புத்தன்மையாலும் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவதாக அமையும்.
பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ் வரரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
'துர்முகி' வருட பொதுப்பலன்கள்கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் !
மேஷம்
பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள்.உதவும் குணம் கொண்ட நீங்கள்,பலரின் நம்பகத்தன்மையைப் பெற்றிறுருப்பீர்கள். இந்த துர்முகி ஆண்டுபிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய்8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேறும்.
பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருப்பதுடன், புதனும் உங்கள் ராசியில்அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள்நல்ல விதத்தில் முடியும். புது வாய்ப்புகள் தேடிவரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தில் சிலமாற்றங்கள் செய்வீர்கள்.
அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடையராசிக்கு 3ம் வீட்டில் சந்திரன்அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். மனோ பலம் அதிகரிக்கும்.வருடப் பிறப்பு முதல்ஆவணி மாதம் பிற்பகுதி வரை ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிறுசிறு விபத்துகள், ரத்த சோகை, முன்கோபம்,வீண் பகை, சகோதர வகையில்செலவுகள் வந்துச் செல்லும்.
வீடு,மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வருடப்பிறப்பு முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் நிற்பதால் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 2.8.2016முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல்13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு6ல் மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.
சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர்வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.
இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள்வந்து போகும். எவ்வளவு பணம்வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். திடீர் பயணங்கள் அதிகமாகும்.பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தங்க ஆபரணங்களை யாருக்கும்இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.உங்களை விட தகுதியில் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்கள் அல்லது ஒரு காலத்தில்உங்கள் உதவியால் முன்னேறியவர்களில் சிலர் உங்களை மதிக்காமல்போவார்கள். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும்,வக்ரகதியிலும் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் மறைந்துக்கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல்,குழப்பங்கள் விலகும்.
இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைமாற்றிக் கொள்ளப்பாருங்கள். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவிப்பீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோஅல்லது உங்களது தவறுகளை சுட்டிக்காட்டினாலோ அதை பொறுமையாக ஏற்றுக்கொள்வது நல்லது.
இரவு நேரப்பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிடவேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். வழக்கு வியாஜ்யம் என்றெல்லாம் வீண் செலவுகள் செய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.
பணம், திருமண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். அரசுக்குசெலுத்த வேண்டிய வரிகளில் தாமதம்வேண்டாம். 26.8.2016 முதல் 18.9.2016 வரை உங்களின் தன-சப்தமாதிபதியான சுக்ரன் 6ல் சென்று மறைவதால்வாகன விபத்து, வழக்கால் நெருக்கடிகள், மனைவிக்கு கர்ப்பப்பை வலி வந்து நீங்கும்.
இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு5ம் வீட்டிலேயே அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போவதுநல்லது. சில சமயங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். கோபப்படாதீர்கள். அவர்களின் திருமணம், உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தை சரியாக பராமரிக்க முடியாமல் போகும்.
கூடாப்பழக்கமுள்ளவர்களுடன் எந்த நட்பும்வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவதுநல்லது. ஆனால், கேது இந்தாண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.கோவயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
புதுப் பதவிக்கு உங்களதுபெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமாநிலத்தவர்கள், மாற்று மதத்தவர்களால் திடீர்திருப்பம் உண்டாகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும்பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் கடினமாக உழைத்து ஒரளவுலாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.வெளிமாநிலத்தை சார்ந்தவர்களை வேலைக்கு வைக்கும் போது கவனமாக இருங்கள்.பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இருப்பதை வைத்து சம்பாதிக்கப் பாருங்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம்.
பங்குதாரர்கள் உங்களது கருத்துக்களை முதலில்மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்.கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள்,கடல் வாழ் உயிரினம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, புரட்டாசி, தை,மாசி மாதங்களில் பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெறவேண்டி வரும். சக ஊழியர்கள்கூட சில நேரங்களில் சாதகமாகவும்,பல நேரங்களில் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வார்கள். புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிகசம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடிவரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல்கசந்து இனிக்கும். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். இரவில்அதிக நேரம் கண் விழித்திருக்கவேண்டாம். கண்ணிற்கு கீழ் கருவளையம்,மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில்வலி வந்து போகும். திருமணம் நிச்சயமாகும்.
மாணவ-மாணவிகளே! மொழித் திறனை வளர்த்துக்கொள்வீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில்கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்களால் முன்னேற்றம்உண்டாகும். கலை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! தொகுதி மக்களை மறக்காதீர்கள்.உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராகசெயல்படுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
கலைத்துறையினரே! போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பளவிஷயத்தில் கறாராக இருங்கள். திரையிடப்படாமல்முடங்கிக் கிடந்த உங்களுடைய படைப்புகள்வெளியாகும்.
விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்றுகவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இந்த துர்முகி வருடம்வளைந்து கொடுத்துப் போவதன் மூலமாகவும், சகிப்புத்தன்மையாலும் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவதாக அமையும்.
பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ் வரரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
'துர்முகி' வருட பொதுப்பலன்கள்கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
கும்பம்
எல்லா சம்பவங்களுக்கும் ஒரு காரண, காரியம் இருக்கும் என்பதை உணரும் நீங்கள், யாரிடமும் உதவி கேட்க தயங்குவீர்கள். அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள், அதை அடுத்தவர்களுக்காக மட்டும் பயன்படுத்துவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித் தேடி அலுத்துப் போன உங்களின் மகளுக்கு இந்தாண்டு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும்.
மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீக சொத்தை சீர்த்திருத்தம் செய்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துர்முகி வருடம் பிறக்கும் நேரத்தில் செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது வேலை கிடைக்கும்.
1.8.2016 வரை குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 9ல் அமர்வதால் தன்னம்பிக்கை உண்டாகும்.
தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிகவாதிகளின் ஆசி பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதா மாதம் லோன் வாங்கி பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம்.
அதற்கான வழிவகைகள் பிறக்கும். வருடப் பிறப்பு முதல் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7ம் இடத்திலேயே ராகு தொடர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை வந்து போகும்.
பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். கேதுவும் இந்தாண்டு முழுக்க உங்கள் ஜென்ம ராசியிலேயே ஆரோக்யம் பாதிக்கும்.
அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்து செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.
எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப் படுவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம்.
அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும்.
உத்யோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, முடி உதிர்தல் வந்து போகும். பள்ளிக் கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தகுந்த ஆதாரமின்றி எதிர்க் கட்சியினரை தாக்கி பேச வேண்டாம்.
கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் கடந்து பெரிய வாய்ப்புகளும் வரும்.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோட்டு, கேஸ் என்றெல்லாம் அதிகம் செலவு செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு உடல் நலக் குறைவையும், நெருக்கடிகளையும் தந்தாலும் சமயோஜித புத்தியால் முன்னேற வைக்கும்.
பரிகாரம்: வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். சாலைத் தொழிலாளிகளுக்கு இயன்றளவு உதவுங்கள்.
எல்லா சம்பவங்களுக்கும் ஒரு காரண, காரியம் இருக்கும் என்பதை உணரும் நீங்கள், யாரிடமும் உதவி கேட்க தயங்குவீர்கள். அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள், அதை அடுத்தவர்களுக்காக மட்டும் பயன்படுத்துவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித் தேடி அலுத்துப் போன உங்களின் மகளுக்கு இந்தாண்டு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும்.
மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீக சொத்தை சீர்த்திருத்தம் செய்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துர்முகி வருடம் பிறக்கும் நேரத்தில் செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது வேலை கிடைக்கும்.
1.8.2016 வரை குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 9ல் அமர்வதால் தன்னம்பிக்கை உண்டாகும்.
தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிகவாதிகளின் ஆசி பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதா மாதம் லோன் வாங்கி பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம்.
அதற்கான வழிவகைகள் பிறக்கும். வருடப் பிறப்பு முதல் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7ம் இடத்திலேயே ராகு தொடர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை வந்து போகும்.
பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். கேதுவும் இந்தாண்டு முழுக்க உங்கள் ஜென்ம ராசியிலேயே ஆரோக்யம் பாதிக்கும்.
அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்து செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.
எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப் படுவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம்.
அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும்.
உத்யோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, முடி உதிர்தல் வந்து போகும். பள்ளிக் கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தகுந்த ஆதாரமின்றி எதிர்க் கட்சியினரை தாக்கி பேச வேண்டாம்.
கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் கடந்து பெரிய வாய்ப்புகளும் வரும்.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோட்டு, கேஸ் என்றெல்லாம் அதிகம் செலவு செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு உடல் நலக் குறைவையும், நெருக்கடிகளையும் தந்தாலும் சமயோஜித புத்தியால் முன்னேற வைக்கும்.
பரிகாரம்: வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். சாலைத் தொழிலாளிகளுக்கு இயன்றளவு உதவுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
மீனம்
மந்திரியே எதிர்த்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். காசுபணம் தான் குறிக்கோள் என்றில்லாமல் வாழ்க்கையை காதலிப்பீர்கள். இந்த துர்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.
பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறைக் கட்டுவது, வீட்டிற்கு வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பர். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும்.
பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரானவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமொழி, மதம், அண்டைமாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும். என்றாலும் கேது ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள்.
திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள்.
வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. வீண் பழிகள் வரக்கூடும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
ஆனால் 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.
ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8ல் அமர்வதால் தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.
எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எல்லோருக்கும் எல்லா வகையில் உதவியும் நம்மை ஏன் குறைக் கூறுகிறார்கள் என்று அவ்வப்போது புலம்புவீர்கள். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9ல் நிற்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்துவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள்.
தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும்.
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங்,ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.
வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தையில் மதிப்புக் கூடும். 2.8.2016 முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.
சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
விவசாயிகளே! மகசூல் பெருகும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வருமானம் உயரும். வீட்டில் விசேஷங்களெல்லாம் நடந்தேறும். இந்த துர்முகி ஆண்டு துவண்டுக் கிடந்த உங்களுக்கு புதிய பாதையை அமைத்துத் தருவதுடன் புகழ்பட வாழ வைக்கும்.
பரிகாரம்: திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு உதவுங்கள்.
மந்திரியே எதிர்த்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். காசுபணம் தான் குறிக்கோள் என்றில்லாமல் வாழ்க்கையை காதலிப்பீர்கள். இந்த துர்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.
பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறைக் கட்டுவது, வீட்டிற்கு வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பர். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும்.
பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரானவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமொழி, மதம், அண்டைமாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும். என்றாலும் கேது ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள்.
திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள்.
வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. வீண் பழிகள் வரக்கூடும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
ஆனால் 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.
ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8ல் அமர்வதால் தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.
எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எல்லோருக்கும் எல்லா வகையில் உதவியும் நம்மை ஏன் குறைக் கூறுகிறார்கள் என்று அவ்வப்போது புலம்புவீர்கள். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9ல் நிற்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்துவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள்.
தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும்.
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங்,ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.
வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தையில் மதிப்புக் கூடும். 2.8.2016 முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.
சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
விவசாயிகளே! மகசூல் பெருகும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வருமானம் உயரும். வீட்டில் விசேஷங்களெல்லாம் நடந்தேறும். இந்த துர்முகி ஆண்டு துவண்டுக் கிடந்த உங்களுக்கு புதிய பாதையை அமைத்துத் தருவதுடன் புகழ்பட வாழ வைக்கும்.
பரிகாரம்: திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு உதவுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
துர்முகி ஆண்டு பலன் (ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்)
துர்முகி ஆண்டு பலன் (ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்)
ஏற்கனவே ஜோதிடர் வித்யாதரன் அவர்களின் வெளியிட்ட ஆண்டு பலன்கள் வந்துள்ளன .
மேலும் ஜோதிட பூஷன் வேங்கடசுப்பிரமணியன் என்ன கூறுகிறார் பார்க்கலாம் .
இந்த வருடத்தை சமஸ்கிருத ஜோதிட நூல்கள் துன்முகி எனவும், தமிழ் ஜோதிட நூல்கள் துன்முகி எனவும் குறிப்பிடுகின்றன. துன்முகி தேவதையானவள் கலியுக மக்களிடையே இருக்கக் கூடிய கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் போக்குவதற்காக சற்றே கோர முகத்துடன் தோன்றி மக்களுக்கு நாலாவித நன்மைகளையும் நல்குபவளாக இருப்பாள்.
துன்முகி வருட வெண்பா இது.
“மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறைதீர வே விளையும்
அச்சமில்லை வெள்ளையரி தாம்”
என்ற இடைக்காடர் சித்தர் பெருமான் பாடலின்படி இந்த வருடம் உலகெங்கும் மழை பொழியும். மண்வளம் அதிகமாகும். விவசாயம் தழைக்கும். தானியங்கள் பெருகுவதுடன் பால் உற்பத்தியும் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். துன்முகி வருடத்தின் ராஜாவாகவும், தான்யாதிபதியாகவும் சுக்கிரனும், மந்திரியாகவும், மேகாதிபதியாகவும், அர்க்காதிபதியாகவும் புதனும், ரசாதிபதியாக சந்திரனும், நீரசாதிபதியாக சனியும் வருகிறார்கள்.
மேஷம்
அதீத தன்னம்பிக்கையாளர்களே! இந்த துன்முகி வருடம் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் பிறப்பதால் மனோபலம் அதிகமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருடப் பிறப்பு முதல் 01.08.2016 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால் அடிப்படை வசதிகள் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வரன் தேடித் தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு கல்யாணம் சிறப்பாக முடியும். மகனின் உயர்கல்வி, வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வீண்பழி வரக்கூடும். புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் வரும். தன்னம்பிக்கை குறையும். சில நேரங்களில் நெருக்கடிகளையும், தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டிவரும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் திறமைகள் வெளிப்படும். தடைபட்ட திருமணம் கூடி வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு இருந்துவந்த நோய் குணமாகும். இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமானவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீட்டில் களவுபோக வாய்ப்பிருக்கிறது. நெஞ்சு வலி, உறக்கமின்மை வந்து செல்லும். கை, கால் மரத்துப் போகும். துன்முகி வருடம் முழுக்க ராகு ராசிக்கு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாதக் குணம் அதிகமாகும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.
பாதை மாற வாய்ப்பிருக்கிறது. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கேது லாப வீட்டிலேயே தொடர்வதால் பங்குச்சந்தை பணம் தரும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். கோவில் விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்துகொண்டேயிருக்கும். யாருக்கும் கடன் தர வேண்டாம். ஆனி, தை, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். உங்களின் உத்யோக ஸ்தானாதிபதியான சனி பகவான் 8-ல் நீடிப்பதால் அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுப்பார்கள். நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வைப் போராடி பெற வேண்டிவரும்.
இந்த வருடம் பிறக்கும்போது குரு பகவான் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் கௌரவம் ஒரு படி உயரும். கேது 11-வது வீட்டில் தொடர்வதால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் பெரியோரின் ஆசியால் பணப் புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வும் கிடைக்கும்.
ரிஷபம்
கடந்த காலத்தை அசைபோடுபவர்களே! உங்கள் ராசிக்கு தனஸ்தானத் தில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளுமளவுக்கு நெருக்கமாவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி நவீன ரக வண்டி வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 01.08.2016 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களும் ஏற்படும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடித் திட்டங்கள் தீட்டி உழைப்பீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களை கட்டும். மனை வாங்கி போட்டு வெகு நாட்களாகிவிட்டதே! அதில் இப்போது வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். குழந்தைபாக்யம் தள்ளிப் போனவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும்.
மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால் வீண் பழி, அவமானங்கள், கவலைகள், பொருள் இழப்புகள், ஏமாற்றங்கள் தொடங்கி உடலைப் பாதிக்கும் சிறுநீரகத் தொற்று, ஒவ்வாமையும் வந்துபோகும். இந்த வருடம் முழுக்க ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-வது வீட்டிலும் தொடர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும்.
வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். கண்டகச் சனி நடைபெறுவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கருப்பையில் கட்டி, தைராய்டு, சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையாலும் பிரியும் நிலைக்குச் சிலர் தள்ளப்படுவீர்கள். உங்கள் ராசியை சனி பார்ப்பதால் மறதி, மன இறுக்கம், வீண் சந்தேகம் வந்து நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். விபத்துகள், பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
தொழில் போட்டி அதிகமாகும். ஆவணி, ஐப்பசி மாதங்களில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் பழைய சிக்கல்களெல்லாம் பனியாய் விலகும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். என்றாலும் உத்யோகஸ்தானத்தில் இந்த ஆண்டு முழுக்க கேது தொடர்வதால் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், மொட்டைக் கடிதங்களின் அடிப்படையில் சின்னச் சின்ன விசாரணைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் வரும். ஆடி, மாசி மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும்.
ராசிநாதன் சுக்ரன் உச்சமாகி முழு பலத்துடன் இருக்கும் போது இந்த வருடம் பிறப்பதாலும், ஆகஸ்டு மாதம் முதல் குரு வலுவடைவதாலும் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் வழிகாட்டுதலால் முன்னேறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும்.
மிதுனம்
கற்பூரப் புத்தி உள்ளவர்களே! சூரியன், புதன் மற்றும் சுக்ரன் உங்களுக்குச் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலையுயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். இந்த வருடம் முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.
பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த துன்முகி வருடம் பிறப்பதால் அவ்வப்போது தலைச் சுற்றல், செரிமானக் கோளாறு, பதற்றம், படபடப்பு வந்துசெல்லும். இந்த துன்முகி வருடம் முழுக்க ராகு 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் மனோபலம் கூடும். பங்குகள் மூலம் பணம் வரும். வேற்று மதத்தவர், மாற்று மொழியினரால் திடீர்திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். ஆனால் கேது 9-ல் தொடர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரும். வருடப் பிறப்பு முதல் 01.08.2016 வரை குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 4-ல் நுழைவதால் தாயாருக்கு நெஞ்சு வலி, முதுகுத் தண்டில் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்கள் தாமதமாகும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 5-ல் அமர்வதால் மனக்குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். அயல் நாட்டிலிருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் புதுக்கிளைகள் தொடங்குவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சித்திரை, புரட்டாசி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
சனி, ராகு வலுவாக இருப்பதால் இந்த வருடத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
தொடரும்
ஏற்கனவே ஜோதிடர் வித்யாதரன் அவர்களின் வெளியிட்ட ஆண்டு பலன்கள் வந்துள்ளன .
மேலும் ஜோதிட பூஷன் வேங்கடசுப்பிரமணியன் என்ன கூறுகிறார் பார்க்கலாம் .
இந்த வருடத்தை சமஸ்கிருத ஜோதிட நூல்கள் துன்முகி எனவும், தமிழ் ஜோதிட நூல்கள் துன்முகி எனவும் குறிப்பிடுகின்றன. துன்முகி தேவதையானவள் கலியுக மக்களிடையே இருக்கக் கூடிய கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் போக்குவதற்காக சற்றே கோர முகத்துடன் தோன்றி மக்களுக்கு நாலாவித நன்மைகளையும் நல்குபவளாக இருப்பாள்.
துன்முகி வருட வெண்பா இது.
“மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறைதீர வே விளையும்
அச்சமில்லை வெள்ளையரி தாம்”
என்ற இடைக்காடர் சித்தர் பெருமான் பாடலின்படி இந்த வருடம் உலகெங்கும் மழை பொழியும். மண்வளம் அதிகமாகும். விவசாயம் தழைக்கும். தானியங்கள் பெருகுவதுடன் பால் உற்பத்தியும் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். துன்முகி வருடத்தின் ராஜாவாகவும், தான்யாதிபதியாகவும் சுக்கிரனும், மந்திரியாகவும், மேகாதிபதியாகவும், அர்க்காதிபதியாகவும் புதனும், ரசாதிபதியாக சந்திரனும், நீரசாதிபதியாக சனியும் வருகிறார்கள்.
மேஷம்
அதீத தன்னம்பிக்கையாளர்களே! இந்த துன்முகி வருடம் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் பிறப்பதால் மனோபலம் அதிகமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருடப் பிறப்பு முதல் 01.08.2016 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால் அடிப்படை வசதிகள் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வரன் தேடித் தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு கல்யாணம் சிறப்பாக முடியும். மகனின் உயர்கல்வி, வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வீண்பழி வரக்கூடும். புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் வரும். தன்னம்பிக்கை குறையும். சில நேரங்களில் நெருக்கடிகளையும், தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டிவரும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் திறமைகள் வெளிப்படும். தடைபட்ட திருமணம் கூடி வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு இருந்துவந்த நோய் குணமாகும். இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமானவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீட்டில் களவுபோக வாய்ப்பிருக்கிறது. நெஞ்சு வலி, உறக்கமின்மை வந்து செல்லும். கை, கால் மரத்துப் போகும். துன்முகி வருடம் முழுக்க ராகு ராசிக்கு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாதக் குணம் அதிகமாகும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.
பாதை மாற வாய்ப்பிருக்கிறது. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கேது லாப வீட்டிலேயே தொடர்வதால் பங்குச்சந்தை பணம் தரும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். கோவில் விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்துகொண்டேயிருக்கும். யாருக்கும் கடன் தர வேண்டாம். ஆனி, தை, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். உங்களின் உத்யோக ஸ்தானாதிபதியான சனி பகவான் 8-ல் நீடிப்பதால் அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுப்பார்கள். நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வைப் போராடி பெற வேண்டிவரும்.
இந்த வருடம் பிறக்கும்போது குரு பகவான் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் கௌரவம் ஒரு படி உயரும். கேது 11-வது வீட்டில் தொடர்வதால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் பெரியோரின் ஆசியால் பணப் புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வும் கிடைக்கும்.
ரிஷபம்
கடந்த காலத்தை அசைபோடுபவர்களே! உங்கள் ராசிக்கு தனஸ்தானத் தில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளுமளவுக்கு நெருக்கமாவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி நவீன ரக வண்டி வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 01.08.2016 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களும் ஏற்படும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடித் திட்டங்கள் தீட்டி உழைப்பீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களை கட்டும். மனை வாங்கி போட்டு வெகு நாட்களாகிவிட்டதே! அதில் இப்போது வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். குழந்தைபாக்யம் தள்ளிப் போனவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும்.
மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால் வீண் பழி, அவமானங்கள், கவலைகள், பொருள் இழப்புகள், ஏமாற்றங்கள் தொடங்கி உடலைப் பாதிக்கும் சிறுநீரகத் தொற்று, ஒவ்வாமையும் வந்துபோகும். இந்த வருடம் முழுக்க ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-வது வீட்டிலும் தொடர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும்.
வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். கண்டகச் சனி நடைபெறுவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கருப்பையில் கட்டி, தைராய்டு, சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையாலும் பிரியும் நிலைக்குச் சிலர் தள்ளப்படுவீர்கள். உங்கள் ராசியை சனி பார்ப்பதால் மறதி, மன இறுக்கம், வீண் சந்தேகம் வந்து நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். விபத்துகள், பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
தொழில் போட்டி அதிகமாகும். ஆவணி, ஐப்பசி மாதங்களில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் பழைய சிக்கல்களெல்லாம் பனியாய் விலகும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். என்றாலும் உத்யோகஸ்தானத்தில் இந்த ஆண்டு முழுக்க கேது தொடர்வதால் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், மொட்டைக் கடிதங்களின் அடிப்படையில் சின்னச் சின்ன விசாரணைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் வரும். ஆடி, மாசி மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும்.
ராசிநாதன் சுக்ரன் உச்சமாகி முழு பலத்துடன் இருக்கும் போது இந்த வருடம் பிறப்பதாலும், ஆகஸ்டு மாதம் முதல் குரு வலுவடைவதாலும் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் வழிகாட்டுதலால் முன்னேறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும்.
மிதுனம்
கற்பூரப் புத்தி உள்ளவர்களே! சூரியன், புதன் மற்றும் சுக்ரன் உங்களுக்குச் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலையுயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். இந்த வருடம் முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.
பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த துன்முகி வருடம் பிறப்பதால் அவ்வப்போது தலைச் சுற்றல், செரிமானக் கோளாறு, பதற்றம், படபடப்பு வந்துசெல்லும். இந்த துன்முகி வருடம் முழுக்க ராகு 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் மனோபலம் கூடும். பங்குகள் மூலம் பணம் வரும். வேற்று மதத்தவர், மாற்று மொழியினரால் திடீர்திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். ஆனால் கேது 9-ல் தொடர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரும். வருடப் பிறப்பு முதல் 01.08.2016 வரை குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 4-ல் நுழைவதால் தாயாருக்கு நெஞ்சு வலி, முதுகுத் தண்டில் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்கள் தாமதமாகும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 5-ல் அமர்வதால் மனக்குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். அயல் நாட்டிலிருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் புதுக்கிளைகள் தொடங்குவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சித்திரை, புரட்டாசி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
சனி, ராகு வலுவாக இருப்பதால் இந்த வருடத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
தொடரும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
தொடர்ச்சி
கடகம்
இரக்கக் குணம் அதிகமுள்ளவர்களே! உங்களின் யோகாதிபதி செவ்வாய் ஆட்சிபெற்று 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வி.ஐ.பி.க்கள் நண்பர்களாவார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகள் உங்களைப் புரிந்துகொள்வார். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் வந்தமைவாள்.
எதிர்பாராத பணவரவு உண்டு. இந்தாண்டு முழுக்க சனிபகவான் 5-ம் இடத்திலேயே தொடர்வதால் குழம்புவீர்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சல்களும், செலவுகளும் இருக்கத்தான் செய்யும். திடீர் பயணங்கள் உண்டாகும். அவ்வப்போது தூக்கம் கெடும்.
இந்த துன்முகி வருடம் முழுக்க ராகு 2-ம் இடத்திலும், கேது 8-ம் இடத்திலும் தொடர்வதால் பல் ஈறில் ரத்தம் கசிதல், பல், காது மற்றும் கணுக்கால் வலி, பார்வைக் கோளாறு வந்துபோகும். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். சாலைகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். 01.08.2016 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வங்கிக் கடன் கிடைத்து வாகனம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.
முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல் அமர்வதால் தாயாருடன் கசப்புணர்வுகள், அவருக்கு நரம்புச் சுளுக்கு, மூட்டு வலி வந்து போகும். அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சிலர் வீடு மாற வேண்டி வரும். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிறுநீரகத் தொற்று, வாய்ப் புண், வயிற்றுப் புண் வரக்கூடும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். லாபம் சுமார்தான். புது ஒப்பந்தங்களை யோசித்து ஏற்கப்பாருங்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் எதிர்பார்த்த சலுகைகளும், விரும்பிய இடத்திற்கே வேலை மாற்றமும் உண்டாகும்.
செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதாலும், குரு சாதகமாக இருப்பதாலும் பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் முடியும். வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
சிம்மம்
தன்மானம் தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் நினைத்தது நிறைவேறும். வெற்றிபெற்ற மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். 01.08.2016 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால் உடல்நலம் பாதிக்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். தோலில் நமைச்சல், குட்லவால் தொற்று, வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வரக்கூடும்.
தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைப்பீர்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, களைப்பு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மோதல்களெல்லாம் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரம், நகைகளையெல்லாம் மீட்க வழி வகை பிறக்கும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 3-ல் அமர்வதால் வேலைச் சுமை இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். உறவினர்களில் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகுவார்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 4-ல் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகத் தொடர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். அவருடன் பிணக்குகள் வரும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும்.
வழக்கால் நெருக்கடிகள் வரக்கூடும். நகர எல்லைப் பகுதியிலோ, வெளியூரிலோ வீடோ, மனையோ வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. உங்கள் இடத்தை மற்றவர்கள் ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் இருக்கும் ஊரை விட்டு வேறு ஊர், வேறு மாநிலத்திற்கு குடிபுகுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டிவரும். இந்த ஆண்டு உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சைக் கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். சின்னச்சின்னப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்கப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இந்த வருடம் பிறப்பதாலும், ஆகஸ்டு மாதம் முதல் குரு வலுவடைவதாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். நோய் விலகும். ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும்.
கன்னி
மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்களே! இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக்கொண்டிருப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறமை அதிகரிக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். புதுப் பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 3-ம் வீட்டில் தொடர்வதால் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். புதுவேலை கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பூர்வீகச்சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். ராகுபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். திட்டமிடாத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப செலவுகளும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் கேது இந்தாண்டு முழுக்க 6-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள்.
வேற்று மாநிலத்தவர்கள், மாற்று மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 01.08.2016 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரைகுறையாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தூக்கம் குறையும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம் வந்து போகும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தெரியும். ஒவ்வாமைகள், நோய்த்தொற்றுகள் வரக்கூடும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தினசரி மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு, கசப்புணர்வு வந்து செல்லும். யாருக்காகவும் உறுதிமொழிகள் தர வேண்டாம். உங்கள் குடும்ப விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 2-ல் அமர்வதால் அதுமுதல் குடும்பத்தில் நிம்மதி, திடீர் பணவரவு, பேச்சில் கனிவு எல்லாம் வரக்கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியச் சாலைக்குக் கடையை மாற்றுவீர்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்களில் ஒரு சிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். மூத்த அதிகாரிகள் ஒருசில விஷயங்களைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் சட்டத்திற்குப் புறப்பாக நீங்கள் எதையும் செய்துகொண்டிருக்காதீர்கள். ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
தனபாக்யாதிபதி சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்ப அந்தஸ்து உயரும். மகளுக்குத் திருமணம் முடியும். சனி, கேது சாதகமாக இருப்பதால் பங்குச்சந்தை மூலம் பணம் வரும். நவீன ரக செல்போன், மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
தொடரும்
கடகம்
இரக்கக் குணம் அதிகமுள்ளவர்களே! உங்களின் யோகாதிபதி செவ்வாய் ஆட்சிபெற்று 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வி.ஐ.பி.க்கள் நண்பர்களாவார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகள் உங்களைப் புரிந்துகொள்வார். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் வந்தமைவாள்.
எதிர்பாராத பணவரவு உண்டு. இந்தாண்டு முழுக்க சனிபகவான் 5-ம் இடத்திலேயே தொடர்வதால் குழம்புவீர்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சல்களும், செலவுகளும் இருக்கத்தான் செய்யும். திடீர் பயணங்கள் உண்டாகும். அவ்வப்போது தூக்கம் கெடும்.
இந்த துன்முகி வருடம் முழுக்க ராகு 2-ம் இடத்திலும், கேது 8-ம் இடத்திலும் தொடர்வதால் பல் ஈறில் ரத்தம் கசிதல், பல், காது மற்றும் கணுக்கால் வலி, பார்வைக் கோளாறு வந்துபோகும். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். சாலைகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். 01.08.2016 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வங்கிக் கடன் கிடைத்து வாகனம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.
முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல் அமர்வதால் தாயாருடன் கசப்புணர்வுகள், அவருக்கு நரம்புச் சுளுக்கு, மூட்டு வலி வந்து போகும். அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சிலர் வீடு மாற வேண்டி வரும். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிறுநீரகத் தொற்று, வாய்ப் புண், வயிற்றுப் புண் வரக்கூடும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். லாபம் சுமார்தான். புது ஒப்பந்தங்களை யோசித்து ஏற்கப்பாருங்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் எதிர்பார்த்த சலுகைகளும், விரும்பிய இடத்திற்கே வேலை மாற்றமும் உண்டாகும்.
செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதாலும், குரு சாதகமாக இருப்பதாலும் பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் முடியும். வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
சிம்மம்
தன்மானம் தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் நினைத்தது நிறைவேறும். வெற்றிபெற்ற மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். 01.08.2016 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால் உடல்நலம் பாதிக்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். தோலில் நமைச்சல், குட்லவால் தொற்று, வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வரக்கூடும்.
தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைப்பீர்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, களைப்பு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மோதல்களெல்லாம் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரம், நகைகளையெல்லாம் மீட்க வழி வகை பிறக்கும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 3-ல் அமர்வதால் வேலைச் சுமை இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். உறவினர்களில் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகுவார்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 4-ல் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகத் தொடர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். அவருடன் பிணக்குகள் வரும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும்.
வழக்கால் நெருக்கடிகள் வரக்கூடும். நகர எல்லைப் பகுதியிலோ, வெளியூரிலோ வீடோ, மனையோ வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. உங்கள் இடத்தை மற்றவர்கள் ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் இருக்கும் ஊரை விட்டு வேறு ஊர், வேறு மாநிலத்திற்கு குடிபுகுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டிவரும். இந்த ஆண்டு உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சைக் கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். சின்னச்சின்னப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்கப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இந்த வருடம் பிறப்பதாலும், ஆகஸ்டு மாதம் முதல் குரு வலுவடைவதாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். நோய் விலகும். ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும்.
கன்னி
மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்களே! இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக்கொண்டிருப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறமை அதிகரிக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். புதுப் பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 3-ம் வீட்டில் தொடர்வதால் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். புதுவேலை கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பூர்வீகச்சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். ராகுபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். திட்டமிடாத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப செலவுகளும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் கேது இந்தாண்டு முழுக்க 6-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள்.
வேற்று மாநிலத்தவர்கள், மாற்று மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 01.08.2016 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரைகுறையாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தூக்கம் குறையும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம் வந்து போகும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தெரியும். ஒவ்வாமைகள், நோய்த்தொற்றுகள் வரக்கூடும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தினசரி மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு, கசப்புணர்வு வந்து செல்லும். யாருக்காகவும் உறுதிமொழிகள் தர வேண்டாம். உங்கள் குடும்ப விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 2-ல் அமர்வதால் அதுமுதல் குடும்பத்தில் நிம்மதி, திடீர் பணவரவு, பேச்சில் கனிவு எல்லாம் வரக்கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியச் சாலைக்குக் கடையை மாற்றுவீர்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்களில் ஒரு சிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். மூத்த அதிகாரிகள் ஒருசில விஷயங்களைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் சட்டத்திற்குப் புறப்பாக நீங்கள் எதையும் செய்துகொண்டிருக்காதீர்கள். ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
தனபாக்யாதிபதி சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்ப அந்தஸ்து உயரும். மகளுக்குத் திருமணம் முடியும். சனி, கேது சாதகமாக இருப்பதால் பங்குச்சந்தை மூலம் பணம் வரும். நவீன ரக செல்போன், மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
தொடரும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
தொடர்ச்சி .
துலாம்
மன்னிக்கும் குணம் கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, இந்தத் துன்முகி வருடம் பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். மழலை பாக்கியம் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் கேது 5-ம் இடத்திலேயே இந்த ஆண்டு முழுக்கத் தொடர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணத்தை அன்பால் அரவணைத்துப் போங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். மாப்பிள்ளை வீட்டாரை நன்கு விசாரித்து திருமணம் செய்விப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மலையாளம், இந்தி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். இந்தப் புத்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாகச் தொடர்வதால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக்கூடச் சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. பார்வைக் கோளாறு ஏற்படும். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குருபகவான் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் வீண் விரயம், பொருள் இழப்பு, தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் இருக்கும். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.
உங்கள் ராசிநாதனின் நட்புக் கிரகமான ராகு இந்த வருடம் முழுக்க உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வாழ்க்கைத் துணை வகையில் உதவிகள் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் சாதகமாகும்.
விருச்சிகம்
சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே! சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். விலை உயர்ந்த மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். 01.08.2016 வரை குரு 10-ல் தொடர்வதால் அடுத்தடுத்த வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். சின்னச்சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வங்கிக்கணக்கில் போதிய பணம் இருக்கிறதாவென்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடியும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும்.
பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரம், நகையை மீட்பீர்கள். புதுவேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் உங்களுடைய ராசிக்கு 12-ல் மறைவதால் செலவினங்கள் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பசியின்மை, தூக்கமின்மை வந்துபோகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். இந்த வருடம் முழுக்க ஜென்மச் சனி தொடர்வதால் படபடப்பு, ஆழ்ந்த உறக்கமின்மை, அசதி, சோர்வு, ஒற்றைத் தலைவலி, ஹார்மோன் பிரச்சினை, பசியின்மை வந்து நீங்கும்.
துரித உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள் வேண்டாம். நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்தில் சச்சரவுகள் வரக்கூடும். யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-லும் தொடர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வரக்கூடும். வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். சொத்து வரி, வருமான வரிகளையெல்லாம் தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துபோகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்குப் பணஉதவிகள் கிடைக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கனிவாகப் பழகுங்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகும். உங்களை விடத் தகுதியில் குறைந்தவர்கள், அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிகாரிகளுடன் மோதல்கள் வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். சம்பளப்பாக்கி, சலுகைகளையெல்லாம் போராடிப் பெறுவீர்கள். சித்திரை, ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.
ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்றிருப்பதால் இழந்த சொத்தை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வீட்டு மனை வாங்குவீர்கள். ஆகஸ்டு மாதம் முதல் குரு சாதகமாவதால் அந்தஸ்து ஒருபடி உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
தனுசு
கற்பூரப் புத்தி உள்ளவர்களே! இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 01.08.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால் வீடு, மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். உங்கள் பலவீனத்தைப் பயன்படுத்திச் சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களைத் தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். பெயர், புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் வரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் நிரந்தரமற்ற சூழ்நிலை உருவாகும். சில நேரங்களில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுப் போல ஆழ்மனதில் ஒரு வெறுமை, வெறுப்பு வந்து செல்லும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. இந்த துன்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் பதற்றம் வந்துபோகும். அவருடன் பிணக்குகள் வரும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். ஆனால் கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். இந்த வருடம் முழுவதுமாக சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரையச் சனியாகத் தொடர்ந்து கொண்டிருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
முன்பின் தெரியாதவர்களிடம் குடும்பத்து அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். 02.08.2016 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால் உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். அடிக்கடி இடமாற்றம் வரும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். வைகாசி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் வேலைச்சுமை குறையும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
சந்திரனும், ராசிநாதனான குருவும் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் தைரியமாக, தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேது சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். வீடு, வாகனம் சேரும். புதிய பொறுப்புகள், பதவிகள் ஏற்பீர்கள்.
தொடரும்
துலாம்
மன்னிக்கும் குணம் கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, இந்தத் துன்முகி வருடம் பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். மழலை பாக்கியம் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் கேது 5-ம் இடத்திலேயே இந்த ஆண்டு முழுக்கத் தொடர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணத்தை அன்பால் அரவணைத்துப் போங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். மாப்பிள்ளை வீட்டாரை நன்கு விசாரித்து திருமணம் செய்விப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மலையாளம், இந்தி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். இந்தப் புத்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாகச் தொடர்வதால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக்கூடச் சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. பார்வைக் கோளாறு ஏற்படும். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குருபகவான் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் வீண் விரயம், பொருள் இழப்பு, தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் இருக்கும். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.
உங்கள் ராசிநாதனின் நட்புக் கிரகமான ராகு இந்த வருடம் முழுக்க உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வாழ்க்கைத் துணை வகையில் உதவிகள் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் சாதகமாகும்.
விருச்சிகம்
சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே! சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். விலை உயர்ந்த மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். 01.08.2016 வரை குரு 10-ல் தொடர்வதால் அடுத்தடுத்த வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். சின்னச்சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வங்கிக்கணக்கில் போதிய பணம் இருக்கிறதாவென்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடியும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும்.
பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரம், நகையை மீட்பீர்கள். புதுவேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் உங்களுடைய ராசிக்கு 12-ல் மறைவதால் செலவினங்கள் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பசியின்மை, தூக்கமின்மை வந்துபோகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். இந்த வருடம் முழுக்க ஜென்மச் சனி தொடர்வதால் படபடப்பு, ஆழ்ந்த உறக்கமின்மை, அசதி, சோர்வு, ஒற்றைத் தலைவலி, ஹார்மோன் பிரச்சினை, பசியின்மை வந்து நீங்கும்.
துரித உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள் வேண்டாம். நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்தில் சச்சரவுகள் வரக்கூடும். யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-லும் தொடர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வரக்கூடும். வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். சொத்து வரி, வருமான வரிகளையெல்லாம் தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துபோகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்குப் பணஉதவிகள் கிடைக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கனிவாகப் பழகுங்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகும். உங்களை விடத் தகுதியில் குறைந்தவர்கள், அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிகாரிகளுடன் மோதல்கள் வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். சம்பளப்பாக்கி, சலுகைகளையெல்லாம் போராடிப் பெறுவீர்கள். சித்திரை, ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.
ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்றிருப்பதால் இழந்த சொத்தை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வீட்டு மனை வாங்குவீர்கள். ஆகஸ்டு மாதம் முதல் குரு சாதகமாவதால் அந்தஸ்து ஒருபடி உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
தனுசு
கற்பூரப் புத்தி உள்ளவர்களே! இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 01.08.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால் வீடு, மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். உங்கள் பலவீனத்தைப் பயன்படுத்திச் சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களைத் தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். பெயர், புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் வரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் நிரந்தரமற்ற சூழ்நிலை உருவாகும். சில நேரங்களில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுப் போல ஆழ்மனதில் ஒரு வெறுமை, வெறுப்பு வந்து செல்லும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. இந்த துன்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் பதற்றம் வந்துபோகும். அவருடன் பிணக்குகள் வரும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். ஆனால் கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். இந்த வருடம் முழுவதுமாக சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரையச் சனியாகத் தொடர்ந்து கொண்டிருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
முன்பின் தெரியாதவர்களிடம் குடும்பத்து அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். 02.08.2016 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால் உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். அடிக்கடி இடமாற்றம் வரும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். வைகாசி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் வேலைச்சுமை குறையும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
சந்திரனும், ராசிநாதனான குருவும் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் தைரியமாக, தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேது சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். வீடு, வாகனம் சேரும். புதிய பொறுப்புகள், பதவிகள் ஏற்பீர்கள்.
தொடரும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
தொடர்ச்சி .
மகரம்
அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களே! செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் தொட்ட காரியம் துலங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். இந்த துன்முகி வருடம் உங்களுக்கு 6-வது ராசியில் பிறப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 8-லும், கேது 2-ம் இடத்திலும் நீடிப்பதால் பேச்சால் பிரச்னைகள் வரும். சேமிப்புகள் கரையும். கண் எரிச்சல், பல் வலி வந்து போகும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து போகும். வறட்டு கவுரவத்திற்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இந்த துன்முகி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் யோகம் உண்டாகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பழுதான குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், தொலைக்காட்சி போன்ற மின்சார சாதனங்களை மாற்றிப் புதியதை வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 01.08.2016 வரை குரு பகவான் 8-ல் மறைந்திருப்பதால் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது.
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.
ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். எந்த வேலையாக இருந்தாலும் இடைத்தரகர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாகப் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனி, ஐப்பசி மாதங்களில் புதுச் சலுகைகளும், சம்பள உயர்வும் தடையின்றிக் கிட்டும்.
ஆகஸ்டு மாதம் முதல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் உயரும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். வழக்கில் வெற்றி உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள்.
கும்பம்
புதுமை விரும்பிகளே! இந்தப் புத்தாண்டு உங்களின் 5-ம் வீட்டில் பிறப்பதால் புதிய யோசனைகள் மனதில் உதயமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர்களின் ஆதரவு பெருகும். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும். என்றாலும் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். 01.08.2016 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கல்யாணப் பேச்சு வார்த்தை நல்லவிதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் உதவிகள் கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கைக்கு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்.
தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். களவுபயம் வரக்கூடும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 9-ல் அமர்வதால் பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருடப் பிறப்பு முதல் இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் ராகுவும், ஜென்ம ராசியிலேயே கேதுவும் தொடர்வதால் விஷப் பூச்சிக்கடி, வயிற்றுப் புண், ஒவ்வாமை, முடி உதிர்தல், தலைசுற்றல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகளெல்லாம் வந்துபோகும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும்.
எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டிவரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரிகள் குறைத்து மதிப்பிடக்கூடும். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். சித்திரை, ஆடி மாதங்களில் அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
ராசிநாதன் சனி பகவான் கேந்திர பலம் பெற்றிருப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். யோகாதிபதிகள் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் மதிப்பார்கள். வீடு மாறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும்.
மீனம்
தொடங்கியதை முடிக்காமல் தூங்காதவர்களே! இந்த துன்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் பிறப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வீட்டைப் புதுப்பிப்பது, கூடுதல் அறை அல்லது தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் நோய் குணமாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புதியதை வாங்குவீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும்.
உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்று மொழி, மதம், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். என்றாலும் கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் சூட்சுமத்தை உணருவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சில நாட்கள் தூக்கம் குறையும். நட்பு வட்டம் விரிவடையும். 01.08.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அவ்வப்போது சோர்வாகவும், களைப்பாகவும் காணப்படுவீர்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். காய்ச்சல் வரக்கூடும். நெடுங்காலமாக உங்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துகொள்வார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தப்பாருங்கள். உங்களைப் பற்றி சிலர் தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, பொருள் இழப்புகள் ஏற்படக்கூடும்.
எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் ராசிக்கு 9-ல் நிற்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசை இப்போது நிறைவேறும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆவணி, தை மாதங்களில் சிலருக்கு அயல்நாட்டில் உத்யோகம் அமைய வாய்ப்பிருக்கிறது.
ராகுவால் பழைய கடன் தீரும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக முடிப்பீர்கள். சொத்து சேரும்.
முற்றும் .
யாவரும் யாவையும் பெற்று
நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள் .
ரமணியன் .
நன்றி தமிழ் ஒன்
மகரம்
அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களே! செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் தொட்ட காரியம் துலங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். இந்த துன்முகி வருடம் உங்களுக்கு 6-வது ராசியில் பிறப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 8-லும், கேது 2-ம் இடத்திலும் நீடிப்பதால் பேச்சால் பிரச்னைகள் வரும். சேமிப்புகள் கரையும். கண் எரிச்சல், பல் வலி வந்து போகும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து போகும். வறட்டு கவுரவத்திற்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இந்த துன்முகி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் யோகம் உண்டாகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பழுதான குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், தொலைக்காட்சி போன்ற மின்சார சாதனங்களை மாற்றிப் புதியதை வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 01.08.2016 வரை குரு பகவான் 8-ல் மறைந்திருப்பதால் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது.
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.
ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். எந்த வேலையாக இருந்தாலும் இடைத்தரகர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாகப் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனி, ஐப்பசி மாதங்களில் புதுச் சலுகைகளும், சம்பள உயர்வும் தடையின்றிக் கிட்டும்.
ஆகஸ்டு மாதம் முதல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் உயரும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். வழக்கில் வெற்றி உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள்.
கும்பம்
புதுமை விரும்பிகளே! இந்தப் புத்தாண்டு உங்களின் 5-ம் வீட்டில் பிறப்பதால் புதிய யோசனைகள் மனதில் உதயமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர்களின் ஆதரவு பெருகும். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும். என்றாலும் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். 01.08.2016 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கல்யாணப் பேச்சு வார்த்தை நல்லவிதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் உதவிகள் கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கைக்கு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்.
தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். களவுபயம் வரக்கூடும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 9-ல் அமர்வதால் பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருடப் பிறப்பு முதல் இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் ராகுவும், ஜென்ம ராசியிலேயே கேதுவும் தொடர்வதால் விஷப் பூச்சிக்கடி, வயிற்றுப் புண், ஒவ்வாமை, முடி உதிர்தல், தலைசுற்றல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகளெல்லாம் வந்துபோகும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும்.
எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டிவரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரிகள் குறைத்து மதிப்பிடக்கூடும். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். சித்திரை, ஆடி மாதங்களில் அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
ராசிநாதன் சனி பகவான் கேந்திர பலம் பெற்றிருப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். யோகாதிபதிகள் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் மதிப்பார்கள். வீடு மாறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும்.
மீனம்
தொடங்கியதை முடிக்காமல் தூங்காதவர்களே! இந்த துன்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் பிறப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வீட்டைப் புதுப்பிப்பது, கூடுதல் அறை அல்லது தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் நோய் குணமாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புதியதை வாங்குவீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும்.
உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்று மொழி, மதம், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். என்றாலும் கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் சூட்சுமத்தை உணருவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சில நாட்கள் தூக்கம் குறையும். நட்பு வட்டம் விரிவடையும். 01.08.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அவ்வப்போது சோர்வாகவும், களைப்பாகவும் காணப்படுவீர்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். காய்ச்சல் வரக்கூடும். நெடுங்காலமாக உங்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துகொள்வார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தப்பாருங்கள். உங்களைப் பற்றி சிலர் தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, பொருள் இழப்புகள் ஏற்படக்கூடும்.
எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் ராசிக்கு 9-ல் நிற்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசை இப்போது நிறைவேறும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆவணி, தை மாதங்களில் சிலருக்கு அயல்நாட்டில் உத்யோகம் அமைய வாய்ப்பிருக்கிறது.
ராகுவால் பழைய கடன் தீரும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக முடிப்பீர்கள். சொத்து சேரும்.
முற்றும் .
யாவரும் யாவையும் பெற்று
நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள் .
ரமணியன் .
நன்றி தமிழ் ஒன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
இரண்டு திரிகளையும் இணைத்து விடுகிறேன் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !
» துர்முகி வருட பஞ்சாங்கம்
» “துர்முகி ” தமிழ்ப்புத்தாண்டு! -2016 - 2017
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» துர்முகி வருட பஞ்சாங்கம்
» “துர்முகி ” தமிழ்ப்புத்தாண்டு! -2016 - 2017
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|