புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
13 Posts - 2%
prajai
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 8:23 am

அட்டகாசமான மறு வருகையை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் நடிகை அர்ச்சனா.
சின்ன சின்ன இடைவெளிகளுக்குப் பின் கதைக்கான கதாபாத்திரங்களில் மிளிர்ந்து
கொண்டே இருப்பார். பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்கும் “அழியாத கோலங்கள்’
படத்துக்காக சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடம்பாக்கம் வருகிறார் அர்ச்சனா.
-
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Wyg2DWgxTgGkwtSnYON6+archana1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 8:26 am

இன்னும் எது…. உங்களை நடிப்பை நோக்கி இழுக்கிறது…?
-
சினிமாவுக்கென எந்தத் திட்டமும் என்னிடம் முதலில் கிடையாது.
நடிக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். அது பிடிக்கவும்
செய்திருந்தது. பாலு மகேந்திரா சார் எனக்குள் இருந்த இன்னொரு
முகத்தைக் காண்பித்தார்.

நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்தார். அவரின் சினிமாக்களில்
இன்னொரு உலகம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
எல்லாமும் அவருக்கு போய் சேர வேண்டிய பெருமைகள்தான்.
-
எந்த காலத்திலும் பரபரப்பான நடிகையாக இருக்க வேண்டும்
என நினைத்ததில்லை. அதனால்தான் நல்ல சினிமாக்களில் மட்டுமே
என்னைப் பார்க்க முடிந்தது. பரபரப்பான நடிகையாக இருந்திருந்தால்
இந்நேரம் வரை அதே பதற்றத்துடன்தான் இருந்திருப்பேன்.
-
ஒரு கார், ஒரு வீடு என இருக்கும் வாழ்க்கை இன்னப் பிற வசதிகளுடன்
கூடிய வாழ்க்கையாக மாறியிருக்கலாம். அவ்வளவுதான் நேர்ந்திருக்கும்.
ஆனால், சொல்லி திருப்தியடைக் கூடிய வகையில் படங்கள் அமைந்திருக்காது.
-
நல்ல சினிமா… இது மட்டுமேதான் என்னை இன்னும் நடிப்பின் பக்கம்
ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
-
பாலுமகேந்திரா தன் வாழ்வின் சில பக்கங்களை கற்பனை கலக்காமல் முன்
வைத்த படம் “அழியாத கோலங்கள்’…
இப்போது அதே பெயரில் மீண்டுமொரு படம்… இது எப்படி இருக்கும்…?

-
பாலு சாரின் “அழியாத கோலங்கள்’ கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும்
துளி கூட தொடர்பு இருக்காது. இந்தப் படத்தின் கதைக்கு அவரின் படத் தலைப்பே
பொருத்தமாக இருக்கும் என்பதால் “அழியாத கோலங்கள்’ என வைத்து விட்டோம்.
-
கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்.
அப்படி கல்லூரி நாள்களில் நட்பாக பழகிய ஓர் ஆணும், பெண்ணும்
24 வருடங்களுக்குப் பின் ஒரு பெரு மழை நாளில் சந்திக்கிறார்கள்.
அந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை.
-
என் நீண்ட நாள் நண்பர் எம்.ஆர்.பாரதி. நல்ல சினிமாவுக்கான ரசிகர்.
நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால், உள்ளூர் சினிமா தொடங்கி உலக
சினிமா வரைக்கும் பேசிக் கொண்டே இருப்போம். அப்படி மராட்டிய கதை
ஒன்றை பற்றி பேச்சு நீண்டது. அதை சினிமாவாக்கினால் எப்படி இருக்கும்?
என்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கியதுதான் இந்தப் படம்.
-
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 8:28 am

நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் நடிப்பில் ஒவ்வொரு விதம்…
எப்படி இருந்தது படப்பிடிப்புத் தளம்…?


கதையை கேட்ட மாத்திரத்திலேயே நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் கதைக்குள் வந்து விட்டார்கள். இப்படியொரு படப்பிடிப்புத் தளத்தை இதுவரையிலான என் சினிமா பயணத்தில் நான் பார்த்ததே இல்லை. எங்கும் அவ்வளவு சந்தோஷம். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்தோம் என்பது பழைய வார்த்தையாக இருக்கலாம். உண்மையிலேயே இங்கே போட்டி இருந்தது. அது உன்னத சினிமாவுக்கான உழைப்பாக வந்து சேர்ந்திருக்கிறது.

பரபரப்பான சினிமா வாழ்க்கையில் இருப்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்….
ஆனால் படத்துக்குப் படம் பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறீர்கள்…?


நிறைய பேர் “”மேடம் இப்படியொரு கதை இருக்கு…” என சொல்கிறார்கள். ஆனால் எதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. பெரிதாக எந்த இயக்குநரின் கதையும் என்னை கவர்வதில்லை. அதனால் கதை சொல்ல வருகிற பலரை நான் சந்திப்பதே இல்லை. ஏதோ ஓரிடத்தில் கவனம் ஈர்க்கிற கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். நல்ல கதைகளும் அதை முன்னெடுக்கிற விதத்தில் கதாபாத்திரங்களும் தேடி வந்தால் நடிப்பேன். மற்றபடி எந்நேரமும் படப்

பிடிப்பில் இருந்து கொண்டு செய்திகளில் இடம் பிடிக்கும் தேவை எனக்கு இல்லை. ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு அனுபவமாக இருக்க வேண்டும். நானும் இருக்கிறேன் என்பதற்காக சினிமாவில் நடிக்க மாட்டேன்.

தன் வழக்கமான அடையாளங்களை விட்டொழித்து வருகிற சினிமாக்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கிற காலம் இது… இந்தக் கால கட்டத்தில் நாம் களத்தில் இல்லையே என்கிற வருத்தம் உண்டா…?

அப்படி நினைத்திருந்தால் சில தவறான படங்களை கூட நான் தேர்வு செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, அந்தந்த கணங்களில் வாழ்வதுதான் பிடிக்கும். ஆனால், சினிமாவை கவனித்து வருவதில், அப்போது வந்த மாதிரி பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகள் இப்போது இல்லை என்கிற குறை எனக்கு உண்டு. நேரடியான சினிமா ரசிகையாக இருந்து பார்க்கும் போது ஒரு விஷயம் தோன்றுகிறது. நான் ரசிகையாக இருந்த சினிமா காலம் உன்னதமானது. தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமாக ஆசைப்பட்டதற்கு காரணம், நான் பார்த்த சினிமாக்களாக கூட இருக்கலாம். பீம்சிங், திருலோகசந்தர், ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் பெண்களை பெண்மையோடு திரையில் காட்டினார்கள். ஒவ்வொரு இயக்குநரின் கதாநாயகிக்கும் ஓர் அடையாளம் இருக்கும். இப்போது அது மாதிரி எந்த படங்களும் இல்லை. பெண்ணின் அழகு எது என்கிற விஷயமே மாறி விட்டது.

– ஜி.அசோக், தினமணி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக