புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
55 Posts - 63%
heezulia
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
55 Posts - 65%
heezulia
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொத்திப் பொத்தி வளர்ப்பதா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 16 Feb 2016 - 11:57

என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் பிறந்தவர்கள், எட்டு பேர்; என்னுடன் பிறந்தவர்கள், மூன்று பேர்; எனக்கு பிறந்தவர்கள், இரண்டு பேர். இப்படி தலைமுறைக்கு தலைமுறை, நம் சமுதாயம், இளைத்துக் கொண்டே போகிறது.

நாம் இருவர், நமக்கிருவர் என்பது கூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகி வருகிறது. இப்படி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் என்று ஆகிற போது, பிள்ளைகளின் மீதான, பெற்றோரின் பார்வைப் பதிவு அதிகமாகிறது.

இப்போதெல்லாம், குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லும் அரசு பிரசாரம், ஒலிபெருக்கிகளும் ஓய்ந்து, விளம்பரங்கள் விடைபெற்று விட்டன. முதலில் பெறப்படுகிற பிள்ளையே, இந்த வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறது; ஆம்... நம்மை பாடாய்ப்படுத்துகிறது.

தந்ததைப் பெற்று, வெந்ததைத் தின்று வாழ்ந்த எங்கள் காலம், மாறி விட்டது. பிள்ளைகளிடம் வால் தனம் அதிகமாகி, அடிக்கிற லூட்டிகளையும், செய்கிற ஆதிக்கத்தையும், முன் வைக்கிற கோரிக்கைகளையும், ஆகிற கல்விச் செலவினங்களையும் மற்றும் நடக்கிற மருத்துவச் செலவுகளையும் பார்த்த பெற்றோர், 'போதும்டா சாமி...' என்று, மேலும் பிள்ளை பெறும் ஆசையை, விட்டு விடுகின்றனர்.

ஒற்றைப்பிள்ளை என்பதால், அதற்கு ஏகமாய் முக்கியத்துவம் தரப்போக, சாப்பிடக் கூடப் பரிசு கேட்கின்றனர்.
எங்கள் காலத்திலெல்லாம், 'எங்கே போற, எப்ப வருவேங்கிற...' கேள்வி எல்லாம் கிடையாது.

அப்போதெல்லாம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., நீச்சல் குளத்தில் குளிக்க, 45 காசு கட்டணம்; அம்மா தருவார். அதை மிட்டாய் வாங்கித் தின்று விட்டு, நீச்சல் குளத்தின் பக்கத்தில் ஓடுகிற அடையாற்றில் குளித்து (உவ்வே என்கிறீர்களா... அப்போ, சுத்தமா இருக்குங்க!) வீட்டில், அம்மாவிடம் நீச்சல் குளத்தில் குளித்ததாக, போக்குக் காட்டி விடுவேன்; இக்காலத்தில் இது நடக்காது.

இன்றைக்கு, பிள்ளைகளை அக்கறையாய் வளர்க்கிறோம் பேர்வழி என்று, அவர்களது ஒவ்வொரு அசைவையும், ஏகமாய் கண்காணிக்கின்றனர் பெற்றோர். போதாக்குறைக்கு, தாத்தா - பாட்டிகள் வேறு!

ஒரு குழந்தைக்கு, மொழி புரிய ஆரம்பிக்கிற ஒரு வயதிலிருந்து, 'டீன் - ஏஜ்' எனப்படும், 19 வயது வரை, 30,000 எதிர்மறைச் சொற்களை சொல்லியே, நம் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 'அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே...' என்று ஆரம்பித்து, நட்பான விலங்குகளைக் கூட, பயங்கர விலங்குகளாக பயமுறுத்துகின்றனர்.

கடமை மிக்க காவல் துறையினரையும், மக்கள் நலன் காக்கும் மருத்துவர்களையும் கூட, பயமுறுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

'ஊசியெல்லாம் ஒண்ணும் பண்ணாது...' என்று கூறி வளர்க்காமல், 'ஐஸ் வாட்டர் குடிச்சே, சாக்லேட் தின்னேன்னு வச்சுக்க... அப்புறம், டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போய், ஊசி போடச் சொல்வேன்...' என்று, ஊசியை கூட, பயமுறுத்தும் ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்து விட்டனர்.

'கண்ணாடி டம்ளரைத் தொட்டேன்னா உதை விழும்; எத்தனை முறை சொல்றது... எவர்சில்வர் டம்ளர்ல தண்ணி குடின்னு!' வீட்டிலேயே, தீண்டாமைகளைச் சொல்லி தருகின்றனர்.

'சுண்டு விரலை, உள்பக்கமாக மடி; அதன்மீது, கண்ணாடி டம்ளரை உட்கார வை. டம்ளர், கீழே விழுந்து உடையாது...' என்று, இயற்பியல் ஆசிரியர்களாக மாற, பெற்றோர் தயாரில்லை!

செய்ய வேண்டியதை சொல்லித் தராமலும், அதற்கு விளக்கமும் தராமலும், பிள்ளைகளை வளர்ப்பதால், பிள்ளைகளின் அறியாமைகள் வளர்வதோடு, திறமைகளும் குன்றிப் போகின்றன.

பிள்ளைகளை, சாலையைக் கடக்க, கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லலாம் தான்! ஆனால், இதற்கு வயது வரம்பு வேண்டாமா... வயதுப் பிள்ளைகளையும் பச்சைப் பிள்ளைகளை நடத்துவதை போல் நடத்தி, அவர்களை சார்ந்து வாழும் பிள்ளைகளாகவே ஆக்கி விடுகின்றனர்.

'என் கையை விடு... இரண்டு பக்கமும் பார். திடீரென்று ஓடிக் கடக்காதே! வாகனம், உன்னைக் கடக்கும் வரை காத்திரு. எதில் அவசரம் காட்டினாலும் பரவாயில்லை; சாலையில் அவசரம் வேண்டாம். நின்று நிதானித்துக் கட...' என்று இவர்களுக்கு ஒரு பாடமே நடத்தப்பட வேண்டாமா... சாலையைக் கடக்கவே, இந்தப் பெற்றோர் கற்றுத்தராத போது, வாழ்க்கைப் பாதையைக் கடக்க, எப்போது கற்றுத்தருவதாக உத்தேசம்?
திருமண மண்டபங்களில் பார்க்கிறேன்... தங்களை விட்டு, இரண்டடி கூடப் தள்ளிப் போகக் கூடாதாம்.

பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'எது ஒன்றையும், தங்கள் கண்ணசைவைத் தாண்டி அவர்கள் செய்யக் கூடாது...' என்று கட்டுப்படுத்தும் குணம், இன்னொரு நகல் பெற்றோர் போலவே, பிள்ளைகளை ஆளாக்குகிறதே தவிர, இவர்களிடம் மேலாக, திறம்பட உருவாக வழி வகுப்பது இல்லை!

குழந்தைகள் நன்கும், சிறப்பாகவும் வளர்ந்து ஒளிர்வதை விரும்பாதவர், நம்முடைய எதிரணியினராக இருக்கலாம். இத்தவறை, பெற்றோருமா செய்வது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 16 Feb 2016 - 12:42

ம்ம்... பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்...........யோசிக்க வேண்டிய கட்டுரை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 16 Feb 2016 - 15:42

விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை.... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 103459460
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 16 Feb 2016 - 17:53

மிகவும் பயனுள்ள பதிவு .... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 16 Feb 2016 - 23:18

ayyasamy ram wrote:விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை.... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1193913

நிஜம் ராம் அண்ணா, நம் என்னவோ நம் குழந்தைகளை பாதுகாப்பதாக நினைக்கிறோம், ஆனால் பின் விளைவுகள் பயங்கரமாய் ஆகும் போல இருக்கே புன்னகை..............கொஞ்சம் திருத்திக்கணும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 16 Feb 2016 - 23:18

K.Senthil kumar wrote:மிகவும் பயனுள்ள பதிவு .... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738

ஆமாம் செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக