ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
Dr.S.Soundarapandian
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
heezulia
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
i6appar
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயோஜிதம்........... by Krishnaamma :)

+2
சசி
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by krishnaamma Sat Jan 30, 2016 1:52 pm

ம்ம்... இது என்னுடைய அடுத்த கதை................

வானமே கிழிந்தது போல, வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கு.............ராஜாத்தி இன் மனதில் புயல் அடித்துக்கொண்டிருந்தது.....ஆச்சு இன்னும் ஒரே வாரம் தான், தீபாவளி வந்துடும், அதற்குள் அப்பாவால் எப்படி 15 பவுன் நகைகளை வாங்க முடியும் என்று அவளுக்கு ரொம்ப கவலையாக இருந்தது............

இவளுக்கு கல்யாணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது, கல்யாணத்தின் போது போட்ட 15 சவரன் போதாது, இன்னும் 15 வேண்டும் என்று மாமியார் இவளை அப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டாள்..............அப்பா இல்லாமல் தன்னை தனியாய் வளர்த்து ஆளாக்கிய தன்  அம்மாவை ஓரளவுக்கு மேலே எதிர்த்து பேச இவள் கணவன் ராஜனுக்கு முடியலை.............

மாமியார் நல்லவள் தான், ஆனாலும் கொஞ்சம் எடுப்பார் கைப் பிள்ளை..............2 மதங்கள் முன் கல்யாணம் ஆகி பக்கத்து வீட்டுக்கு வந்த மருமகள் 25 சவரன் நகை போட்டுக்கொண்டு வந்திருந்தாள், அவள் கணவன் இவள் கணவனை விட குறைவாக படித்திருந்தான் மற்றும் சம்பளமும் குறைவு தான்...........இதைப்பார்த்த இவளின் மாமியார், என் மகன் மட்டும் என்ன குறைச்சலா என்று ஆரம்பித்து விட்டாள்...............

இவளும் ராஜனும் எவ்வளோ சொல்லிப் பார்த்தும் மாமியார் ராஜி கேட்பதாக இல்லை, வந்தால் 15 பவுனுடன் வா என்று சொல்லி இவளை அவள் வீட்டுக்கு அனுப்பி விட்டாள்............தீபாவளி சீராக கொண்டு வந்தால் போறும் என்று ரொம்ப தாராளமாய் (?) சொல்லி , நிறைய நேரம் கொடுத்து அனுப்பிவிட்டாள்..............

இங்கே வந்தால், இவள் கல்யாணத்துக்கு வாங்கின கடனே அப்படியே இருக்கு அப்பாவுக்கு......வட்டி மட்டுமே கட்டி வருகிறார்.....இந்த நிலையில் மீண்டும்  15 பவுன்  ............. பயம்  பயம்  பயம் அதுவும் இன்று தங்கம் விற்கும் விலை இல்?.............என்ன செய்வது என்று  யோசித்து யோசித்து குடும்பமே குழம்பியது.............

எல்லோருமாய் ஒருவழியாக போக வேண்டியது தானா............என்று நினைக்கும்போதே அது கோழைத்தனம், கூடாது என்று மனம் சொன்னாலும் வேறு வழி ஏதும் புலப்படவில்லை அவர்களுக்கு......நாள் நெருங்க நெருங்க மன கஷ்டம் அதிகமானதே தவிர வழி ஒன்றும் புலப்படவில்லை...............

கடவுளை சரணடைவதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை..........கல்யாணத்துக்கு முன்பே சொல்லி இருந்தால் கூட வேறு இடம் பார்த்திருக்கலாம்.........இப்போ இப்படி திடீரென்று சொன்னால்?..........இதுவே தொடராது என்று என்ன நிச்சயம்?...............இப்படி பலவாறாக நினைத்து வெதும்பிப் போனாள் ராஜாத்தி................

அப்பா, அம்மா இவள் என்று மூவரும் கூடிக் கூடி பேசினால் கூட எந்த முடிவும் எட்டப்படவில்லை............ஆளுக்கு ஒரு முலையாக உட்கார்ந்து இருந்தார்கள்..............இப்படியே எத்தனை நேரம் உட்கார்ந்து இருந்தார்களோ தெரியலை .......திடீரென்று கடலே வீட்டுக்குள் வந்தது போல ஒரு பெருத்த சத்தம்.............

காட்டாறு ......காட்டாறு என்று கேள்விப்பட்டிருந்தாளே தவிர  அன்றுவரை பார்த்தது இல்லை.............அன்று பார்த்தாள்...............நிதானிக்கும் முன் மூவரும் தண்ணீரால் தூக்கி எறியப்பட்டனர்..............அலறிப்புடைத்துக்கொண்டு, மேசையை பிடித்துக் கொண்டனர்  , நாற்காலியை   பிடித்துக் கொண்டனர், சிறிது நேரம் அத்துடன் மிதந்து ஒதுங்கினர்...............

அந்த இருட்டில் அது எந்த இடம் என்று கூட தெரியலை, காலை வரை யார் எங்கு இருக்கிறார்கள், இருக்கிறார்களா என்று கூட தெரியலை........ராஜாத்திக்கு ரொம்ப அழுகையாக வந்தது............அம்மா அப்பா எங்கே என்று தெரியலை.............தனக்கு எதிர்காலம்  உண்டா என்று கூட தெரியலை...............இருளில் தனியே மாட்டிக்கொண்ட தாலும், சாவை கணநேரம் தரிசித்துவிட்டு வந்ததாலும் , சிந்திக்க தோன்றியது , ஏதோ புரிவது போல இருந்தது.................

பயந்த மனதில், இவ்வளவு நடந்தும் தான் இன்னும் இறக்காமல் இருப்பதால், தனக்கு ஏதோ நல்லது நடக்கப்போகிறது , கண்டிப்பாக அம்மா அப்பாவும் தன்னைப்போல எங்காவது ஒதுங்கி இருப்பார்கள் என்கிற நம்பிக்கை  தோன்றியது..................

கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் தான் நிலைமை புரிய ஆரம்பித்தது, நிறைய பேர் தன்னைப்போல அங்கங்கு  தொத்திக்கொண்டு இருப்பது தெரிந்தது .................அதோ அம்மா, கொஞ்சம் தூரத்தில் அப்பா...................இவள் அவர்களை பார்த்தது போல அவர்களும் இவளை பார்த்து விட்டார்கள்...............நிம்மதி பெருமுச்சு விட்டனர்................

அனைவரும் மெது மெதுவே மற்றவர்கள் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.....வீடு  வாசல் என்ன ஆச்சோ தெரியலை...............எல்லோரும் ஒருகல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.................மாற்றுத்துணி சாப்பாடு  எல்லாம் மெதுமெதுவே இவர்களை வந்தடைந்தது................

டிவி காரர்களும் வர ஆரம்பித்தார்கள் மீட்புப் பணி மற்றும்  இழப்புகள் குறித்து படமெடுக்க.............ஒவ்வொருவராக காமிரா முன் தங்கள் தங்கள் சோகத்தை சொல்லும்போது இவளுக்கு 'சட' என்று பொறி தட்டியது........தானாகவே முன்வந்து அழுகொண்டே பேச ஆரம்பித்தாள் ............... உடனே காமரா இவள் பக்கம் திரும்பியது...............

(TRP  rating  ஏறணுமே டிவி காரங்களுக்குபுன்னகை).............இவள் சொன்னாள், " எவ்வளவோ கஷ்டத்தில் எங்க அப்பா, எனக்காக 15 பவுன் நகை சேர்த்து வைத்தார், தீபாவளிக்கு தருவதற்காக.....ஆனால் இப்போ அது எங்கே போயிருக்குமோ தெரியலை, புது துணிகள் கூட எடுத்துவிட்டார்.............அவைகள் எங்கே அடித்துக்கொண்டு போச்சோ தெரியலை............என் மாமியார்  கேட்டால் நாங்க என்ன சொல்லப்போரோமோ..................என் வாழ்க்கை இப்படியா போகணும்"...என்று பிலாக்கணம் வைத்தாள்................இது பொய் தான் என்றாலும், யாருக்கும் கெடுதல் செய்யாத பொய் இது...........இவள் அப்படி சொன்னதற்கு  பலன் நல்லவிதமாகவே இருந்தது.................

இவளின் பேட்டி தந்த  அதிர்ச்சி இல் இவளின் அப்பா அம்மாவுக்கு ஒன்றுமே புரியலை................பார்த்தது பார்த்த வண்ணம் இருந்தனர்........

அங்கே அவள் மாமியார்  வீட்டில் நிலைமை வேறாக இருந்தது, அவர்களால் இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஊர் சுற்றிப் பார்க்கப்போன  பக்கத்து வீட்டு இளசுகள் இன்னும் வீடு திரும்பலை என்று அவர்கள் வீடே வேறுமாதிரி இருந்தது................

இதைப்பார்க்க பார்க்க ராஜாத்தி இன் மாமியார் வயற்றில் புளியைக் கரைத்தது............'ஐயோ!..என் மகன் வாழ்வு ஆரம்பிக்கும் முனேவே முடிந்து போகுமோ என்றல்லாம் பயம் அவள் மனத்தைக் கவ்வியது......என்ன ஒரு பைத்தியக்கரத்தனமாய் பக்கத்து வீட்டைப் பார்த்து அவளை அங்கு அனுப்பினேன்'..........என்று தன்னத்தானே நொந்து கொண்டாள் ...........

எல்லா பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டாள்.............டிவியை பார்த்த வண்ணம் இருந்தாள்............மழை இன் கோரங்களைக் காட்டும் , டிவி செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த மாமியார் இவளின் புலம்பலை பார்த்தாள், இயற்கையாக  அவளுள் இருந்த தாய்மை எட்டிப்பார்த்தது, தான் கஷ்டப்பட்டது நினைவில் வந்து போனது, பாவம் , இந்த மட்டும் மருமகள் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லாமல் இருக்கிறாளே அதுவே போதும் என்று முடிவுக்கு வந்தாள்...............

சந்தோஷத்தில் , " டேய் ராஜா, ராஜா..............இதோ டிவில ராஜாத்திய பாரு அவங்க நல்லா இருக்காங்க, அவங்க வீடு அடிச்சிட்டு போனதால தான் நம்ப போனுக்கு பதிலே இல்லை.......பாவம், நீ போய் அவங்களை இங்கே பத்திரமாய் கூட்டிட்டு வந்துடு " என்று அன்பாக சொன்னாள் .

அவங்க அனைவருக்கும் மாப்பிளை வீட்டில் தலை தீபாவளி விமரிசையாக நடந்தது என்று நான் ஸ்பெஷல் ஆக சொல்லவேண்டுமா?.............மழை  வெள்ளம் எவ்வளவோ கெடுதல் பண்ணி இருந்தால் கூட இது போல வெளியே தெரியாத நல்லதும் பண்ணி இருக்கு தானே? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by சசி Sat Jan 30, 2016 7:43 pm

சமயோஜித கதை தாம்மா. நன்றாக இருக்கிறது


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by shobana sahas Sat Jan 30, 2016 11:45 pm

மிகவும் நல்ல கதை க்ரிஷ்ணாம்மா . உண்மை தான் நமக்கு தெரியாத நல்லதும் நடந்து தான் இருக்கும் ....
சமயோஜிதம்........... by Krishnaamma :)  3838410834 சமயோஜிதம்........... by Krishnaamma :)  103459460 சமயோஜிதம்........... by Krishnaamma :)  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by விமந்தனி Sun Jan 31, 2016 12:07 am

சூப்பருங்க கிருஷ்ணாம்மா. கதை நல்லா இருக்கு.


சமயோஜிதம்........... by Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமயோஜிதம்........... by Krishnaamma :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமயோஜிதம்........... by Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by யினியவன் Sun Jan 31, 2016 12:11 am

மாமியாருக்கு வெள்ள நிவாரண நிதி மறந்துடுச்சே பேஷ் பேஷ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by K.Senthil kumar Sun Jan 31, 2016 5:45 am

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கதை அருமை அம்மா ....



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by krishnaamma Mon Feb 01, 2016 9:54 pm

சசி wrote:சமயோஜித கதை தாம்மா. நன்றாக இருக்கிறது

நன்றி சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by krishnaamma Mon Feb 01, 2016 9:54 pm

shobana sahas wrote:மிகவும் நல்ல கதை க்ரிஷ்ணாம்மா . உண்மை தான் நமக்கு தெரியாத நல்லதும் நடந்து தான் இருக்கும் ....
சமயோஜிதம்........... by Krishnaamma :)  3838410834 சமயோஜிதம்........... by Krishnaamma :)  103459460 சமயோஜிதம்........... by Krishnaamma :)  1571444738

ஆமாம் ஷோபனா, எவ்வளவோ நடந்ததே அப்போ..............புன்னகை.....நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by krishnaamma Mon Feb 01, 2016 9:55 pm

விமந்தனி wrote:சூப்பருங்க  கிருஷ்ணாம்மா. கதை நல்லா இருக்கு.

நன்றி விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by krishnaamma Mon Feb 01, 2016 9:57 pm

யினியவன் wrote:மாமியாருக்கு வெள்ள நிவாரண நிதி மறந்துடுச்சே பேஷ் பேஷ் புன்னகை

அது மட்டும் எவ்வளவோ வந்துடப்போகிறது வெறும் 5000 தானே இனியவன்? புன்னகை............வீடே போச்சு நிறைய பேருக்கு இந்த 5000 வந்து என்ன ஆகப்போகிறது சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமயோஜிதம்........... by Krishnaamma :)  Empty Re: சமயோஜிதம்........... by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum