Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்குனி மாத ராசி பலன்கள் :)
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பங்குனி மாத ராசி பலன்கள் :)
First topic message reminder :
மேஷம்
14.3.2016 முதல் 13.4.2016 வரை
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வீர்கள். சுக்கிரனும், புதனும் இந்த மாதம் முழுக்க உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம் கூடும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகி வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் 12ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும்.
அவர்கள் தேர்வை நன்றாக எழுத வேண்டுமே என்ற ஒரு பயமும் இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குரு 5ல் நீடிப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் ராகு 5ம் வீட்டிலேயே தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
மனஇறுக்கம், வீண் டென்ஷன் வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் 8ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பேச்சில் கம்பீரம் தெரியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். என்றாலும் 8ல் நிற்கும் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் தோலில் நமைச்சல், முன்கோபம், வீண் அலைச்சல்கள் வந்து செல்லும்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். மாணவ மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்களால் பிரச்னைகள் இருக்கும். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.
உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.
விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். தன் பலம் பலவீனத்தை உணரும் மாதமிது.
ராசியான தேதிகள்: மார்ச் 15,16,17, 23, 24, 25, 26 மற்றும் ஏப்ரல் 2, 3, 4, 5, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 28, 29 மற்றும் 30ந் தேதி காலை 8.30 மணி வரை அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
மேஷம்
14.3.2016 முதல் 13.4.2016 வரை
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வீர்கள். சுக்கிரனும், புதனும் இந்த மாதம் முழுக்க உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம் கூடும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகி வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் 12ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும்.
அவர்கள் தேர்வை நன்றாக எழுத வேண்டுமே என்ற ஒரு பயமும் இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குரு 5ல் நீடிப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் ராகு 5ம் வீட்டிலேயே தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
மனஇறுக்கம், வீண் டென்ஷன் வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் 8ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பேச்சில் கம்பீரம் தெரியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். என்றாலும் 8ல் நிற்கும் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் தோலில் நமைச்சல், முன்கோபம், வீண் அலைச்சல்கள் வந்து செல்லும்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். மாணவ மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்களால் பிரச்னைகள் இருக்கும். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.
உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.
விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். தன் பலம் பலவீனத்தை உணரும் மாதமிது.
ராசியான தேதிகள்: மார்ச் 15,16,17, 23, 24, 25, 26 மற்றும் ஏப்ரல் 2, 3, 4, 5, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 28, 29 மற்றும் 30ந் தேதி காலை 8.30 மணி வரை அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்குனி மாத ராசி பலன்கள் :)
கும்பம்
14.3.2016 முதல் 13.4.2016 வரை
முன்னுக்குப் பின் முரணாக யோசிக்கும் நீங்கள், பலரிடம் ஆலோசனை கேட்டாலும், உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்களோ, அதைத்தான் செய்வீர்கள். குருவும், செவ்வாயும் வலுவாக இருப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை எரிச்சலூட்டி, கோபத்தை ஏற்படுத்தி பொறுமையை இழக்க வைத்த சூரியன் இப்போது 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம், கண் எரிச்சல் நீங்கும்.
ஆனால், பல், காது, கண் வலி வரக்கூடும். செலவினங்கள் கூடும். மனதில் பட்டதை பளிச்சென்று சிலரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு கணிசமாக உயரும். பிரச்னைகளை சந்திக்கக்கூடிய தைரியம் உண்டாகும்.
மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக மனைவி கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளாலும் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு வேலை கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் வருங்காலத்தைப் பற்றிய பயம், கடனை நினைத்த கவலைகள் வந்து செல்லும். பணப்பற்றாகுறையும் ஏற்படும். வாகனத்தில் வேகமாக செல்ல வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. நீங்களே நேரடியாக சென்று முக்கிய காரியங்களை முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள்.
மாணவ-மாணவிகளே! பொது அறிவுத் திறனில் சிறந்து விளங்குவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். நல்லவர்களின் நட்பும் கிடைக்கும்.
வியாபாரத்தில் புது சலுகை திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். பங்குதாரருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சம்பளம் உயர்வு உண்டு.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.
விவசாயிகளே! பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். நிலப் பிரச்னைகளை நேரடியாக பேசி தீர்க்கப்பாருங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் மாதமிது.
ராசியான தேதிகள்: மார்ச் 14, 15, 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் ஏப்ரல் 6, 7, 8, 9, 10, 11.
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 23, 24 மற்றும் 25ந் தேதி காலை 11 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்: வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். கோயில் உழவாரப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
14.3.2016 முதல் 13.4.2016 வரை
முன்னுக்குப் பின் முரணாக யோசிக்கும் நீங்கள், பலரிடம் ஆலோசனை கேட்டாலும், உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்களோ, அதைத்தான் செய்வீர்கள். குருவும், செவ்வாயும் வலுவாக இருப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை எரிச்சலூட்டி, கோபத்தை ஏற்படுத்தி பொறுமையை இழக்க வைத்த சூரியன் இப்போது 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம், கண் எரிச்சல் நீங்கும்.
ஆனால், பல், காது, கண் வலி வரக்கூடும். செலவினங்கள் கூடும். மனதில் பட்டதை பளிச்சென்று சிலரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு கணிசமாக உயரும். பிரச்னைகளை சந்திக்கக்கூடிய தைரியம் உண்டாகும்.
மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக மனைவி கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளாலும் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு வேலை கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் வருங்காலத்தைப் பற்றிய பயம், கடனை நினைத்த கவலைகள் வந்து செல்லும். பணப்பற்றாகுறையும் ஏற்படும். வாகனத்தில் வேகமாக செல்ல வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. நீங்களே நேரடியாக சென்று முக்கிய காரியங்களை முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள்.
மாணவ-மாணவிகளே! பொது அறிவுத் திறனில் சிறந்து விளங்குவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். நல்லவர்களின் நட்பும் கிடைக்கும்.
வியாபாரத்தில் புது சலுகை திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். பங்குதாரருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சம்பளம் உயர்வு உண்டு.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.
விவசாயிகளே! பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். நிலப் பிரச்னைகளை நேரடியாக பேசி தீர்க்கப்பாருங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் மாதமிது.
ராசியான தேதிகள்: மார்ச் 14, 15, 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் ஏப்ரல் 6, 7, 8, 9, 10, 11.
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 23, 24 மற்றும் 25ந் தேதி காலை 11 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்: வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். கோயில் உழவாரப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்குனி மாத ராசி பலன்கள் :)
மீனம்
14.3.2016 முதல் 13.4.2016 வரை
எல்லோரிடமும் யதார்த்தமாக பேசிப் பழகும் நீங்கள், உங்களைப் பற்றிய விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் இந்த மாதம் முழுக்க அமர்வதால் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்து விடாதீர்கள். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பதார்த்தங்களையும் தவிர்த்து விடுங்கள்.
தூக்கம் குறையும். அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். என்றாலும் ராகு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ராஜதந்திரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 2ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். மனைவி உங்களுக்கு சில ஆலோசனைகள் தருவார். யதார்த்தமான நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.
பணப்புழக்கம் அதிகமாகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்களில் ஒருசிலர் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 6ல் தொடர்வதால் சாதாரண விஷயங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
சனியும், செவ்வாயும் 9ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.
மாணவ, மாணவிகளே! நினைவாற்றல், அறிவுத் திறன் கூடும். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். பெற்றோர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். முக்கியஸ்தர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உத்யோகத்தில் அலைச்சலும், இடமாற்றமும், வேலைச்சுமையும் ஒருபக்கம் இருந்தாலும் பழைய அதிகாரி உதவிகரமாக இருப்பார். சகஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும்.
கலைத்துறையினரே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.
விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.
ராசியான தேதிகள்: மார்ச் 15, 17, 21, 22, 23, 24, 30, 31 மற்றும் ஏப்ரல் 1, 2, 8, 9, 11.
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 25ந் தேதி காலை 11 மணி முதல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் செலவினங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை அஷ்டமி அன்று தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்றளவு உதவுங்கள்.
14.3.2016 முதல் 13.4.2016 வரை
எல்லோரிடமும் யதார்த்தமாக பேசிப் பழகும் நீங்கள், உங்களைப் பற்றிய விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் இந்த மாதம் முழுக்க அமர்வதால் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்து விடாதீர்கள். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பதார்த்தங்களையும் தவிர்த்து விடுங்கள்.
தூக்கம் குறையும். அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். என்றாலும் ராகு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ராஜதந்திரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 2ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். மனைவி உங்களுக்கு சில ஆலோசனைகள் தருவார். யதார்த்தமான நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.
பணப்புழக்கம் அதிகமாகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்களில் ஒருசிலர் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 6ல் தொடர்வதால் சாதாரண விஷயங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
சனியும், செவ்வாயும் 9ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.
மாணவ, மாணவிகளே! நினைவாற்றல், அறிவுத் திறன் கூடும். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். பெற்றோர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். முக்கியஸ்தர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உத்யோகத்தில் அலைச்சலும், இடமாற்றமும், வேலைச்சுமையும் ஒருபக்கம் இருந்தாலும் பழைய அதிகாரி உதவிகரமாக இருப்பார். சகஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும்.
கலைத்துறையினரே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.
விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.
ராசியான தேதிகள்: மார்ச் 15, 17, 21, 22, 23, 24, 30, 31 மற்றும் ஏப்ரல் 1, 2, 8, 9, 11.
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 25ந் தேதி காலை 11 மணி முதல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் செலவினங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை அஷ்டமி அன்று தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்றளவு உதவுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்குனி மாத ராசி பலன்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1196241மதுமிதா wrote:அம்மா சந்திராஷ்டம தினம் என்றால்..?
நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் என்றைய தினம் சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாகும். சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்களை கொண்டது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடலாகாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
ஆனால் மது இதற்காக ரொம்ப கவலைப் படவேண்டாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்குனி மாத ராசி பலன்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1196245 கண்டிபாக அம்மாkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1196241மதுமிதா wrote:அம்மா சந்திராஷ்டம தினம் என்றால்..?
நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் என்றைய தினம் சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாகும். சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்களை கொண்டது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடலாகாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
ஆனால் மது இதற்காக ரொம்ப கவலைப் படவேண்டாம்
Re: பங்குனி மாத ராசி பலன்கள் :)
மது, நாங்கள் மொரீஷியஸ் போய்வந்தோம், அந்த கட்டுரை பாருங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்குனி மாத ராசி பலன்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1196256கண்டிபாக அம்மா... கொஞ்சம் லிங்க் போடுங்கள் அம்மா.. மொபைலில் இருந்து இணைந்துள்ளேன்... தேட கஷ்டமா இருக்குkrishnaamma wrote:மது, நாங்கள் மொரீஷியஸ் போய்வந்தோம், அந்த கட்டுரை பாருங்களேன்
Re: பங்குனி மாத ராசி பலன்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1196260மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1196256கண்டிபாக அம்மா... கொஞ்சம் லிங்க் போடுங்கள் அம்மா.. மொபைலில் இருந்து இணைந்துள்ளேன்... தேட கஷ்டமா இருக்குkrishnaamma wrote:மது, நாங்கள் மொரீஷியஸ் போய்வந்தோம், அந்த கட்டுரை பாருங்களேன்
ம்ம்.. இதோ போடறேன் .............மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பங்குனி மாத ராசி பலன்கள்
» ஆடி மாத ராசி பலன்கள் !
» ஆவணி மாத ராசி பலன்கள் !
» ராசி பலன்கள்
» தை மாத ராசி பலன்கள் !
» ஆடி மாத ராசி பலன்கள் !
» ஆவணி மாத ராசி பலன்கள் !
» ராசி பலன்கள்
» தை மாத ராசி பலன்கள் !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|