Latest topics
» கருத்துப்படம் 16/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
5 posters
Page 1 of 1
விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
தேமுதிக தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்ததும், தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார், மாற்று அரசியலை நோக்கி எப்போதும் சிந்தித்துக்கொண்டு இருக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன்.
அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...
" 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாக நிற்கும் என்று விஜயகாந்த் அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய குழப்பம் மறைந்திருப்பதை நாம் உணராமல் இருக்க முடியாது. 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று சொன்ன விஜயகாந்த், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையும்; அந்தக் கூட்டணியை நாடி வரக்கூடியவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறார். அவருடைய மனைவியும் இதே கருத்தை, அவரைவிட இன்னும் அழுத்தமாக வலிறுத்தியிருக்கிறார். இதன் மூலம், நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுகிற கட்சிகள், தேமுதிக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஒரு வாய்ப்பை விஜயகாந்த் உருவாக்கியிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனித்துவிடப்பட்ட நிலையில், அவமானகரமான தோல்வியை எல்லாத் தொகுதிகளிலும் சந்திக்கக்கூடிய நிலையைத் தவிர்ப்பதற்காக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, விஜயகாந்தோடு கூட்டணி அமைப்பதற்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அதேபோன்று விஜயகாந்த் தலைமை தாங்க வருவதாக இருந்தாலும், வரவேற்பதற்கு மக்கள் நலக் கூட்டணி தயாராகிவிட்ட மனோநிலையைத்தான் , கடந்த சில நாட்களாக வைகோவும், திருமாவளவனும் தந்திருக்கின்ற வாக்குமூலங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. எனவே, வைகோவும், திருமாவளவனும், இடதுசாரிகளும் எப்படியாவது விஜயகாந்தை, தாங்கள் இழுக்கலாம் என்ற முயற்சியில் தோல்வியுற்றிருந்தாலும், விஜயகாந்தினுடைய தலைமையை ஏற்று, விஜயகாந்த்துக்கு கீழே.. அவர்கள் அந்த அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் நாம் மறுக்க முடியாது. எனவே, இதில் மிகத் தெளிவாக தெரியக்கூடிய உண்மை ஒன்றுதான். 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாகப் போட்டியிடப்போவதில்லை.
தேமுதிக ஒரு கூட்டணியை உருவாக்கும். அந்தக் கூட்டணிக்கு தேமுதிக தலைமை வகிக்கும். தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்த்தை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள். அந்த முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்று ஒப்புக்கொள்ளக்கூடிய கட்சிகளை வரவேற்பார்கள். எனவே, இப்பொழுது தேமுதிக தனியாக நிற்கிறது என்று அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் யாரும் வரவேண்டியதில்லை. தேமுதிக தலைமையில் ஒரு கூட்டணி அமைய இருக்கிறது. அந்தக் கூட்டணியில் பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் இடம் பெறலாம். எனவே, இந்த இரண்டுக்குமே வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் நம்புகிறேன்.
'கிங்காக இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்கமாட்டேன்' என்று தேமுதிக சார்பில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில், விஜயகாந்த் தெளிவுபட எடுத்துச்சொல்லிவிட்டார். அதன் பிறகும், விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார்.. வருவார்.. என்ற நம்பிக்கையை வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்த நிலையில், அவர்களுக்கு முன்னால் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. "கிங்காக இருப்பதுதான் எனக்கு பொருத்தமே தவிர, கிங் மேக்கராக என்னால் இருக்க இயலாது. என்னுடைய கட்சி தொண்டர்களது விருப்பமும், நான் கிங்காக இருப்பதுதான்" என்று அவர் அறிவித்தவிட்ட பிறகும், மீண்டும்.. மீண்டும்.. விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என்று வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்துகிற பொழுதே, அவரை கிங்காக இருப்பதற்கு, இவர்கள் இசைவு தெரிவிக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள். எனவே கிங்காக இருப்பார், அப்படி கிங்காக இருப்பதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் நிற்கக்கூடிய வைகோவும், திருமாவளவனும் தங்களது மக்கள் நலக்கூட்டணியுடன் விஜயகாந்த்தை நோக்கி போகலாம்.
படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வது என்பது ஒன்று. போர்வை போர்த்திக்கொண்ட பிறகு, படுக்கையில் படுப்பது என்பது ஒன்று. ஆக, இரண்டிலும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. எனவே, போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுப்பதா அல்லது படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வதா என்று நேற்று வரை யோசித்துக்கொண்டு இருந்த மக்கள் நலக் கூட்டணி, இப்பொழுது போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, அந்தப் படுக்கையில் படுப்பதற்கும் தயாராக இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது."
எதுவும் நடக்கலாம்... பொறுத்திருந்து பார்க்கலாம்.
தேமுதிக தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்ததும், தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார், மாற்று அரசியலை நோக்கி எப்போதும் சிந்தித்துக்கொண்டு இருக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன்.
அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...
" 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாக நிற்கும் என்று விஜயகாந்த் அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய குழப்பம் மறைந்திருப்பதை நாம் உணராமல் இருக்க முடியாது. 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று சொன்ன விஜயகாந்த், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையும்; அந்தக் கூட்டணியை நாடி வரக்கூடியவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறார். அவருடைய மனைவியும் இதே கருத்தை, அவரைவிட இன்னும் அழுத்தமாக வலிறுத்தியிருக்கிறார். இதன் மூலம், நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுகிற கட்சிகள், தேமுதிக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஒரு வாய்ப்பை விஜயகாந்த் உருவாக்கியிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனித்துவிடப்பட்ட நிலையில், அவமானகரமான தோல்வியை எல்லாத் தொகுதிகளிலும் சந்திக்கக்கூடிய நிலையைத் தவிர்ப்பதற்காக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, விஜயகாந்தோடு கூட்டணி அமைப்பதற்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அதேபோன்று விஜயகாந்த் தலைமை தாங்க வருவதாக இருந்தாலும், வரவேற்பதற்கு மக்கள் நலக் கூட்டணி தயாராகிவிட்ட மனோநிலையைத்தான் , கடந்த சில நாட்களாக வைகோவும், திருமாவளவனும் தந்திருக்கின்ற வாக்குமூலங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. எனவே, வைகோவும், திருமாவளவனும், இடதுசாரிகளும் எப்படியாவது விஜயகாந்தை, தாங்கள் இழுக்கலாம் என்ற முயற்சியில் தோல்வியுற்றிருந்தாலும், விஜயகாந்தினுடைய தலைமையை ஏற்று, விஜயகாந்த்துக்கு கீழே.. அவர்கள் அந்த அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் நாம் மறுக்க முடியாது. எனவே, இதில் மிகத் தெளிவாக தெரியக்கூடிய உண்மை ஒன்றுதான். 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாகப் போட்டியிடப்போவதில்லை.
தேமுதிக ஒரு கூட்டணியை உருவாக்கும். அந்தக் கூட்டணிக்கு தேமுதிக தலைமை வகிக்கும். தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்த்தை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள். அந்த முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்று ஒப்புக்கொள்ளக்கூடிய கட்சிகளை வரவேற்பார்கள். எனவே, இப்பொழுது தேமுதிக தனியாக நிற்கிறது என்று அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் யாரும் வரவேண்டியதில்லை. தேமுதிக தலைமையில் ஒரு கூட்டணி அமைய இருக்கிறது. அந்தக் கூட்டணியில் பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் இடம் பெறலாம். எனவே, இந்த இரண்டுக்குமே வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் நம்புகிறேன்.
'கிங்காக இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்கமாட்டேன்' என்று தேமுதிக சார்பில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில், விஜயகாந்த் தெளிவுபட எடுத்துச்சொல்லிவிட்டார். அதன் பிறகும், விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார்.. வருவார்.. என்ற நம்பிக்கையை வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்த நிலையில், அவர்களுக்கு முன்னால் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. "கிங்காக இருப்பதுதான் எனக்கு பொருத்தமே தவிர, கிங் மேக்கராக என்னால் இருக்க இயலாது. என்னுடைய கட்சி தொண்டர்களது விருப்பமும், நான் கிங்காக இருப்பதுதான்" என்று அவர் அறிவித்தவிட்ட பிறகும், மீண்டும்.. மீண்டும்.. விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என்று வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்துகிற பொழுதே, அவரை கிங்காக இருப்பதற்கு, இவர்கள் இசைவு தெரிவிக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள். எனவே கிங்காக இருப்பார், அப்படி கிங்காக இருப்பதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் நிற்கக்கூடிய வைகோவும், திருமாவளவனும் தங்களது மக்கள் நலக்கூட்டணியுடன் விஜயகாந்த்தை நோக்கி போகலாம்.
படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வது என்பது ஒன்று. போர்வை போர்த்திக்கொண்ட பிறகு, படுக்கையில் படுப்பது என்பது ஒன்று. ஆக, இரண்டிலும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. எனவே, போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுப்பதா அல்லது படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வதா என்று நேற்று வரை யோசித்துக்கொண்டு இருந்த மக்கள் நலக் கூட்டணி, இப்பொழுது போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, அந்தப் படுக்கையில் படுப்பதற்கும் தயாராக இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது."
எதுவும் நடக்கலாம்... பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
விஜயகாந்தை நம்பி தமிழர்களின் தலைஎழுத்து இருக்கிறது போல மாயையை உருவாக்க நினைக்கும் வைக்கோ , திருமா , பாஜக , திமுக போன்ற ஓட்டுபொறுக்கிகளோடு சேர்த்து விஜயகாந்தும் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும்.
பதவி வெறியில் என்னன்ன நாடகம் ஆடுகிறார்கள் , இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்று தான் ஆட்சிக்கு வந்து தமிழகத்தை சுரண்டி முடிந்த வரையில் வாய்ப்பு கிடைக்கும் போதே கோடி கோடியாக சேர்த்துவிடவேண்டும்.
எல்லாம் நம் விதி
பதவி வெறியில் என்னன்ன நாடகம் ஆடுகிறார்கள் , இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்று தான் ஆட்சிக்கு வந்து தமிழகத்தை சுரண்டி முடிந்த வரையில் வாய்ப்பு கிடைக்கும் போதே கோடி கோடியாக சேர்த்துவிடவேண்டும்.
எல்லாம் நம் விதி
Re: விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
விஜயகாந்த் தனியாளாக சினிமாவில் நின்று எதிரிகளை ஜெயிக்கமுடியும் .
தேர்தலில் முடியாது .
அவர் நிற்கும் தொகுதியில் வேண்டுமானால் அவர் மட்டுமே ஜெயிக்கமுடியும் .
அவர் கட்சி காரர்கள் நின்று , ஜெயிக்கக் கூடிய DMK /ADMK வோட்டை பிரிக்க வேண்டுமானால்
முடியும் .
காத்து இருந்து பார்க்கலாம் , வருங்காலம் எப்பிடி என்று
ரமணியன்
தேர்தலில் முடியாது .
அவர் நிற்கும் தொகுதியில் வேண்டுமானால் அவர் மட்டுமே ஜெயிக்கமுடியும் .
அவர் கட்சி காரர்கள் நின்று , ஜெயிக்கக் கூடிய DMK /ADMK வோட்டை பிரிக்க வேண்டுமானால்
முடியும் .
காத்து இருந்து பார்க்கலாம் , வருங்காலம் எப்பிடி என்று
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
எதுவும் நடக்கலாம்... பொறுத்திருந்து பார்க்கலாம்.
Re: விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
தற்போது சுயநல அரசியல் நடத்த துடியாய் துடிக்கிறார்கள். அவர்கள் ஊதியமின்றி சேவை மனதுடன் செயல்பட வருவார்களா? அப்படி வந்தால் பாராட்டலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக
» நாம் அமைதியாக இருப்பது ஏன்? (இவ்வாண்டிற்கான செய்தி)
» திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
» விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக
» நாம் அமைதியாக இருப்பது ஏன்? (இவ்வாண்டிற்கான செய்தி)
» திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|