ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்?

2 posters

Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்? Empty ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்?

Post by கோவைசிவா Wed Nov 18, 2009 7:00 pm

வளமான நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் இரண்டரை லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இந்திய சமூகத்தினர் அங்கு நல்ல பணிகளில் இருந்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், படித்து முடித்த பிறகு, அங்கேயே நல்ல வேலைகளைப் பெற்று நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அண்மையில் இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவங்களை வைத்து, அந்த நாட்டை மதிப்பிட்டு விடக்கூடாது.


இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வருகிறார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்கும் மாணவர்களை, உயர்கல்விக்காகப் படிக்க வருபவர்கள், தொழிற் கல்விக்காக படிக்க வருபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். உயர்கல்விக்காகப் படிக்க வரும் மாணவர்கள் தாக்கப்படுவது என்பது மிகவும் குறைவு. தொழிற் கல்விக்காக படிக்க வரும் மாணவர்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.


இந்திய மாணவர்களில் ஒருபிரிவினர், இளநிலைப் பட்டங்களைப் படித்து விட்டு, உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா வருகிறார்கள். மற்றொரு பிரிவினர் பிளஸ் 2 படிப்பை முடித்து விட்டு, கேட்டரிங் டெக்னாலஜி, ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட், ஹேர் டிரஸ்ஸிங் போன்ற தொழிற் கல்வி படிக்க வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். பிளஸ் 2 முடித்து விட்டு, ஆங்கிலம் நன்கு பேச முடியாத மாணவர்களுக்கு தகுந்த பகுதி நேர வேலை கிடைப்பது மிக அரிதாக உள்ளது. வட மாநிலங்களில் இருக்கும் சில ஏஜண்டுகளும் அந்த மாணவர்களுக்கு சரியான தகவல்களைக் கூறுவதில்லை.


நீங்கள் ஆஸ்திரேலியா போய்விட்டால், படித்துக் கொண்டே அங்கு வேலை செய்து கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு அவர்கள் நம்பிக்கையூட்டி விடுகிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வந்துவிட்டு அந்த மாணவர்கள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். கட்டாயமாக வேலைக்குச் சென்றால்தான் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு உரிய பகுதி நேர வேலை கிடைப்பதில்லை. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே, பகல் நேரங்களில் வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும்.


ஆங்கில அறிவு போதுமான அளவுக்கு இல்லாத நிலையில், மணிக்கு 2 டாலர்கள், 3 டாலர்கள் என்ற சம்பளத்தில், தங்கியிருக்கும் இடத்திற்கு வெகுதொலைவில் இரவு நேரத்தில் பணி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் தனியாகச் செல்வது உகந்தது அல்ல என்ற பகுதிகளின் வழியாக, இந்த மாணவர்கள் பணி முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் போதைப் பொருட்களை உட்கொள்பவர்கள், அதிகமாக மது அருந்தியவர்களினால் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளின் வழியாக நடந்து செல்லும்போது, போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் இவர்களை மிரட்டி பணம் கேட்கிறார்கள்.


பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்கிறார்கள். போதையில் இருக்கிற அவர்கள், எதிரே வருபவர்கள் யார், எந்த நாட்டினர் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருப்பதில்லை. அடித்து அவர்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் நடப்பதில்லை.இரவு நேரங்களில் மட்டுமே நடக்கின்றன. எனவே, தொழிற் கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கச் செல்லும் மாணவர்கள், முன்னதாகவே முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேருவது நல்லது.


ஆஸ்திரேலிய கல்வித்துறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அண்மையில், நான்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், 300 இந்திய மாணவர்கள் உட்பட, இரண்டு ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. விளம்பரங்களைப் பார்த்தும் ஏஜண்டுகள் மூலமும், அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சில நேரங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகிறார்கள். அதுபோன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டு விடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டு, அந்த மாணவர்களை வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்றுகிறார்கள்.


இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இயங்கும் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து தணிக்கை செய்யும் பணியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வருகிறது.


இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கான விதிமுறைகளை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது .


hcindia-au.org/students_guidelines.html


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்? Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்?

Post by prashanth Wed Nov 18, 2009 7:27 pm

not only Australia England லும் இதுதான் கதி ஆனால் இப்படியான தகவல்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை.....
avatar
prashanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 26/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum