புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
61 Posts - 48%
heezulia
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
36 Posts - 28%
mohamed nizamudeen
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
3 Posts - 2%
prajai
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
172 Posts - 40%
mohamed nizamudeen
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
9 Posts - 2%
prajai
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அருட்பாடல்கள்.. I_vote_lcapஅருட்பாடல்கள்.. I_voting_barஅருட்பாடல்கள்.. I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பாடல்கள்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2016 4:45 pm

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து
திருச்சிற்றம்பலம்

அனுபவ மாலை
(ஆறாம் திருமுறை)
-
பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.

-
பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2016 4:45 pm


இங்கு, இந்த அருட்பாடல்கள் உண்மை-ஆன்மீக அருள்-உலகின்
முடிவான சித்திவல்லப அனுபவத்தை, நம் எல்லோருக்கும் தெளிவாக
உணர்த்துகின்றன.

ஆனால், இந்த அருட்பாடல்களின் உண்மை புரியாமல் சிலருக்குக்
கீழ்வரும் சில கேள்விகளும் எழக்கூடும்.

1."பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க" - என்று வள்ளலார் யாரைக்
குறிப்பிடுகிறார்?

2.வள்ளலார் பேருபதேசத்தில் கடவுளுக்குக் கைகள், கால்கள், வாகனங்கள்,
ஆயுதங்கள், இடங்கள் போன்றவைகள் இருப்பதாகக் கற்பிப்பது, பொய்
பிடித்தவர்களின் வீணான கற்பனையே என்று சாடுகின்றாறே, ஆனால்
அவரே ஆண்டவரின் காலைப் பிடித்தாக இங்கு சொல்கிறாரே? -
இது பொய்பிடித்தல் அல்லவா அல்லது இல்லையா ?

3. "மைபிடித்த விழிஉலகர்" - என்பது பெண்களை அல்லவா குறிக்கும்.?

இப்படிப் பல ஐயப்பாடுகள் நம்முள்ளே ஏற்படக்கூடும் எனினும்,
இச்சலனங்கள் இயற்கையே! நல்லது.

ஆனால், இந்த அருட்பாடல்களின் உண்மையை உணரும் போது, நம்முள்ளே
நீண்ட ஞானானந்தம் விரவி நிலவும். அதைப் பெறுவோமாக இன்று, இங்கு,
இப்பொழுது!

நாம் அறிவோம், "புறம்' - மாறும் தன்மையுடையது" - என்று.
அதாவது, அநித்தியம்; அதாவது 'பொய்' - என்று. உலகிலுள்ள சமயமத
ஆச்சாரங்களெல்லாம், மனம்-உடல் சார்ந்த அனுபவங்களே அன்றி,
வேறொன்றும் விசேசம் இல்லை அவற்றில். எனவே, இவற்றைச் சார்ந்தவர்கள்
எல்லாரும் அநித்தியமாகிய பொய்பிடித்தவர்களே. மனமும், உடலும் நமக்குப்
புறம் என்பதால், அவர்கள் புறத்தேதான் இருக்க முடியும். இதுதான்
இயற்கையுண்மையின் நியதியும் ஆகும்.

அடுத்து, 'கை' - என்பது தழிழில், 'ஒழுக்கம் ' - என்பதாம். ஆகவே, 'எனது கைபிடித்தார்' -
என்பது, 'என்னுடைய சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை இறைவன் ஏற்றுக்கொண்டார்' -
என்று பொருள் கொள்ளவேண்டும்.

அப்படியானால், 'நான் அவர் கால்பிடித்துக் கொண்டேன்' - என்பது என்னவெனில்?

தமிழில் எண்ணும் எழத்தும் இரு கண்களாம். பலருக்குத் 'தமிழ் எண்கள்' -
என்னும் ஒரு கண் குருடாகவே உள்ளது. வள்ளலார் போன்று எண்ணையும் எழத்தையும்
இணைத்துச் சீரோடு சிறப்புற அற்புதமாய் எழுதியவர்கள் தமிழுலகில் யாரும் இல்லை.
எடுத்துக்காட்டுகள் ஏராளம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2016 4:46 pm


அதில் ஒருசில இதோ;
'எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த
குருவே...'

"எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர்
பித்துல கீரே."

"இருபத்து நான்கு (24 = 2 + 10 = 4)" - என்ற குறிப்பில், "இரண்டை (2 - ஜீவகாருண்யம் மற்றும்
சத்துவிசாரம்), பத்து (பற்றினால்/பிடித்தால்), காயத்திரிக்கும் அதீதமான பிரமானுபவ
சொரூப-ரூப-சுபாவ-வியாபகமாகிய உயர் நான்கைப் (4 - ஜீவகாருண்யம், ஈசுவர பக்தி,
பாச வைராக்கியம், பிரமஞானம்) பெறலாம்" - என்கிறார், நம் பெருமான் அருள்
உரைநடையில் மிக அற்புதமாக.

இதுபோலவே,"கால்" - என்னும் சொல்லுக்கு நாம் சரியாகப் பொருள் காணல் வேண்டும்.
இங்கு, "கால்" - என்னும் சொல் வடிவிற்கு, எண் வடிவம் 1/4 ஆகும். இந்த எண்ணைத்
தமிழில் 'வ' -என்னும் வகரத்தால் குறிக்கின்றோம்.

அதாவது, கால் = 1/4 = வ

இங்கு, 'வ' - என்னும் வகரம், சிவத்தின் இயற்கை விளக்கமாகிய 'அருட்பெருஞ்ஜோதி' -
என்று நாம் அனைவரும் அறியவேண்டும்.

" சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும் அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி " -
என்ற அகவல் அருட்குறிப்பையும் அறிந்திடுவோமாக.

ஆகவே, "நான் அவர் கால்பிடித்துக் கொண்டேன்" - என்பதற்கு நாம் முறையாகப்
பொருள்கண்டால், "ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நாம் நிற்கும்போது,
எல்லாம்வல்ல திருவருட்சக்தியை நாம் இயல்பாகப் பெற்று, அருளறிவு விளக்கம்
பெறுகின்றோம் ." - என்பது, நமக்கு நன்கு புலனாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2016 4:46 pm



அடுத்து, "மைபிடித்த விழிஉலகர்" - என்பது, அகவினத்தாரையே குறிக்கும்.

யார் இவர்கள்? தயவுடைய சுத்தஞானிகளே!

கண்ணுக்கு அழகு கண்-மை. அதபோலவே, ஆன்மாவிற்கு இயற்கை அழகு
எவையெனில்; கருணை, தயவு, அன்பு, உண்மை /சத்தியம் என்பன.

தமிழல் 'மை' - என்றால் 'பொய், மருள்' மற்றும் 'உண்மை, அருள்' - என்ற,
இந்த இரு வேறுபட்ட எதிர்பதங்களையும் அது குறிக்கும்.

ஆனால், மருளுக்கு ஒளி பொருந்திய விழியில்லை ஆகையால், இந்த அருட்பாவில்,
"மைபிடித்த விழிஉலகர் " - என்பது, 'உண்மைத் தயவொளியில் விழித்திருக்கும்
அகவினத்தாரையே குறிக்கும்' - என்று, அறிந்து இன்புறுவோமாக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!

திருச்சிற்றம்பலம்
-
-------------------------

Srini
வாட்ஸப்- பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக