ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

Top posting users this week
heezulia
விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_m10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10 
ayyasamy ram
விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_m10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10 
mohamed nizamudeen
விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_m10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10 
kavithasankar
விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_m10விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

2 posters

Go down

விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Empty விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

Post by krishnaamma Wed Feb 10, 2016 12:27 pm

மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் சுதன் என்பவன் இருந்தான். அவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.

''நாள்தோறும் பத்துப் பேருக்கு அன்ன தானம் அளிக்கிறேன். உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்,'' என்று பலரிடம் வேண்டுவான் சுதன்.

அதை உண்மை என்று நம்பி சிலர் அவனுக்கு உதவி செய்தனர். ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறும் போட மாட்டான்.

அன்னதானம் அளிப்பதை அறிந்து அவன் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ''ஐயா! சற்று முன்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள். வயிறார சாப்பிடலாம்,'' என்று இனிமையாகப் பேசி அனுப்பி வைப்பான்.

திரும்பவும் அவர்கள் வந்தாலும் அதே பதிலைத்தான் சொல்வான். யாருக்கும் எதையும் ஈயாத கொடாக் கண்டனாக இருந்தான் சுதன்.

பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். விடாக் கண்டனாகிய அவன் யாரையும் ஏமாற்றி விடுவான். கொடாக் கண்டனான சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன்.

சுதன் வீட்டில் விருந்து சாப்பிடுவது என்று முடிவு செய்தான்.
நண்பகல் நேரம், சுதன் வீட்டிற்கு வந்தான் மகேன்.
''ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி பலரும் புகழ்ந்து பேசுகின்றனர். அதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன்,'' என்றான்.

''நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நாள்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர்.

''பக்கத்து ஊரில் இருந்து வருகிறீர்கள். உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. நாளை வாருங்கள். இங்கே விருந்து சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாக செல்லலாம்,'' என்று இனிமையாகப் பேசினான் சுதன்.
''நாளை வருகிறேன்,'' என்று புறப்பட்டான் மகேன்.

''வீட்டிற்குள் வந்த சுதனிடம், யார் வந்தது?'' என்று கேட்டாள் மனைவி.

''நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். 'நாளை வா!' என்று அவனை அனுப்பி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான்,'' என்று சொல்லிச் சிரித்தான் சுதன்.

மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன்.
தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், ''இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது?'' என்று எரிச்சலுடன் கதவைத் திறந்தான்.

''ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள்,'' என்ற மகேன், அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டான்.

உள்ளே வந்த சுதன், மனைவியிடம், ''நேற்று வெளியூரில் இருந்து வந்தானே. அவன் இன்று விடிகாலையிலேயே வந்து விட்டான். நம் வீட்டுத் திண்ணையில் படுத்து இருக்கிறான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது,'' என்று கவலையுடன் சொன்னான்.

''இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்? காய்ச்சல் வந்தவள் போல நான் படுத்துக் கொள்கிறேன். அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, விருந்து சாப்பிடலாம் என்று அனுப்பி வையுங்கள்,'' என்றாள் அவள்.

''நல்ல வழி சொன்னாய்,'' என்று மனைவியைப் பாராட்டினான் சுதன்.

பொழுது விடிந்தது. திண்ணையில் படுத்திருந்த மகேனிடம் சோகமான முகத்துடன் வந்தான் சுதன்.
''என் மனைவிக்குக் காய்ச்சல். படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் எப்படிச் சமைக்க முடியும்? நாளை வாருங்கள். கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம்,'' என்றான்.

''மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன்,'' என்றான் மகேன்.

சுதனின் பதிலுக்குக் காத்திராமல் சமையல் அறைக்குச் சென்றான். சமைக்கத் தொடங்கினான்.
இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர்.

சிறிது நேரம் சென்றது. சுதன் காதில் மெதுவாக ஏதோ சொன்னாள் அவள். அவன் முகம் மலர்ந்தது.
''சமையலை முடித்து, வாருங்கள். சாப்பிடலாம்,'' என்று அவர்களை அழைத்தான் மகேன்.

''அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழைத் தோப்பில் இலைகளை அரிந்து எடுத்து வாரும்,'' என்றான் சுதன்.

அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான்.
அவன் வருவதை இருவரும் பார்த்தனர்.

உரத்த குரலில் அவள், ''வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது?'' என்று கோபத்துடன் கத்தினாள்.

''நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன்,'' என்று பதிலுக்குக் கத்தினான் சுதன்.

இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே வாயிலைப் பார்த்தனர்.
இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை.

''நீங்கள் இப்படி மிரட்டினால் நான் என் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன்,'' என்று கத்தினாள் அவள்.
''என்னை எதிர்த்தா பேசுகிறாய்? எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை,'' என்று அவளை அடித்தான் சுதன்.

''ஐயோ! என்னை இப்படி அடித்துக் கொல்கிறாரே... கேட்பார் இல்லையா?'' என்று ஒப்பாரி வைத்து அழுதாள்.
அவளை அடிப்பதை அவன் நிறுத்தவில்லை.

அவர்கள் இருவரும் வாயிலைப் பார்த்தனர்.
அங்கே அவனைக் காணவில்லை.
அவளை அடிப்பதை நிறுத்தினான் சுதன்.

''அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம்,'' என்றாள் சுதனின் மனைவி.
இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

''அடியே! எப்படி என் திறமை? உனக்கு வலிக்காமல் அடித்தேனே,'' என்று பெருமையுடன் சொன்னான் சுதன்.
''நான் மட்டும் உங்களுக்குச் சளைத்தவளா? நோகாமல் எப்படி அழுது ஒப்பாரி வைத்தேன் பார்த்தீர்களா?'' என்று பெருமையுடன் சொன்னாள் அவள்.

பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், ''நான் மட்டும் உங்களுக்குச் சளைத்தவனா? போகாமல் வந்தேனே,'' என்று அவர்கள் முன் குதித்தான்.

தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்தனர். அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர்.

சிறுவர் மலர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Empty Re: விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

Post by விமந்தனி Wed Feb 10, 2016 12:33 pm

ஹா... ஹா... ஹா... சூப்பர் விடாக்கொண்டன். நல்ல கதை.


விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Empty Re: விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

Post by krishnaamma Wed Feb 10, 2016 12:35 pm

விமந்தனி wrote:ஹா... ஹா... ஹா... சூப்பர் விடாக்கொண்டன். நல்ல கதை.
மேற்கோள் செய்த பதிவு: 1192884

எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கதை, நானே எழுதணும் என்று இருந்தேன், பார்த்தால் சிறுவர் மலரில் போட்டுவிட்டார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Empty Re: விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

Post by விமந்தனி Wed Feb 10, 2016 12:49 pm

ஹா.. ஹா... ஹா... அவர்கள் முந்திக்கொண்டார்கள்....... புன்னகை புன்னகை புன்னகை


விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Empty Re: விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

Post by krishnaamma Wed Feb 10, 2016 12:54 pm

விமந்தனி wrote:ஹா.. ஹா... ஹா... அவர்கள் முந்திக்கொண்டார்கள்....... புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192889

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !  Empty Re: விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum