Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 10:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்சிக்கு எளியன் ...
3 posters
Page 1 of 1
காட்சிக்கு எளியன் ...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று பஸ்சில் பயணம் செய்ய 5 ரூபாய் இல்லாமல் தவித்துள்ளார். நேற்று பாட்னாவில் நடந்த புதிய பஸ் வழித்தட பாதையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்து அவர் அந்த பஸ்சில் பயணிகளுடன் சேர்ந்து காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை பயணமும் செய்தார். நிதிஷ்குமாரிடம் பெண் நடத்துனர், காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்ல கட்டணமாக 5 ரூபாய் கேட்டார். அப்போது நிதிஷ்குமார் தன் பையில் பணத்தை தேடினார். ஆனால் அவர் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. தான் பணம் கொண்டு வராததை உணர்ந்த நிதிஷ் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளரை பார்த்தார். உடனே முதன்மை செயலாளர் தன்னிடம் இருந்த 5 ரூபாயை நிதிஷ்குமார் சார்பாக பெண் நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கினார். அதன்பின் நிதிஷ்குமார் தனது பயணத்தை தொடந்தார். இச்சம்பவம் அவருடன் சேர்ந்து பயணித்த பயணிகளுக்கு ருசிகரமாக இருந்தது. மேலும் முன்னதாக நடந்த துவக்க விழாவில் நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘நான் அரசியலுக்கு வந்த போது பஸ்சில் மட்டும்தான் பயணம் செய்தேன். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன போது பஸ்சில் தான் சட்டமன்றத்துக்கு சென்று வந்தேன்’’ என்றார்.
இந்த செய்தியைப் படித்தவுடன் ஒரு திருக்குறள்தான் என் நினைவுக்கு வந்தது .
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் . ( இறைமாட்சி- 386 )
என்ற குறள்தான் அது .
பொருள் :
=========
அரசன் என்பவன் , தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி தருபவனாகவும் , அவர்களிடம் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்தால் , மக்கள் எல்லோரும் அவன் புகழ் கூறுவர்.
சிலப்பதிகாரக் கண்ணகி ஒரு சாதாரணக் குடிமகள் . அவள் நினைத்தவுடன் மன்னனைப் பார்க்க முடிந்தது தன் குறையைச் சொல்ல முடிந்தது. நீதியை நிலைநாட்ட முடிந்தது.
மன்னனும் , அவளிடம் மரியாதையாகவே நடந்துகொண்டான் . கடுஞ்சொல் ஒன்றுகூட கூறவில்லை.
" கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
வெள்வேற் கொற்றம் காண் "
என்றே கூறுகிறான் .
" திருடன் கோவலன் மனைவியா நீ ! " என்று கடுஞ்சொல் கூறி அவளை அவமானப் படுத்தவில்லை . இதுதான் அன்றைய நீதி .
உயர்திணையை விட்டுவிடுங்கள் . அஃறிணை உயிரினமாம் ஒரு பசு கூட , ஆராய்ச்சிமணி அடித்து , அரசனின் கவனத்தைக் கவரமுடியும் என்பதைத்தானே மனுநீதிச்சோழன் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது .
இங்கே " காட்சிக்கு எளியன் " என்பதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் .
ஒன்று , ஆடம்பரமில்லாமல் எளிய உடையணிந்து காட்சி தருதல் . நம்முடைய முன்னாள் முதல்வர் காமராஜரைப் போலவும் , இந்நாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் போலவும் எளிய உடையணிந்து இருத்தல் .
மற்றொன்று மன்னன் என்பவன் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும் . மக்களின் குறையைக் கேட்டறிதல் வேண்டும் . முடியாட்சி நடைபெற்ற காலத்திலே , மன்னன் , மாறுவேடமணிந்து , மக்களை சந்திக்கும் முறை இருந்தது . மக்களோடு மக்களாகப் பழகி , மக்களின் குறைகளைக் கேட்டறிந்து , மன்னன் அவற்றை நிவர்த்தி செய்வான் . தற்காலத்தில் இது முடியாது என்றாலும் , மக்களை , முதல்வர் சந்திப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்கள் ,அணைகள் ,பாலங்கள் , மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை முதல்வர் அவ்விடங்களுக்குச் சென்று தொடங்கி வைப்பதுதான் முறை . அப்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்குக் கிடைக்கும்; மக்களும் முதல்வரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தங்கள் குறைகளைச் சொல்லவும் முடியும் .
எல்லாமே " காணொளிக் காட்சி " மூலம்தான் என்றால் , அது முதல்வர் மக்களை விட்டு விலகிச் செல்கிறார் அல்லது விலகி இருக்கவே விருப்பப்படுகிறார் என்பதாகவே பொருள்படும் . மெட்ரோ ரயில் துவக்க விழாவை , சென்னையில் இருந்துகொண்டே ,அவ்விழாவிற்குச் செல்லாமல் முதல்வர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் , மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கின்றார் . ஆனால் பீஹார் முதல்வரோ பேருந்து புதிய தடத் துவக்க விழாவில் , பேருந்தை துவக்கி வைத்தது மட்டுமன்றி , அதில் பயணிக்கவும் செய்கிறார் .
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !
இந்த செய்தியைப் படித்தவுடன் ஒரு திருக்குறள்தான் என் நினைவுக்கு வந்தது .
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் . ( இறைமாட்சி- 386 )
என்ற குறள்தான் அது .
பொருள் :
=========
அரசன் என்பவன் , தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி தருபவனாகவும் , அவர்களிடம் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்தால் , மக்கள் எல்லோரும் அவன் புகழ் கூறுவர்.
சிலப்பதிகாரக் கண்ணகி ஒரு சாதாரணக் குடிமகள் . அவள் நினைத்தவுடன் மன்னனைப் பார்க்க முடிந்தது தன் குறையைச் சொல்ல முடிந்தது. நீதியை நிலைநாட்ட முடிந்தது.
மன்னனும் , அவளிடம் மரியாதையாகவே நடந்துகொண்டான் . கடுஞ்சொல் ஒன்றுகூட கூறவில்லை.
" கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
வெள்வேற் கொற்றம் காண் "
என்றே கூறுகிறான் .
" திருடன் கோவலன் மனைவியா நீ ! " என்று கடுஞ்சொல் கூறி அவளை அவமானப் படுத்தவில்லை . இதுதான் அன்றைய நீதி .
உயர்திணையை விட்டுவிடுங்கள் . அஃறிணை உயிரினமாம் ஒரு பசு கூட , ஆராய்ச்சிமணி அடித்து , அரசனின் கவனத்தைக் கவரமுடியும் என்பதைத்தானே மனுநீதிச்சோழன் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது .
இங்கே " காட்சிக்கு எளியன் " என்பதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் .
ஒன்று , ஆடம்பரமில்லாமல் எளிய உடையணிந்து காட்சி தருதல் . நம்முடைய முன்னாள் முதல்வர் காமராஜரைப் போலவும் , இந்நாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் போலவும் எளிய உடையணிந்து இருத்தல் .
மற்றொன்று மன்னன் என்பவன் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும் . மக்களின் குறையைக் கேட்டறிதல் வேண்டும் . முடியாட்சி நடைபெற்ற காலத்திலே , மன்னன் , மாறுவேடமணிந்து , மக்களை சந்திக்கும் முறை இருந்தது . மக்களோடு மக்களாகப் பழகி , மக்களின் குறைகளைக் கேட்டறிந்து , மன்னன் அவற்றை நிவர்த்தி செய்வான் . தற்காலத்தில் இது முடியாது என்றாலும் , மக்களை , முதல்வர் சந்திப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்கள் ,அணைகள் ,பாலங்கள் , மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை முதல்வர் அவ்விடங்களுக்குச் சென்று தொடங்கி வைப்பதுதான் முறை . அப்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்குக் கிடைக்கும்; மக்களும் முதல்வரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தங்கள் குறைகளைச் சொல்லவும் முடியும் .
எல்லாமே " காணொளிக் காட்சி " மூலம்தான் என்றால் , அது முதல்வர் மக்களை விட்டு விலகிச் செல்கிறார் அல்லது விலகி இருக்கவே விருப்பப்படுகிறார் என்பதாகவே பொருள்படும் . மெட்ரோ ரயில் துவக்க விழாவை , சென்னையில் இருந்துகொண்டே ,அவ்விழாவிற்குச் செல்லாமல் முதல்வர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் , மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கின்றார் . ஆனால் பீஹார் முதல்வரோ பேருந்து புதிய தடத் துவக்க விழாவில் , பேருந்தை துவக்கி வைத்தது மட்டுமன்றி , அதில் பயணிக்கவும் செய்கிறார் .
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காட்சிக்கு எளியன் ...
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !...நிஜம் ஐயா
.
.
.
நல்ல பகிர்வு!............
.
.
.
நல்ல பகிர்வு!............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காட்சிக்கு எளியன் ...
அருமையான பகிர்வு ஐயா. நாம் தமிழர் மரபில் வந்தவர்கள் என்பதையே இவர்கள் எல்லாம் மறந்து விட்டார்கள். எளிமை என்றால் என்ன? என்பது அவர்களது கேள்வியாக இருக்கும் போது அவர்கள் எங்கே எளிய மக்களுக்கு வழி காட்டுவது?
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: காட்சிக்கு எளியன் ...
கிருஷ்ணம்மா, சசி பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» விசித்தரமான காட்சிக்கு -ஒரு கவிதை
» நாசா அரிய படங்கள் உங்கள் காட்சிக்கு
» ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்கு போயிருந்தால்….
» ரூ.530 கோடிக்கு விற்கப்பட்ட ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது
» காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்
» நாசா அரிய படங்கள் உங்கள் காட்சிக்கு
» ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்கு போயிருந்தால்….
» ரூ.530 கோடிக்கு விற்கப்பட்ட ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது
» காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|