Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
சாம்பார் இல்லாமல் இட்லி, தோசை, சோற்றை நினைத்துப் பார்க்க முடியுமா? பருப்பில்லாமல் சாம்பார் கிடையாது. விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிட வலியுறுத்தப்படும் சத்தான உணவுகளில் ஒன்று, பருப்பு வகைகளால் செய்யப்பட்ட சுண்டல். இது, சாயங்கால வேளைகளில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவும்கூட.
பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு புரதச்சத்து (Protien).
இந்த ஆண்டை சர்வதேசப் பருப்பு ஆண்டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். பருப்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
# அவரை வகைத் தாவரங்கள் ‘லெக்யுமனேசியே’ (leguminosae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றிலிருந்துதான் பெரும்பாலான மொச்சை, பருப்பு, பயறு வகைகள் கிடைக்கின்றன. தாவரங்களின் விதைகள் அல்லது பழங்கள் ஒரு உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதைத்தான் ‘லெகுமனேசி’ என்ற சொல் குறிக்கிறது.
# அவரை, துவரையைப் பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.
# பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
# பயறு - மொச்சைத் தாவரங்களை ஊடுபயிராகவும் பயிரிடலாம். இதன் மூலம் ஒரு விவசாயப் பண்ணை அதிக லாபம் பெறும். அது மட்டுமல்லாமல் இந்தப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் மண் வளம் அதிகரித்து, நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அங்கே பறவைகள், பூச்சிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதால், பயறு - மொச்சை பயிரிடப்பட்டுள்ள வயல்கள் உயிர் பன்மயத்துடன் (Bio-Diversity) திகழ்கின்றன.
# பயறு - மொச்சை எடுக்கப்பட்ட தாவரத்தின் எஞ்சிய பகுதியைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
# வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகளில் துவரை, பாம்பரா பீன்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.
# பயறு-மொச்சைக்கு மிக அதிக விவசாய இடுபொருட்கள் தேவையில்லை என்பதால், பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) அவை குறைவாக வெளியிடுகின்றன. எனவே, இவற்றை அதிகம் விளைவிப்பது பூமி கூடுதலாக வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும்.
# உலகில் பயறு-மொச்சை வகைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதால், புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழை போன்ற பாதிப்புகளைத் தாங்கி, வளரும் பருப்பு வகைத் தாவரங்களைக் கண்டறியவும் வாய்ப்பு இருக்கிறது.
# மனித உடலை வளர்க்கப் புரதம் அத்தியாவசியம். ஆனால், அந்தப் புரதம் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த ஆதாரங்கள் மூலமாக பயறு, மொச்சைகள் மூலமாகவே கிடைக்கிறது. ஒரு கிலோ கடலைப் பருப்பு - துவரம் பருப்பை விளைவிக்க 50 லிட்டர் தண்ணீர் போதும். அதேநேரம் ஒரு கிலோ கோழிக் கறிக்கு 4,325 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு 5,520 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ மாட்டுக் கறிக்கு 13,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது (இது சராசரி அளவு மட்டுமே).
# இந்தியாவில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 70 சதவீதப் பயறு - மொச்சை சாகுபடியை மேற்கொள்கின்றன..
நன்றி : தி ஹிந்து
பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு புரதச்சத்து (Protien).
இந்த ஆண்டை சர்வதேசப் பருப்பு ஆண்டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். பருப்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
# அவரை வகைத் தாவரங்கள் ‘லெக்யுமனேசியே’ (leguminosae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றிலிருந்துதான் பெரும்பாலான மொச்சை, பருப்பு, பயறு வகைகள் கிடைக்கின்றன. தாவரங்களின் விதைகள் அல்லது பழங்கள் ஒரு உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதைத்தான் ‘லெகுமனேசி’ என்ற சொல் குறிக்கிறது.
# அவரை, துவரையைப் பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.
# பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
# பயறு - மொச்சைத் தாவரங்களை ஊடுபயிராகவும் பயிரிடலாம். இதன் மூலம் ஒரு விவசாயப் பண்ணை அதிக லாபம் பெறும். அது மட்டுமல்லாமல் இந்தப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் மண் வளம் அதிகரித்து, நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அங்கே பறவைகள், பூச்சிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதால், பயறு - மொச்சை பயிரிடப்பட்டுள்ள வயல்கள் உயிர் பன்மயத்துடன் (Bio-Diversity) திகழ்கின்றன.
# பயறு - மொச்சை எடுக்கப்பட்ட தாவரத்தின் எஞ்சிய பகுதியைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
# வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகளில் துவரை, பாம்பரா பீன்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.
# பயறு-மொச்சைக்கு மிக அதிக விவசாய இடுபொருட்கள் தேவையில்லை என்பதால், பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) அவை குறைவாக வெளியிடுகின்றன. எனவே, இவற்றை அதிகம் விளைவிப்பது பூமி கூடுதலாக வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும்.
# உலகில் பயறு-மொச்சை வகைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதால், புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழை போன்ற பாதிப்புகளைத் தாங்கி, வளரும் பருப்பு வகைத் தாவரங்களைக் கண்டறியவும் வாய்ப்பு இருக்கிறது.
# மனித உடலை வளர்க்கப் புரதம் அத்தியாவசியம். ஆனால், அந்தப் புரதம் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த ஆதாரங்கள் மூலமாக பயறு, மொச்சைகள் மூலமாகவே கிடைக்கிறது. ஒரு கிலோ கடலைப் பருப்பு - துவரம் பருப்பை விளைவிக்க 50 லிட்டர் தண்ணீர் போதும். அதேநேரம் ஒரு கிலோ கோழிக் கறிக்கு 4,325 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு 5,520 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ மாட்டுக் கறிக்கு 13,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது (இது சராசரி அளவு மட்டுமே).
# இந்தியாவில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 70 சதவீதப் பயறு - மொச்சை சாகுபடியை மேற்கொள்கின்றன..
நன்றி : தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
மிகவும் பயனுள்ள பகிர்வு க்ரிஷ்ணாம்மா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
நல்ல பகிர்வு, நமது பாரம்பரிய சமையலில் உணவே பருப்பு நெயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
shobana sahas wrote:மிகவும் பயனுள்ள பகிர்வு க்ரிஷ்ணாம்மா .
ஆமாம் ஷோபனா ...நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
மேற்கோள் செய்த பதிவு: 1198001சசி wrote:நல்ல பகிர்வு, நமது பாரம்பரிய சமையலில் உணவே பருப்பு நெயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது
ஆம் சசி, அது தான் நாம் குழந்தைகளுக்கு முதலில் பருப்பும் நெய்யும் கூடவே ரசமும் கொடுக்கிறோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
இந்த பருப்பு வகைகளை தமிழ் நாட்டில்
பயிர் செய்யலாமே...!
-
வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகள்
தமிழ்நாட்டிலும் உள்ளனவே...
பயிர் செய்யலாமே...!
-
வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகள்
தமிழ்நாட்டிலும் உள்ளனவே...
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
மேற்கோள் செய்த பதிவு: 1198303ayyasamy ram wrote:இந்த பருப்பு வகைகளை தமிழ் நாட்டில்
பயிர் செய்யலாமே...!
-
வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகள்
தமிழ்நாட்டிலும் உள்ளனவே...
ஆமாம் அண்ணா, சும்மா தண்ணி இல்லை தண்ணி இல்லை என்று சொல்வதைவிட, எது இங்கு இப்போ வளருமோ அதை வளர்க்க வேண்டியது தானே? ...பருப்புகளும் நமக்குத் தேவை தானே? .ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
மானாவாரி பயிர் என்று சொல்வார்களே!
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே!
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே!
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
நான் குட்டி பத்மினியின் பெரிய பிண்ணனின்னு படிச்சுட்டேன், கண்ணு கொஞ்சம் மங்கலாயிடுச்சு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
சசி wrote:மானாவாரி பயிர் என்று சொல்வார்களே!
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே!
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.
சிறு தானியங்களை ஒருபக்கம் ஊக்குவித்து விட்டு, எல்லோரும் அதன் பக்கம் திரும்பும் போது உற்பத்தியை குறைக்கிரார்களே ..இது நியாயமா? ..நீங்கள் சொல்லும் மானாவாரி பயிர் களில், சிறு தானியங்களும் அடங்கும் தானே சசி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முந்திரி பருப்பின் பயன்கள்
» கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணமும், மகத்துவமும்
» பெரிய பெரிய விலங்குகளை உண்ணும் மலைப்பாம்புகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)
» பெரிய சுறாக்களைக் கொல்லும் பெரிய கப்பல்கள்!
» குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?
» கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணமும், மகத்துவமும்
» பெரிய பெரிய விலங்குகளை உண்ணும் மலைப்பாம்புகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)
» பெரிய சுறாக்களைக் கொல்லும் பெரிய கப்பல்கள்!
» குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|