புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
19 Posts - 3%
prajai
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_m10பொத்திப் பொத்தி வளர்ப்பதா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொத்திப் பொத்தி வளர்ப்பதா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:27 am

என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் பிறந்தவர்கள், எட்டு பேர்; என்னுடன் பிறந்தவர்கள், மூன்று பேர்; எனக்கு பிறந்தவர்கள், இரண்டு பேர். இப்படி தலைமுறைக்கு தலைமுறை, நம் சமுதாயம், இளைத்துக் கொண்டே போகிறது.

நாம் இருவர், நமக்கிருவர் என்பது கூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகி வருகிறது. இப்படி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் என்று ஆகிற போது, பிள்ளைகளின் மீதான, பெற்றோரின் பார்வைப் பதிவு அதிகமாகிறது.

இப்போதெல்லாம், குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லும் அரசு பிரசாரம், ஒலிபெருக்கிகளும் ஓய்ந்து, விளம்பரங்கள் விடைபெற்று விட்டன. முதலில் பெறப்படுகிற பிள்ளையே, இந்த வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறது; ஆம்... நம்மை பாடாய்ப்படுத்துகிறது.

தந்ததைப் பெற்று, வெந்ததைத் தின்று வாழ்ந்த எங்கள் காலம், மாறி விட்டது. பிள்ளைகளிடம் வால் தனம் அதிகமாகி, அடிக்கிற லூட்டிகளையும், செய்கிற ஆதிக்கத்தையும், முன் வைக்கிற கோரிக்கைகளையும், ஆகிற கல்விச் செலவினங்களையும் மற்றும் நடக்கிற மருத்துவச் செலவுகளையும் பார்த்த பெற்றோர், 'போதும்டா சாமி...' என்று, மேலும் பிள்ளை பெறும் ஆசையை, விட்டு விடுகின்றனர்.

ஒற்றைப்பிள்ளை என்பதால், அதற்கு ஏகமாய் முக்கியத்துவம் தரப்போக, சாப்பிடக் கூடப் பரிசு கேட்கின்றனர்.
எங்கள் காலத்திலெல்லாம், 'எங்கே போற, எப்ப வருவேங்கிற...' கேள்வி எல்லாம் கிடையாது.

அப்போதெல்லாம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., நீச்சல் குளத்தில் குளிக்க, 45 காசு கட்டணம்; அம்மா தருவார். அதை மிட்டாய் வாங்கித் தின்று விட்டு, நீச்சல் குளத்தின் பக்கத்தில் ஓடுகிற அடையாற்றில் குளித்து (உவ்வே என்கிறீர்களா... அப்போ, சுத்தமா இருக்குங்க!) வீட்டில், அம்மாவிடம் நீச்சல் குளத்தில் குளித்ததாக, போக்குக் காட்டி விடுவேன்; இக்காலத்தில் இது நடக்காது.

இன்றைக்கு, பிள்ளைகளை அக்கறையாய் வளர்க்கிறோம் பேர்வழி என்று, அவர்களது ஒவ்வொரு அசைவையும், ஏகமாய் கண்காணிக்கின்றனர் பெற்றோர். போதாக்குறைக்கு, தாத்தா - பாட்டிகள் வேறு!

ஒரு குழந்தைக்கு, மொழி புரிய ஆரம்பிக்கிற ஒரு வயதிலிருந்து, 'டீன் - ஏஜ்' எனப்படும், 19 வயது வரை, 30,000 எதிர்மறைச் சொற்களை சொல்லியே, நம் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 'அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே...' என்று ஆரம்பித்து, நட்பான விலங்குகளைக் கூட, பயங்கர விலங்குகளாக பயமுறுத்துகின்றனர்.

கடமை மிக்க காவல் துறையினரையும், மக்கள் நலன் காக்கும் மருத்துவர்களையும் கூட, பயமுறுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

'ஊசியெல்லாம் ஒண்ணும் பண்ணாது...' என்று கூறி வளர்க்காமல், 'ஐஸ் வாட்டர் குடிச்சே, சாக்லேட் தின்னேன்னு வச்சுக்க... அப்புறம், டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போய், ஊசி போடச் சொல்வேன்...' என்று, ஊசியை கூட, பயமுறுத்தும் ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்து விட்டனர்.

'கண்ணாடி டம்ளரைத் தொட்டேன்னா உதை விழும்; எத்தனை முறை சொல்றது... எவர்சில்வர் டம்ளர்ல தண்ணி குடின்னு!' வீட்டிலேயே, தீண்டாமைகளைச் சொல்லி தருகின்றனர்.

'சுண்டு விரலை, உள்பக்கமாக மடி; அதன்மீது, கண்ணாடி டம்ளரை உட்கார வை. டம்ளர், கீழே விழுந்து உடையாது...' என்று, இயற்பியல் ஆசிரியர்களாக மாற, பெற்றோர் தயாரில்லை!

செய்ய வேண்டியதை சொல்லித் தராமலும், அதற்கு விளக்கமும் தராமலும், பிள்ளைகளை வளர்ப்பதால், பிள்ளைகளின் அறியாமைகள் வளர்வதோடு, திறமைகளும் குன்றிப் போகின்றன.

பிள்ளைகளை, சாலையைக் கடக்க, கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லலாம் தான்! ஆனால், இதற்கு வயது வரம்பு வேண்டாமா... வயதுப் பிள்ளைகளையும் பச்சைப் பிள்ளைகளை நடத்துவதை போல் நடத்தி, அவர்களை சார்ந்து வாழும் பிள்ளைகளாகவே ஆக்கி விடுகின்றனர்.

'என் கையை விடு... இரண்டு பக்கமும் பார். திடீரென்று ஓடிக் கடக்காதே! வாகனம், உன்னைக் கடக்கும் வரை காத்திரு. எதில் அவசரம் காட்டினாலும் பரவாயில்லை; சாலையில் அவசரம் வேண்டாம். நின்று நிதானித்துக் கட...' என்று இவர்களுக்கு ஒரு பாடமே நடத்தப்பட வேண்டாமா... சாலையைக் கடக்கவே, இந்தப் பெற்றோர் கற்றுத்தராத போது, வாழ்க்கைப் பாதையைக் கடக்க, எப்போது கற்றுத்தருவதாக உத்தேசம்?
திருமண மண்டபங்களில் பார்க்கிறேன்... தங்களை விட்டு, இரண்டடி கூடப் தள்ளிப் போகக் கூடாதாம்.

பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'எது ஒன்றையும், தங்கள் கண்ணசைவைத் தாண்டி அவர்கள் செய்யக் கூடாது...' என்று கட்டுப்படுத்தும் குணம், இன்னொரு நகல் பெற்றோர் போலவே, பிள்ளைகளை ஆளாக்குகிறதே தவிர, இவர்களிடம் மேலாக, திறம்பட உருவாக வழி வகுப்பது இல்லை!

குழந்தைகள் நன்கும், சிறப்பாகவும் வளர்ந்து ஒளிர்வதை விரும்பாதவர், நம்முடைய எதிரணியினராக இருக்கலாம். இத்தவறை, பெற்றோருமா செய்வது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 11:12 am

ம்ம்... பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்...........யோசிக்க வேண்டிய கட்டுரை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 16, 2016 2:12 pm

விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை.... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 103459460
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 16, 2016 4:23 pm

மிகவும் பயனுள்ள பதிவு .... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:48 pm

ayyasamy ram wrote:விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை.... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1193913

நிஜம் ராம் அண்ணா, நம் என்னவோ நம் குழந்தைகளை பாதுகாப்பதாக நினைக்கிறோம், ஆனால் பின் விளைவுகள் பயங்கரமாய் ஆகும் போல இருக்கே புன்னகை..............கொஞ்சம் திருத்திக்கணும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:48 pm

K.Senthil kumar wrote:மிகவும் பயனுள்ள பதிவு .... பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738 பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738

ஆமாம் செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக