புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Balaurushya
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
i6appar
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 I_vote_rcap 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 04, 2016 4:41 pm

First topic message reminder :

எண்பத்தொரு வயதான ஒரு டாக்டர்,நோயாளிகளுக்கு தொண்டு செய்வதே என் பாக்கியம் என்று வாரத்தின் ஏழு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை.
அடுத்து ஒரு உண்மை அவர் பார்க்கும் வைத்தியத்திற்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் 'நன்றி' என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா? யார் அவர்?என்ற கேள்விக்கு விடையாக நிற்பவர்தான் டாக்டர் வி.ராமூர்த்தி.

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 Gallerye_173522387_1468229

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு மணிக்கூண்டு அருகில் உள்ள டாக்டர் ராமமூர்த்தி கிளினிக்கில்தான் இந்த அதிசயம் கடந்த ஐம்பத்தெழு ஆண்டுகளமாக நடந்தேறிவருகிறது.

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவரான இவர் இந்த குடும்பங்களின் முதல் படிப்பாளி முதல் பட்டதாரி முதல் டாக்டர் எல்லாம்.
படிப்பு மிகவும் பிடித்து போனதால் பல கிலோ மீட்டர் துாரம் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று படிப்பார்.இவர் 58ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் முடித்த கையோடு மயிலாடுதுறை வந்து கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டியர்தான் இன்று வரை கிழே வைக்கவில்லை.

மிகவும் சிரமமான பின்னனியில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் கஷ்டம் என்ன என்பது இவருக்கு நன்கு தெரியும் ஆகவே மருத்துவத்திற்காக அதிகம் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆரம்பகாலத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தார் அது கூட இவர் கைநீட்டி எப்போதுமே வாங்குவது இல்லை போகும் போது மேஜை மீது வைத்துவிட்டு போய்விடுவர்.அதுதான் இன்று ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.

ஒரு வேளை சாப்பாடு , இரவு இரண்டு இட்லி இதற்கு இந்த ஐந்து ரூபாயே அதிகம் ஆகவே கிராமத்தில் இருந்து வருபவர்கள் பலருக்கு பஸ், சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து அனுப்புவதும் உண்டு.

எளிமையாக இருப்பதும் இனிமையாக பேசவதும்தான் இவரது அடையாளம்,அன்பும் பாசமும்தான் இவரது முதல் மருத்துவும்.மருந்து,மாத்திரைகள் எல்லாம் பிறகுதான்.எப்போதும் நான்கு முழ வேட்டியும் கைவைத்த பனியனும்தான் அணிந்திருப்பார், வெளியில் போனால் மட்டும் சட்டை அணிந்து கொள்வார்.

ஐம்பத்தெழு ஆண்டுகால அனுபவம் காரணமாக ஒரு நோயாளியிடம் ஐந்து நிமிடம் பேசிய உடனேயே நோயாளியின் பிரச்னையை தெரிந்து கொள்வார் இரண்டு நாளைக்கு மட்டுமே மாத்திரைகள் எழுதிக்கொடுப்பார் தொன்னுாறு சதவீதம் ஊசி போடுவது கிடையாது.அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளும் விலை மிகக்குறைவாகும் இரண்டு நாளைக்கு வாங்கினாலும் இருபது ரூபாய்தான் பில்வரும்.மாத்திரை சாம்பிள்கள் இருந்தால் அதையும் இலவசமாக தந்துவிடுவார்.நம்மால் முடியாது, பிரச்னை தீவீரமாக இருக்கிறது என்றால் மட்டும் எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டிவிடுவார்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை இடைவிடாமல் நோயாளிகளை கவனித்துவந்தவர் இப்போது மதியம் இடைவௌிவிட்டு பார்க்கிறார்.தொழில் பொழுது போக்கு எல்லாமே இவருக்கு மருத்துவம்தான்.ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மருத்துவர்கள் விடுமுறையில் இருப்பதால் அன்று அவசியம் இவர் கிளினிக்கில் இருப்பார்.

மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் யாருக்கு என்ன உடல் பிரச்னை என்றாலும் முதலில் செல்வது ராமமூர்த்தியிடம்தான் இதனால் அவரை தெரியாதவர்கள் யாரும் கிடையாது, அவருக்கு தெரியாதவர்களும் யாரும் கிடையாது.

எளிமையின் உறைவிடமான காமராஜரே என் எளிமையைப் பார்த்து பாராட்டிவிட்டு சென்றார் அதைவிட பெரிய பாராட்டு பதக்கம் எதுவும் தேவையில்லை.வைத்தீஸ்வரன் அருளாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத என் மனைவி நீலாவின் அன்பாலும் இன்னும் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் என்னைத்தேடிவரும் ஏழை மக்களுக்காக இரங்குவேன்... இயங்குவேன்.

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... - Page 2 Manidham_1971074h
டாக்டர் ராமமூர்த்தியிடம் பேச விரும்புபவர்களுக்கான எண்:04364-223461.

(இவரைப்பொறுத்தவரை நோயாளிகளின் நலன்தான் முக்கியம் போன் அழைப்பு என்பது அவ்வளவு முக்கியம் இல்லை ஆகவே அவர் உடனே போனை எடுக்காவிட்டால் யாரோ எளிய கிராமத்து நோயாளியை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இடைவெளிவிட்டு திரும்ப முயற்சிக்கவும்.)

-எல்.முருகராஜ்.
தினமலர்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊர் முடிகொண்டான் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 79. மயிலாடுதுறையில் அதே இடத்தில் 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவரும் இவரை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்க முடியாது.

இன்றும் அதே துடிப்புடனும் அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை. அவர் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை. தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜை மீது வைத்துச் செல்லலாம். காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார். இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்து விட்டு, ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் டாக்டர் ராமமூர்த்தி.

எப்படி உங்களால் இது முடிகிறது என அவரிடமே கேட்டதற்கு அவர் “தி இந்து” நிருபரிடம் கூறியது:

சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தேன். அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காக செய்யக் கூடாது என்பதுதான்.

ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு என 45 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகா பெரியவர் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னிடம் வரும் மக்கள் பாசத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். மருத்துவத் தொழில் இன்று அப்படி இல்லை. பணம் கொடுத்துதான் மருத்துவராக வேண்டியிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்க மக்களிடம் பணம் அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோருக்கு லட்சக்கணக்கான கையொப்பங்களை (அட்டெஸ்டெட்) இலவசமாகவே போட்டிருக்கிறேன்.

நான் பெற்ற பெரும் பாக்கியமே எனது மனைவி நீலாதான். எனது மனிதாபிமான சேவைக்கு எனது மனைவியும் முக்கிய காரணம். திருமணமானதிலிருந்து இதுவரையில் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென அவர் கேட்டதில்லை. அதனால்தான் மருத்துவத் தொழிலை சேவையாக செய்ய முடிகிறது. நான் சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை, ஆனால் ஏழை மக்களின் பாசத்தைத்தான் சொத்தாக சேர்த்துள்ளேன்.

எனது மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என யார் சென்றாலும், அவர்கள் மீது தனி அக்கறை எடுத்து மருத்துவம் செய்கிறார். பலரும் இங்கு வந்து அதை என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும். அவன் கார் வாங்கியுள்ளான், பங்களா வாங்கியுள்ளான் என்பதில் எனக்கு திருப்தி இல்லை. அவனும் ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதில்தான் எனக்கு திருப்தி என்றார் மனிதநேய மருத்துவர் ராமமூர்த்தி.

-தி இந்து தமிழ்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 06, 2016 6:38 pm

இவருடைய மனிதநேயத்தைப் பார்க்கும்போது பின்வரும் புறநானூற்றுப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது .

உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியரும் உண்டலுமிலரே முனிவிலர்
துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மையானே

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி -182





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 06, 2016 6:44 pm

M.Jagadeesan wrote:இவருடைய மனிதநேயத்தைப் பார்க்கும்போது பின்வரும் புறநானூற்றுப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது .

உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியரும் உண்டலுமிலரே முனிவிலர்
துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மையானே

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி -182

நன்றி ஐயா , விளக்கம் சொன்னிங்கன்னா என்னை போன்றவர்களுக்கும் முழுவதும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 06, 2016 8:02 pm

ஏமாற்றம்,வஞ்சனை,சூது,பொய்மை,புரட்டு ,ஊழல்,உள்குத்து என்று பல சறுக்கல்கள் நிரம்பிய மானுட வாழ்வின் மீதான நம்பிக்கை நம்முள் இன்னமும் கூடச் சிதைந்து போகாமல் இருக்கிறதென்றால்
இன்னமும் கூடப் பெருமிதத்தோடும் தன்மதிப்போடும் நம்மால் நடை போட முடிகிறதென்றால்

அது...

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்கள் சிலரால்தான் என்கிறது கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்...

இவர்களுக்குத் தன்னலம் இருக்காது ; பொதுநலமே மேலோங்கி இருக்கும் . இந்திரனின் தேவாமிர்தம் போன்ற கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தாலும் கூடத் தனக்கென மட்டுமே பதுக்கி,ஒதுக்கி வைத்துக் கொள்ளாதவர்களாகப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.

யாரையும் அவர்களால் வெறுக்கவோ,பகையாளிகளாக ஆக்கிக் கொள்ளவோ முடியாது.
எவருமே செய்ய அஞ்சக் கூடிய பழிச் செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாமல் இருப்பதோடு,
அவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய செயல்களில் மனச் சோர்வும் சலிப்பும் கொள்ளாமல் தொடர்ந்து இயங்குவர்.

புகழுக்காகத் தங்கள் உயிரையையும் கொடுக்கத் துணியும் அவர்கள் பழி வருமெனின் உலகையே பரிசாகத் தந்தாலும் அப்படி ஒரு செயலைச் செய்யத் துணியாதவர்கள்.

மனதை எந்த வகையான சஞ்சலங்களுக்கும்,உளைச்சல்களுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாதவர்களாக-எடுத்த காரியம் வெற்றியுடன் முடிய வேண்டுமென்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே உறுதியுடன் இயங்குவர்.

தனது முயற்சிகளை,சக்திகளைப் பிறருக்காகவே அர்ப்பணித்து வாழும் அத்தகைய மாண்பிற்குரியாளர்களால்தான் உலகம் சுழல்கிறது என்கிறது பாடல்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 06, 2016 8:56 pm

நல்ல பயனுள்ள தகவல் /விளக்கங்கள் .
நன்றி Jagadeesan

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 07, 2016 11:20 am

மிக்க நன்றி Jegadesan ஐயா ...

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக