ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு தட்சணை!

2 posters

Go down

குரு தட்சணை! Empty குரு தட்சணை!

Post by கார்த்திக் செயராம் Wed Mar 09, 2016 3:36 pm

முகலாயப் பேரரசர் அக்பரும் அவருடைய அரசவைக் கவிஞர் ஷைகு பைஸியும் (Faizi) அரண்மனைப் பூவனத்தில் உலவிக் கொண்டிருந்தனர்.

அக்பர்: பைஸி! இதோ, இந்தப் பூக்களைப் பாருங்கள். வடிவம், வண்ணம், வாசம் வேறுபட்டா லும் இவை சுரக்கும் தேன் ஒன்றுதான். இதைப் போலவே பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றின் சாரம் ஒன்றுதான்.

பைஸி: நன்றாகச் சொன்னீர்கள்!

அக்பர்: ஆனால், இந்த மதவாதிகள் தங்கள் பூவில்தான் தேன் இருக்கிறது. மற்றப் பூக்களில் தேன் இல்லை என்கிறார்கள்.

பைஸி: எல்லாப் பூக்களிலும் தேன் இருக்கிறது என்பது தேனீக்களுக்குத்தான் தெரியும். அதைப் போல் எல்லா மதங்களின் சாரமும் ஒன்றுதான் என்பது ஞானிக்குத்தான் தெரியும்.

அக்பர்: அருமையாகச் சொன்னீர்கள். ‘மாலிக்குஷ் ஷூரா’ (கவிக்கோ) ஆயிற்றே.

பைஸி: மாமன்னரே! அந்தப் பட்டத்தை எனக்கு வழங்கி என்னைக் கவுரவித்ததே தாங்கள்தானே!

அக்பர்: நான் வெளியிட்ட தங்க நாணயத்துக்கு, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தீர்கள்.

பைஸி: ஆமாம், அதில் ‘குகைகளில் தங்கம் விளைவது சூரிய நோக்கால். அந்தத் தங்கம் கண்ணியம் பெறுவது அக்பரின் முத்திரையால்’ என்று எழுதியிருந்தேன்.

அக்பர்: உண்மையில் என் முத்திரையால் அல்ல; உங்கள் கவிதையால்தான் அந்த நாணயம் மதிப்பைப் பெற்றது.

பைஸி: மாமன்னரே! நானோர் இந்தியத் தந்தை, பாரஸீகப் புல்புலோடு சேர்ந்து பாடுகிறேன். என்னை உங்கள் தோளில் ஏற்றி, அளவுக்கு அதிகமாகப் புகழ்கிறீர்கள்.

அக்பர்: உங்களுடைய இந்தப் பணிவுதான் உங்களை உயர்த்தியிருக்கிறது. ‘வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டுமென்றால் பணிவுடையவனாக இரு. கரும்பில் மண்ணை ஒட்டிய பாகமே, அதிக மதுரமானது’ என்று எழுதிய கவிஞரல்லவா நீங்கள்.

பைஸி: நன்றி, மாமன்னரே!

அக்பர்: பைஸி! எல்லாப் பூக்களிலும் திரட்டிய தேனை, தேனீ ஒரே கூட்டில் நிரப்புவது போல, எல்லா மதங்களின் சாரத்தையும் திரட்டி ஒரு புதிய சமயத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன். அதற்கு ‘தீனே இலாஹி’ (இறைவனுடைய மார்க்கம்) என்று பெயர் சூட்ட விரும்புகிறேன்.

பைஸி: அற்புதமான யோசனை. தேன் பல நோய்களை நீக்கும் மருந்து. உங்கள் மார்க்கம் மதவாதிகளின் சர்ச்சைகள், சண்டைகளை நீக்கிவிடும். தேனை எல்லோரும் விரும்புவர். அதைப் போலவே உங்கள் மார்க்கத்தையும் எல்லோரும் விரும்புவர்.

அக்பர்: ஆனால், அதில் ஒரு சிக்கல்.

பைஸி: என்ன மன்னரே?

அக்பர்: எல்லா மதங்களின் கொள்கைகளையும் திரட்டிவிட்டேன். இந்து மத வேத ரகசியங்களை மட்டும் அறியமுடியவில்லை.

பைஸி: ஏன் மன்னரே?

அக்பர்: மறை மறையென்று மறைக்கிறார்கள். அதுவும் எனக்குச் சொல்லக்கூடாதாம்.

பைஸி: வேதம் இறைவனுடைய வார்த்தை என்றால் அது மனிதகுலம் முழுமைக் கும் சொந்தமல்லவா? சூரிய ஒளியையும், காற்றையும் யாராவது தனியாக அடைத்து வைப்பார்களா?

அக்பர்: எல்லாத் தோட்டத்துப் பூக்களில் இருந்தும் தேன் திரட்டிவிட்டேன். ஒரு தோட்டம் மட்டும் முள் வேலியால் என்னைத் தடுக்கிறது. அந்த முள் வேலியைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்து தேன் எடுக்கத் தேனீயால்தான் முடியும். அந்தத் தேனீ நீங்கள்தான்.

பைஸி: நானா?

அக்பர்: ஆமாம். நீங்கள்தான்! உங்களுக்கு ஏற்கெனவே சமஸ்கிருதம் தெரியும். சமஸ்கிருதத் தில் புகழ்பெற்ற கணித நூலான ‘லீலாவதி’யைப் பாரஸீகத்தில் மொழிபெயர்த்தவர் நீங்கள். மாபெரும் இதிகாசமாகிய மகாபாரதத்தையும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.

பைஸி: அது வேறு விஷயம். வேத ரகசியங் களை உங்களாலேயே அறிய முடியாதபோது நான் மட்டும் எப்படி அறிய முடியும்?

அக்பர்: நீங்கள் பிராமணராகிறீர்கள்!

பைஸி: என்ன சொல்கிறீர்கள் மாமன்னரே? அது எப்படி சாத்தியம்?

அக்பர்: நீங்கள் பிராமணக் கோலம் தரிக்கிறீர் கள். உங்களை அறியாத சற்றுத் தொலைவான ஊருக்குச் செல்கிறீர்கள். அங்கே இருக்கும் வேத விற்பன்னரிடம் சீடராகச் சேர்கிறீர்கள். வேத ரகசியங்களைக் கற்று வருகிறீர்கள்.

பைஸி: இது திருட்டில்லையா?

அக்பர்: நீங்கள் மருத்துவம் கற்றவர். ஏழை களுக்கு இலவசமாக மருத்துவம் செய்பவர். இதுவும் மருத்துவம்தான். அறிவில் ஏழையாக இருப்பவர்களுக்கு, மருந்துக்காகச் செடியில் இருந்து இலை பறிப்பது திருட்டா? பைஸி… எனக்கு உதவுங்கள்!

பைஸி: நீங்கள் ஆணையிட வேண்டிய மாமன்னர். வேண்டுகோள் விடுக்கின்றீர்களே… இலை பறிக்கச் செல்கிறேன் மன்னரே!

பைஸி குடுமி வைத்தார். பூணூல் தரித்தார். வேத விற்பன்னரைத் தேடிப் புறப்பட்டார்.

தில்லியில்

இருந்து நெடுந்தொலைவில் ஓர் அழகான சிற்றூர். அங்கே அவர் தேடிய குரு கிடைத்தார். அவரிடம் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டினார்.

பைஸியின் தோற்றப் பொலிவையும், கண் களில் பிரகாசித்த தீட்சண்யத்தையும், பணிவையும் பார்த்து, ‘இவருக்கு வேதப் பொக்கிஷத்தைக் கற்றுக் கொடுப்பது தகும்’ என்று எண்ணி அவரைச் சீடராக ஏற்றுக்கொண்டார் பண்டிதர்.

கடுந்தாகம் கொண்டவன் நீர் பருகுவதுபோல் பைஸி கல்வி கற்றார்.

அங்கே ஒரு பிரச்சினை உண்டாயிற்று. குருவுக்கு ஓர் அழகான புதல்வி.

அவள் பைஸியின் அழகையும் அறிவையும் பார்த்து அவரைக் காதலிக்கத் தொடங்கினாள்.

பக்கத்தில் நல்ல கொழுகொம்பு கிடைத்தால் பருவக் கொடி படராமல் இருக்குமா?

பைஸியும் அவளைக் காதலித்தார்.

காந்தம் ஈர்த்தால் இரும்பு ஈர்க்கப்படாமல் இருக்குமா?

குருவுக்கும் இந்தக் காதல் தெரியாமல் இல்லை.

என்னதான் புதர்களுக்குள் ரகசியமாக மலர்ந்தாலும் பூவின் வாசம் வெளியில் வராமல் இருக்குமா?

‘என்னைப் போல் மகா பண்டிதனாகி வரு கிறான். அகமும் புறமும் அழகாக இருக்கிறான். என் மகளுக்கு இவனை விடச் சிறந்த கணவன் கிடைக்கப் போவதில்லை’ என்று நினைத்த குரு, பைஸியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

பைஸிக்கோ மகிழ்ச்சியும் துயரமும் சேர்ந்து உண்டாயிற்று. அவர் இந்த விஷயத்தில் குருவை ஏமாற்ற விரும்பவில்லை.

அவர் தம்மைப் பற்றிய ரகசியத்தைக் குருவிடம் வெளிப்படுத்தினார்.

பண்டிதர் பரம வைதீகர்; சிற்றூரில் வசிப்பவர். அவரால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

ஒரு கத்தியை எடுத்துத் தம்மைக் குத்திக்கொள்ள முயன்றார்.

பைஸி அவரைத் தடுத்தார். தம்மை மன்னிக்கும்படி மன்றாடினார். தம் குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

அழுது புலம்பி அடங்கிய பண்டிதர், “வேதங் களை நீ எந்த மொழியிலும் பெயர்க்கக்கூடாது. இந்து தர்மத்தின் ரகசியங்களை உன் வாயாலும் வெளியிடக் கூடாது. இதுதான் நீ எனக்குத் தர வேண்டிய குருதட்சணை’’ என்றார்.

பைஸி கட்டை விரலைக் காணிக்கையாக்கிய ஏகலைவன் போலானார். குருவின் ஆணைப்படி நடப்பதாக வாக்குறுதியளித்தார்.

பண்டிதரின் மகள் அவரைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள். அந்தக் கண்ணீர் அவளுடைய துயரத்தைச் சொல்லும் வார்த்தைகளாக இருந்தன.

இரண்டு பெரும் இழப்புகள். பைஸியின் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது.

பைஸி தில்லி திரும்பினார். அக்பரிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்.

அவர் குருவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இறுதிவரை மீறவே இல்லை.

நன்றி தமிழ் ஹிந்து.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

குரு தட்சணை! Empty Re: குரு தட்சணை!

Post by krishnaamma Wed Mar 16, 2016 12:09 am

நல்ல பகிர்வு கார்த்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum