புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
91 Posts - 63%
heezulia
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
6 Posts - 4%
viyasan
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%
eraeravi
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
283 Posts - 45%
heezulia
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
19 Posts - 3%
prajai
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
7 Posts - 1%
mruthun
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவளையின் கர்வபங்கம்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 6:28 pm

அது ஓர் அழகிய தடாகம்.அந்தத் தடாகத்தில் தாமரையும்,அல்லியும்,குவளையும் பூத்துக் குலுங்கின.அருகருகே இருந்த அல்லியும்,தாமரையும் பேசிக்கொண்டன.

" தாமரை அக்கா! நேற்று இங்கு வந்து குளக்கரையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தாயா?"

" பார்த்தேன்! அப்பப்பா! என்ன அழகு!! அவளைப் போன்ற அழகியை இதுவரையில் நான் பார்த்ததேயில்லை."

"மை தீட்டிய கண்களில்தான் எத்தனை கவர்ச்சி!'

" உண்மைதான் அல்லி! "கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான்" என்று கண்களைப் பற்றி வள்ளுவர் கூறியது உண்மைதான் என்று அவளுடைய கண்களைப் பார்த்தபிறகு தான் தெரிந்துகொண்டேன்."

"அவளுடைய கரிய விழிகளைப் பார்த்தபோது பழைய திரைப்படப்பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்தது அக்கா!"

"என்ன பாடல் அது?"

"இமையென்னும் சிறகை அடிக்கடி விரிக்கும்
இருவிழிக் கருவண்டு" என்பதுதான் அந்தப் பாடல்.

"ஆகா! அற்புதமான கற்பனை! அழகான உவமை!! அவளுடைய மருண்ட பார்வையைப் பார்க்கும்போது மான்விழி என்று சொல்லத் தோன்றுகிறது.துள்ளும் விழிகளைப் பார்க்கும்போது கயல்விழி என்று சொல்லத் தோன்றுகிறது."

"கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா?"என்ற அதட்டலான குரல்கேட்டு அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தனர்.அங்கே குவளைமலர் கம்பீரமாக நின்றிருந்தது.

"அந்தப் பெண்ணுக்குக் குவளைமலர் போன்ற கண்கள் என்று சொன்னால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள்? என் அழகைக் கண்டு உங்களுக்கெல்லாம் பொறாமை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னைப் பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். அந்தப் பாட்டைச் சொல்லவா?"

"என்ன பாடல் அது?"

"தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏந்தக்
குவளைக்கண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ.

என்பதுதான் அந்தப் பாடல். மருத நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்து கம்பர் பாடிய இந்தப் பாடலில், "குவளைக்கண் விழித்து நோக்க" என்று பாடி என்னைப் பெருமைப் படுத்தியுள்ளார்."

அந்த சமயத்தில் நேற்றுவந்த அந்தப் பெண் குளக்கரையில் வந்து அமர்ந்தாள்.மூன்று பூக்களும் அவளுடைய கண்களையே பார்த்துக்கொண்டிருந்தன.வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.சிறிது நேரத்தில் அப்பெண் எழுந்து போய்விட்டாள்.

"குவளை அக்கா! அவளுடைய கண்களைப் பார்த்தீர்களா?"

குவளை மலரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவே அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தன.

அங்கே, அதுவரையில் நீண்டு நிமிர்ந்திருந்த குவளை மலரானது கூனிக் குருகிப்போய்
தலை குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தது.

குவளையைப் பார்த்து தாமரையும் , அல்லியும் , " என்ன பேச்சு மூச்சையே காணோம் ? " என்றன !

உடனே குவளை  ," என்னுடைய கர்வத்திற்குச் சரியான மரண அடி கொடுத்து விட்டாள் அந்தப் பெண் !  " என்றது .



காணின் குவளைக் கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக்கண் ஒவ்வேம் என்று. ( குறள்-1114)

கருத்து: அவளுடையக் கண்களைப் பார்த்தால் குவளை மலரானது,"இவளுடைய கண்களுக்கு நாம் நிகராகமாட்டோம்" என்று கூறி வெட்கித் தலை குனியும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 9:03 pm

கற்பனை ...கற்பனை ...என்னே கற்பனை .!.

காரப்பாக்க கவியே ,
கம்பனை கண்ணில் நிறுத்தி ,
குறளை மனதில் நிறுத்தி ,
குவளையை தலை குனிய வைத்தீரே !!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 9:12 pm

குவளையின் கர்வபங்கம்   PmCLZcvTRc2esnqU7JHn+80_Meena-new-stills-12

இதை விட சிறந்த கண்ணழகி படம் ,
ஆஸ்தான புகைப்பட கலைஞர் வெளியிடுவார் புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 9:16 pm

ஐயா !

நான் கவி அல்ல ! யாப்பிலக்கணம் முறையாகக் கற்றவனும் அல்ல ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன் அவ்வளவே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 9:28 pm

இலக்கியத்தில் வெறும் ஈடுபாடு இல்லை .
ஆழ்ந்த, தீவிர ஈடுபாடு .
அதனால்தால்
கம்பனையும் , வள்ளுவரையும் , திரை உலகையும்
அளவாக சேர்த்து அழகாக தருகிறீர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:33 pm

T.N.Balasubramanian wrote: கற்பனை  ...கற்பனை  ...என்னே கற்பனை .!.

காரப்பாக்க கவியே ,
கம்பனை கண்ணில் நிறுத்தி ,
குறளை மனதில் நிறுத்தி ,
குவளையை தலை குனிய வைத்தீரே  !!

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க ஐயா,
.
.
.
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே இல்லை, ஆச்சர்யத்தில் மலைத்துவிட்டேன் ஜகதீசன் ஐயா .................... குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:35 pm

M.Jagadeesan wrote:ஐயா !

நான் கவி அல்ல ! யாப்பிலக்கணம் முறையாகக் கற்றவனும் அல்ல ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன் அவ்வளவே !
மேற்கோள் செய்த பதிவு: 1193950

மிக மிக அழகிய பதிவு ஐயா............வேறு என்ன சொல்ல, மிகவும் ரசித்து படித்தேன் புன்னகை .............. குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 9:36 pm

கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக