புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
2 Posts - 4%
heezulia
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_m10“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 1:31 pm

அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர்.

மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழகனும், அவருக்கு அடுத்ததாக துரைமுருகனும், ஆர்.எஸ்.பாரதியும் அமர்ந்திருந்தனர். வெளியே பந்தலில் இருந்தவர்களில் ஆறு பேர் வீதம் உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்கள் கருணாநிதியின் அறைக்கு முன் இருந்த ஓர் அறையில் காத்திருக்க வைக்கப்பட்டு, ஒவ்வொரு நபராக வரிசைப்படி உள்ளே அனுப்பப்பட்டனர். இவர்களை பூச்சி முருகன், கு.க.செல்வம், உசேன் உள்ளிட்டோர் வரிசைப்படுத்தி உள்ளே அனுப்பிவைத்தனர். விண்ணப்பம் செய்திருந்தவரின் விருப்பமனுவினை ஸ்டாலின் வைத்திருந்தார். வந்தவர் இருக்கையில் அமர்ந்தவுடன், கருணாநிதியிடம் இருந்தே கேள்விகள் தொடங்கின. அவர் கேட்ட முதல் கேள்வி, “எந்தச் சமூகம் நீ?”, அடுத்ததாக, “எவ்வளவு செலவு செய்ய முடியும்?” என இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டார். கொஞ்சம் புதுமுகமாக இருப்பவர்களிடம், “கட்சிக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன, என்ன பொறுப்பில் உள்ளீர்கள்?” என்ற கேள்விகளை எழுப்பினார். பலர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் விருப்பமனு அளித்து இருந்தனர். அவர்கள், “எனக்கு சீட் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்கள் மாவட்டச் செயலாளருக்குக் கொடுக்க வேண்டாம்” என்ற புகாரைப் பதிவுசெய்தனர்.



நேர்காணலில் மு.க.ஸ்டாலினும் சில கேள்விகள் கேட்டார். அன்பழகன் யாரிடமும் எந்தக் கேள்விகளையும் கேட்கவில்லை. முகம் தெரிந்த சிலரிடம் மட்டும் அவர்களின் குடும்ப நிலவரங்களைக் கேட்டார். துரைமுருகன் விருப்பமனு அளித்தவர்களிடம், “உங்களைப் பற்றித் தெரியாதா? உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்திடலாம்” என நையாண்டி செய்துகொண்டிருந்தார். ஆர்.எஸ்.பாரதி தனது நோட்பேடில் நேர்காணலுக்கு வந்தவர்கள் கூறும் செலவுத் தொகையை மட்டும் குறிப்பெடுத்தார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் கருணாநிதி, “எவ்வளவு செலவு செய்ய முடியும்? எனக் கேட்க.. அந்தப் பெண் “ஒண்ணரை ரூபாய்” என்று சொன்னதும், ஆச்சர்யம் அடைந்த கருணாநிதி, “ஒண்ணரை ரூபாயை வைத்து என்ன பண்ண முடியும்” என திருப்பிக் கேட்டார். “தலைவரே, நான் ஒண்ணரைக் கோடின்னு சொல்ல வந்தேன்” எனக் கூறியதும், கருணாநிதி உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

மற்றொரு நபர், “ரெண்டு கோடி செலவு செய்வேன்” என்றார். “இப்பவே அந்தத் தொகையைக் கட்ட முடியுமா?” என்று ஸ்டாலின் கேட்டவுடன், தனது டிரைவருக்கு செல்போனிலிருந்து மெசேஜ் செய்துள்ளார். டிரைவர் சூட்கேஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு அறை வாசலுக்கு வந்துவிட்டார். ஸ்டாலினிடம், “என் காரில்தான் சூட்கேஸில் பணத்தை வைத்திருந்தேன். டிரைவர் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்” எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பல ‘சி’க்களை என்னால் செலவழிக்க முடியும் என்று கூறுபவர்களிடம் துரைமுருகன், “உனக்கு ஏது இவ்வளவு பணம், என்ன தொழில் பண்ற?” என்ற கேள்விகளால் குடைந்து எடுத்தார். நேர்காணலுக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணியினரிடம் கருணாநிதி, “உங்க ஏரியாவில் நமக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு, காங்கிரஸ் கூட்டணி பற்றி மக்கள் பேச்சு எப்படி இருக்கு?’’ என்ற விவரங்களையும் கேட்டுக்கொண்டார். திருப்பத்தூர் தொகுதிக்கு விருப்பமனு அளித்த எஸ்.எஸ்.தென்னரசு மகள் இளவரசியைப் பார்த்த கருணாநிதி, “எப்படி இருக்க?” என குடும்ப நிலவரங்கள் குறித்தும் விசாரித்துள்ளார்.



காட்பாடி தொகுதி முறை வந்தபோது துரைமுருகனும் நேர்காணலில் கலந்துகொண்டார். அதேபோல், ஆர்.எஸ்.பாரதியும் ஆலந்தூர் தொகுதி நேர்காணலில் கலந்துகொண்டார். தலைவர்கள் தனக்கும் சீட், தனது வாரிசுக்கும் சீட் என வரக் கூடாது என தலைமை கடுமையாகக் கூறிவிட்டதால், ஐ.பழனிச்சாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் தங்களது வாரிசுகளைக் களம் இறக்க முடியாமல் போய்விட்டது. ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி அண்ணா நகர் தொகுதிக்கான நேர்காணலில் கலந்துகொண்டார். ஏழாம் தேதி இரவு சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற இருந்தது. கருணாநிதி சீக்கிரம் கிளம்பிய காரணத்தால் எட்டாம் தேதி காலை நடைபெற்றது. கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் மட்டுமே மனுசெய்து இருந்ததால், அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து, வேட்பாளர் அமரும் இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரிடம் துரைமுருகன், “எவ்வளவு செலவு செய்வீர்கள்?” எனக் கேட்க, “தேவைக்குத் தகுந்தவாறு செலவு செய்வேன்” என்று ஸ்டாலின் பதில் அளித்தார். துரைமுருகன் சிரித்துக்கொண்டே அருகில் இருந்த அன்பழகனிடம், “நீங்கள் ஏதும் கேள்வி கேளுங்கள்” எனக் கூற அன்பழகன், சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்

அசத்திய கருணாநிதி!

விருப்பமனு அளித்த மகன் மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடத்தி, தி.மு.க-வில் இன்னும் உட்கட்சி ஜனநாயகம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்ற பிம்பத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்திவிட்டார் கருணாநிதி. அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அறையில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க-வினரிடம் தொடங்கிய நேர்காணல், மார்ச் 8-ம் தேதி காலை ஸ்டாலினின் கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட சென்னை கிழக்கு மாவட்டத்தோடு நிறைவடைந்தது.

இடையில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை நான்கு நாட்கள் நேர்காணல் நடத்தப்படவில்லை. தி.மு.க-வில் குறுநில மன்னர்களாகச் செயல்படும் மாவட்டச் செயலாளர்களை மீறி நேர்காணலில் என்ன பேச முடியும் என்று தி.மு.க-வினர் புலம்பினர்.

எனவே, எந்த மாவட்டச் செயலாளரும் நேர்காணல் அறையில் அனுமதிக்கப்படவில்லை. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய நேர்காணல் மதியம் 12-30 மணி வரையும், பின்னர் 4-30 மணி முதல் 8.00 மணி வரையும் நடத்தப்பட்டது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த நேர்காணலில் ஸ்டாலின் மட்டும் ஒரே ஒரு நாள், உடல்நிலை சரியில்லாமல் வரவில்லை. ஆனால் கருணாநிதி அனைத்து நாட்களிலும் காலையும், மாலையும் தவறாமல் கலந்துகொண்டு அசத்திவிட்டார். தமிழகம் மற்றும் புதுவையில் 4,433 பேரிடம், நாள் ஒன்றுக்கு சராசரியாக 650 நபர்கள் வீதம் நேர்காணல் நடைபெற்றுள்ளது.

நன்றி விகடன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக