Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...
Page 1 of 1
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...
ஆயிரம் விளக்கு பகுதியில், புகழ்மிக்க மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் உறவினர் ஒருவர். அவரை பார்த்து விட்டு, என் வாகனத்தருகே வந்தால், வாகனம் பஞ்சர்! பக்கத்திலிருந்த ஆட்டோ நிறுத்தத்தில் போய், 'இங்கே பஞ்சர் பார்க்கிற கடை உள்ளதா?' என விசாரித்த போது, சற்றே வியப்பான பதில் காத்திருந்தது.
'சார்... அந்த வீட்டு வாசல் கிட்டயா நிறுத்தினீங்க... என்ன சார் நீங்க... அந்த வீட்டுக்கார பெரியவரை பத்தி உங்களுக்கு தெரியாதா... தன் வீட்டு வாசல்ல நிற்கிற வண்டிகளின் டயர்களை கோணி ஊசியால் குத்தி, பஞ்சராக்கி விடுவார்...' என்றனர் ஆட்டோக்காரர்கள்.காலம் காலமாக இது நடக்கிறதாம்!
கார் நிறுத்தும் விஷயத்தில் நான் சற்று கெட்டி! நடக்க அஞ்சாமல், தொலைதூரம் கொண்டுபோய் எவருக்கும் இடைஞ்சல் இல்லாத இடமா... நம்மால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா, வீட்டு வாயிலா, தொழில் நடக்கும் இடம் என்றால், நம்மால் அவர்களுக்கு தொழில் கெடுமா, நம் வாகனத்தை எடுக்க முடியாதபடி, எவரும் வண்டியை நிறுத்தி மடக்கி விடுவரா, அவசரமாக புறப்படுகிற நேரத்தில், நாம் சிக்கி கொள்வோமா, காவல் துறையின், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு உண்டா என்கிற, ஏழு கேள்விகளுக்கும் விடை கண்ட பின் தான், வாகனத்தை நிறுத்துவது வழக்கம்.
ஆனால், நான் நிறுத்திய வீட்டுப் பகுதியினுள் இருள் மண்டியிருக்க, அப்படியும் வெளியிலிருப்பவர், வீட்டிற்கு வரும் போது, வழி வேண்டுமே என்று, ஒரு கார் நுழைய வழி விட்டு தான் நிறுத்தியிருந்தேன். பெரியவர் அப்படி நினைக்கவில்லை போலும்! கோணி ஊசிக்கு வேலை வைத்து விட்டார்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில், சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் ஏறிய (விடியற்காலை, 3:00 மணி) திருமண கோஷ்டி ஒன்று (ஒன்பது பேர்), எல்லா விளக்குகளையும் போட்டு, கூச்சல் போட ஆரம்பித்தது. காரணம், ஒரே ஒரு வெள்ளைப் போர்வை தரப்படவில்லை என்று! அத்தனை பேர் தூக்கமும் போயே போயிந்தி!
இதில் ஒருவருக்கு மட்டும் பி - 1ல் 6ம் நம்பர் இருக்கை; அவர் அங்கேயிருந்து, பி - 1/46ல் இருப்பவருக்கு கேட்க வேண்டும் என்று பெரிதாக கத்துகிறார். தூங்குற அத்தனை பேரின் தூக்கத்தையும், அவர்களது உணர்வுகளையும், கிள்ளுக்கீரையாக நினைத்த இந்த திருமண கோஷ்டியில், ஒருவருக்கு கூடவா இங்கிதம் தெரியாது? 'உஷ் மெதுவா பேசு... எல்லாரும் தூங்குறாங்கல்ல...' என்று சொல்ல, நவக்கிரகங்களுக்குள் ஒன்றிற்கு கூடவா தோன்றியிருக்காது? கஷ்டம்!
எங்கள் வீட்டருகே கூம்பு ஸ்பீக்கர் (தடை செய்து பல ஆண்டுகளாச்சு) போட்டு கத்த விடுகிற கோவில் ஒன்று உண்டு. பல மதத்தவர் வாழும் இடத்தில், ஒரு மதத்தவர் மட்டும் இப்படியா ஆதிக்கம் செலுத்துவது? தேர்வு நேரத்தின் போது பிள்ளைகளின் படிப்பு என்னாவது? இத்தனைக்கும், அதற்கு அருகில், இதய நோய் மருத்துவமனை உள்ளது. எதையும் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தின் போக்கு உண்மையில் பிடிபடவில்லை.
சில நேரங்களில், உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் கமல் போல, 'அநியாயத்தை தட்டிக்கேட்க கிளம்பி விடலாமா...' என்று கூட வேகம் வரும்.தமிழகத்தின் மோசமான கலாசாரங்களுள் ஒன்று, சாலை மறியல். லாரியில், பேருந்தில் அடிபட்டு ஒருவர் சாலையில் இறந்தால், அது ரொம்ப பாவமான, அநியாயமான சாவு தான். ஆனால் அதற்கும் சாலை மறியல் செய்கின்றனர்.
சாலை போடாவிட்டால், நீர் வராவிட்டால், அதற்கும் சாலை மறியல். இரண்டு முதல் பல மணி நேர மறியலில், எத்தனை பேர் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் போக முடியாமல், உயிரை விட்டனரோ! எத்தனை பேருக்கு தேர்வு, வேலை போச்சோ, எவ்வளவு பேர் ரயில் - விமானத்தை கோட்டை விட்டனரோ தெரியாது.
நம் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை, எண்ணற்ற வாழ்வு நெறிகளையும், ஒழுங்குகளையும் கொண்டது. நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.
எதிர் இருக்கையில் உட்கார்ந்து, அவர்களுக்கு நம்மால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை உணர்ந்து பார்த்தனர் அவர்கள். 'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கும் இக்கால மனப்போக்கு மாற வேண்டும்.
மனித மாண்புகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு சுயநலத்தையும், ஏற்க முடியாது.
பிறருக்கு இடைஞ்சல் தராத வாழ்க்கையை, வாழ்வின் உன்னத நெறியாக ஆக்கி கொள்வதில், இன்னொரு நன்மையும் இருக்கிறது; இது, பூமராங் ஆகி, நம்மை திரும்ப வந்து தாக்காமல் இருப்பதே அது!
லேனா தமிழ்வாணன்
'சார்... அந்த வீட்டு வாசல் கிட்டயா நிறுத்தினீங்க... என்ன சார் நீங்க... அந்த வீட்டுக்கார பெரியவரை பத்தி உங்களுக்கு தெரியாதா... தன் வீட்டு வாசல்ல நிற்கிற வண்டிகளின் டயர்களை கோணி ஊசியால் குத்தி, பஞ்சராக்கி விடுவார்...' என்றனர் ஆட்டோக்காரர்கள்.காலம் காலமாக இது நடக்கிறதாம்!
கார் நிறுத்தும் விஷயத்தில் நான் சற்று கெட்டி! நடக்க அஞ்சாமல், தொலைதூரம் கொண்டுபோய் எவருக்கும் இடைஞ்சல் இல்லாத இடமா... நம்மால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா, வீட்டு வாயிலா, தொழில் நடக்கும் இடம் என்றால், நம்மால் அவர்களுக்கு தொழில் கெடுமா, நம் வாகனத்தை எடுக்க முடியாதபடி, எவரும் வண்டியை நிறுத்தி மடக்கி விடுவரா, அவசரமாக புறப்படுகிற நேரத்தில், நாம் சிக்கி கொள்வோமா, காவல் துறையின், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு உண்டா என்கிற, ஏழு கேள்விகளுக்கும் விடை கண்ட பின் தான், வாகனத்தை நிறுத்துவது வழக்கம்.
ஆனால், நான் நிறுத்திய வீட்டுப் பகுதியினுள் இருள் மண்டியிருக்க, அப்படியும் வெளியிலிருப்பவர், வீட்டிற்கு வரும் போது, வழி வேண்டுமே என்று, ஒரு கார் நுழைய வழி விட்டு தான் நிறுத்தியிருந்தேன். பெரியவர் அப்படி நினைக்கவில்லை போலும்! கோணி ஊசிக்கு வேலை வைத்து விட்டார்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில், சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் ஏறிய (விடியற்காலை, 3:00 மணி) திருமண கோஷ்டி ஒன்று (ஒன்பது பேர்), எல்லா விளக்குகளையும் போட்டு, கூச்சல் போட ஆரம்பித்தது. காரணம், ஒரே ஒரு வெள்ளைப் போர்வை தரப்படவில்லை என்று! அத்தனை பேர் தூக்கமும் போயே போயிந்தி!
இதில் ஒருவருக்கு மட்டும் பி - 1ல் 6ம் நம்பர் இருக்கை; அவர் அங்கேயிருந்து, பி - 1/46ல் இருப்பவருக்கு கேட்க வேண்டும் என்று பெரிதாக கத்துகிறார். தூங்குற அத்தனை பேரின் தூக்கத்தையும், அவர்களது உணர்வுகளையும், கிள்ளுக்கீரையாக நினைத்த இந்த திருமண கோஷ்டியில், ஒருவருக்கு கூடவா இங்கிதம் தெரியாது? 'உஷ் மெதுவா பேசு... எல்லாரும் தூங்குறாங்கல்ல...' என்று சொல்ல, நவக்கிரகங்களுக்குள் ஒன்றிற்கு கூடவா தோன்றியிருக்காது? கஷ்டம்!
எங்கள் வீட்டருகே கூம்பு ஸ்பீக்கர் (தடை செய்து பல ஆண்டுகளாச்சு) போட்டு கத்த விடுகிற கோவில் ஒன்று உண்டு. பல மதத்தவர் வாழும் இடத்தில், ஒரு மதத்தவர் மட்டும் இப்படியா ஆதிக்கம் செலுத்துவது? தேர்வு நேரத்தின் போது பிள்ளைகளின் படிப்பு என்னாவது? இத்தனைக்கும், அதற்கு அருகில், இதய நோய் மருத்துவமனை உள்ளது. எதையும் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தின் போக்கு உண்மையில் பிடிபடவில்லை.
சில நேரங்களில், உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் கமல் போல, 'அநியாயத்தை தட்டிக்கேட்க கிளம்பி விடலாமா...' என்று கூட வேகம் வரும்.தமிழகத்தின் மோசமான கலாசாரங்களுள் ஒன்று, சாலை மறியல். லாரியில், பேருந்தில் அடிபட்டு ஒருவர் சாலையில் இறந்தால், அது ரொம்ப பாவமான, அநியாயமான சாவு தான். ஆனால் அதற்கும் சாலை மறியல் செய்கின்றனர்.
சாலை போடாவிட்டால், நீர் வராவிட்டால், அதற்கும் சாலை மறியல். இரண்டு முதல் பல மணி நேர மறியலில், எத்தனை பேர் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் போக முடியாமல், உயிரை விட்டனரோ! எத்தனை பேருக்கு தேர்வு, வேலை போச்சோ, எவ்வளவு பேர் ரயில் - விமானத்தை கோட்டை விட்டனரோ தெரியாது.
நம் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை, எண்ணற்ற வாழ்வு நெறிகளையும், ஒழுங்குகளையும் கொண்டது. நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.
எதிர் இருக்கையில் உட்கார்ந்து, அவர்களுக்கு நம்மால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை உணர்ந்து பார்த்தனர் அவர்கள். 'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கும் இக்கால மனப்போக்கு மாற வேண்டும்.
மனித மாண்புகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு சுயநலத்தையும், ஏற்க முடியாது.
பிறருக்கு இடைஞ்சல் தராத வாழ்க்கையை, வாழ்வின் உன்னத நெறியாக ஆக்கி கொள்வதில், இன்னொரு நன்மையும் இருக்கிறது; இது, பூமராங் ஆகி, நம்மை திரும்ப வந்து தாக்காமல் இருப்பதே அது!
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...
நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.
எங்கம்மா, பாட்டி அடிக்கடி சொல்வார்கள் இதை
'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கு.............
இது தான் இப்போ நடந்து கொண்டிருக்கு
எங்கம்மா, பாட்டி அடிக்கடி சொல்வார்கள் இதை
'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கு.............
இது தான் இப்போ நடந்து கொண்டிருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல..
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» வரம் தராத வசந்தங்கள்
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» வரம் தராத வசந்தங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|