புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை
Page 1 of 1 •
தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து, மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார்.
இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின் சமையலறையில், இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில்கொண்டு, இளவரசியின் 17-வது பிறந்தநாள் அன்று, அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி இளவேனிலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்றிலிருந்து வேலையாட்கள், தோழிகள், காவல் வீரர்கள் புடைசூழ, அந்த மாளிகையிலேயே தங்கிக்கொண்டாள். கதிர்கள் விளைந்து முற்றியதும் அறுவடை நடந்தது. முத்து முத்தான வெள்ளைச் சோளத்தைப் பொரித்து, இளவரசி ஆசை தீர உண்டாள்.
எவ்வளவு சோளப்பொரியைத்தான் இளவரசியால் உண்டுவிட முடியும்? இளவரசிக்கு ஒரு திட்டம் தோன்றியது. பனை ஓலையில் அழகிய பெட்டிகள் செய்து, அவற்றில் சோளப் பொரியை அடைத்துச் சந்தையிலே விற்க ஏற்பாடு செய்தாள். சோளத் தட்டையில் கை வேலைப்பாடுகள் மிகுந்த பொம்மைகளைச் செய்து, அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினாள். இரண்டையும் மக்கள் விரும்பி வாங்கினார்கள்.
இவ்வாறாக இளவரசியும் அவளது சோளக் கொல்லையும் பிரிக்க முடியாதவர்களாக ஆகிப் போனார்கள். அந்த ஆண்டு முழுவதும் விதைப்பது, வளர்ப்பது, அறுப்பது, விற்பது என விதம் விதமாக இளவரசிக்குச் சோளக்கொல்லையால் பொழுது போயிற்று.
சந்தைக்கு வரும் அயல்நாட்டு வணிகர்கள் மூலம் இளவரசியின் சோளப் பொரியும், சோளத் தட்டைப் பொம்மைகளும் பக்கத்து நாடுகளுக்கும் சென்றன. கூடவே, ‘ஓர் இளவரசி இவ்வாறு வணிகம் செய்கிறாள்’ என்ற விந்தைச் செய்தியும் அந்த நாடுகளுக்குப் பரவின.
இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின் சமையலறையில், இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில்கொண்டு, இளவரசியின் 17-வது பிறந்தநாள் அன்று, அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி இளவேனிலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்றிலிருந்து வேலையாட்கள், தோழிகள், காவல் வீரர்கள் புடைசூழ, அந்த மாளிகையிலேயே தங்கிக்கொண்டாள். கதிர்கள் விளைந்து முற்றியதும் அறுவடை நடந்தது. முத்து முத்தான வெள்ளைச் சோளத்தைப் பொரித்து, இளவரசி ஆசை தீர உண்டாள்.
எவ்வளவு சோளப்பொரியைத்தான் இளவரசியால் உண்டுவிட முடியும்? இளவரசிக்கு ஒரு திட்டம் தோன்றியது. பனை ஓலையில் அழகிய பெட்டிகள் செய்து, அவற்றில் சோளப் பொரியை அடைத்துச் சந்தையிலே விற்க ஏற்பாடு செய்தாள். சோளத் தட்டையில் கை வேலைப்பாடுகள் மிகுந்த பொம்மைகளைச் செய்து, அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினாள். இரண்டையும் மக்கள் விரும்பி வாங்கினார்கள்.
இவ்வாறாக இளவரசியும் அவளது சோளக் கொல்லையும் பிரிக்க முடியாதவர்களாக ஆகிப் போனார்கள். அந்த ஆண்டு முழுவதும் விதைப்பது, வளர்ப்பது, அறுப்பது, விற்பது என விதம் விதமாக இளவரசிக்குச் சோளக்கொல்லையால் பொழுது போயிற்று.
சந்தைக்கு வரும் அயல்நாட்டு வணிகர்கள் மூலம் இளவரசியின் சோளப் பொரியும், சோளத் தட்டைப் பொம்மைகளும் பக்கத்து நாடுகளுக்கும் சென்றன. கூடவே, ‘ஓர் இளவரசி இவ்வாறு வணிகம் செய்கிறாள்’ என்ற விந்தைச் செய்தியும் அந்த நாடுகளுக்குப் பரவின.
-
மதுரை நாட்டின் இளவரசன் இளமாறனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். முகம் தெரியாத இளவரசி மேல் அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. உடனே, ஓவியம் வரைவதில் திறமை சாலியான ஒற்றன் ஒருவனை அங்கு அனுப்பிவைத்தான் இளமாறன். அந்த ஒற்றன், வணிகன் வேடமிட்டு இளவரசி இளவேனிலின் மாளிகைக்குச் சென்றான். அவளுடைய அழகிய தோற்றத்தை மனதில் நன்கு பதிய வைத்துக்கொண்டு, அழகிய ஓவியமாக அவளைத் தீட்டி, மதுரைக்குத் திரும்பினான்.
இளவரசியின் 18-வது பிறந்தநாளன்று, ஒரு பெரிய பெட்டியுடன் அவளது மாளிகைக்குள் தூதுவனாக நுழைந்தான், மதுரை நாட்டு ஒற்றன். இளவரசியை வணங்கிய அவன், ”இளவரசி, எங்கள் மதுரை நாட்டின் இளவரசர் இளமாறன், தம்முடைய நட்பைத் தங்களுக்குத் தெரிவிக்க இந்த அரிய பரிசைத் தங்களுக்கு அனுப்பியிருக்கிறார். சோளக்கொல்லையால் புகழ் பெற்ற தங்களுக்கு ஏற்ற பரிசு இது. இது ஒரு சோளக்கொல்லை பொம்மை. உங்கள் சோளக்கொல்லை மேல் படையெடுக்கும் குருவிகளையும், பறவைகளையும் விரட்டியடிக்கும் பொம்மை இது. இது, சராசரி பொம்மையல்ல. இது ஒரு பேசும் பொம்மை! உங்களுக்காக இது பாட்டுப் பாடும், பழங்கதைகள் கூறும், நகைச்சுவையாகப் பேசும்!” என்று சோளக்கொல்லைப் பொம்மையின் புகழை அடுக்கிக்கொண்டே போனான் அந்தத் தூதன்.
இளவரசிக்கு ஆவல் தாங்க முடியவில்லை. ”ம்ம், சரி சரி, பொம்மையை வெளியே எடுங்கள் முதலில்!” என்றாள் பொறுமை இழந்து.
தூதுவன் சிளீத்தபடியே பெட்டியைத் திறந்து, அந்த ஆறடி உயரச் சோளக்கொல்லைப் பொம்மையை எடுத்து அவையிலே நிறுத்திவைத்தான். கைகளை அகல விரித்துக்கொண்டு, கந்தல் உடை அணிந்துகொண்டு, ஒரு கூத்தாடியைப் போல் வேடிக்கையாகக் காட்சியளித்தது அந்தப் பொம்மை. அதைப் பார்த்ததுமே இளவரசிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
தூதுவன், ”ஏய் சோளக்கொல்லைப் பொம்மையே, இளவரசிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உன் திறமையைக் காட்டு!” என்று கூறியவுடன் அந்தப் பொம்மையிலிருந்து ஒரு மிடுக்கான ஆண் குரல் வெளிப்பட்டது.
அந்தக் குரல், இளவரசிக்கு வணக்கம் கூறியது. அவளைப் புகழ்ந்து பாடல்கள் பாடியது. ”ஓய், ஓய் பறவைகளே ஓடிப்போங்கள்!” என்று மிரட்டும் குரலில் கூச்சலிட்டது. பிறகு, கதை சொன்னது. நகைச்சுவையாக, நையாண்டியாகப் பேசியது.
-
இளவரசி இளவேனில் விழுந்து விழுந்து சிரித்தாள். அவை, கைதட்டலால் அதிர்ந்தது. இப்படி ஒரு பேசும் பொம்மையை இது வரை யாருமே பார்த்ததில்லை.
இளவரசி, தான் கழுத்தில் அணிந்திருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையைத் தூதுவனுக்குப் பரிசாக அளித்தாள். தன் கைப்பட ஓர் ஓலையில் மதுரை இளவரசனுக்கு நன்றி தெரிவித்து மடல் எழுதி, ஓலையைத் தூதுவனிடம் கொடுத்தாள்.
பிறகு இளவரசி, அந்த சோளக்கொல்லைப் பொம்மையைத் தூக்கிவரச் செய்து, தன் சோளக்கொல்லையின் நடுவே நிறுத்திவைத்தாள். அது, கூச்சலிட்டுப் பறவைகளை விரட்டி யடித்தது.
அன்றிலிருந்து இளவரசி இளவேனிலுக்கு அந்தச் சோளக்கொல்லைப் பொம்மை உற்ற தோழனாக மாறிவிட்டது. நாள்தோறும் மணிக்கணக்காக அதோடு பேசி மகிழ்ந்தாள் இளவரசி. ஆனால், அந்த சோளக்கொல்லைப் பொம்மை எப்படி இந்த மாதிரி பேசுகிறது என்ற ரகசியத்தை மட்டும் இளவரசியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் சொல்ல மறுத்துவிட்டது. ஆனால், இளவரசன் இளமாறனின் அறிவு, ஆற்றல், அழகைப் பற்றியெல்லாம் பெருமை பொங்க எடுத்துக் கூறியது. இதையெல்லாம் கேட்கக் கேட்க இளவரசிக்கு இளமாறனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.
ஒருநாள், சோளக்கொல்லைப் பொம்மையால் விரட்டியடிக்கப்பட்ட பறவைகளின் தலைவனாகிய சிட்டுக்குருவி, சோளக்கொல்லை பொம்மையிடம் வந்தது.
அருகே வந்த சிட்டுக்குருவி, ”வணக்கம் சோளக்கொல்லைப் பொம்மையே! நீ இங்கே வராத வரை எங்களுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இப்போது, எங்கள் குஞ்சுகளெல்லாம் பட்டினி கிடக்கின்றன. எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!” என்று வேண்டியது.
சிட்டுக் குருவியின் வேண்டுகோளால் மனம் இரங்கிய சோளக்கொல்லை பொம்மை, இளவரசியோடு பேசி, கொல்லையில் கீழே உதிர்ந்து கிடக்கும் சோள முத்துக்களை மட்டும் பொறுக்கிக்கொள்ள ஏற்பாடு செய்தது. கதிர்களைக் கண்டபடி வேட்டையாடக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டது. பறவைகளும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டன.
இதற்கிடையில், தஞ்சை வளநாட்டின் பக்கத்து நாடான கும்பகோணத்தில், ஒரு கொடிய மந்திரவாதி இருந்தான். அவனுக்குத் தலைமட்டும் யானைத் தலை போல இருக்கும். யானைத் தலை மந்திரவாதி என்றுதான் அவனை எல்லோரும் அழைப்பார்கள்.
-
அவன், தன் மந்திரக் கண்ணாடியில் இளவரசி இளவேனிலைப் பார்த்து, அவளைக் கவர்ந்து செல்ல முடிவு செய்தான். எனவே, ஒரு நாள் நள்ளிரவு, பத்து பறக்கும் யானைகளோடு வந்து இளவரசியின் சோளக்கொல்லையில் இறங்கினான்.
இதைக் கண்ட சோளக்கொல்லைப் பொம்மை, ”இளவரசி… இளவரசி, ஆபத்து! எதிரிகள் வருகிறார்கள், எச்சரிக்கை!” என்று கத்தி, அனைவரையும் எழுப்பியது.
விழித்துக்கொண்ட வீரர்கள், வாட்களை உருவிக்கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால், மந்திரவாதியின் யானைப் படைக்கு அவர்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. இளவரசியின் சோளக்கொல்லை, யானைகளால் முற்றிலும் அழிக்கப்பட்டது. சோளக்கொல்லை பொம்மை பிடுங்கி வீசப்பட்டு, மிதித்துத் துவைக்கப்பட்டது. மாளிகைக்குள் நுழைந்த யானைத் தலை மந்திரவாதி, இளவரசியைத் தூக்கிச் சென்றான்.
மறுநாள் பொழுது விடிந்தபோது, இரை தேடி வந்த பறவைக் கூட்டம், சோளக்கொல்லையின் அழிவைக் கண்டு திகைத்தது. அப்போது, யானைகளால் மிதிக்கப்பட்டுச் சிதைந்து கிடைந்த சோளக்கொல்லைப் பொம்மை, பறவைகளை அருகே அழைத்தது.
”பறவைகளே… நான்தான் மதுரை இளவரசன் இளமாறனின் ஆவி! இளவரசி இளவேனிலின் மனம் கவரவே இந்தப் பொம்மையின் உடலுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, என் உயிரைச் செலுத்தி இங்கே வந்தேன். என் உடல், நாட்டின் எல்லையில் இருக்கும் காட்டிலே என் நண்பனால் பாதுகாக்கப்பட்டுவருகிறது. நீங்கள் பறந்து சென்று, அவனிடம் செய்தியைக் கூறி என் உடலோடு அவனை இங்கே அழைத்து வாருங்கள்.” என்று வேண்டுகோள் விடுத்தது.
பறவைகள் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட இளவரசனின் நண்பனாகிய தூதுவன், இளமாறனின் உடலோடு விரைந்து வந்தான். பொம்மையிலிருந்த இளவரசனின் உயிர் அவன் உடலுக்குத் தாவியது.
இதற்குள் பெரும் படையோடு வந்து சேர்ந்திருந்தார்கள் தஞ்சை அரசரும், மதுரை அரசரும்.
இரு நாட்டுப் படைகளுக்கும் தலைமையேற்ற இளவரசன், கும்பகோணம் சென்று யானைத் தலை மந்திரவாதியின் மாளிகையைத் தாக்கினான். பெரும் போருக்குப் பின், மந்திரவாதியைக் கொன்று, இளவரசியை மீட்டு தஞ்சைக்குத் திரும்பினான் இளவரசன்.
இருவருக்கும் திருமணம் நடந்தது.
தஞ்சையில், இளவரசியின் அழிந்துபோன சோளக்கொல்லை மறுபடியும் உயிர் பெற்றது. அதன் நடுவே இப்போது அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது, பழுதுபார்க்கப்பட்ட ஊமை சோளக்கொல்லைப் பொம்மை.
இப்போதெல்லாம் அது பறவைகளை விரட்டுவதே இல்லை. ஏனென்றால், அந்தச் சோளக்கொல்லை முழுவதையும் பறவைகளுக்கே பரிசாக அளித்துவிட்டாள் இளவரசி.
– குறும்பலாப்பேரிபாண்டியன்
ஓவியம்: சேகர்
நன்றி-ஆனந்த விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாளை வந்து படிக்கிறேன் ராம் அண்ணா ................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கதை நன்றாக உள்ளது .
இது சுட்டி விகடன் கதையா இல்லை ஆனந்த விகடன் கதையா ? அய்யா .
இது சுட்டி விகடன் கதையா இல்லை ஆனந்த விகடன் கதையா ? அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1196586shobana sahas wrote:கதை நன்றாக உள்ளது .
இது சுட்டி விகடன் கதையா இல்லை ஆனந்த விகடன் கதையா ? அய்யா .
-
சுட்டி விகடனில் வந்த கதை
-
பதிவிடப்படும் படங்கள் பின்னர் காணாமல் போவது...ஏன்?
-
கிருஷ்ணம்மாவுக்கு தெரியுமா...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1196586shobana sahas wrote:கதை நன்றாக உள்ளது .
இது சுட்டி விகடன் கதையா இல்லை ஆனந்த விகடன் கதையா ? அய்யா .
-
சுட்டி விகடனில் வந்த கதை
-
பதிவிடப்படும் படங்கள் பின்னர் காணாமல் போவது...ஏன்?
-
கிருஷ்ணம்மாவுக்கு தெரியுமா...?
மார்ச் 14 ஆம் தேதி, இது பற்றி ஒரு திரி துவங்கினேன் ராம் அண்ணா, ( வழிநடத்துனர்களுக்கான இடத்தில் ) சிவா வந்து சரி செய்தார், ஆனால் அப்போதிலிருந்து போடப்பட்ட படங்கள் மட்டும் தெரிகிறது, பழையவை எல்லாமே காணும்.....மீண்டும் கேட்டிருக்கிறேன், கூடிய விரைவில் சரிசெய்வதாக சொல்லி இருக்கிறார் .என்னுடையதும் உணவுகளுக்கான போடோக்கள் மற்றும் எல்லா சுற்றுலா திரிகளுக்குமான போடோக்களைக் காணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை அருமை அண்ணா
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல கதை ஐயா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|