புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3700 ஆண்டுகளுக்கு முன்… தமிழர் நாகரீகம்.
Page 1 of 1 •
3700 ஆண்டுகளுக்கு முன்… தமிழர் நாகரீகம்.
தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு.
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது ஆதிச்ச நல்லூர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்திய தொல்லியலாளர் அலெக்சாண்டர்ரீ ஆதிச்சநல்லூர் மனித நாகரீகத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்விடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழவாய்வுகள் அறிவியல் ரீதியில் விளக்கத்தக்க உண்மைகளை உலகுக்குக் காட்டியிருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் பல முதுமக்கள் தாழிகளும், பானை ஓடுகளும் மண்பானை வகைகளும் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளை, காலத்தைக் கணிக்கும் நவீன அறிவியல் முறையான தெர்மோ லூமினெசன்ஸ் என்ற முறையில் ஆய்வுக்குட்படுத்தினர். இதன் முடிவு பானைகளின் காலம் கி.மு.1700 ஆண்டுகள் என்று கூறுகிறது.
அதாவது 3700 ஆண்டுகளுக்கு முந்தைய ஓடுகள் அவை என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்தக் காலத்தைக் கணித்த அறிவியலார், இதுவரை கிடைத்த பானை ஓடுகளில் இதுவே மிகப்பழைமையானது என்பதால் மண் பாண்டங்கள் செய்யும் தொழில் முறை தமிழகத்தில் இருந்துதான் உலகுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். கி.மு.1700 என்பது கடைசிகட்ட காலமே! அதற்கு பல நூற்றாண்டுகள், முன்பே இந்தத் தொழில்முறை உருவாகியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
மேலும், இங்குக் கிடைத்திருக்கும் வெண்கல பாண்டங்களை ஆய்வு செய்யும் போது, உலோகங்களை உருவாக்க அடிப்படையான ஆர்சனிக்கைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. இந்த முறையை மொகஞ்சதாரோ ஹரப்பா மக்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே, கால அளவில் ஆதிச்சநல்லூரும், ஹரப்பாவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிறார் ராஜன். சிந்து சமவெளி நாகரீகம் என்பது திராவிடர் நாகரீகமே என்ற கருத்தை மறுக்க, மாற்றியெழுதத் துடிக்கும் பார்ப்பன ஆய்வாளர்களுக்கு சரியான பதிலடியாக இது அமைந்திருக்கிறது. சிந்து நாகரிகத்தில் கிடைத்த ஓவியங்களில் காளையைக் குதிரையாக்கி அதை ஆரிய நாகரிகமென்று நிறுவத்துடிப்போருக்கும் இத்தகைய ஆதாரங்கள் பதில் தருகின்றன.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பானை ஓடுகளின் மீதான ஓவியம் தான் இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள ஓவியங்களில் மிகப் புராதனமானது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆதிச்ச நல்லூர் ஒரு பெரிய வியாபார ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதேபோல இந்த ஓவியங்களில் இருக்கும் பொருள் சங்க இலக்கியமான பரிபாடலின் கருத்தை ஒட்டிவருகிறது. எனவே, 3700 ஆண்டுகளுக்கு முந்தையதாக சங்க இலக்கியத்தின் காலமும் இருந்திருக்க வேண்டும். எனவே, கடைச்சங்கம் என்பதை கி.மு.3ஆம் நூற்றாண்டு என்பதாக நாம் இப்போது தவறாகக் கணித்து வருகிறோம் என்று பொருள். எனவே, அதற்கு முந்தைய முதற்சங்கம், இடைச்சங்கம் என்பதன் காலமெல்லாம் திருத்தி யெழுதப்பட வேண்டியவையே. அவை இன்னும் பழங்காலத்தவையே என்ற வரலாற்றுண்மையை அறிவியல் முடிவுகளோடு நாம் உலகுக்கு சொல்ல வேண்டிய காலகட்டம் இது என்று மீண்டும் எடுத்துரைக்கிறார் அவர்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பாண்ட, வெண்கலப் பானைகளைக் கொண்டு 100 ஆண்டுகளுக்கு முன் தன் ஆய்வின் நிறைவில் அய்ரோப்பாவில் கண்காட்சியாக வைத்தாராம் அலெக்சாண்டர்ரீ. அப்போது, கருப்பர் நாட்டில் இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு வளர்ச்சியா என்று வெள்ளையர்கள் வியந்தனராம்.
மேலும், அங்குக் கிடைத்த எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகள் இவற்றைக் கொண்டு பார்க்கும் போது ஆதிச்ச நல்லூரில் வாழ்ந்த ஆண்கள் சுமார் 6 அடி உயரத்துடனும், பெண்கள் 5 அடி 4 அங்குலம் வரையிலும் இருந்திருக்கிறார்கள். நல்ல உறுதியான உடல் வளத்துடன் தான் தமிழனும், தமிழச்சியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இவற்றைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.
அங்குக் கிடைத்த மண்டை ஓட்டில் துளை ஒன்று இருக்கிறது என்று அதைச் சுட்டிக்காட்டிய திரு.ராஜன் அது நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அந்த எலும்புக் கூட்டின் வயது 65 ஆண்டுகள். நோயிருந்தால் அவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம். அதனால் அது மூன்றாவது கண்ணாக இருக்குமோ என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். உடனே நீங்கள் திருவிளையாடல் சிவனுக்குப் போய் விடாதீர்கள். இது அறிவியலால் நிரூபிக்கவிடவில்லை. அதுவரை இது ஒரு சுகமான கற்பனையே! ஆனால் அவர்களால் காதுகளை தன்னிச்சையாக ஆட்ட முடியுமாம். அதற்கான உடற்கூறு இருப்பதை அறிவியல் உறுதி செய்கிறது. ஆதிச்சநல்லூரின் அழிவு எதனால் நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்களுடைய எலும்புகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. கடும் போர் கூட அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட திரு.ராஜன் ஆதிச்சநல்லூரின் மக்களின் உடற்கூறுகளையும், லெமூரியாக் கண்டத்தின் மக்கள் இப்படி இருக்கக்கூடும் என்று நம்பிய உடற்கூறுகளும் ஒத்துப் போகிறது என்ற கூடுதல் தகவல்களையும் சொன்னார்.
லெமூரியா என்பது லெமூர் என்ற விலங்கின் பெயரைக் கொண்டு உருவானது. லெமூர் என்பது நம்மூரில் இப்போது மிகவும் குறைந்துவிட்ட தேவாங்கு எனப்படும் விலங்கைப் போன்றது. இந்தத் தேவாங்கு விலங்கினம், தமிழகத்தில் இருக்கிறது. அதே போல மடகாஸ்கரில் இருக்கிறது. இடையில் எங்கும் இல்லை. இவ்வளவு கடற்பரப்பை நீந்தியா கடந்திருக்க முடியும்? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் லெமூரியா என்ற சிந்தனை பிறந்தது. ஆனால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் அழிந்துவிட்ட கபாட புரமும், தென்மதுரையும், பஃருளியாலும் பரவிக்கிடக்கின்றன.
லெமூரியா என்பது கற்பனை என்று வாதிடுவோரும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கன்னியாகுமரிக்கும், மடகாஸ்கருக்கும் நடுவே பயணம் செய்த கப்பல் ஒன்று. கடலுக்கடியில் நிறைய புவியியல் இடையூறுகள் (னுளைவரசயெஉநள) இருப்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறது. முறையான கடலாய்வு மேற்கொண்டால் அது பற்றிய தகவல்கள் நிறையக் கிடைக்கக்கூடும். இன்றும் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆய்வை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சியில் லெமூரியா எனப்படும் குமரிக்கண்ட ஆய்வு சாத்தியப்படக் கூடிய ஒன்று தான்.
அண்மைக் காலத்தில் சங்க காலத்து அரசர்களின் இலச்சினை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. சேரன், செங்குட்டுவனின் அரிய காசு ஒன்றை நாணயவியல் ஆய்வாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் ரோமானியர் வருகைக்குப்பின் தான் நாணயப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு பண்டமாற்று முறைதான் இருந்தது என்று நாம் நினைத்திருந்த வரலாறு மாறுகிறது. அதைத் திருத்தி எழுத வேண்டியதன் அவசியமும் வலுப்படுகிறது என்கிறார் உறுதியாக! வடநாட்டு ஆய்வாளர்களும், இந்தியத் தொல்லியல் துறையும் தென்னாட்டின் அகழாய்வில் விருப்பம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. சமஸ்கிருதத்தையும், வேத நாகரிகத்தையும் முன்னிறுத்தக்கூடிய வடநாட்டு முயற்சிகளுக்கு சரியான பதிலடியும், உண்மையான வரலாற்றை எடுத்துரைப்பதும் விரிவான அகழாய்வுகளை தமிழ்நாட்டில் நடத்துவதன் மூலமே சாத்தியப்படும்.
உலகின் முன் தோன்றிய மூத்த குடி என்று வெறும் சங்க இலக்கியங்களில் பெருமை கொள்வதல்லாமல், அறிவியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அதை நிறுவுவதே அறிவார்ந்த செயலாகும்.
நன்றி - உண்மை இதழ்.
படித்துவிட்டு கருத்தை பதியவும்
தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு.
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது ஆதிச்ச நல்லூர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்திய தொல்லியலாளர் அலெக்சாண்டர்ரீ ஆதிச்சநல்லூர் மனித நாகரீகத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்விடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழவாய்வுகள் அறிவியல் ரீதியில் விளக்கத்தக்க உண்மைகளை உலகுக்குக் காட்டியிருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் பல முதுமக்கள் தாழிகளும், பானை ஓடுகளும் மண்பானை வகைகளும் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளை, காலத்தைக் கணிக்கும் நவீன அறிவியல் முறையான தெர்மோ லூமினெசன்ஸ் என்ற முறையில் ஆய்வுக்குட்படுத்தினர். இதன் முடிவு பானைகளின் காலம் கி.மு.1700 ஆண்டுகள் என்று கூறுகிறது.
அதாவது 3700 ஆண்டுகளுக்கு முந்தைய ஓடுகள் அவை என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்தக் காலத்தைக் கணித்த அறிவியலார், இதுவரை கிடைத்த பானை ஓடுகளில் இதுவே மிகப்பழைமையானது என்பதால் மண் பாண்டங்கள் செய்யும் தொழில் முறை தமிழகத்தில் இருந்துதான் உலகுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். கி.மு.1700 என்பது கடைசிகட்ட காலமே! அதற்கு பல நூற்றாண்டுகள், முன்பே இந்தத் தொழில்முறை உருவாகியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
மேலும், இங்குக் கிடைத்திருக்கும் வெண்கல பாண்டங்களை ஆய்வு செய்யும் போது, உலோகங்களை உருவாக்க அடிப்படையான ஆர்சனிக்கைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. இந்த முறையை மொகஞ்சதாரோ ஹரப்பா மக்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே, கால அளவில் ஆதிச்சநல்லூரும், ஹரப்பாவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிறார் ராஜன். சிந்து சமவெளி நாகரீகம் என்பது திராவிடர் நாகரீகமே என்ற கருத்தை மறுக்க, மாற்றியெழுதத் துடிக்கும் பார்ப்பன ஆய்வாளர்களுக்கு சரியான பதிலடியாக இது அமைந்திருக்கிறது. சிந்து நாகரிகத்தில் கிடைத்த ஓவியங்களில் காளையைக் குதிரையாக்கி அதை ஆரிய நாகரிகமென்று நிறுவத்துடிப்போருக்கும் இத்தகைய ஆதாரங்கள் பதில் தருகின்றன.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பானை ஓடுகளின் மீதான ஓவியம் தான் இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள ஓவியங்களில் மிகப் புராதனமானது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆதிச்ச நல்லூர் ஒரு பெரிய வியாபார ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதேபோல இந்த ஓவியங்களில் இருக்கும் பொருள் சங்க இலக்கியமான பரிபாடலின் கருத்தை ஒட்டிவருகிறது. எனவே, 3700 ஆண்டுகளுக்கு முந்தையதாக சங்க இலக்கியத்தின் காலமும் இருந்திருக்க வேண்டும். எனவே, கடைச்சங்கம் என்பதை கி.மு.3ஆம் நூற்றாண்டு என்பதாக நாம் இப்போது தவறாகக் கணித்து வருகிறோம் என்று பொருள். எனவே, அதற்கு முந்தைய முதற்சங்கம், இடைச்சங்கம் என்பதன் காலமெல்லாம் திருத்தி யெழுதப்பட வேண்டியவையே. அவை இன்னும் பழங்காலத்தவையே என்ற வரலாற்றுண்மையை அறிவியல் முடிவுகளோடு நாம் உலகுக்கு சொல்ல வேண்டிய காலகட்டம் இது என்று மீண்டும் எடுத்துரைக்கிறார் அவர்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பாண்ட, வெண்கலப் பானைகளைக் கொண்டு 100 ஆண்டுகளுக்கு முன் தன் ஆய்வின் நிறைவில் அய்ரோப்பாவில் கண்காட்சியாக வைத்தாராம் அலெக்சாண்டர்ரீ. அப்போது, கருப்பர் நாட்டில் இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு வளர்ச்சியா என்று வெள்ளையர்கள் வியந்தனராம்.
மேலும், அங்குக் கிடைத்த எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகள் இவற்றைக் கொண்டு பார்க்கும் போது ஆதிச்ச நல்லூரில் வாழ்ந்த ஆண்கள் சுமார் 6 அடி உயரத்துடனும், பெண்கள் 5 அடி 4 அங்குலம் வரையிலும் இருந்திருக்கிறார்கள். நல்ல உறுதியான உடல் வளத்துடன் தான் தமிழனும், தமிழச்சியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இவற்றைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.
அங்குக் கிடைத்த மண்டை ஓட்டில் துளை ஒன்று இருக்கிறது என்று அதைச் சுட்டிக்காட்டிய திரு.ராஜன் அது நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அந்த எலும்புக் கூட்டின் வயது 65 ஆண்டுகள். நோயிருந்தால் அவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம். அதனால் அது மூன்றாவது கண்ணாக இருக்குமோ என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். உடனே நீங்கள் திருவிளையாடல் சிவனுக்குப் போய் விடாதீர்கள். இது அறிவியலால் நிரூபிக்கவிடவில்லை. அதுவரை இது ஒரு சுகமான கற்பனையே! ஆனால் அவர்களால் காதுகளை தன்னிச்சையாக ஆட்ட முடியுமாம். அதற்கான உடற்கூறு இருப்பதை அறிவியல் உறுதி செய்கிறது. ஆதிச்சநல்லூரின் அழிவு எதனால் நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்களுடைய எலும்புகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. கடும் போர் கூட அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட திரு.ராஜன் ஆதிச்சநல்லூரின் மக்களின் உடற்கூறுகளையும், லெமூரியாக் கண்டத்தின் மக்கள் இப்படி இருக்கக்கூடும் என்று நம்பிய உடற்கூறுகளும் ஒத்துப் போகிறது என்ற கூடுதல் தகவல்களையும் சொன்னார்.
லெமூரியா என்பது லெமூர் என்ற விலங்கின் பெயரைக் கொண்டு உருவானது. லெமூர் என்பது நம்மூரில் இப்போது மிகவும் குறைந்துவிட்ட தேவாங்கு எனப்படும் விலங்கைப் போன்றது. இந்தத் தேவாங்கு விலங்கினம், தமிழகத்தில் இருக்கிறது. அதே போல மடகாஸ்கரில் இருக்கிறது. இடையில் எங்கும் இல்லை. இவ்வளவு கடற்பரப்பை நீந்தியா கடந்திருக்க முடியும்? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் லெமூரியா என்ற சிந்தனை பிறந்தது. ஆனால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் அழிந்துவிட்ட கபாட புரமும், தென்மதுரையும், பஃருளியாலும் பரவிக்கிடக்கின்றன.
லெமூரியா என்பது கற்பனை என்று வாதிடுவோரும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கன்னியாகுமரிக்கும், மடகாஸ்கருக்கும் நடுவே பயணம் செய்த கப்பல் ஒன்று. கடலுக்கடியில் நிறைய புவியியல் இடையூறுகள் (னுளைவரசயெஉநள) இருப்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறது. முறையான கடலாய்வு மேற்கொண்டால் அது பற்றிய தகவல்கள் நிறையக் கிடைக்கக்கூடும். இன்றும் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆய்வை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சியில் லெமூரியா எனப்படும் குமரிக்கண்ட ஆய்வு சாத்தியப்படக் கூடிய ஒன்று தான்.
அண்மைக் காலத்தில் சங்க காலத்து அரசர்களின் இலச்சினை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. சேரன், செங்குட்டுவனின் அரிய காசு ஒன்றை நாணயவியல் ஆய்வாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் ரோமானியர் வருகைக்குப்பின் தான் நாணயப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு பண்டமாற்று முறைதான் இருந்தது என்று நாம் நினைத்திருந்த வரலாறு மாறுகிறது. அதைத் திருத்தி எழுத வேண்டியதன் அவசியமும் வலுப்படுகிறது என்கிறார் உறுதியாக! வடநாட்டு ஆய்வாளர்களும், இந்தியத் தொல்லியல் துறையும் தென்னாட்டின் அகழாய்வில் விருப்பம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. சமஸ்கிருதத்தையும், வேத நாகரிகத்தையும் முன்னிறுத்தக்கூடிய வடநாட்டு முயற்சிகளுக்கு சரியான பதிலடியும், உண்மையான வரலாற்றை எடுத்துரைப்பதும் விரிவான அகழாய்வுகளை தமிழ்நாட்டில் நடத்துவதன் மூலமே சாத்தியப்படும்.
உலகின் முன் தோன்றிய மூத்த குடி என்று வெறும் சங்க இலக்கியங்களில் பெருமை கொள்வதல்லாமல், அறிவியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அதை நிறுவுவதே அறிவார்ந்த செயலாகும்.
நன்றி - உண்மை இதழ்.
படித்துவிட்டு கருத்தை பதியவும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
கடலில் மறைந்திருந்த அமுதம் கரையில் ஒதுங்கியதென்ன இன்பம் பயக்கும் ஓர் கட்டுரை வழங்கிய திரு கோவை சிவா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
பாரத யுத்தம் கி மு 3010 என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் நிர்ணயித்திருக்கின்றனர், கண்ணன் பல தேவன் வணக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது, இடைச் சங்கத்தில் ஒரு புலவரின் பெயர் துவரைக் கோமாலன், இதனை துவரைக் கோ மாலன் என்று பிரித்துப் பார்த்தால் அது கண்ணனாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. மதுரையை அடுத்த ஊர்களுக்கெல்லாம் கிருஷ்ணனுடன் தொடர்புள்ள ஊர்களாக இருக்கின்றன, மதுரையிலிருந்து ராஜ பாளையம் போகும் வழியில் கோபால சாமி மலை, கிருஷ்ண் கோயில் என்றெல்லாம் ஊர்களின் பெயர்கள் இருக்கின்றன, இன்று வத்திரா இருப்பு என்ற ஊரின் பெயர் கூட சுபத்ரா இருப்பு என்றிருக்கலாம் என்பது என் எண்ணம் காரணம் அங்குள்ள ஒரு ஏரியின் பெயர் அர்ஜுனா நதி, அர்ஜுனனின் மனைவிகளில் ஒருத்தியின் பெயர் சுபத்ரா, இவள் அபிமன்யுவின் தாய், அர்ஜுனன் மதுரையை அடுத்த ம்ணலூருக்கு வந்து சென்ற கதையும் உள்ளது. நள வெண்பாவில் கண்ணனும் தமயந்தி சுயம் வரத்தில் கலந்து கொண்டமை குறிக்கப் படுகிறது.
http://tamilkirukkan.wordpress.com/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/suyamvarakandamthodarchi/
யதுகுல மன்னர்.
——————————–
‘ஆழிவடி யம்பலப நின்றானும் அன்றொருகால்
ஏழிசைநூற் சங்கத் திருந்தானும் – நீள்விசும்பில்
நற்றேவர் தூது நடந்தானும் பாரதப்போர்
செற்றானும் கண்டாயிச் சேய்.
(//ஆழிவடி யம்பலப//) குறிப்பிட்ட தளத்தில் பாடல் இவ்வாறே இருக்கிறது. ஆனால் ஆழி வடியம்பலம்ப என்று இருக்க வேண்டும்
ஆழி = கடல்.
வடியம்பலம்ப = வடி + அம்பு + அலம்ப = வடிக்கப்பட்ட அம்பினை கழுவ.
நீள் விசும்பு = பெரிய வானம்.
கடலில் வடிக்கப்பட்ட அம்புகளைக் கழுவும்படி நின்றவரும் , முன்னொருகாலத்திலே ஏழு வகை இசைகளையுடைய பேரவையில் தலைவராய் வீற்றிருந்தவரும், நீண்ட வானவர் அவதாரமாகிப் பாண்டவர்கட்குத் தூதுவராய் நடந்து சென்ற வரும், பாரதப் போரினை நடத்தி முடிக்கக் காரணமாய் இருந்தவரும் இந்த அரசிளங்குமரரேயாவர்.’
நளனி சரிதம் இராமாயணத்துக்கு முந்தையது, அந்தக் காவியத்தில் துவாபர யுகத்துக் கண்ணனை புகழேந்தியார் கூறுதல் ஆய்வுக்குரியது. கண்ணன் காலத்துக்குப் பிறகு நளவெண்பா எழுதப் பட்டமையின் கண்னன் பால் இவருக்கு ஏற்பட்ட பக்தியின் பெருக்கினால் போலும்.
கம்பனுக்கு நரசிம்ம அவதாரத்தில் ஈடுபாடு உண்டாய காரணம் பற்றி இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தைச் சேர்த்திருப்பதை நோக்குங்கால் இது புலவர்களுக்கான இயற்கை என்றே கூற வேண்டும்
எனவே
சங்க காலத்தை இன்று குறிப்பிட்டுள்ள காலத்துக்குச் சுமார் 2000 வருடங்களாவது முன்னுக்குக் கொண்டு செல்ல வேண்டியதாகிறது. முதற் சங்க கால்த்தில் எஞ்சிய நூல்களுள் நமக்குக் கிடைத்தது தொல்காப்பியம் மட்டும் தான், ஆகவே தொல்காப்பிய காலத்தை இன்னும் முன்னர் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் ஒரு முரண் இந்தக் கட்டுரையில் காணப் படுகிறது, அது காளையைக் குதிரையாக்கி என்பது. அந்தக் காளை ப்ராமணிகள் காளை என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். அது ஆராயப் பட வேண்டிய விடயம். எனினும் காலத்துக்குத் தேவையான ஒரு கட்டுரை கோவை சிவாவால் கொடுக்கப் பட்டுள்ளமை பாராட்டுக்குரியது, இது ஈகரையின் செல்வமாகக் கருதப் பட வேண்டிய கட்டுரை
அன்புடன் கோவை சிவா அவர்களைப் பாராட்டும்
நந்திதா
கடலில் மறைந்திருந்த அமுதம் கரையில் ஒதுங்கியதென்ன இன்பம் பயக்கும் ஓர் கட்டுரை வழங்கிய திரு கோவை சிவா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
பாரத யுத்தம் கி மு 3010 என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் நிர்ணயித்திருக்கின்றனர், கண்ணன் பல தேவன் வணக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது, இடைச் சங்கத்தில் ஒரு புலவரின் பெயர் துவரைக் கோமாலன், இதனை துவரைக் கோ மாலன் என்று பிரித்துப் பார்த்தால் அது கண்ணனாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. மதுரையை அடுத்த ஊர்களுக்கெல்லாம் கிருஷ்ணனுடன் தொடர்புள்ள ஊர்களாக இருக்கின்றன, மதுரையிலிருந்து ராஜ பாளையம் போகும் வழியில் கோபால சாமி மலை, கிருஷ்ண் கோயில் என்றெல்லாம் ஊர்களின் பெயர்கள் இருக்கின்றன, இன்று வத்திரா இருப்பு என்ற ஊரின் பெயர் கூட சுபத்ரா இருப்பு என்றிருக்கலாம் என்பது என் எண்ணம் காரணம் அங்குள்ள ஒரு ஏரியின் பெயர் அர்ஜுனா நதி, அர்ஜுனனின் மனைவிகளில் ஒருத்தியின் பெயர் சுபத்ரா, இவள் அபிமன்யுவின் தாய், அர்ஜுனன் மதுரையை அடுத்த ம்ணலூருக்கு வந்து சென்ற கதையும் உள்ளது. நள வெண்பாவில் கண்ணனும் தமயந்தி சுயம் வரத்தில் கலந்து கொண்டமை குறிக்கப் படுகிறது.
http://tamilkirukkan.wordpress.com/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/suyamvarakandamthodarchi/
யதுகுல மன்னர்.
——————————–
‘ஆழிவடி யம்பலப நின்றானும் அன்றொருகால்
ஏழிசைநூற் சங்கத் திருந்தானும் – நீள்விசும்பில்
நற்றேவர் தூது நடந்தானும் பாரதப்போர்
செற்றானும் கண்டாயிச் சேய்.
(//ஆழிவடி யம்பலப//) குறிப்பிட்ட தளத்தில் பாடல் இவ்வாறே இருக்கிறது. ஆனால் ஆழி வடியம்பலம்ப என்று இருக்க வேண்டும்
ஆழி = கடல்.
வடியம்பலம்ப = வடி + அம்பு + அலம்ப = வடிக்கப்பட்ட அம்பினை கழுவ.
நீள் விசும்பு = பெரிய வானம்.
கடலில் வடிக்கப்பட்ட அம்புகளைக் கழுவும்படி நின்றவரும் , முன்னொருகாலத்திலே ஏழு வகை இசைகளையுடைய பேரவையில் தலைவராய் வீற்றிருந்தவரும், நீண்ட வானவர் அவதாரமாகிப் பாண்டவர்கட்குத் தூதுவராய் நடந்து சென்ற வரும், பாரதப் போரினை நடத்தி முடிக்கக் காரணமாய் இருந்தவரும் இந்த அரசிளங்குமரரேயாவர்.’
நளனி சரிதம் இராமாயணத்துக்கு முந்தையது, அந்தக் காவியத்தில் துவாபர யுகத்துக் கண்ணனை புகழேந்தியார் கூறுதல் ஆய்வுக்குரியது. கண்ணன் காலத்துக்குப் பிறகு நளவெண்பா எழுதப் பட்டமையின் கண்னன் பால் இவருக்கு ஏற்பட்ட பக்தியின் பெருக்கினால் போலும்.
கம்பனுக்கு நரசிம்ம அவதாரத்தில் ஈடுபாடு உண்டாய காரணம் பற்றி இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தைச் சேர்த்திருப்பதை நோக்குங்கால் இது புலவர்களுக்கான இயற்கை என்றே கூற வேண்டும்
எனவே
சங்க காலத்தை இன்று குறிப்பிட்டுள்ள காலத்துக்குச் சுமார் 2000 வருடங்களாவது முன்னுக்குக் கொண்டு செல்ல வேண்டியதாகிறது. முதற் சங்க கால்த்தில் எஞ்சிய நூல்களுள் நமக்குக் கிடைத்தது தொல்காப்பியம் மட்டும் தான், ஆகவே தொல்காப்பிய காலத்தை இன்னும் முன்னர் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் ஒரு முரண் இந்தக் கட்டுரையில் காணப் படுகிறது, அது காளையைக் குதிரையாக்கி என்பது. அந்தக் காளை ப்ராமணிகள் காளை என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். அது ஆராயப் பட வேண்டிய விடயம். எனினும் காலத்துக்குத் தேவையான ஒரு கட்டுரை கோவை சிவாவால் கொடுக்கப் பட்டுள்ளமை பாராட்டுக்குரியது, இது ஈகரையின் செல்வமாகக் கருதப் பட வேண்டிய கட்டுரை
அன்புடன் கோவை சிவா அவர்களைப் பாராட்டும்
நந்திதா
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
பாராட்டுக்கள் கோவைசிவா
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
பாராட்டுக்கள் கோவைசிவா.............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|