Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதிற்கான பட்டியலில் இருந்தவர்களின் பெயர்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெயர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் பெயர்தான்.
எண்பத்தெட்டு வயதாகிறது இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார்.
பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டுவரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப்போயிருப்பவர்.
நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்கு காரணம் டாக்டர் சாந்தாதான்.
புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாக நிலைக்கு போனபோது சம்பந்தபட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலமையின் கொடுமையை உணரவைத்தவர் இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத்தந்தவர்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காக பெரிதும் பாடுபட்டு வருபவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லை என்று சொன்ன போது தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தவர்.
புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்தக்கூடிய நோய்தான்
என்பதை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருபவர்.
உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர்.இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களை கவனித்துக்கொள்வதற்காக குடிசையிலேயே தங்கியவர்.இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவ மனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.
புற்றுநோய் மருத்துவமனையை பராமரிக்க தேவையான நிதிச்சுமையால் மருத்துவமனை நிர்வாகம் சிரமப்பட்ட போது இருபதிற்கு இருபது என்ற திட்டத்தை இந்த மருத்துவமனையுடன் இணைந்து தினமலர் கொண்டுவந்தது.
இந்த திட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு நன்கொடை கொடுக்கலாம் நன்கொடையின் மதிப்பு இருபது ரூபாய்தான்.இதற்காக தொடர்கட்டுரை எழுதி கட்டுரையின் முடிவில் நன்கொடை இருபது ரூபாய் வழங்குவீர் என்ற வேண்டுகோள்விடப்பட்டது.
இந்த தொடர்கட்டுரை எழுதும் புனிதமான பணி எனக்கு வழங்கப்பட்டது, இதற்காக மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன் சில நாள் தங்கியிருந்து பல கட்டுரைகள் எழுதினேன்.சிறு துளி பெரு வெள்ளம் போல வாசகர்களால் அப்போது கணிசமான தொகை நன்கொடையாக கிடைத்தது.இதற்கான வாய்ப்பு வழங்கிய தினமலர் ஸ்ரீ ஆதிமூலம் அவர்களையுயும் டாக்டர் சாந்தா அவர்களையும் இந்த நேரத்தில் நினைத்து பார்த்து நன்றிகூர்கிறேன்.
உங்களால்தான் உயிர் பிழைத்தோம்... உங்களால்தான் இன்று நாங்கள் நன்றாக இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு, ஆசி வாங்க வருகிற மக்கள்... நோயின் பிடியிலிருந்து மீண்டு, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி, குடும்பமும் குழந்தைகளுமாக சந்திக்க ஆனந்தக் கண்ணீரோடு அவர்கள் என் முன் வந்து நிற்பதைப் பார்க்கும் போது, அதைவிட வாழ்க்கையில் வேறு எதுவுமே பெரிதல்ல, அவர்களே என்னை இந்த வயதிலும் தொய்வின்றி இயக்குபவர்கள் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் டாக்டர் சாந்தா தனக்கு இதுவரை கிடைத்த பத்மஸ்ரீ,பத்மபூஷன்,மகேச,அவ்வையார் விருதுகள் உள்ளீட்ட அனைத்து விருதுகள் அதற்கான பணம் பெருமை என்று அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே திருப்பியவர்.இந்த விருதும் பெருமையும் கூட மருத்துவமனைக்கும் நோயாளிகளின் நலனிற்கே பயன்படட்டும் என்கிறார் அமைதியாக.
விருதுகளால் பலருக்கு பெருமை சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை அந்த வகையில் இந்த பத்மவிபூஷன் விருதிற்கு டாக்டர் சாந்தாவால் பெருமை கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
-எல்.முருகராஜ்
விருதிற்கான பட்டியலில் இருந்தவர்களின் பெயர்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெயர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் பெயர்தான்.
எண்பத்தெட்டு வயதாகிறது இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார்.
பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டுவரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப்போயிருப்பவர்.
நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்கு காரணம் டாக்டர் சாந்தாதான்.
புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாக நிலைக்கு போனபோது சம்பந்தபட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலமையின் கொடுமையை உணரவைத்தவர் இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத்தந்தவர்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காக பெரிதும் பாடுபட்டு வருபவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லை என்று சொன்ன போது தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தவர்.
புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்தக்கூடிய நோய்தான்
என்பதை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருபவர்.
உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர்.இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களை கவனித்துக்கொள்வதற்காக குடிசையிலேயே தங்கியவர்.இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவ மனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.
புற்றுநோய் மருத்துவமனையை பராமரிக்க தேவையான நிதிச்சுமையால் மருத்துவமனை நிர்வாகம் சிரமப்பட்ட போது இருபதிற்கு இருபது என்ற திட்டத்தை இந்த மருத்துவமனையுடன் இணைந்து தினமலர் கொண்டுவந்தது.
இந்த திட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு நன்கொடை கொடுக்கலாம் நன்கொடையின் மதிப்பு இருபது ரூபாய்தான்.இதற்காக தொடர்கட்டுரை எழுதி கட்டுரையின் முடிவில் நன்கொடை இருபது ரூபாய் வழங்குவீர் என்ற வேண்டுகோள்விடப்பட்டது.
இந்த தொடர்கட்டுரை எழுதும் புனிதமான பணி எனக்கு வழங்கப்பட்டது, இதற்காக மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன் சில நாள் தங்கியிருந்து பல கட்டுரைகள் எழுதினேன்.சிறு துளி பெரு வெள்ளம் போல வாசகர்களால் அப்போது கணிசமான தொகை நன்கொடையாக கிடைத்தது.இதற்கான வாய்ப்பு வழங்கிய தினமலர் ஸ்ரீ ஆதிமூலம் அவர்களையுயும் டாக்டர் சாந்தா அவர்களையும் இந்த நேரத்தில் நினைத்து பார்த்து நன்றிகூர்கிறேன்.
உங்களால்தான் உயிர் பிழைத்தோம்... உங்களால்தான் இன்று நாங்கள் நன்றாக இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு, ஆசி வாங்க வருகிற மக்கள்... நோயின் பிடியிலிருந்து மீண்டு, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி, குடும்பமும் குழந்தைகளுமாக சந்திக்க ஆனந்தக் கண்ணீரோடு அவர்கள் என் முன் வந்து நிற்பதைப் பார்க்கும் போது, அதைவிட வாழ்க்கையில் வேறு எதுவுமே பெரிதல்ல, அவர்களே என்னை இந்த வயதிலும் தொய்வின்றி இயக்குபவர்கள் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் டாக்டர் சாந்தா தனக்கு இதுவரை கிடைத்த பத்மஸ்ரீ,பத்மபூஷன்,மகேச,அவ்வையார் விருதுகள் உள்ளீட்ட அனைத்து விருதுகள் அதற்கான பணம் பெருமை என்று அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே திருப்பியவர்.இந்த விருதும் பெருமையும் கூட மருத்துவமனைக்கும் நோயாளிகளின் நலனிற்கே பயன்படட்டும் என்கிறார் அமைதியாக.
விருதுகளால் பலருக்கு பெருமை சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை அந்த வகையில் இந்த பத்மவிபூஷன் விருதிற்கு டாக்டர் சாந்தாவால் பெருமை கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
-எல்.முருகராஜ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
தினமலரில் படித்து ரசித்த ஒரு பின்னுட்டம்
வாழ்த்துக்கள். இந்த விருதுக்கு பெருமை இவரால் வந்து விட்டது. இவரின் பனி தொடர வாழ்த்துக்கள். பல மருத்துவர்களை இவர் உருவாக்க வேண்டும். இவருக்கு சமமாக ரஜினிக்கு இந்த விருதை கொடுத்து இருப்பது வருந்த தக்கது. இவரில் மகத்தான பணிக்கு இந்த சிறிய விருது. தயவு செய்து ரஜினி இந்த விருதை வாங்காமல் இருப்பது, இந்த விருதுக்கு பெருமை!
வாழ்த்துக்கள். இந்த விருதுக்கு பெருமை இவரால் வந்து விட்டது. இவரின் பனி தொடர வாழ்த்துக்கள். பல மருத்துவர்களை இவர் உருவாக்க வேண்டும். இவருக்கு சமமாக ரஜினிக்கு இந்த விருதை கொடுத்து இருப்பது வருந்த தக்கது. இவரில் மகத்தான பணிக்கு இந்த சிறிய விருது. தயவு செய்து ரஜினி இந்த விருதை வாங்காமல் இருப்பது, இந்த விருதுக்கு பெருமை!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
பாரத ரத்னா கூட கொடுக்கலாம் இவர் செய்யும் சேவைக்கு .
மதர் தெரசாவிற்கு இவர் குறைச்சலா என்ன ?
மகசசே (Magsaysay award == பிலிப்பைன்ஸ் நாட்டில் தருவது நோபல் பரிசுக்கு சமமானது ) பெற்றவர் .
Dr Sir CV ராமனின் grand niece --( ரெண்டாம் தலைமுறை மருமாள் )
ரமணியன்
மதர் தெரசாவிற்கு இவர் குறைச்சலா என்ன ?
மகசசே (Magsaysay award == பிலிப்பைன்ஸ் நாட்டில் தருவது நோபல் பரிசுக்கு சமமானது ) பெற்றவர் .
Dr Sir CV ராமனின் grand niece --( ரெண்டாம் தலைமுறை மருமாள் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
வாழ்த்துகள்.
(இரண்டாவது பக்கமும் இருக்கிறது - அது தெரிந்தால் பாராட்டுகள் குறைந்துவிடும்).
(இரண்டாவது பக்கமும் இருக்கிறது - அது தெரிந்தால் பாராட்டுகள் குறைந்துவிடும்).
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
மேற்கோள் செய்த பதிவு: 1190466யினியவன் wrote:வாழ்த்துகள்.
(இரண்டாவது பக்கமும் இருக்கிறது - அது தெரிந்தால் பாராட்டுகள் குறைந்துவிடும்).
அடக்கிருஷ்ணா , அது என்ன இரண்டாவது பக்கம்? .சொல்லுங்கோ , இங்கே வேண்டாம் என்றால் தனிமடல் அனுப்புங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
ரொம்ப டீடெயில்டாக இல்லாமல் லேசா சொல்றேம்மா.
தொடங்கப்பட்டது என்னவோ சேவை மனப்பான்மையுடன் தான். தற்பொழுதும் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த சேவை மையத்தை வைத்து வரும் நிதியை அவர்களின் ப்ரைவேட் மருத்துவமனைக்கு டைவர்ட் செய்து அங்கு நிறைய சம்பாரிக்கிறார்கள். தற்போதைய மேனேஜ்மன்ட் அப்படித்தான் நடந்து வருகிறது.
என்னுடன் படித்த நண்பன் ஒருவன் மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மெடிகல் எக்விப்மெண்ட் வியாபாரம் செய்கிறான். அரசு, மந்திரிகள், தனியார் என அனைத்து சாரார்களும் அத்துபடி. கோடிகள் எங்கே செல்கிறது, என்ன தந்திரங்கள் நடக்கிறது என முழுவதும் அறிந்தவன் - மருத்துவ துறையில்.
தொடங்கப்பட்டது என்னவோ சேவை மனப்பான்மையுடன் தான். தற்பொழுதும் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த சேவை மையத்தை வைத்து வரும் நிதியை அவர்களின் ப்ரைவேட் மருத்துவமனைக்கு டைவர்ட் செய்து அங்கு நிறைய சம்பாரிக்கிறார்கள். தற்போதைய மேனேஜ்மன்ட் அப்படித்தான் நடந்து வருகிறது.
என்னுடன் படித்த நண்பன் ஒருவன் மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மெடிகல் எக்விப்மெண்ட் வியாபாரம் செய்கிறான். அரசு, மந்திரிகள், தனியார் என அனைத்து சாரார்களும் அத்துபடி. கோடிகள் எங்கே செல்கிறது, என்ன தந்திரங்கள் நடக்கிறது என முழுவதும் அறிந்தவன் - மருத்துவ துறையில்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
மேற்கோள் செய்த பதிவு: 1190470யினியவன் wrote:ரொம்ப டீடெயில்டாக இல்லாமல் லேசா சொல்றேம்மா.
தொடங்கப்பட்டது என்னவோ சேவை மனப்பான்மையுடன் தான். தற்பொழுதும் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த சேவை மையத்தை வைத்து வரும் நிதியை அவர்களின் ப்ரைவேட் மருத்துவமனைக்கு டைவர்ட் செய்து அங்கு நிறைய சம்பாரிக்கிறார்கள். தற்போதைய மேனேஜ்மன்ட் அப்படித்தான் நடந்து வருகிறது.
என்னுடன் படித்த நண்பன் ஒருவன் மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மெடிகல் எக்விப்மெண்ட் வியாபாரம் செய்கிறான். அரசு, மந்திரிகள், தனியார் என அனைத்து சாரார்களும் அத்துபடி. கோடிகள் எங்கே செல்கிறது, என்ன தந்திரங்கள் நடக்கிறது என முழுவதும் அறிந்தவன் - மருத்துவ துறையில்.
ம்ம்.. புரிகிறது யாரும் 'தூத் இல் துலா ஹுவா ' இல்லை என்கிறீகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
இனியவன் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் , ' அட ! கடைசியில் இவரும் இப்படித்தானா ! " என்று எண்ணத் தோன்றுகிறது.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
1956-ல் கனடாவில் தயாரித்த கேன்சர் சிகிச்சைக்கான
'கோபால்ட் 60’ என்ற கருவியை இந்த மருத்துவமனைக்கு
இலவசமாக வழங்கினர்.
ஆசியாவிலேயே முதன் முறையாக அந்தக் கருவியைப் பயன்படுத்த
ஆரம்பித்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் இந்தியாவே எங்கள்
பக்கம் திரும்பிப் பார்த்தது. குடிசையில் மருத்துவம் பார்க்கும் இடத்தில்
இவ்வளவு விலை உயர்ந்த கருவி எப்படி வந்தது என்று எல்லோருக்கும்
ஆச்சர்யம்.
மத்திய அரசில் இருந்து அடுத்த நாளே ஒரு குழு வந்து இங்கு ஆய்வு
நடத்திய பின்னர்தான் மக்கள் சேவைக்காக இப்படி ஓர் மருத்துவமனை
இயங்குகிறது என அனைவருக்கும் தெரியவந்தது.
அரசாங்கமும் உதவி செய்ய ஆரம்பித்தது.
-
டாக்டர் சாந்தா
'கோபால்ட் 60’ என்ற கருவியை இந்த மருத்துவமனைக்கு
இலவசமாக வழங்கினர்.
ஆசியாவிலேயே முதன் முறையாக அந்தக் கருவியைப் பயன்படுத்த
ஆரம்பித்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் இந்தியாவே எங்கள்
பக்கம் திரும்பிப் பார்த்தது. குடிசையில் மருத்துவம் பார்க்கும் இடத்தில்
இவ்வளவு விலை உயர்ந்த கருவி எப்படி வந்தது என்று எல்லோருக்கும்
ஆச்சர்யம்.
மத்திய அரசில் இருந்து அடுத்த நாளே ஒரு குழு வந்து இங்கு ஆய்வு
நடத்திய பின்னர்தான் மக்கள் சேவைக்காக இப்படி ஓர் மருத்துவமனை
இயங்குகிறது என அனைவருக்கும் தெரியவந்தது.
அரசாங்கமும் உதவி செய்ய ஆரம்பித்தது.
-
டாக்டர் சாந்தா
Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
M.Jagadeesan wrote:இனியவன் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் , ' அட ! கடைசியில் இவரும் இப்படித்தானா ! " என்று எண்ணத் தோன்றுகிறது.
IAS IPS படித்துவிட்டு இள ரத்தங்கள் உள்ளே வரும்பொழுது வீறு கொண்டு வந்து பின்னர் தடம் மாறி/மாற்றப் படுவது போல் தான் அய்யா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் !
» குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
» எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !
» கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்..அவசியம் படியுங்கோ :)
» அதிர்ச்சியான ஆனால் நெத்தியடியான விழிப்புணர்வு வாசகம் - அவசியம் படியுங்கோ :)
» குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
» எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !
» கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்..அவசியம் படியுங்கோ :)
» அதிர்ச்சியான ஆனால் நெத்தியடியான விழிப்புணர்வு வாசகம் - அவசியம் படியுங்கோ :)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|