Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்திசூடி மூலமும் உரையும்
3 posters
Page 1 of 1
ஆத்திசூடி மூலமும் உரையும்
ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்' என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும்.
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய சொற்றொடர்களாலும், கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப்பற்றியேயாகும். மிக்க இளம்பருவத்தினராயிருக்கும்பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற்பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.
ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம்.
ந. மு. வே.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே
சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ: ஈற்றசை.
ஆத்திசூடி மூலமும் உரையும்
1. அறஞ்செய விரும்பு.
நீ தருமம் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்.
கோபம் தணியத் தகுவதாம்.
3. இயல்வது கரவேல்.
கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.
4. ஈவது விலக்கேல்.
ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.
5. உடையது விளம்பேல்.
உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.
6. ஊக்கமது கைவிடேல்.
நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)
7. எண்ணெழுத் திகழேல்.
கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)
8. ஏற்ப திகழ்ச்சி.
இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.
9. ஐய மிட்டுண்.
இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.
10. ஒப்புர வொழுகு.
உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.
11. ஓதுவ தொழியேல்
அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஒளவியம் பேசேல்.
நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல்.
மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.
14. கண்டொன்று சொல்லேல்.
கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)
15. ஙப்போல் வளை.
ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
[ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]
16. சனிநீ ராடு.
சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)
17. ஞயம்பட வுரை.
கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]
18. இடம்பட வீடெடேல்
அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.
19. இணக்கமறிந் திணங்கு
நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.
20. தந்தைதாய்ப் பேண்
உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.
21. நன்றி மறவேல்.
உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.
22. பருவத்தே பயிர்செய்.
விளையும் பருவமறிந்து பயிரிடு.
எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.
23. மன்றுபறித் துண்ணேல்.
நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.
24. இயல்பலா தனசெயேல்.
நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25. அரவ மாட்டேல்.
பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.
27. வஞ்சகம் பேசேல்.
கபடச் சொற்களைப் பேசாதே.
28. அழகலா தனசெயேல்.
இழிவான செயல்களைச் செய்யாதே.
29. இளமையிற் கல்.
இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.
30. அறனை மறவேல்.
தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.
31. அனந்த லாடேல்.
மிகுதியாகத் தூங்காதே.
32. கடிவது மற.
யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.
33. காப்பது விரதம்.
பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.
34. கிழமைப் படவாழ்.
உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.
35. கீழ்மை யகற்று.
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
36. குணமது கைவிடேல்.
நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.
37. கூடிப் பிரியேல்.
நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே.
38. கெடுப்ப தொழி.
பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)
39. கேள்வி முயல்.
கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்.
40. கைவினை கரவேல்.
உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.
(ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)
ஆத்திசூடி மூலமும் உரையும் தொடரும் ...
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய சொற்றொடர்களாலும், கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப்பற்றியேயாகும். மிக்க இளம்பருவத்தினராயிருக்கும்பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற்பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.
ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம்.
ந. மு. வே.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே
சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ: ஈற்றசை.
ஆத்திசூடி மூலமும் உரையும்
1. அறஞ்செய விரும்பு.
நீ தருமம் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்.
கோபம் தணியத் தகுவதாம்.
3. இயல்வது கரவேல்.
கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.
4. ஈவது விலக்கேல்.
ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.
5. உடையது விளம்பேல்.
உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.
6. ஊக்கமது கைவிடேல்.
நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)
7. எண்ணெழுத் திகழேல்.
கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)
8. ஏற்ப திகழ்ச்சி.
இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.
9. ஐய மிட்டுண்.
இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.
10. ஒப்புர வொழுகு.
உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.
11. ஓதுவ தொழியேல்
அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஒளவியம் பேசேல்.
நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல்.
மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.
14. கண்டொன்று சொல்லேல்.
கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)
15. ஙப்போல் வளை.
ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
[ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]
16. சனிநீ ராடு.
சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)
17. ஞயம்பட வுரை.
கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]
18. இடம்பட வீடெடேல்
அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.
19. இணக்கமறிந் திணங்கு
நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.
20. தந்தைதாய்ப் பேண்
உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.
21. நன்றி மறவேல்.
உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.
22. பருவத்தே பயிர்செய்.
விளையும் பருவமறிந்து பயிரிடு.
எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.
23. மன்றுபறித் துண்ணேல்.
நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.
24. இயல்பலா தனசெயேல்.
நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25. அரவ மாட்டேல்.
பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.
27. வஞ்சகம் பேசேல்.
கபடச் சொற்களைப் பேசாதே.
28. அழகலா தனசெயேல்.
இழிவான செயல்களைச் செய்யாதே.
29. இளமையிற் கல்.
இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.
30. அறனை மறவேல்.
தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.
31. அனந்த லாடேல்.
மிகுதியாகத் தூங்காதே.
32. கடிவது மற.
யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.
33. காப்பது விரதம்.
பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.
34. கிழமைப் படவாழ்.
உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.
35. கீழ்மை யகற்று.
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
36. குணமது கைவிடேல்.
நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.
37. கூடிப் பிரியேல்.
நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே.
38. கெடுப்ப தொழி.
பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)
39. கேள்வி முயல்.
கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்.
40. கைவினை கரவேல்.
உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.
(ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)
ஆத்திசூடி மூலமும் உரையும் தொடரும் ...
Re: ஆத்திசூடி மூலமும் உரையும்
நல்ல முயற்சி ! தொடருங்கள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆத்திசூடி மூலமும் உரையும்
அருமை அருமை அருமை...........
.
.
.
.ஆனால் பதிவின் நீளத்தை கொஞ்சம் குறையுங்கள், இடம் விட்டு பதிவு செய்யுங்கள், படிக்க வசதியாக இருக்கும்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
.
.
.
.ஆனால் பதிவின் நீளத்தை கொஞ்சம் குறையுங்கள், இடம் விட்டு பதிவு செய்யுங்கள், படிக்க வசதியாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆத்திசூடி மூலமும் உரையும் - 2
41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.
42. கோதாட் டொழி.
குற்றமான விளையாட்டை விட்டுவிடு.
கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.
43. சக்கர நெறிநில்.
அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.
44. சான்றோ ரினத்திரு.
அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.
45. சித்திரம் பேசேல்.
பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.
46. சீர்மை மறவேல்.
புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.
47. சுளிக்கச் சொல்லேல்.
கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.
48. சூது விரும்பேல்.
ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.
49. செய்வன திருந்தச்செய்.
செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.
50. சேரிடமறிந்து சேர்.
சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே
52. சொற்சோர்வு படேல்.
நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே
53. சோம்பித் திரியேல்.
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
54. தக்கோ னெனத்திரி.
பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.
55. தானமது விரும்பு.
தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி
56. திருமாலுக் கடிமை செய்.
நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.
57. தீவினை யகற்று.
பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது
59. தூக்கி வினைசெய்.
முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.
60. தெய்வ மிகழேல்.
கடவுளை இகழ்ந்து பேசாதே
பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.
42. கோதாட் டொழி.
குற்றமான விளையாட்டை விட்டுவிடு.
கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.
43. சக்கர நெறிநில்.
அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.
44. சான்றோ ரினத்திரு.
அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.
45. சித்திரம் பேசேல்.
பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.
46. சீர்மை மறவேல்.
புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.
47. சுளிக்கச் சொல்லேல்.
கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.
48. சூது விரும்பேல்.
ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.
49. செய்வன திருந்தச்செய்.
செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.
50. சேரிடமறிந்து சேர்.
சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே
52. சொற்சோர்வு படேல்.
நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே
53. சோம்பித் திரியேல்.
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
54. தக்கோ னெனத்திரி.
பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.
55. தானமது விரும்பு.
தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி
56. திருமாலுக் கடிமை செய்.
நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.
57. தீவினை யகற்று.
பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது
59. தூக்கி வினைசெய்.
முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.
60. தெய்வ மிகழேல்.
கடவுளை இகழ்ந்து பேசாதே
Re: ஆத்திசூடி மூலமும் உரையும்
அருமை, ஆனால் இதை முன் திரி யுடன் இணைத்து விடுகிறேன், தொடர்ந்து படிக்க, பதிவிட சுலபமாய் இருக்கும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆத்திசூடி மூலமும் உரையும்
அழகாய் தள்ளி தள்ளி இடைவெளி விட்டு பதிவு போட்டிருக்கிங்க....சூப்பர் !.............இந்த திரி இலேயே பதிவுகளைத் தொடருங்கள்
........வாழ்த்துகள் !...........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
» அகநானூறு-களிற்றியானை நிரை-மூலமும் உரையும்
» அகநானூறு-களிற்றியானை நிரை-மூலமும் உரையும்
» திருக்குறளும் விளக்க உரையும்.....
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
» அகநானூறு-களிற்றியானை நிரை-மூலமும் உரையும்
» அகநானூறு-களிற்றியானை நிரை-மூலமும் உரையும்
» திருக்குறளும் விளக்க உரையும்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|