Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
3 posters
Page 1 of 1
இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
வில்லடிச்சான் கோயிலிலே கோயிலிலே!
விளக்கேத்த யாருமில்லே யாருமில்லே!
குடமடிச்சான் கோயிலிலே கோயிலிலே!
குத்துவிளக்கேத்த நாதியில்லே நாதியில்லே!
–
ஒருநாள் மஹா பெரியவாள் தரினத்துக்குச் சென்றிருந்த சமயம்,
அவர் இந்தப் பாட்டு வரிகளை சொல்லிவிட்டு, ‘இந்தப் பாட்டுக்கு
என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?’ என்று கேட்டார்.
–
வில்லடிச்சான், குடமடிச்சான் என்ற வார்த்தைகள் வில்லுப்பாட்டைக்
குறிப்பவையோ? என்ற சந்தேகம் இருந்தாலும், நானறிந்த வரையில்
வில்லுப்பாட்டு பாடும்போது இதைப் பாடிக் கேட்டதில்லை;
–
எனவே, அதிகப் பிரசங்கித்தனமாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்று
அமைதியாக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
–
அவர் விளக்கினார்
. ‘ஒருத்தர் கோவில்ல வில்லுப்பாட்டு கதை சொல்லிண்டு இருந்தா.
நன்னா வில்லடிச்சு, குடம் அடிச்சு, அற்புதமா பாடிண்டு இருந்ததால,
ஜனங்க எல்லாம் ரொம்ப ரசிச்சு, கேட்டுண்டு இருந்தா. பாட்டுல மங்கி,
அப்ளாஸ் குடுக்கறா; எல்லாரும் கதை கேட்கிற சுவாரசியத்துல, அங்கே
அம்பாள் சன்னதியில விளக்கேத்த ஆள் யாருமில்லை;
பூசாரி இருப்பானேன்னு நீ கேட்கலாம்; ஆனா அவனும்தானே கதையில
மயங்கி கிடந்தான். ஆனா அந்தக் கதை சொல்லறவன், தூரத்துல இருக்கிற
அம்பாள் சன்னதியில எண்ணெய் இல்லாம விளக்க அணையப்
போறதுன்னு கவனி்சு. இந்தப் பாட்டைப் பாடறான். பாட்டு வரியைக்
கேட்டதும் பூஜாரிக்கு விஷயம் புரிந்தது; அவன் எழுந்து போய், விளக்குக்கு
எண்ணெய் விடறான்.
–
இதுலேர்ந்து, அந்தக் காலத்துல வில்லுப்பாட்டு கதை சொல்றவா, எத்தனை
நுட்பமா இருந்திருக்கான்னு தெரியுதா?’ என்றார்.
–
‘நீயும் அது மாதிரி கதை சொல்றபோது, சுத்தி என்ன நடக்கறதுன்னு
கவணிக்கனும்’ என்று எனக்குச் சொல்வதுபோல உணர்ந்தேன். இதில்
ஜனங்களுக்கும் ஒரு மெசேஜ் இருக்கிறது என்பதும் புரிந்தது. வெறுமனே
கதை கேட்க மட்டும் கோவிலுக்கு வந்தால் போதாது. கடவுளை மறந்து
விடக்கூடாது. மெத்த சாஸ்திர ஞானம் கொண்டவர் மஹா பெரியவா
என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அவர் நாட்டுப்புறப் பாட்டிலும்
கூட ஞானம் கொண்டவர் என்ற பேருண்மை புரிந்தது.
–
அதன் பிறகு இதை மனத்தில் வைத்துக் கொண்டு, நான் கதை சொல்லும்
போது, நம் கலாசாரம், பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும்போது,
‘கோலாகலமாக பொங்கல் கொண்டாடும்போது, சூரியனை மறந்துவிடக்
கூடாது’ என்று குறிப்பிடுவேன்.
–
ஒருமுறை மஹா பெரியவாள் முன்னனியில் சீதா கல்யாணம் வில்லுப்
பாட்டு சொல்கிற அற்புதமான வாயப்பு ஸ்ரீ ராமனது பால்ய பருவம் பற்றி,
‘ராமனிடம் எப்போதும் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. வீதி வழியாக தேரில்
போகிறபோது, வழியில் பெயவர்களை, முதியவர்களை, ஞானியர்களை
கண்டால், உடனே தேரைவிட்டு கீழே இறங்கிச் சென்று, அவர்களை,
நமஸ்கரித்து, நலம் விசாரித்து விட்டுத்தான் மேலே செல்வாராம்’
–
இதை நான் குறிப்பிட்டபோது, மஹா பெரியவாள், ‘தியாகராஜ சுவாமிகள்,
தான் திரேதா யுகத்தில் பிறக்கலையேன்னு கவலைப்பட்டாரோன்னோ!
நல்ல வேளை! ஸ்ரீராமன் பிறந்த திரதா யுகத்துல நான் பிறக்கலையேன்னு
சந்தோஷப்படறேன்!’ என்றார்.
–
கதை சொல்லும்போது, இடையில் மஹா பெரியவா இப்படி ஒரு புதிர்
போடுகிறாரே என்று எல்லோரும் திகைத்த வேளையில், அவரே தொடர்ந்து
சொன்னார், ‘திரேதா யுகத்துல நான் பிறந்திருந்தா ஸ்ரீ ராமன் என்னை
நமஸ்கரித்திருப்பார். இப்போ எனக்கு அவரை நமஸ்கரிக்கிற பெரிய
பாக்கியம் கிடைச்சிருக்கே!’ என்றார்.
–
தியாகராஜ சுவாமிகள், தான் திரேதா யுகத்தில் பிறக்கலையேன்னு
கவலைப்பட்டாரே! அது ஏன் தெரியுமா? அவர் ஸ்ரீ ராமரைப் பார்த்து,
சொல்லுகிறார். நீ வழ்ந்த திரேதா யுகத்துல நானும் பிறந்திருந்தா,
நடந்தாவது வந்து சீதா கல்யாண வைபோகத்தை என் கண்களால்
காண்கிற பாக்கியத்தை பெற்றிருப்பேனே என்கிறார்.
நான் சொன்னது சீதா கல்யாணக் கதை என்பதால், இரண்டு மஹான்களுமே
இரண்டு விதமான கருத்துக்களைச் சொல்லி இருந்தாலும் கூட, இரண்டுமே
அவர்கள் ஸ்ரீராமன் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியின் வெளிப்பாடுதான்
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
–
திருப்புகழ் மாதிரியே, திருமந்திரமும் மஹா பெருமாளின் மனசுக்குப் பிடித்த
ஒரு பக்தி இலக்கியம், ஒருநாள், திருமந்திரம் பற்றி அவர் சொன்னபோது
பச்சிலை, அகத்தி, பிட்சை, பதவுரை ஆகிய நான்கு வார்த்தைகளை அவர்
திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். ஆனாலும், ரொம்ப விஸ்தாரமாக எதையும்
சொல்லவில்லை. மஹா பெரியவாள் சொல்கிறார் என்றால், அதற்கு ஒரு
அர்த்தம் இருக்கும். அது என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் எனக்குள்ளே ஏற்பட்டது.
–
திருமூலரது திருமந்திரம் புத்தகத்தை எடுத்து கருத்துடன் படித்துக் கொண்டே
வந்தேன்.அதில்…
–
யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறை
யாவருக்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தானே
–
என்று ஒரு பாடலைக் கண்டேன். இறைவனுக்கு அதாவது, சிவனுக்கு வேறு
எதையும் சாத்த வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வில்வ இலையை
சாத்தினாலே பொதுமானது என்கிறார் திருமூலர். வில்வ இலையைத்தான்
திருமூலர் பச்சிலை என்கிறார்.
–
அடுத்த வரி, யாவருக்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை. அதாவது பசுவுக்கு ஒரு
கட்டு அகத்திக்கீரை கொடுப்பது அத்தனை புண்ணியமாம். அடுத்தடுத்த
வரிகளில் கைப்பிடி அன்னதானம் பற்றியும், அடுத்தவரிடம் பேசுகிறபோது
வார்த்தைகளில் இனிமை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துச்
சொல்கிறது. அந்த வரிகளைப் படித்தபோது, அடடா!
–
இதைத்தான் மஹா பெரியவாள் அன்று சுட்டிக் காட்டினார் என்பது புரிந்தது.
–
உடனே திருமந்திரத்திலிருந்து பத்துப் பாடல்களைப் படித்துக் கொண்டு
அவற்றை வில்லுப்பாட்டில் கதை சொல்கிறபோது தக்க இடத்தில் புகுத்தி,
விளக்கிச் சொல்லத் தொடங்கினேன். குறிப்பாக, மஹா பெரியவாள் சொன்ன
பச்சிலை, அகத்தி, பிட்சை, பதவுரை ஆகிய நான்கு வார்த்தைகளை நான்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவற்றை வைத்து, வில்லிசை சந்தத்தில்,
–
பச்சிலையாம் வில்வதளம்
பசுவுக்கொரு வாய் அகத்தி
இச்சையுடன் கைப்பிடி அன்னம்
இனிக்கும் உரை உயர் தானம்
–
என்று எல்லோருக்கும் புரியுமாறு ஒரு பாட்டை எழுதி, கதை சொல்லும் போது
பாடுவது எனக்கு வழக்கமாகிவிட்டது.
–
———————————-
– எஸ். சந்திரமௌலி
கல்கி
Re: இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
நல்ல பகிர்வு ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
நல்ல அருமையான ,நுண்மையான தகவல் .
விரும்பினால் , மகா பெரியவா ,தொடருடன் இணைத்து விடலாம்,ayyasami ram
வி பொ உ
ரமணியன்
![இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
விரும்பினால் , மகா பெரியவா ,தொடருடன் இணைத்து விடலாம்,ayyasami ram
வி பொ உ
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?
» குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதா,,!
» இந்த பூவின் பெயர் என்ன
» இந்த புன்னகை என்ன விலை ....
» இந்த காலண்டர்ல என்ன புதுமை...?
» குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதா,,!
» இந்த பூவின் பெயர் என்ன
» இந்த புன்னகை என்ன விலை ....
» இந்த காலண்டர்ல என்ன புதுமை...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|