Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
4 posters
Page 1 of 1
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
![மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! EqARiljHSYq3JhegPVjJ+E_1458817364](https://www.filepicker.io/api/file/EqARiljHSYq3JhegPVjJ+E_1458817364.jpeg)
-
பீரோவுக்கும் ஃப்ரிட்ஜூக்கும் என்ன வித்தியாசம்?
தன்னம்பிக்கைக்கும் இந்தக் கேள்விக்கும் என்ன
சம்பந்தம் என்று யோசிக்கிறீர்கள்தானே?
இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். கொஞ்சம்
யோசியுங்கள்!
விதவிதமான பல பதில்களை நீங்கள் கண்டு
பிடித்திருந்தாலும், பலரும் பொதுவாக யூகித்திருக்கக்
கூடியது. கெட்டுப் போகும் பொருட்களை பீரோவில்
வைப்பதில்லை. ஆனால் ரெப்ரெஜிரேட்டரில் வைப்பது
உண்டு என்ற விடையாகத்தான் இருக்கும்.
–
ஆனால், நான் சொல்லப்போவது என்ன தெரியுமா?
அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து அதில்தேவையில்லாதவை
இருந்தால் நீக்கிவிடுவோம். ஆனால் பீரோவில் இப்படிச்
செய்வதில்லை என்பதைத்தான்.
–
ஒரு பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்கள்.
மறந்து ஓரிரு வாரங்கள் விட்டுவிடுகிறீர்கள். ஒருநாள்
நினைவு வருகிறது. எடுத்துப் பார்த்து நன்றாக இருந்தால்
பயன்படுத்துவீர்கள். இல்லையென்றால் குப்பையில்
எறிந்துவிடுவீர்கள்.
–
ஆனால், பீரோவில் உள்ளவற்றை அப்படிச் செய்வது
உண்டா? சில சமயம் பீரோவைத் திறக்கும்போது
பழைய வேண்டாத பொருள் ஏதாவது கண்ணில்
பட்டாலும் உடனடியாக அதைத் தூக்கி ஏறிய மாட்டீர்கள்.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளேயே
திணித்து மூடி விடுவீர்கள் அல்லவா?
–
உங்களில் பலரும் ஆழ்மனதையும் பீரோபோல்தான்
வைத்திருக்கறீர்கள். அதில் எதிர்மறை எண்ணம் ஏதாவது
இருப்பது தெரிந்தாலும், உடனடியாக அதனை வெளியே
எடுத்து உதறாமல், மீண்டும் அதை மனதுக்குள்ளேயே
திணித்து மூடிவிடுவீர்கள்.
–
உங்கள் லட்சியப்பாதையில் பிறரால் ஏற்படும்
தடைகளைவிட உங்களுக்கு நீங்களே போட்டுக்
கொள்ளும் இந்த மாதிரியான தடைகள்தான்
வலிமையானவை. முதல் வேலையாக நீங்கள்
தகர்க்க வேண்டியது இவற்றைத்தான்.
–
தேவையில்லாதவற்றை ஆழ்மனதில் இருந்து
எடுத்து எறிவதற்கு முன். எவை தேவை? எவை
தேவையற்றவை என்பதைத் தெரிந்துகொள்வதும்
முக்கியம் அல்லவா? அதனால் அதனை முதலில்
பார்த்துவிடுவோம்.
Re: மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். செருப்பு
வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் காலைப் பார்த்ததுமே, ‘இது உங்களுக்கு
சரியாக இருக்கும்’ என்று கடைக்காரர் குறிப்பிட்ட
அளவில் உள்ள செருப்புகளை எடுத்துத்தருகிறார்.
அநேகமாக அது சரியான அளவாகவே இருக்கும்.
அதோடு, உங்கள் செருப்பின் அளவு என்ன என்பது
உங்களுக்கே தெரிந்திரக்கும் என்பதால், கடைக்காரர்
தரும் அளவை சரி பார்க்கிறீர்கள்.
கரெக்ட்டான சைஸ் அதுதான் என்பது தெரிகிறது.
–
உடனே அதை பேக் செய்யச் சொல்லி வாங்கிக்
கொண்டு வந்துவிடுவீர்களா? மாட்டீர்கள். அந்தச்
செருப்புகளைப் போட்டு பார்ப்பீர்கள். சரியாக இருப்பது
தெரிந்தாலும் இரண்டு மூன்று அடியாவது நடந்து
பார்ப்பீர்கள். காலைக் கடிக்குமா? நடக்க நடக்க
லூஸாகுமா என்றெல்லாம் விசாரித்து அதன்
பிறகுதானே வாங்குவீர்கள்?
–
நடக்கும் பாதையில் போட்டுக் கொண்டு போகக்
கூடிய காலணியையே இவ்வளவு விசாரித்து
வாங்கும் நீங்கள், லட்சியப் பாதையில் உங்களை
அழைத்துச் செல்லக்கூடிய ஆழ்மனதிற்குள் மட்டும்
எப்படி யோசிக்காமல் எல்லா விஷயங்களையும்
போட்டுக் கொள்கிறீர்கள்?
–
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருடைய
லட்சியமுமே படித்து முடித்ததும் நல்லதொரு
தகுதியான பணியில் சேருவதாகத்தான் இருக்கும்.
–
சென்ற ஆண்டு படித்த மாணவர்களில் சிலர்
வேலையே கிடைக்காமல் இன்றுவரை
திண்டாடுகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்
பரவாயில்லை என்று சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே தகுதிக்கு உரிய வேலை
கிடைத்தது,
–
இப்படித் தகவல்கள் தற்போதைய மாணவர்களுக்குக்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றில்
எதை எல்லாம் அவர்கள் மனதுக்குள் பதி்க வேண்டும்?
எவற்றையெல்லாம் விலக்க வேண்டும்?
–
சிலருக்குத் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தது
என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை பதித்துக் கொள்ள வேண்டிய அவசியம்
கிடையாது என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
காரணம், அதை மனதுக்குள் பதித்தால், வேண்டாத
குழப்பமே ஏற்படும்.
–
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? சிலருக்கு வேலை
கிடைத்தது என்றால், நாமும் அவர்களில் ஒருவரைப்
போல் ஆவோமா? அல்லது மீதமுள்ளவர்களைப் போல
ஆகிவிடுவோமா? என்பது தொடங்கி, வென்றவர்கள்
எந்தெந்த வகையில் முயற்சித்தார்களோ அதையெல்லாம்
செய்ய வேண்டுமா? ஒருவேளை அவை நமக்கு சரி
வராமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம்
நினைத்துப் பலவிதங்களில் குழம்ப வேண்டியிருக்கும்.
–
அதனால், சரியான விடை என்ன தெரியுமா?
இந்தத் தகவல்களில் எதையுமே அவர்கள் ஆழ்
மனதிற்குள் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை என்பதுதான் இவை எல்லாம் வெறும்
தகவல்கள் மட்டுமே.
–
மனதுக்கு வலிமையோ, தன்னம்பிக்கையோ சேர்க்கக்
கூடியவை அல்ல.
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
—————————-
– விஜயலட்சுமி பந்தையன்
குமுதம் பக்தி
வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் காலைப் பார்த்ததுமே, ‘இது உங்களுக்கு
சரியாக இருக்கும்’ என்று கடைக்காரர் குறிப்பிட்ட
அளவில் உள்ள செருப்புகளை எடுத்துத்தருகிறார்.
அநேகமாக அது சரியான அளவாகவே இருக்கும்.
அதோடு, உங்கள் செருப்பின் அளவு என்ன என்பது
உங்களுக்கே தெரிந்திரக்கும் என்பதால், கடைக்காரர்
தரும் அளவை சரி பார்க்கிறீர்கள்.
கரெக்ட்டான சைஸ் அதுதான் என்பது தெரிகிறது.
–
உடனே அதை பேக் செய்யச் சொல்லி வாங்கிக்
கொண்டு வந்துவிடுவீர்களா? மாட்டீர்கள். அந்தச்
செருப்புகளைப் போட்டு பார்ப்பீர்கள். சரியாக இருப்பது
தெரிந்தாலும் இரண்டு மூன்று அடியாவது நடந்து
பார்ப்பீர்கள். காலைக் கடிக்குமா? நடக்க நடக்க
லூஸாகுமா என்றெல்லாம் விசாரித்து அதன்
பிறகுதானே வாங்குவீர்கள்?
–
நடக்கும் பாதையில் போட்டுக் கொண்டு போகக்
கூடிய காலணியையே இவ்வளவு விசாரித்து
வாங்கும் நீங்கள், லட்சியப் பாதையில் உங்களை
அழைத்துச் செல்லக்கூடிய ஆழ்மனதிற்குள் மட்டும்
எப்படி யோசிக்காமல் எல்லா விஷயங்களையும்
போட்டுக் கொள்கிறீர்கள்?
–
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருடைய
லட்சியமுமே படித்து முடித்ததும் நல்லதொரு
தகுதியான பணியில் சேருவதாகத்தான் இருக்கும்.
–
சென்ற ஆண்டு படித்த மாணவர்களில் சிலர்
வேலையே கிடைக்காமல் இன்றுவரை
திண்டாடுகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்
பரவாயில்லை என்று சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே தகுதிக்கு உரிய வேலை
கிடைத்தது,
–
இப்படித் தகவல்கள் தற்போதைய மாணவர்களுக்குக்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றில்
எதை எல்லாம் அவர்கள் மனதுக்குள் பதி்க வேண்டும்?
எவற்றையெல்லாம் விலக்க வேண்டும்?
–
சிலருக்குத் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தது
என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை பதித்துக் கொள்ள வேண்டிய அவசியம்
கிடையாது என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
காரணம், அதை மனதுக்குள் பதித்தால், வேண்டாத
குழப்பமே ஏற்படும்.
–
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? சிலருக்கு வேலை
கிடைத்தது என்றால், நாமும் அவர்களில் ஒருவரைப்
போல் ஆவோமா? அல்லது மீதமுள்ளவர்களைப் போல
ஆகிவிடுவோமா? என்பது தொடங்கி, வென்றவர்கள்
எந்தெந்த வகையில் முயற்சித்தார்களோ அதையெல்லாம்
செய்ய வேண்டுமா? ஒருவேளை அவை நமக்கு சரி
வராமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம்
நினைத்துப் பலவிதங்களில் குழம்ப வேண்டியிருக்கும்.
–
அதனால், சரியான விடை என்ன தெரியுமா?
இந்தத் தகவல்களில் எதையுமே அவர்கள் ஆழ்
மனதிற்குள் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை என்பதுதான் இவை எல்லாம் வெறும்
தகவல்கள் மட்டுமே.
–
மனதுக்கு வலிமையோ, தன்னம்பிக்கையோ சேர்க்கக்
கூடியவை அல்ல.
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
—————————-
– விஜயலட்சுமி பந்தையன்
குமுதம் பக்தி
Re: மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
நல்ல பகிர்வு ராம் அண்ணா, நன்றி !
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனதுக்குள் வராத வரை
» உங்கள் மனதுக்குள் எதை சுமக்கிறீர்கள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» சத்தமில்லாமல் ஒரு வன்முறை- மனதுக்குள் கண்ணீர் சிந்தும் மூத்தோர்கள்
» சுற்றுச்சூழல் மாசு!
» உங்கள் மனதுக்குள் எதை சுமக்கிறீர்கள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» சத்தமில்லாமல் ஒரு வன்முறை- மனதுக்குள் கண்ணீர் சிந்தும் மூத்தோர்கள்
» சுற்றுச்சூழல் மாசு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|