ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னக்காவடியும் மூன்று பெண்களும் !

Go down

அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Empty அன்னக்காவடியும் மூன்று பெண்களும் !

Post by M.Jagadeesan Sat Mar 19, 2016 9:45 pm

பவதி பிச்சாந் தேஹி !

ஒரு வீட்டின் முன்பாக அன்னக்காவடி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் ! அப்போது பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு வந்தான் .

" அம்மா ! பிச்சை போடுங்க தாயே ! " என்று குரல் கொடுத்தான் .

உடனே அன்னக்காவடி ," தம்பி ! ஒரு வீட்டின் முன்பாக இருவர் பிச்சை எடுக்கக் கூடாது ; நீ அடுத்த வீட்டுக்குப் போய் பிச்சை எடு ! "

" ஐயா ! கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இந்த வீட்டில் பிச்சை எடுக்கிறேன் ; என்னை எடுக்கவேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை ! "

" சரி தம்பி ! நான் அடுத்த வீட்டிற்குப் போகிறேன் ; ஆனால் ஒன்று ; இந்த வீட்டில் இனிமேல் பிச்சை எடுக்காதே ! அது உனக்குத் தரித்திரத்தைக் கொடுக்கும் ! " என்று சொல்லிவிட்டு அன்னக்காவடி அடுத்த வீட்டுக்குப் போய்விட்டார் .

பவதி பிச்சாந் தேஹி !

இரண்டாவது வீட்டை நோட்டம் விட்டார் அன்னக்காவடி ! அப்போது அந்த சிறுவன் அங்கு வந்தான் . அவனைப் பார்த்த அன்னக்காவடி ,

" தம்பி ! இது யாருடைய வீடு ? "

" ஐயா ! இது கலெக்டர் சுஜாதா IAS அவங்களோட வீடு "

" தம்பி இந்த கலெக்டருக்குத் திருமணம் ஆகிவிட்டதா ? "

" ம்ம் ஆச்சு ஐயா !  அதோ அங்க பாருங்க ! தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திகிட்டு இருப்பவர்தான் அந்த அம்மாவோட புருஷன் ! “

" அவரோட பேரு என்ன "

" விஜய ராகவன் "

" ஓ ! அப்படியா ! இனிமேல் இந்த வீட்டிலும் பிச்சை எடுக்காதே ! " என்று சொல்லி அடுத்த வீட்டுக்குப் போய்விட்டார் .

" பவதி ! பிச்சாந் தேஹி ! " என்று குரல் கொடுத்தார் அன்னக்காவடி .

சிறிது நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஓர் அம்மையார் கையில் இரண்டு பாத்திரங்களுடன் வந்தார் . ஒரு பாத்திரத்தில் சோறும் இன்னொரு பாத்திரத்தில் குழம்பும் இருந்தது . அதை மகிழ்ச்சியுடன் அன்னக்காவடி வாங்கிக்கொண்டார் .

" தீர்க்காயுசா இருக்கம்மா ! " என்று சொல்லி வாழ்த்தினார் அன்னக்காவடி .

சிறிதுநேரத்தில் அந்தப் பையன் அங்கு வந்தான் ; மூன்றாவது வீட்டில் அவனுக்கும் பிச்சை கிடைத்தது .

அன்னக்காவடியும் , சிறுவனும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டார்கள் .

சிறிதுநேரம் கழிந்தது.

ஐயா ! நான் ஒரு கேள்வி கேட்கலாமா ?

கேள் தம்பி !


ஐயா !

“முதல் வீட்டில் தாங்கள் ஏன் பிச்சை ஏற்றுக்கொள்ளவில்லை ? “

தம்பி ! நாம் அங்கு சென்றபோது மணி எவ்வளவு இருக்கும் ?

சுமார் 9 மணி இருக்கும் ஐயா !

9 மணி ஆகியும் அந்த வீட்டின் கதவுகள் திறக்கப் படாமலும் , வீட்டின் முன்பாக பெருக்கி ,  நீர் தெளித்து கோலம் இடாமலும் இருந்ததை நீ கவனிக்கவில்லையா ? 9 மணி வரையில் ஒரு பெண் தூங்கினால் , அந்த வீட்டில் எப்படி லட்சுமி வாசம் செய்வாள் ? மூதேவிதான் வாசம் செய்வாள் . மூதேவி குடியிருக்கும் அவ்வீட்டில் நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை . அது நமக்குத் தரித்திரத்தைக் கொடுக்கும் "


ஐயா !

இரண்டாவது வீட்டில் தாங்கள் ஏன் பிச்சை எடுக்கவில்லை ?

தம்பி ! அந்த வீட்டின் பெயர்ப் பலகையில் என்ன போட்டிருந்தது ?

" சுஜாதா IAS " என்று போட்டிருந்தது ஐயா !

அவரது கணவன் பெயரை நான் கேட்டபோது நீ என்ன சொன்னாய் ?

ஐயா ! விஜய ராகவன் என்று சொன்னேன் !

கணவனுடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெண் , கணவனை மதிக்கவேண்டும் அல்லவா ?

நிச்சயமாக !

ஆனால் அந்தப்பெண் கணவனை மதிக்கவில்லையே !

ஐயா ! அந்தப் பெண் கணவனை மதிக்கவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள் ?

வீட்டின் முன்புறத்தில் இருந்த பெயர்ப்பலகையில் " சுஜாதா IAS " என்றுதானே போட்டிருந்தது .
சுஜாதா விஜயராகவன் IAS என்று போடவில்லையே ! இதிலிருந்து என்ன தெரிகிறது ? அந்தப் பெண் கணவனை மதிக்கவில்லை என்றுதானே தெரிகிறது ? கணவனே கண்கண்ட தெய்வம் என்று பெண்கள் வாழும் தமிழ்நாட்டில் , கணவனை மதிக்கத் தெரியாத ஒரு பெண்ணின் வீட்டில் பிச்சை எடுப்பது எனக்கு சரியாகப் படவில்லை ; எனவேதான் பேசாமல் வந்துவிட்டேன் !


ஐயா ! அந்த மூன்றாவது வீட்டில் மட்டும் பிச்சையை ஏன் ஏற்றுக் கொண்டீர்கள் ?

மகனே ! அந்த வீட்டை நீ கவனிக்கவில்லையா? வீட்டின் வாசலில்  பெருக்கி , நீர் தெளித்து, அழகாகக் கோலம் இட்டிருந்தார்கள் .அந்தக் கோலம் பச்சரிசி மாவினால் போட்டிருந்த காரணத்தினால் அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன . அந்த வீட்டின் முன்புறத்தில் இருந்த வேப்பமரத்தில் சில காக்கைகள் அமர்ந்து கரைந்துகொண்டு இருந்தன . இதிலிருந்து என்ன தெரிகிறது ?

அந்த வீட்டுப் பெண் , காக்கைகளுக்கு உணவிட்டபின்னே , உணவு உண்ணும் பழக்கமுடையவள் என்பதைத் தெரிந்துகொண்டேன் . மேலும் எறும்பு போன்ற எளிய ஜீவராசிகளுக்கும் இரங்கும் மனம் கொண்டவள் என்பதையும் தெரிந்துகொண்டேன் . அந்த வீடு திருமகள் வாழும் வீடு . எனவேதான் அந்தப் பெண்ணிடம் பிச்சை ஏற்றுக்கொண்டேன் .

ஐயா ! நாம் எடுப்பதோ பிச்சை ; இதில்  யார் எப்படி இருந்தால் நமக்கென்ன ?. போடும் பிச்சையை வாங்கிக்கொண்டு போகவேண்டியதுதானே !

தம்பி ! என்னைப் பஞ்சத்துக்கு ஆண்டி என்று நினைத்துக் கொண்டாயா ?

ஐயா ! நீங்கள் பஞ்சத்துக்கு ஆண்டியாக இருந்தாலும் சரி அல்லது பரம்பரை ஆண்டியாக இருந்தாலும் சரி அதுபற்றி எனக்குக் கவலையில்லை ; வயிறு நிரம்புகின்ற வழியைப் பாருங்கள் ! இப்படி நீங்கள் வியாக்கியானம் பேசினால் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .

தம்பி ! பாத்திரமறிந்து பிச்சையிடு ! என்ற பழமொழியை நீ கேள்விப்பட்டதில்லையா ?

கேள்விப்பட்டிருக்கிறேன் !

பாத்திரமறிந்து பிச்சையிடாத காரணத்தினால்தான் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனான் . அதுபோல " வீடு அறிந்து பிச்சை எடு " என்பது என்னுடைய கொள்கை . முதல் வீட்டிலே மங்கலம் இல்லை ; இரண்டாவது வீட்டிலே கணவனுக்கு மரியாதை இல்லை ! மங்கலமும் , மரியாதையும் இல்லாத வீட்டிலே நாம் பிச்சை எடுக்கக்கூடாது .

ஐயா ! மங்கலமும் , மரியாதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் ! ஊருக்கு உபதேசம் வேண்டாம் ! எனக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம் ! என்று சொல்லிவிட்டு அந்தப் பையன் ஓடிப்போனான் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum