ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

4 posters

Go down

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் Empty பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by கார்த்திக் செயராம் Fri Mar 18, 2016 6:30 pm

இன்றைக்குக் காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்!

சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸுன் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமியை ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சுந்தரபாண்டியனைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக, போயஸ் கார்டனின் ஊழியர் ரமேஷ், சிவகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஓ.பி.எஸ்ஸின் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறது. " யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். ஒட்டுமொத்த நெட்வொர்க்கின் செயல்பாடுகளும் வந்தாக வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா. இதனால், இதுவரையில் ஓ.பி.எஸ் தயவோடு கோலோச்சி வந்த அமைச்சர்களும் நடுக்கத்தில் உள்ளனர். ' சீட் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. அம்மாவின் கோபப் பார்வைக்கு ஆளாகாமல் இருந்தால் போதும்' என கோவில் கோவிலாக பூஜை செய்து வருகிறார்கள்.





ஆர்.எஸ்.முருகன். நெல்லை மாவட்டத்தின் முதன்மையான கான்ட்ராக்டர். அந்த மாவட்டத்தில் உள்ள 120 ஒப்பந்ததாரர்களும் ஆர்.எஸ்.முருகனின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டுவர். இவர் நாங்குநேரி தொகுதியின் அ.தி.மு.க செயலாளராகவும் இருக்கிறார். ஓ.பி.எஸ்ஸுக்கு ஆல் இன் ஆலாக இருந்து வந்த முருகன், இப்போது தலைமறைவாகிவிட்டார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முருகனின் திருவிளையாடல்கள் அதிகம். தான் எடுக்கும் வேலைகளை சப் காண்ட்ராக்ட் மூலம் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார். இதற்காக, 30 முதல் 40 சதவீத கமிஷனை ஓ.பி.எஸ்ஸிடம் சேர்க்கும் பணி முருகனுடையது. சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி, பாளை சட்டமன்றத் தொகுதிகளில் சீட் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் முருகன். சில மாதங்களுக்கு முன்பு குமாரசாமி என்ற சப் காண்ட்ராக்டர் முருகன் மீது புகார் கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். முருகனின் செல்வாக்கை அறிந்த போலீஸார், புகாரைக் கிடப்பில் போட்டுவிட்டனர். ஓ.பி.எஸ்ஸின் பரிவர்த்தனையில் முருகன் இருப்பதை அறிந்த போலீஸார், முருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொடும் காயம் விளைவித்தல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருகனின் இருப்பிடத்தைக் கண்டறிய பாளை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தீவிரமாகத் தேடி வருகிறார். முருகன் பிடிபட்டால் ஓ.பி.எஸ்ஸின் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விபரங்களும் தெரிய வரலாம் என்பதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால், அதிர்ந்து போயிருக்கிறார் ஓ.பி.எஸ். இதன் உச்சகட்டமாக கைது நடவடிக்கை வரை போகலாம் என்பதால் அவரது கூடாரமே அதிர்ந்து போயிருக்கிறது. இதற்குக் காரணமாக, நடந்த சில அபசகுன சம்பவங்களை பட்டியல் போட்டார் ஓ.பி.எஸ் நண்பர் ஒருவர். தேனி, பழனிசெட்டிப்பட்டி அதிமுக தலைமைக் கழக கட்டிட திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் பலியானார். பெரியகுளம் தொகுதியில் நடந்த நலத்திட்ட விழாவில் ஜெயலலிதா படம் சரிந்து விழுந்தது, போடி திருமண விழாவில் மின்சார ஒயர் அறுந்து முத்துராஜ் என்பவர் படுகாயம் அடைந்தது என தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களால் அதிர்ந்து போயிருக்கிறார் ஓ.பி.எஸ்.

சட்டமன்ற தேர்தல் சீட்டுக்காக வாங்கப்பட்ட பணம், 5 ஆண்டுகளில் குவிந்த பணம், வாங்கிக் குவித்த சொத்துக்கள், பினாமிகளின் விவரம் என அனைத்து புள்ளிவிபரங்களும் ஜெயலலிதா வசம் சென்றிருக்கிறதாம். இவை அனைத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் கார்டன் இறங்கியிருக்கிறது. இதையடுத்து, 'விசாரணை முடியும் வரையில் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்' என ஓ.பன்னீர்செல்வத்திற்கு கார்டன் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினரான மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். கார்டனுக்கு நெருக்கமான மன்னார்குடி உறவினர்களும், சில காவல்துறை அதிகாரிகளும் ஓ.பி.எஸ்ஸிடம் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டனர். முடிவில், ஓ.பி.எஸ் வாங்கிக் குவித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். உச்சகட்டமாக, ஓ.பி.எஸ் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் அதிரடிக்கிறது.


நன்றி விகடன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் Empty Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by M.Jagadeesan Fri Mar 18, 2016 7:48 pm

மூதறிஞர் ராஜாஜி ஒருமுறை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தார்; அப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் . அருகில் அவருடைய உதவியாளர் . ராஜாஜிக்குக் காபி குடிக்கவேண்டும்போல இருந்தது. அவர் ஒரு காபி பிரியர் . டிரைவரிடம் ஒரு ஓட்டலுக்கு அருகில் காரை நிறுத்தச் சொன்னார் . உதவியாளர் ஓட்டலுக்குச் சென்று காபி ஆர்டர் செய்தார் . காபி வந்தது . அதற்கான பணத்தை , (அப்போது காபியின் விலை ஒன்றரை அணா ) உதவியாளர் கொடுத்தார் . காபி குடித்தபின் அந்த ஒன்றரை அணாவை , ராஜாஜி கொடுத்தபோது உதவியாளர் வாங்க மறுத்தார் . வாங்க மறுப்பது தவறு என்று சொல்லி ராஜாஜி கடிந்து கொண்டார் . பிறகே அந்தப் பணத்தை உதவியாளர் வாங்கிக்கொண்டார் .

ராஜாஜிக்குப் பிறகு காமராஜர் முதலமைச்சர் ஆனார் . அவருடைய சொந்த ஊரான விருதுநகரில் , அவருடைய வீட்டில் , அவருக்குத் தெரியாமல் குடிநீர் இணைப்புக் கொடுத்துவிட்டார்கள் . இதையறிந்த காமராஜர் கொதித்துப் போய்விட்டாராம். 'காமராஜர் அவருடைய வீட்டுக்கு மட்டும் குடிநீர் இணைப்புக் கொடுத்துக்கொண்டார் " என்று நாலுபேர் பேசக்கூடாது என்பதற்காகக் கொடுத்த இணைப்பைத் துண்டிக்கச் செய்தாராம் .

இருவருடைய ஆட்சியிலும் , மந்திரிகள் லஞ்சம் வாங்கினார்கள் என்ற பழிச்சொல்லே வந்ததில்லை !

தலை ஆடாமல் இருந்தால் வால் ஆடாது; தலை ஆடினால் வாலும் ஆடத்தான் செய்யும் !

இதுதான் தற்போது நடக்கின்ற சம்பவங்களுக்குக் காரணங்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் Empty Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by T.N.Balasubramanian Fri Mar 18, 2016 9:25 pm

அது ஒரு பொற்காலம் ,Jagadeesan
நினைத்து மகிழமுடியுமே அன்றி ,
இனி வருமோ அது போல் ஒருநாள் என
ஏங்கத்தான் முடியும் இனிவரும் நாள்களில் ,

ராஜாஜி /காமராஜர் /அறிஞர் அண்ணாவுடன்
ஊழலற்ற அரசு முடிவுக்கு வந்துவிட்டன .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் Empty Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Mar 18, 2016 10:42 pm

அமேரிக்கா முறையில் ஒரு குறிப்பிட்ட தகுதி உள்ள பதவிகளை யாரும் இரண்டு முறைக்கு மேல் இருக்க கூடாது அரசியலை விட்டு ஒதுங்கி செல்லவேண்டும் என வந்தால் ஒழிய இந்த கொள்ளைக்காரர்களை இந்திய அரசியலை விட்டு ஒதுக்கவே முடியாது

அதிலும் இந்தியாவில் கொள்ளைக்கார அரசியல்வாதிகள் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர்

இவைகளுக்கு பின்னணியில் இடும்பர் கொடும்பர் அசுர ஆவிகள் உள்ளன இவைகளை அடக்குவேன் என முருகன் வாக்களித்துள்ளார் அதற்கு ஒரு அவதாரம் வரவேண்டும்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் Empty Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum