புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_lcapதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_voting_barதெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 1:00 am

First topic message reminder :

'உங்களுக்கு சரி வரவும், முறையாகவும் பல் விளக்கத் தெரியாது...' என்று நான் கூறினால், 'என்ன விளையாடுறீங்களா... நான் என்ன பச்சக் குழந்தையா...' என்று, என்னுடன் பலரும் வாதம் செய்ய முன் வருவீர்கள்; ஆனால், நம்மில், 90 சதவீதம் பேர், பல் விளக்கும் முறை சரியில்லை என்பதை, பல் மருத்துவர்கள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சிலர், பல் விலக்க, ஏகப்பட்ட நேரம் எடுக்கின்றனர். சில கிராமத்துப் பண்ணையார்கள், வேப்பங்குச்சியை எடுத்து, வயல் வரப்புகளில் வலம் வந்தபடி, வீடு திரும்பும் வரை பல் தேய்க்கின்றனர்; பல் எனாமலுக்கு, இதை விட கேடு வேறு தேவையில்லை.

பல்லை மேலிருந்து கீழாக, முரணையில் ஆரம்பித்து, பல் முடிவு வரை மேல் வரிசையையும், கீழ் வரிசையை கீழ்முரணையில் ஆரம்பித்து மேல் நோக்கியும், உணவுத் துகள்களை வெளியே தள்ளும் முறையே, சரியான பல் விளக்கும் முறை!

நாமோ (நான் இல்லீங்க!) இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு தேய்க்கிறோம். இதனால், உணவுத் துகள்கள் கடைசி வரை பற்களிலேயே தங்கி, காரையாக மாறி, பாக்டீரியாக்களின் முகாம்களாக ஆகிவிடுகின்றன.

நம்மவர்களுக்கு, தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா... தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை. தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அசிங்கமாம், கேவலமாம், அவமானமாம், தர்மசங்கடமாம், மானக்கேடாம்!
ஆனால், இப்படி இல்லவே இல்லை.

எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாக கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர். அறியாமை, வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதது தான்!

மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு, வடக்காக ஓடுகிறது கொங்கண் ரயில் பாதை. இந்த ரயிலில் பயணிப்போர், மேற்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாக காணலாம். கிழக்கு பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காண முடியும்.

மறுபுறம் பார்க்கத் தவறவிட்ட இந்த ரயில் பயணிகளை குறை சொல்ல முடியுமா... இப்படி தான், நம் அறியாமைகளும்! நாம் பயணிக்கிற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்கு தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா?

கடற்கரைப் பகுதியை பார்த்தவரும், மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தவரும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படி தவறில்லையோ, அதேபோல, நாம் அறியாத மறு பக்கங்களை பிறர் கூறுகிற போது, தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமலும், 'எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது...' என்று நடித்து, பாவ்லா காட்டாமலும், 'சொல்லுங்க... எனக்கு இதெல்லாம் புதுசு...' என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது; இது, புத்திசாலித்தனமும் கூட!

நான் தமிழ் படித்து வளர்ந்தவன்; என் வழக்கறிஞர் நண்பர், திடீரென, 'ப்ரோ கிரேஸ்டி நேஷன் ==pro crasti nation' என்று ஒரு சொல்லைக் கூறி, உரையாட ஆரம்பித்து விட்டார். அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்னு சொன்னீங்க; அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டேன்.

'அட இது தெரியாதா...' என்று இளக்காரப் புன்னகை சிந்தினார்.'தெரியாது நண்பரே... நான் படிச்சதெல்லாம் தமிழ் இலக்கியம். அதுல எதுவும் தெரியலன்னா தான் தப்பு...' என்றேன் புன்னகை மாறாமல்!

'அதுவும் சரி தான்...' என்று இறங்கி வந்தவர், 'அப்படீன்னா, தள்ளிப்போடுவது, தாமதப்படுத்துவது...' என்றார்.
'நன்றி நண்பரே...' என்றேன்.

மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை; எல்லாம் தெரிந்த மேதாவி என்று காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை. அறிவு தேடலில் உள்ளவர்கள், இத்தவறை செய்வதே இல்லை.

ஹோமியோபதி மாத்திரைகள், அலோபதி மாத்திரைகளைப் போல அல்ல. எல்லா வியாதிகளுக்கும் தரப்படும் மாத்திரைகள், பார்க்க ஜவ்வரிசி போலவே இருக்கும். ஆனால், அதற்குள் இறக்கப்பட்டிருக்கும் சாராம்சம் வேறு வேறு.

நாமும் வெறும் ஜவ்வரிசியாக இல்லாமல், சரக்கு இறக்கி கொண்ட, சாரமுள்ள மாத்திரைகளாக மாறுவோம். இதற்கு, வெட்கம் மற்றும் வீண் கவுரவம் ஆகியவை, தடைகளாக இருக்கவே கூடாது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 11:57 am

நன்றி ராம் அண்ணா, நன்றி பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 17, 2016 5:13 pm

நல்ல தகவல்மா பகிர்வுக்கு நன்றிபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 17, 2016 6:35 pm

இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன் .

'புராக்காஸ்டினேஷன்"  
என்பது தவறான உச்சரிப்பு .

ப்ரோ கிரேஸ்டி நேஷன்   ==pro crasti nation என்று சிலபிள் பிரித்து உச்சரிக்கவேண்டும் .
நேற்றே படித்து இருந்தால் நேற்றே சொல்லி இருப்பேன் .
இன்று படித்து , சரியான உச்சரிப்பை Procrastinate  பண்ண ( நாளை தள்ளிப்போட )விரும்பவில்லை  


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 2:50 pm

T.N.Balasubramanian wrote:இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன் .

'புராக்காஸ்டினேஷன்"  
என்பது தவறான உச்சரிப்பு .

ப்ரோ கிரேஸ்டி நேஷன்   ==pro crasti nation என்று சிலபிள் பிரித்து உச்சரிக்கவேண்டும் .
நேற்றே படித்து இருந்தால் நேற்றே சொல்லி இருப்பேன் .
இன்று படித்து , சரியான உச்சரிப்பை Procrastinate  பண்ண ( நாளை தள்ளிப்போட )விரும்பவில்லை  


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198095

நன்றி ஐயா, திருத்தி விட்டேன் புன்னகை................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக