Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதக்கப் பெண் லாவண்யா!
4 posters
Page 1 of 1
பதக்கப் பெண் லாவண்யா!
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை அள்ளிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஓர் இளம்பெண். அவர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த லாவண்யா. மேடையில் 32 பதக்கங்களை வழங்க லாவண்யாவை அழைத்தபோது எழுந்த கரவொலியால் அந்தக் குளிரூட்டப்பட்ட அரங்கமே அதிர்ந்தது.
ஐந்து வயதில் தந்தையை இழந்தவர் லாவண்யா. கிராமச் சூழலில் தமிழ்மொழி வழிக் கல்வி பயின்றவர். கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு நிலவிய முற்றிலும் புதுமையான சூழல் லாவண்யாவுக்கு தொடக்கத்தில் பிடிக்கவில்லை.
நகரச் சூழலில் படித்து, நுனி நாக்கில் ஆங்கிலம் உச்சரிக்கும் மாணவ, மாணவிகள் கிராமியச் சூழலில் வளர்ந்த லாவண்யாவை அலட்சியமாகப் பார்த்தனர். அவர்களது அலட்சியப் பார்வையை ஆச்சரியப் பார்வையாக மாற்ற வேண்டும் என வைராக்கியம் வைத்தார். அதன் விளைவு கால்நடை மருத்துவத்தில் சமீப ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனையான 32 பதங்கங்களைக் குவித்துள்ளார்.
பதக்கம் வாங்கி மேடையை விட்டு இறங்கியதுமே தன் அம்மாவை அழைத்து பக்கத்தில் நிறுத்திக்கொண்ட லாவண்யாவில் செயல், தன் அத்தனை சாதனைகளுக்கும் தன் தாய்தான் அச்சாணி என்பதைச் சொல்லாமல் சொன்னது.
“என் அம்மாவோட ஊக்கமும் வழிகாட்டுதலும் இல்லைன்னா இந்த லாவண்யா இல்லை” என்கிற லாவண்யாவின் வார்த்தைகளில் அன்பின் ஈரமும் வெற்றியின் பெருமிதமும்!
32 பதக்கங்களை அள்ளிக் குவித்த லாவண்யாவை தமிழக ஆளுநர் ரோசய்யா, கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கால்நடை பராமரிப்புத் துறை ஆணையர் சுரேஷ்.ஷி.ஹோனப்பகோல் ஆகியோர் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தனர்.
லாவண்யாவின் பதக்கங்களுக்காக ஒரு பிரத்யேக ஆடை தயார் செய்து அதில் அனைத்து பதக்கங்களையும் பொருத்தி அணிவித்தது பல்கலைக்கழக நிர்வாகம். பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை அவரால் சுமக்க முடியவில்லை.
“என் அப்பாவோட இறப்புக்குப் பிறகு, என் அம்மா ராதாதான் எனக்கு எல்லாமே. அவங்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையா இருந்தாங்க. அதனால அவங்களுக்குக் கல்வியோட அருமை தெரியும். படிப்பு விஷயத்துல என்னை எப்பவும் ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பாங்க.
நான் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரை எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தேன். 2009-ல் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வில் விலங்கியல் பாடத்தில் மாநிலத்திலேயே நூற்று நூறு மதிப்பெண் எடுத்த ஒரே மாணவி நான்.
தொடரும்...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பதக்கப் பெண் லாவண்யா!
அம்மாவுடன் லாவண்யா!
என்னோட அம்மாவும் உறவினர்களும் நான் மருத்துவராகப் பணியாற்றணும்னு விரும்பினாங்க. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்குச் சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அதீத பாசம் உண்டு. வீட்டில் நாய், பூனை வளர்த்து வருகிறேன். அதனால் விலங்கின மருத்துவம் அல்லது விவசாயம் படிக்க வேண்டும் என விரும்பினேன்.
எனது முதல் விருப்பமான கால்நடை மருத்துவத்தில் கால்நடை பராமரிப்பு பிரிவைத் தேர்வு செய்தேன். நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.
பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டதாலும், அதற்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்ததாலும் ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது” என்று சொல்லும் லாவண்யா, அதற்குப் பிறகு அதிக ஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்க, ஆங்கில மொழியறிவும் வசப்பட்டது. பிறகென்ன? வெற்றி மேல் வெற்றிதான்!
“நான் எப்பவும் புத்தகமும் கையுமாகத் திரியும் புத்தகப் புழு அல்ல. டி.வி., அரட்டை, விளையாட்டு என எதையும் தியாகம் செய்தது கிடையாது. வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கிக் கொள்வேன். பின்னர் கூடுதல் கவனம் எடுத்து பாடங்களை படிப்பேன் அவ்வளவுதான்.
தேர்வு முடிவில் ஒரு சில பதக்கங்கள் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், இத்தனை பதக்கங்களை குவிப்பேன் என எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லும் லாவண்யா, கால்நடை மருத்துவம் படித்துவிட்டு அரசு வேலை வாய்ப்பை மட்டும் நம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்கிறார்.
“தனியாக கிளினிக் வைத்து விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். தனியார் நிறுவனங்களிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. மனநிறைவு தரும் வகையில் வாழ்க்கையை நடத்த நிச்சயம் இந்தத் துறை உதவும்” என்கிறார் நம்பிக்கையோடு. திருத்தமாகத் தன் மகள் பேசுவதைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் லாவண்யாவின் அம்மா ராதா!
நன்றி தி ஹிந்து
என்னோட அம்மாவும் உறவினர்களும் நான் மருத்துவராகப் பணியாற்றணும்னு விரும்பினாங்க. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்குச் சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அதீத பாசம் உண்டு. வீட்டில் நாய், பூனை வளர்த்து வருகிறேன். அதனால் விலங்கின மருத்துவம் அல்லது விவசாயம் படிக்க வேண்டும் என விரும்பினேன்.
எனது முதல் விருப்பமான கால்நடை மருத்துவத்தில் கால்நடை பராமரிப்பு பிரிவைத் தேர்வு செய்தேன். நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.
பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டதாலும், அதற்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்ததாலும் ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது” என்று சொல்லும் லாவண்யா, அதற்குப் பிறகு அதிக ஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்க, ஆங்கில மொழியறிவும் வசப்பட்டது. பிறகென்ன? வெற்றி மேல் வெற்றிதான்!
“நான் எப்பவும் புத்தகமும் கையுமாகத் திரியும் புத்தகப் புழு அல்ல. டி.வி., அரட்டை, விளையாட்டு என எதையும் தியாகம் செய்தது கிடையாது. வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கிக் கொள்வேன். பின்னர் கூடுதல் கவனம் எடுத்து பாடங்களை படிப்பேன் அவ்வளவுதான்.
தேர்வு முடிவில் ஒரு சில பதக்கங்கள் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், இத்தனை பதக்கங்களை குவிப்பேன் என எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லும் லாவண்யா, கால்நடை மருத்துவம் படித்துவிட்டு அரசு வேலை வாய்ப்பை மட்டும் நம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்கிறார்.
“தனியாக கிளினிக் வைத்து விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். தனியார் நிறுவனங்களிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. மனநிறைவு தரும் வகையில் வாழ்க்கையை நடத்த நிச்சயம் இந்தத் துறை உதவும்” என்கிறார் நம்பிக்கையோடு. திருத்தமாகத் தன் மகள் பேசுவதைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் லாவண்யாவின் அம்மா ராதா!
நன்றி தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பதக்கப் பெண் லாவண்யா!
தமிழ் மீடியம் மாணவர்களும் மிகப்பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு லாவண்யா ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொல்லலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பதக்கப் பெண் லாவண்யா!
-
எட்டிப் பற்றத் தெம்பெனும்
ஏற்றம் தன்னால் வாய்க்குமோ
கட்டி வைத்த தந்திரக்
காட்சி மட்டும் போதுமோ
தட்டிக் காக்க நட்புடன்
தாவி நிற்கும் கைகளின்
கொட்டும் அன்பும் சேர்ந்திடல்
கோடி ஊக்கம் நல்குமே!
- நாகினி.
Re: பதக்கப் பெண் லாவண்யா!
நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பதக்கப் பெண் லாவண்யா!
நல்லத் தகவல் .
இருப்பினும் ஈகரையில் ஏற்கனவே படித்த மாதிரி ஒரு நெருடல்.
ரமணியன்
இருப்பினும் ஈகரையில் ஏற்கனவே படித்த மாதிரி ஒரு நெருடல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» லஞ்சா...லாவண்யா... மாமூலினி...
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» லஞ்சா...லாவண்யா... மாமூலினி...
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|