ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீமையும் நன்மைக்கே!

3 posters

Go down

தீமையும் நன்மைக்கே! Empty தீமையும் நன்மைக்கே!

Post by கார்த்திக் செயராம் Wed Mar 09, 2016 2:56 pm

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் நல்லதை மட்டும் படைத்திருக்கலாமே, தீயதை ஏன் படைக்க வேண்டும்?

நல்ல மனிதர்களை மட்டும் படைத்திருக் கலாமே, தீய மனிதர்களை ஏன் படைக்க வேண்டும்?

இன்பத்தை மட்டுமே படைத்திருக்கலாமே, துன்பத்தை ஏன் படைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகள் நம் இதயங்களில் எழாமல் இருப்பதில்லை.

நல்லதற்காகத்தான் தீயது படைக்கப் பட்டிருக்கிறது.

நல்ல மனிதர்களின் நன்மைக்காகவே தீய மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்பத்துக்காகவே துன்பம் படைக்கப்பட்டிருக்கிறது.

இப்படிச் சொன்னால் ஏற்பீர்களா?

ஆனால், இதுதான் உண்மை!

இதுதான் படைப்பின் மர்மம். இதுதான் வாழ்க்கையின் ரகசியம்.

இதற்கு இயற்கை விதி (Law of Nature) என்று பெயர்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் அது சிறப்பாக இயங்குவதற்காக விதி ஒன்றை உண்டாக்கினான். அந்த விதிப்படியே அண்ட சராசரமும் இயங்குகின்றன.

இந்த விதிதான் ‘இயற்கை விதி’ எனப்படுகிறது. வேதங்களும் வேத சம்ஹிதைகளும் இதை ‘ரித’ என்கின்றன.

இமானுவேல் கான்ட் (Immanuel Kant) தம் அரசுக் கொள்கையை விளக்கும்போது, இயற்கை விதியில் அடங்கியுள்ள நுட்பமானதொரு செயற்பாட்டை உணர்த்துகிறார்.

மனிதன் இயல்பாகவே சமூகத்தோடு இசைந்து வாழும் பண்பும், சமூக எதிர்ப்புப் பண்பும் ஒருங்கே கொண்டவன் என்பது அவர் கண்டறிந்த உண்மை.

சமூக எதிர்ப்புப் பண்பும் ஒரு வகையில் நன்மைக்கே பயன்படுகிறது. இப்பண்பு இல்லை யென்றால் மனிதனுடைய ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இத்தகைய இரு வகையான முரண்பட்ட பண்புகளினால் விளையும் போராட்டமே மனித வாழ்வின் எல்லா வகையான முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது என்று அவர் கூறுகிறார்.

பொறாமை, வீண் பெருமை, அதிகார வேட்கை, உடைமைப் பற்று போன்ற சமூக எதிர்ப்புப் பண்புகளை நன்மையைக் கருதியே இறைவன் அமைத்திருக்கிறான். இதனால் நிகழும் போராட்டத்தின் விளைவாக மனிதனின் உள்ளே அடங்கிக் கிடக்கும் ஆற்றல்கள் வெளிப்பட்டு அவனுடைய இயற்கைத் திறன்கள் மேலும் வளர்ச்சி அடைகின்றன என்பது அவர் கருத்து.

‘ஒவ்வோர் ஊரிலும் தீயவர் சிலரை நானே உண்டாக்கி வைத்திருக்கிறேன்’ என்று இறைவன் கூறியதை குர் ஆன் எடுத்துரைக்கிறது.

தத்துவஞானி கான்ட் கண்டறிந்த ‘இயற்கை விதி’ தொடர்பான இந்த நுட்பமான செயற் பாட்டைக் கம்பர் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே (ஒன்பதாம் நூற்றாண்டு) அறிந்திருந்தார் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

‘சமூக எதிர்ப்பான தீய சக்திகளும் நன்மைக் காகவே தோன்றுகின்றன’ என்ற கருத்தைக் கம்பர் தம் காப்பியத்தில் பல இடங்களில் உணர்த்துகிறார்.

அமைதியான அயோத்தியில் தங்கள் அன்பிற்குரிய இராமன் முடிசூடப் போகிறான் என்ற மிகழ்ச்சியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது கூனி தோன்றுகிறாள். அக்கொடியவளை அறிமுகப்படுத்தும்போதே,

‘இன்னல் செய் இராவணன்

இழைத்த தீமைபோல்

துன்னருங் கொடுமனக்

கூனி தோன்றினாள்’ (1445)

என்றே கம்பர் அவளை வருணிக்கிறார். இதன் வாயிலாக அக்கொடியவளும் ‘இராவண வதம்’ என்ற ஒரு நன்மைக்காகவே தோன்றினாள் என்று கம்பர் உணர்த்துகிறார்.

கூனியின் தீய சொற்களைக் கேட்டு தூயவளாகிய கைகேயியின் மனமும் மாறுகிறது. அவள் இவ்வாறு சிந்தை திரிந்ததும் ஒரு நன்மைக்கே என்று கம்பர் கூறுகிறார்.

‘தீய மந்தரை

இவ்வுரை செப்பலும், தேவி

தூய சிந்தையும்

திரிந்தது, சூழ்ச்சியின் இமையோர்

மாயையும், அவர் பெற்ற

நல்வரம் உண்மையாலும்

ஆய அந்தணர்

இயற்றிய அருந்தவத்தாலும்’ (1483)

இராவணன் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறத் தேவர்கள் பெற்ற வரமும் அந்தணர் இயற்றிய அருந்தவமும்தாம் கைகேயியின் தூய சிந்தை திரியக் காரணமாயின என்று இங்கே கம்பர் உணர்த்துவதைக் காணலாம். ‘இமையோர் மாயை’ என்பதன் மூலம் இயற்கை விதியே இவ்வாறு அவளைத் தூண்டியது என்றும் தெரிவிக்கிறார். மேலும்

‘அரக்கர் பாவமும்

அல்லவர் இயற்றிய அறமும்

துரக்க நல்லருள்

துறந்தனள் தூமொழி மடமான்’ (1484)

என்று இதை விளக்கமாகவே அவர் உணர்த்துகிறார்.

அதே பாடலில்,

‘இரக்கம் இன்மையன்றோ இன்று

இவ்வுலகங்கள் இராமன்

பரக்கும் தொல்புகழ்

அமுதினைப் பருகுகின்றதுவே’

என்று கூறுகிறார். இதன்மூலம் கைகேயியின் இரக்கமின்மை என்ற தீய பண்பினாலேயே இராமன் அளப்பரிய வீரமும் உன்னதமான பண்புகளும் வெளிப்பட்டுப் பெரும்புகழ் பெற்றான். மக்களும் அவனைப் பாராட்டி மகிழ்ந்தனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.

கொடுமனக் கூனி சூழ்ச்சி செய்யாதிருந்தால், தூய கைகேயியின் மனம் திரிந்திருக்காது. அவள் மனம் திரிந்திராவிட்டால் இராமன் காடு சென்றிருக்க மாட்டான். வனவாசம் காரணமாக வெளிப்பட்ட அவனுடைய அளப்பரிய ஆற்றலும் உன்னதமான பண்புகளும் உள்ளேயே அடங்கிக் கிடந்திருக்கும். இராவண வதமும் நிகழ்ந்திராது.

தீயையே எரித்த சீதையின் கற்பின் ஆற்றலும் வெளியுலகுக்குப் புலப்பட்டிராது. பரதனின் மகோன்னதமான பண்பு தெரியாமலே போயிருக்கும். கிட்கிந்தையிலும் இலங்கையிலும் நல்லரசுகள் ஏற்பட வழியில்லாமல் போயிருக்கும். இலக்குவன், அனுமன் ஆகியோருடைய ஒப்பற்ற ஆற்றல்கள் வெளிப்படாது வீணாகியிருக்கும். இராமன் கிட்கிந்தை, இலங்கை அடங்கிய ஒரு பேர ரசுக்குத் தலைவனாக ஆகியிருக்க மாட்டான். இவ்வளவு நன்மைகளும் கூனி, கைகேயி ஆகிய இரு தீய சக்திகளின் தோற்றத்தின் காரணமாகவே ஏற்பட்டன என்பதையே கம்பர் இங்கே காட்ட விரும்புகிறார்.

நல்லவளாயிருந்த கைகேயியே தீயவளாக மாறினாள் என்று காட்டியதன் வாயிலாக ஒரே இடத்திலேயே இவ்விரு வகை முரண்பட்ட பண்புகளும் அமைந்திருந்து, ஒரு பெரிய நண்மைக்காகத் தக்க நேரத்தில் தீய பண்பு செயற்படத் தொடங்கும் என்ற நுட்பத்தையும் கம்பர் உணர்த்துகிறார்.

நன்றி தமிழ் ஹிந்து.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

தீமையும் நன்மைக்கே! Empty Re: தீமையும் நன்மைக்கே!

Post by சசி Wed Mar 09, 2016 3:48 pm

நல்ல பகிர்வு தோழரே


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தீமையும் நன்மைக்கே! Empty Re: தீமையும் நன்மைக்கே!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Mar 09, 2016 9:06 pm

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் வாழ்த்துகிறேன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

தீமையும் நன்மைக்கே! Empty Re: தீமையும் நன்மைக்கே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum