ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

4 posters

Go down

 கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை  Empty கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ayyasamy ram Tue Mar 01, 2016 4:20 pm

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் மாநிலங்களவையை முடக்கினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அண்மையில்  சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதனடிப்படையில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று கூடியதும், மாநிலங்களவையில் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அவர்கள் அவையை நடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் குரியனின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களையும் எழுப்பினர்.

அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வழியில்லை என்று கூறிய குரியன், அவையை 10 நிமிஷங்கள் ஒத்திவைத்தார்
-
தினமணி


Last edited by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:23 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை  Empty Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ayyasamy ram Tue Mar 01, 2016 4:21 pm

[color=#CC0000]கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு சாம்ராஜ்ஜியம்: பல்வேறு நாடுகளில் பல லட்சம் கோடி முதலீடு

லண்டன், துபை, பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்துள்ளது தெரிவந்துள்ளது. இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவும் அண்மையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, கார்த்தி சிதம்பரம் லண்டன், துபை, பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல லட்சும் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆங்கில நாளேடு பயோனியர் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் துணை நிறுவனம் மூலம் 14 நாடுகளில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் பணமோசடி தடுப்பு கூட்டறிக்கையின் கீழ், இந்த 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள முதலீடுகள் குறித்த ஆவணங்களைப் பெறுவதற்கு அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தில்லி நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் சிங்கப்பூரில் நடத்தி வரும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை கேட்டு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய 2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது.

இதேபோல, இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான 'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதேபோல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும் கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

மேலும், கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும், தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும் அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தக ஒப்பந்தத்துக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வழங்கிய ஒப்புதல் முற்றிலும் சட்டவிரோதமானது என அமலாக்கத் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தினமணி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை  Empty Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ayyasamy ram Tue Mar 01, 2016 4:37 pm

பயோனியர் செய்தி: கார்த்தி சிதம்பரம் மறுப்பு
-


வெளிநாடுகளில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டது குறித்து பயோனியர் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிக அளவில் விற்பனையாகாத நாளிதழ் ஒன்று எனக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுதொடர்பாக பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நானும் எனது நிறுவனங்களும் சட்டத்துக்குள்பட்ட செயல்பட்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை  Empty Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by M.Jagadeesan Tue Mar 01, 2016 5:15 pm

இல்லாமல் புகையாது ; அள்ளாமல் குறையாது !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை  Empty Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by ராஜா Wed Mar 02, 2016 4:53 pm

எனக்கு ஒரு சந்தேகம் இந்த அரசியல்வாதிகள் இவ்வளவு பணத்தை கொள்ளையடித்து என்ன பண்ண போகிறார்கள் ?!

நாலு பேருக்கு தெரியுற மாதிரி நல்ல செலவு செய்து கூட வாழமுடியாது , அப்புறம் என்ன மயிருக்குடா ஏழைகள் வயிற்றில் அடித்து இப்படி கொள்ளை அடிக்குறீங்க....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை  Empty Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by T.N.Balasubramanian Wed Mar 02, 2016 5:37 pm

எதற்கு வெறும் மறுப்பு .
அப்பா அம்மா இருவரும் பெரிய லாயர்கள்
பத்திரிகை மேல் மானநஷ்ட வழக்கு பதிவு செய்யவேண்டியதுதானே .

ஒரு வேளை, வழக்குப் பதிவிட , ....................

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை  Empty Re: கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
» திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்
» கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum