புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_m10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_m10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_m10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_m10தராசு ஏந்தி வந்த குரங்கு! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தராசு ஏந்தி வந்த குரங்கு!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 2:20 pm

ஒரு சின்னஞ்சிறு தீவிலிருந்து புறப்பட்டு வந்த ஆங்கிலேயர் பெரிய துணைக் கண்டமான இந்தியாவை எப்படிப் பிடித்து ஆண்டார்கள்?

பிரித்தாளும் சூழ்ச்சி!

இந்தியாவில் வாழும் இந்துக் களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்துவிட்டால் ஆங்கிலேயர் ஆள முடியாது.

ஆகவே, அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம் களையும் ஒன்றுசேரவிடாமல் சூழ்ச்சிகள் செய்த னர். அவர்கள் இருவருக்கிடையே பகைமையை உண்டாக்கினர்; மோதலை ஏற்படுத்தினர்.

இரண்டு பூனைகளுக்குரிய அப்பத்தை தராசு ஏந்தி வந்த குரங்கு இப்படித்தான் தானே உண்டு ஏப்பம்விட்டது.

இந்தியாவின் பன்முகத் தன்மை ஒரு வரப்பிரசாதம். இந்து மதமும் இஸ்லாமும் ஒன்றையொன்று பாதித்தன. அதன் விளைவாக இந்து மதத்தில் ‘பக்தி இயக்கமும்’ இஸ்லாத்தில் பிற சமயவாதிகளையும் நேசிக்கும் புதிய தத்துவப் பார்வையும் தோன்றின.

இரு மதங்களின் திருமணத்தில் சீக்கிய மதம் என்றதோர் புதிய மதமே பிறந்தது. கலை இலக்கியங்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன.

அனைத்தையும் விடப் பிற சமய சகிப்புத் தன்மை என்ற உயர்ந்த பண்பாடு மலர்ந்து மணம் வீசி வந்தது.

அவ்வளவும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய்ச் சிதைக்கப்பட்டன.

ஆங்கிலேயர்கள் தங்கள் சுயநலத்தால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பயங்கர ஆயுதம் வரலாற்று ஏடுகளைத் திரித்து எழுதுதல்.

இதை நிரூபிக்கப் பல ஆவணங்கள் கிடைக்கின்றன.

வைஸ்ராயாக இருந்த எல்கின் பிரபுவுக்குப் பிரித்தானிய அரசுச் செயலர் வுட் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், ‘ஒரு பிரிவினருக்கு எதிராக அடுத்த பிரிவினரைத் தூண்டிவிடும் உத்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் போலவே வைஸ்ராய் கர்ஸன் பிரபுவுக்கு அரசுச் செயலர் ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் அவர், ‘இந்தியா மீது நமது ஆளுமைக்கு உண்மையான ஆபத்து இப்போது இருப்பதாக நான் நினைக்கவில்லை. இன்னும் 50 ஆண்டுகள் கழித்து, படிப்படியாக மேற்கத்தியக் கிளர்ச்சி உத்திகள் அங்கே பரவி, அவற்றை அவர்கள் கையாளுகிற நேரத்தில்தான் உண்மையான ஆபத்து உண்டாகும் என எண்ணுகிறேன். படித்த இந்தியர்களை இரு கூறுகளாகப் பிரித்தால், பரவி வரும் கல்வி அறிவு காரணமாக நமது அரசுமுறை மீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, இனங்களுக்கிடையே பிளவை அதிகப்படுத்தும் வகையில் பாடப் புத்தகங்கள் அமையும்படி நாம் திட்டமிட வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார்.

கவர்னர் ஜெனரல் டஃப்ரினுக்கு அரசு அதிகாரி கிராஸ் எழுதிய கடிதத்தில், ‘மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறை பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக் குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன.

முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களைக் கட்டாய மதமாற்றம் செய்தார்கள். அவர்களைக் கொன்றார்கள். அவர்களுடைய கோயில்கள் இடிக்கப்பட்டன என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதினார்கள். முஸ்லிம் அரசர்கள் இந்த நாட்டுக்குச் செய்த நன்மைகள் மறைக்கப்பட்டன.

வரலாற்றறிஞர் பேராசிரியர் ஹபீப், ‘இந்திய அரியணையில் வீற்றிருந்த முஸ்லிம் மன்னர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே. அவர்கள் ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தார்கள் என்றால் அவர்களது ஆட்சி, மத ஆட்சியாக இல்லாமலிருந்ததுதான் காரணம். இல்லாவிடில் அவர்களுடைய ஆட்சி இரு தலைமுறையைக் கூடத் தாண்டியிருக்காது’ என்று எழுதுகிறார்.

ஜியாவுத்தீன் பர்னி என்ற வரலாற்று ஆசிரியர் தமது, ‘ஃபதாவா ஃபண்டாரி’யில் ‘முஸ்லிம் அரசர்கள் இஸ்லாமிய ஷரீயத் முறைப்படி ஆட்சி செய்யவில்லை. ஈரானிய மன்னர்களின் குறிப்பாக நவ்ஷேர்வானே ஆதில் என்று அழைக்கப்பட்ட குஸ்ரோ பர்வேஸின் ஆட்சிமுறைகளைப் பின்பற்றியே ஆண்டார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

இந்த ஆட்சிமுறை இஸ்லாமிய ஷரீயத் ஆட்சி முறைக்கு முரணானது.

மிகவும் அநியாயமாகத் திரித்துக் கூறப்பட்ட வரலாற்றிற்குத் திப்பு சுல்தானை உதாரணமாகக் காட்டலாம்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் திப்பு சுல்தானுக்கு மிக முக்கிய இடம் உண்டு. தங்களை எதிர்த்துப் போராடியவர்களில் திப்பு சுல்தானுக்குத்தான் ஆங்கிலேயர்கள் அதிகமாக அஞ்சினர்.

வில், அம்பு, வாள் இவைதாம் இந்திய மன்னர்களின் பெரிய ஆயுதங்கள் என்று எண்ணியிருந்த ஆங்கிலேயர்களை ராக்கெட் குண்டுகளால் தாக்கி அதிர்ச்சி ஏற்படுத்தியவர் திப்பு சுல்தான்.

‘‘ஆட்டைப் போல் 100 ஆண்டுகள் வாழ்வதை விடப் புலியைப் போல் சில நாட்கள் வாழ்வதே பெருமை’’ என்று முழங்கியவர்.

அக்காலத்தில் பெண்கள் மேலாடை அணியாதிருந்தனர். திப்புதான் அதைத் தடுத்து பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்று சட்டம் இயற்றினார். மதுவிலக்கை செயல்படுத்தினார். அனைத்துச் சமயத்தினரும் தங்கள் வழிபாடு மற்றும் வாழ்வுரிமைகளைப் பெறச் சட்டம் இயற்றினார்.

செங்கோலாட்சி செய்த இந்த மாவீரரைத்தான் வரலாற்றுப் புரட்டர்கள் மதத் தீவிரவாதியாகச் சித்திரித்து வைத்துள்ளனர்.

திப்பு சுல்தான் இஸ்லாத்தைத் தழுவும்படி 3 ஆயிரம் பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார்; அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தற்கொலை செய்துகொண்டனர் என்று வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைத்தனர்.

இந்த நூல் வங்காளம், அசாம், பிஹார், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரலாற்றுப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாகப் பிஞ்சு நெஞ்சுகளிலேயே நஞ்சு ஊட்டப்பட்டது.

கவிக்கோ அப்துல் ரகுமான்

நன்றி யார்ல் .



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக