புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_lcapபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_voting_barபெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 28, 2016 3:22 pm

First topic message reminder :

பதின் பருவம். 
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!! 
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும் 
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!! 

இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!!  விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!! 
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்!  பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!! 

வாலிப வயதில் எதார்த்தமாய்  ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில்  விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!! 
இவள் சிந்திய ஒற்றை  புன்னகை அவனை நிலை குலைய செய்தன!!  மகிழ்ச்சி வெள்ளத்தில்  இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க  அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! 

காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள 
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!! 
பெண்  வீட்டில் பிரச்சினை பிறந்தது  ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும்  வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம்  விட்டு விடு!!   மகளே பெற்றோர் கதறினர் 

அம்மா காதலில்  விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்! 
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!! 

பெண்ணே உன் விருப்பப்படி  என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது!  மன்னித்துவிடு--- இது தாய் 
வேண்டாம் விட்டு விடு  அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!! 

ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம்  அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!!  வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!! 
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!!  கைப்பற்றி  நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!! 

மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!!  மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!! 
கலப்பின் மிகுதியால்  கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்!   உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!! 

மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!! 
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது த‌ற்போதைய நடைமுறை!! 
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!! 
பரிசோதனைகள் முடிவில்  கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! 

இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!!  காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!!  தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும்  அதன் பலனை தற்பொழுது  அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!! 
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி! 
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான் 
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??

தொடரும்....



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 11:27 am

அதனால் முதலில் தம்பதிகள் தங்களுக்குள் , பேசி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்க வேண்டும்................. முன்று வயது வரை நம்மால் எத்தனை எத்தனை சொல்லிக்கொடுக்க முடியுமோ அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம்......கவனியுங்கள்....' நாம் சொல்லிக்கொடுக்கலாம்', ப்ளே ஸ்கூல் கொண்டு விட்டு சொல்லித்தருவது இதில் சேராது புன்னகை ................. கூடாது கூடாது கூடாது

நாமே தான் சொல்லித்தரணும் , சரி 3 வயது வரை என்றால், எப்ப ஆரம்பிப்பது  என்கிற கேள்வி வரும்..............நாம் கருவை சுமக்கிறோம் என்று தெரிந்த நாளில் இருந்து ஆரம்பிக்கலாம். நாமே பிள்ளைகளை வடி வமைக்கலாம்.......இது 100 %நிஜம்..............

புராண கதைகளை கேட்டு வளர்ந்தேன் நான் எனவே, நாம் பேசுவதை கருவுக்குள் இருக்கும் சிசு கேட்கும் என்று ப்ரஹ்லாதன் கதை முலம் தெரிந்து கொண்டேன். அதையே நானும் செய்தேன்........பலன் கை  மேல் கிடைத்திருக்கு..............அதனால் தான் சொல்கிறேன், அப்போவே நம் பாடத்தை ஆரம்பித்துவிடணும்......... யாருக்குத்தான் சத் புத்திரன் மேல் ஆசை இல்லை?...சொல்லுங்கோ புன்னகை

எனவே, குழந்தையுடன் பேச ஆரம்பிக்கணும், அது ஆணோ பெண்ணோ , நோ ப்ரோப்ளேம், நம் குழந்தைக்கு , நல்ல நடத்தைகளை சொல்லித்தர என்ன பிரச்சனை நமக்கு?....நிறைய நேரம் அத்துடன் பேசணும்..........நம் புராணக்கதைகளை உரக்க படிக்கலாம், உபன்யாசங்கள் கேட்கலாம், ஸ்லோகங்கள் கேட்கலாம், கலாச்சாரம், பண்பாடு குறித்த புத்தகங்களை கொஞ்சம் உரக்க படிக்கலாம்,  மனதை ரொம்ப ரிலாக்சாக வைத்துக்கொள்ளலாம், நாம் செய்யும் ஒவ்வொன்றும் , சிற்பி ஜாக்கிரதையாக சிற்பத்தை செதுக்குவது போல என்று உணர்ந்து செயல்படணும்  . புன்னகை

கண்டிப்பாக நன்னடத்தையும் இறை உணர்வையும் நாம் இந்த நேரத்தில் சொல்லித்தந்து ஆகணும். இறை நம்பிக்கை , அது எந்த மதமானாலும் இருக்கலாம், எல்லா மதங்களுமே  நமக்கு நல்லது தான் சொல்லித்தருகிறது...........குறைந்த பக்ஷம் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு என்றாவது ஒப்புக் கொள்ளணும் .........அந்த சக்திக்கு  , அடங்கி தலை வணங்குவது வரணும்...........

( இதில் மாற்றுக்கருத்து வரலாம், வரும், இது என்கருத்து மட்டுமே.............மீண்டும் சொல்கிறேன் நான் சொல்வது எல்லாமே நான் செய்து பார்த்தது தான்...........Guest உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் ! )

இப்படி அணு அணுவாய் நம் குழந்தை யை கருவிலேயே திருவாக நாம் தான் வளர்க்கணும்.......வெளியே வந்ததும் கூட,

* நீ இப்போ என்னை சார்ந்து இருப்பது போல எனக்கு வயதானால்  நான் உன்னை சார்ந்து இருப்பேன்................

* நீ தப்பு செய்தால் எனக்கு ரொம்ப மனசு கஷ்டப்படும்..........

* உனக்கு என்ன வேண்டுமாணாலும்  செய்ய நான் இருக்கேன் ............

போன்றவற்றை  குழந்தைகள் உணரும் வண்ணம் சொல்லி வளர்க்கணும்....சிலர் சொல்வார்கள் சென்டிமென்ட் என்று, அதில் தப்பே இல்லை......'நீ இப்படி செய்தால் எனக்கு வருத்தம் வரும்' என்று தாராளமாய் குழந்தைகளிடம் சொல்லலாம்............

அதேபோல, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ரொம்ப பொறுப்பாக பதில் சொல்லணும்.............ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் இங்கு, நாங்க அப்போ பரிதாபாதில் (Faridabath )   இருந்தோம், எங்க கிருஷ்ணா ஒன்றாம் கிளாஸ் படித்துக்கொண்டிருந்தான். அப்போ அங்கு வாரம்  ஒரு முட்டை யாவது சாப்பிடணும் என்று குழந்தைகளுக்கு சொல்லித்தந்தர்கள், ஒரு இனிமையான பாடல் முலம், நீங்க எல்லோரும் கூட கேட்டு இருப்பிங்க...........

அந்த பாடல் அதே மேட்டில் , கமல் படத்தில் , வரும் முதல் 2 அடி,

"மேரி ஜான், மேரி ஜான் முர்கிகா அண்டா  ....." என்று துவங்கி "சண்டேகி சண்டே கவோ அண்டே" என்பது போல முடியும்................

இதைக்கேட்டதும் கிருஷ்ணா என்னிடம் வந்து , " அது என்ன, 'அண்டா'?.......(அதாவது முட்டை? )...எங்க மிஸ் சொன்னா நாங்க எல்லோரும் சாப்பிடணுமாம், கிளாஸ் இல் சில பசங்க நாங்க சாப்பிடறோம் நு கை தூக்கினாங்க, ஒருத்தன் தன் டப்பாவிலிருந்து காட்டினான், அது 'ஆலு'  (உருளைகிழங்கு ) போல இருந்தது..............எனக்கும் தரியா?" என்றான்..................

நான் இப்போ இவனை manage  பண்ணியாகணும்..............உங்களுக்கு தெரிந்து இருக்கும் நாங்கள் பிராம்மணர்கள்........................ம்ம்...குழந்தைக்கு எப்படி சொல்லப்போகிறாய் என்பது போல கிருஷ்ணா அப்பா என்னை பார்த்தார்.............

நான் கொஞ்சம் யோசித்து, " ஆமாம் அது உடம்புக்கு ரொம்ப நல்லது தான் கிருஷ்ணா, ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு" என்றேன்.................

"ம்..சொல்லு" என்பது போலப்பார்த்தான்  குழந்தை, ......

"நாமெல்லோரும் பிறக்கும்போதே, கோவிந்தா, நமக்கு இந்த பிறவிக்கு என்று நாம் செய்யக் கூடியது செய்யக் கூடாதது , சாப்பிடக்கூடியது சாப்பிடக் கூடாதது என்று ஒரு லிஸ்ட்
கொடுத்து இருக்கிறார், இந்த முட்டை நம் லிஸ்ட் இல் இல்லை டா ..........எனவே நாம் சாப்பிட முடியாது............ இது போல நிறைய இருக்கு, நீ கொஞ்சம் பெரியவனானதும் சொல்லலாம் என்று இருந்தேன், இன்று சொல்லும் படி ஆய்டுத்து " என்று சொல்லி நிறுத்தினேன்................

ஒரே நிமிடம் தான்," ஹோ!........அப்படியா?......கோவிந்தாவே சொல்லிட்டா  அப்புறம் என்ன இருக்கு?......அவா லிஸ்ட் இல் முட்டை இருக்கோ? என்றான்.........

நான், "ம்ம்.. இருக்கலாம்" என்றேன்.................

'சரி, நோ ப்ரோப்ளேம் ( இந்த வார்த்தை நாங்க நிறைய சொல்வோம் புன்னகை ) .நாளை நான் எங்க மிஸ் கிட்ட சொல்லிடறேன், அந்த 'அண்டாக்கு' பதிலாய் நான் நிறைய 'தூத்' குடிக்கறேன் என்று சொல்லிடறேன்' என்று சொல்லி விட்டு போய்விட்டான்..............

அவ்வளவு தான் ப்ரோப்ளேம் solved ...........கிட்ட தட்ட அவன் 5 வது படிக்கும் வரை எந்த புதிய உணவை பார்த்தாலும் என்னிடம் வந்து, "  இது நம் லிஸ்ட் இல் இருக்கா? ' என்று மறக்காமல் கேட்ட பிறகே தொடுவான் என்றால் ,  பார்த்துக்கொள்ளுங்கள்...............

இது ஒரு சின்ன விதை தான், நான் அந்த 'கோவிந்தா' லிஸ்ட் இல் பிறகு நிறைய சேர்த்து விட்டேன், ஆமாம் , விதை விதைப்பது தான் கஷ்டம், பின் அதை வளர்ப்பது சுலபம்புன்னகை.............முட்டை மட்டும் இல்லை, மற்றவைகள் பேரும் சொல்லி அதெல்லாமும் சாப்பிடக்கூடாது..............என்ன கஷ்டம் வந்தாலும் , சாப்பாடே கிடைக்காது  என்கிற நிலை வந்தாலும், வெளிநாட்டில் இருக்க நேர்ந்தாலும், வெறும் பிரட், பழம் , காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு ஜீவிக்கணும்......சுயபாகம் ரொம்ப சிறந்தது என்று சொல்லி நான் அவனுக்கு சமைக்கவே கத்து கொடுத்துவிட்டேன்...........இதுக்கெல்லாம் முன்னோடி, நாம் அப்படி இருக்கணும் என்பதே...............

( அப்புறம், டர்க்ஸ்  , சிகரெட், மது எல்லாம் ஒவொன்றாக லிஸ்ட் இல் சேர்ந்து கொண்டது  கண்ணடி  கண்ணடி  கண்ணடி )



தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 11:28 am

நாம் குடித்துக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு, குழந்தைகளை , 'நான் தான் கேட்டுவிட்டேன், நீ யாவது நல்லா இரு' என்றால், அவா இருக்க மாட்டா, 'நானும் இதையே என் குழந்தைக்கு சொல்லிக்கறேன்' என்று நினைப்பார்கள் .எனவே, நாம் நம் குழந்தைகளுக்கு என்ன சொல்கிறோமோ அது போல முதலில் நாம் நடந்து காட்டணும்..............


இப்போவெல்லாம், Good touch Bad touch என்று குழந்தைகளுக்கு சொல்லித்தர சொல்கிறார்கள்...............அதே போல பெண் குழந்தைகளுக்கு ஒரு 10 - 11 வயசானதும் நாம் அம்மாக்கள் அவளை கூட்டிவைத்து ,

"இனி நீ சின்னப்பெண் இல்லை, யாரையும் தொட்டு பேசக் கூடாது, ( ஏற்கனவே தான் சொல்லி இருக்கோமே, Good touch Bad touch , Private parts ஐ யாரையும் தொட அனுமதிக்கக் கூடாது என்று புன்னகை ) என்று மீண்டும் சொல்லி, திடீரென்று 'பெரியவளானால்' என்ன செய்யணும், எப்படி செய்யணு, பள்ளிகூடத்தில் இருந்தாலும் தனியே எப்படி handle செய்வது" என்று சொல்லித் தரணும். .............

அவள் பயப்பட்டால், அதை போக்குவது நம் கடமை..............

அதேபோல, ஆண் குழந்தைகளிடமும், அப்பா பேசணும், அவர்களுக்கும் அவர்களின் நிலைமையை விளக்கி சொல்லணும்.............எந்த சந்தேகம் வந்தாலும் என்னைக் கேள் நான் இருக்கேன் உனக்கு என்று ஆறுதல் சொல்லணும்.............இது எல்லோருக்கும் சகஜம் என்று அவங்களை சகஜப்படுத்தணும்..................

"இந்த வயதில் அதாவது டீன் ஏஜ் என்று சொல்லக் கூடிய வயதில் மனம் , ஆண் பெண் பேதம் பார்க்கும், அவர்களைப் பாத்ததும் இத்தனை நாள் இல்லாமல் வேறு மாதிரி தோணும் , அதெல்லாம் சகஜம், ஆனால் நாம் மன உறுதியுடன் இருக்கணும்...........இந்த 13 முதல் 21 வயது வரை உள்ள காலம் ரொம்ப பொல்லாதது, பார்த்து
நடந்து கொள்ளவில்லை யானால் வாழ்க்கை அதோ கதி தான், ஆனால் அதே இந்த 8 - 9 வருடங்களை எவன் ஒருவன் கட்டுப்படுகன் கடந்து வந்து விடுகிறோ அவன் காலடி இல் உலகமே கிடக்கும்" ...என்று சொல்லி சொல்லி அவர்களை வழிக்கு கொண்டு வரணும்..............

நான் ஏற்கனவே ஒரு பதிவில் போட்டிருப்பது தான் இது புன்னகை...............லிங்க் வேண்டுமானாலும் தருகிறேன்..இதோ அது புன்னகை குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ புன்னகை

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும்
என்பார்.

ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும்.

"நாம் குருவி காக்காய் இல்ல, ரக்கை முளைத்ததும் பறந்து போவிட, அம்மா அப்பாவை மறந்து போய்விட, நமக்கு ஸ்வாமி ரெண்டு கைகள் கொடுத்தது எதுக்கு தெரியுமா?..............ஒருகையால் நம் அம்மா அப்பாவை அவர்களின் வயோதிகத்தில் அணைத்துக்கொள்ளவும், அதேநேரம் நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளை கை தூக்கிவிடவும் தான்"..என்று சொல்லணும்..............

'நீ செய்யும் ஏதொரு செயலும் என்னை பாதிக்கும்' என்று சொல்லணும்..............." நீ கேட்பதை எல்லாம் நான் எப்படி ஆசை ஆசையாக வாங்கித்தருகிறேன், அதற்கு பிரதியாக, ஒன்றே ஒன்று தான் எனக்கு வேண்டும் , என்னுடன் வந்து 100 பெண் வேண்டுமானாலும் பார்த்து வேண்டாம் என்று சொல், மோசமில்லை,, ஆனால் எனக்கு அந்த வாய்ப்பே தராமல் நீயாகவே முடிவேடுக்கதே உன் வாழ்க்கை விஷயத்தில் என்று சொல்லணும்"............

' அது பெற்றவர்களின் கனவு, பிள்ளைகள் அவர்களுக்குத்தரும் பெரும் அங்கீகாரம்' என்று புரியவைக்கணும்.................'பிறந்தபோது அதுக்கு பசிக்கும் என்று தெரிந்து பாலூடியவர்களுக்கு , குளிருக்கு போர்த்து விட்டவர்களுக்கு, 4 வயதில் பள்ளி இல் சேர்த்தவர்களுக்கு தெரியாதா தன குழந்தைக்கு பொருத்தமான துணை எப்போ வேண்டும் எப்படி வேண்டும் என்று?.................என் மேல் முழு நம்பிக்கி வை, நானும் உன் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கேன்' என்று விரிவாக பேசணும்................

'இந்த கஷ்டமான கால கட்டத்தை தாண்டித்தான் நானும் வந்திருக்கேன்' என்று புரியவைக்கணும்...............மீண்டும் சொல்கிறேன், காதலித்து மனம் புரிந்து கொண்டவர்களால் ஒரு எல்லைக்கு மேலே தன் குழந்தைகளை சொல்ல முடியாது, மேலே சொன்ன பீடி சிரரெட் போலத்தான் இதுவும்............சோகம்

கொஞ்சம் சொல்லலாம், தாங்கள் எவ்வளவு இழந்தோம் என்று...............என் வாழ்விலிருந்து நீங்கள் படிப்பு கட்றுக்கொளுங்கள் என்று சொல்லலாம், பசங்க கேட்டால் ................சூப்பர் ! புன்னகை ..............அதனால் தான் திரும்பத்திரும்ப சொல்கிறேன் நாம் ரொம்ப ஜாக்கிரதையாக handle பண்ணனும் என்று................

இந்த நேரத்தில், ( எப்பவுமே முக்கியம் தான் புன்னகை ) குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது ரொம்ப முக்கியம், இப்போ தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால் அந்த கவலை நமக்கு கொஞ்சம் குறையும்..........இல்லாவிட்டால் அவர்கள் role ம் நாமே எடுக்கவேண்டி வரும். நிறைய பேசணும், தினமும் பள்ளி இல் நடந்த விஷையங்களை அவர்கள் சொல்ல கேட்கணும்......பொறுமையாக ............

அவர்கள் முக்கியமாய் 'பொய்' சொல்லவேக் கூடாது................ கூடாது கூடாது கூடாது .....எல்லா தப்புகளுக்கும் ஆரம்பமே அது தான்......நம்மிடம் பயம் இருப்தால் தான் பொய்யே வருகிறது, அதனால் தான் நான் குழந்தைகளிடம் சகஜமாய் இருக்கணும் என்று சொல்கிறேன் ...............

பள்ளி இல் அல்லது அன்று நடந்ந்ததை நம்மிடம் பகிரும்போது, அவர்கள் தடுமாறினால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம், உடனே என்னவென்று பார்க்கணும், கோபப்படக் கூடாது................இதுக்கெல்லாம் நேரம் செலவழிக்காமல் போனால் வேறு எதற்குத்தான் செலவழிப்பது?..............

கண்டிப்பாக privacy என்று சொல்லி, தனி அரை கொடுக்கவே கூடாது...............நம்முடன் லிவிங் ரூம் இல் தான் அவா இருக்கணும்..........நோ போன், நோ face புக்.................அதுக்கெல்லாம் வாழ்க்கை முழுவதும் இருக்கு, இந்த 8 - 9 வருடங்களை ஒரு யாகம் யக்ஞம் செய்வது போல கழிக்கணும் என்று சொல்லணும், நாமும் அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு தோள் கொடுக்கணும்.....................

விளையாடும் நேரத்தில் விளையாட்டு படிக்கும்நேரத்தில் படிப்பு என்பதில் குறியாக இருக்கனும், நேரம் கழித்து விட்டுக்கு வருவது போன்றவற்றை safety காரணங்களுக்காக, கூடியவரை தவிர்க்கணும்...............இது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருக்குமே பொருந்தும்..............

மெயின் ஆக ஒன்று இரண்டுசொல்கிறேன்,

* எந்த வீட்டில் மனைவியை அந்த கணவன் மதிக்கிறாரோ, அந்த வீட்டில் குழந்தைகளும் தங்கள் அம்மாவை மதிக்கும்..............'ஒனக்கு ஒண்ணும் தெரியாது' குழந்தைகள் எதிரில் மட்டம் தட்டுகிற
ஆண்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகள் கெட்டுப்போக வாய்ப்புகள் அதிகம்...........இது கணவனை மட்டம் தட்டுகிற மனைவிகளுக்கும் பொருந்தும்.

* கூடுமானவரை அம்மா கண்டிப்புடனும் அப்பா செல்லமும் தரணும் புன்னகை............அதே போல , அப்பாக்கு பிடிக்காது இதை செய்யாதே என்று அம்மா சொன்னால், ஒ ..இவளுக்கு பிடிக்கும் , தன்னை இவள் அப்பாவிடமிருந்து காப்பாள் என்று குழந்தைகள் நினைத்துவிடும் ஆபத்து இருக்கு......எனவே, குழந்தைகள் செய்வது தப்பானால் கண்டிக்கலாமே தவிர கணவனிடமிருந்து மறக்கவே கூடாது.............

கண்டிப்பாக நீதி போதனைகள் குழந்தைகளுக்கு சொல்லித் தரணும், எல்லாத்துக்கும் ஆசிரியர்களையும் பள்ளிகளையுமே நம்பாமல், நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரணும் என்றே நினைக்கிறேன் புன்னகை......பிறகு இது பற்றி விரிவாக எழுதுகிறேன், இப்போவே நிறைய எழுதிவிட்டேன், கொஞ்சம் பிரேக் எடுக்கிறேன் சசி......பிறகு மீண்டும் தொடருகிறேன்................நான் சொல்ல வருவது எல்லாம் இது தான்,

நாம் வளர்க்கும்படிக்கு வளர்த்தால், நீங்கள் மேலே குறிப்பிட்ட சமூக அவலங்கள் நிச்சயம் மாறும்..............அவ்வை சொல்லலையா, " வரப்புயர" என்று................அது போலத்தான் இதுவும், நாம் மாம் குழந்தைகளை சரியாக வளர்த்தால், அதேபோல 10 -15 குடும்பகள் இருக்கும் குடி இருப்பு நல்லா இருக்கும், அதேபோல 10 -30 குடி இருப்புகளைக் கொண்ட தெரு நல்லா ஆகும்................இது தொடர்ந்து முன்னேறி நாடு நலம் பெரும்...............

இது ஒரு கூட்டு முயற்சி தான், அதுக்கு நாள் படும் தான் ஆனால் எங்காவது ஆரம்பிக்கணுமே, அது நாமாக இருக்கலாமே, ஊர்கூடித் தானே தேரை இழுத்தாகணும்?.................மனதில் வஞ்சகமும் துரோகமும் பேராசையும் தான் மனிதனை மிருகமாக்குகிறது.............. அதன் காரணமாகவும், ஆடம்பரமாக வாழவேண்டும் என்று சில பெண்கள் விரும்புவதாலும், மற்றும் ஏழ்மையாலும் தான் ......இது உங்களின் 8 வது கேள்விக்கான பதில் சசி புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 03, 2016 2:57 pm

மிகவும் நன்றி அம்மா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதில் அளித்தற்கு.
எல்லாம் நமது குழந்தைகள் வளர்ப்பில் தான் இருக்கிறது அம்மா. நானும் இனியன் கிட்ட இப்படி தான் தான் சொல்வேன். சிவபெருமான் கோவிச்சுப்பார் என்பேன். சரி மா என்று புரிந்து கொள்வான். குழந்தைகள் வளர்ப்பில் நிச்சயம் அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடம் இருக்கவேண்டும். நல்ல சூழ்நிலையில் வளர ஏற்படுத்தி தரவேண்டும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Feb 03, 2016 4:28 pm

அருமை அம்மா .........அனைத்தையும் அப்படியே மனதில் நிறுத்த முடியவில்லை அதனால் படியெடுத்து சேமித்து வைத்து கொண்டேன் . படித்து பின் அப்படியே விட்டுபோக மனமில்லை .அவசியமான பதிவாயிற்றே!!

மிகவும் நன்றி அம்மா ...

எங்கள் செல்லத்தை வளர்ப்பது பற்றிய சிறு ஆலோசனைக்காக தங்களை தனிமடலில் தொடர்புகொள்கிறேன் அம்மா .....



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 6:50 pm

சசி wrote:மிகவும் நன்றி அம்மா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதில் அளித்தற்கு.
எல்லாம் நமது குழந்தைகள் வளர்ப்பில் தான் இருக்கிறது அம்மா. நானும் இனியன் கிட்ட இப்படி தான் தான் சொல்வேன். சிவபெருமான் கோவிச்சுப்பார் என்பேன். சரி மா என்று புரிந்து கொள்வான். குழந்தைகள் வளர்ப்பில் நிச்சயம் அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடம் இருக்கவேண்டும். நல்ல சூழ்நிலையில் வளர ஏற்படுத்தி தரவேண்டும்.

நல்லது சசி ஒன்றிரண்டு விட்டுப்போச்சு, அதை தனி பதிவாக போடுகிறேன் புன்னகை...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 6:54 pm

K.Senthil kumar wrote:அருமை அம்மா .........அனைத்தையும் அப்படியே மனதில் நிறுத்த முடியவில்லை அதனால் படியெடுத்து சேமித்து வைத்து கொண்டேன் . படித்து பின் அப்படியே விட்டுபோக மனமில்லை .அவசியமான பதிவாயிற்றே!!

மிகவும் நன்றி அம்மா ...

எங்கள் செல்லத்தை வளர்ப்பது பற்றிய சிறு ஆலோசனைக்காக தங்களை தனிமடலில் தொடர்புகொள்கிறேன் அம்மா .....
மேற்கோள் செய்த பதிவு: 1191768

மிக்க நன்றி செந்தில் புன்னகை............தாராளமாய் அனுப்புங்கோ....எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் புன்னகை

"எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே ........

பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே............."


இதை நினைவில் வைத்தால் போறும்; எல்லாமே நம் கை இல் தான் இருக்கு என்று புரிந்துவிடும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 7:19 pm

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 UoIHDZqSJyWPXcIk5GtN+20160120_203154_resized.jpg1

thank you ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2016 7:25 pm

நீண்ட பயனுள்ள கருத்துமிக்க பின்னூட்டங்கள் , க்ரிஷ்ணாம்மா .
வி பொ பா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 03, 2016 7:44 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:அருமை அம்மா .........அனைத்தையும் அப்படியே  மனதில் நிறுத்த முடியவில்லை அதனால் படியெடுத்து சேமித்து வைத்து கொண்டேன் . படித்து பின் அப்படியே விட்டுபோக மனமில்லை .அவசியமான பதிவாயிற்றே!!

மிகவும் நன்றி அம்மா ...

எங்கள் செல்லத்தை வளர்ப்பது பற்றிய சிறு ஆலோசனைக்காக தங்களை  தனிமடலில் தொடர்புகொள்கிறேன் அம்மா .....
மேற்கோள் செய்த பதிவு: 1191768

மிக்க நன்றி செந்தில் புன்னகை............தாராளமாய் அனுப்புங்கோ....எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் புன்னகை

"எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே  ........

பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே............."


இதை நினைவில் வைத்தால் போறும்; எல்லாமே நம் கை இல் தான் இருக்கு என்று புரிந்துவிடும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191796

தோழரே கிருஷ்ணாம்மா வின் பதிவில் நானும் பதிவு செய்து இருக்கிறேன். குழந்தை வளர்ப்பு அவசியம் படியுங்கோ.... இதில் இந்த பதிவுக்கான கேள்வி பதில் அதிலயும் இருக்கிறது. அவசியம் படிங்க. குழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டியது? செய்ய கூடாது என்ன? எல்லாம் விளக்கமாக இருக்கிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 03, 2016 7:52 pm

krishnaamma wrote:
சசி wrote:மிகவும் நன்றி அம்மா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதில் அளித்தற்கு.
எல்லாம் நமது குழந்தைகள் வளர்ப்பில் தான் இருக்கிறது அம்மா. நானும் இனியன் கிட்ட இப்படி தான் தான் சொல்வேன். சிவபெருமான் கோவிச்சுப்பார் என்பேன். சரி மா என்று புரிந்து கொள்வான். குழந்தைகள் வளர்ப்பில் நிச்சயம் அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடம் இருக்கவேண்டும். நல்ல சூழ்நிலையில் வளர ஏற்படுத்தி தரவேண்டும்.

நல்லது சசி ஒன்றிரண்டு விட்டுப்போச்சு, அதை தனி பதிவாக போடுகிறேன் புன்னகை...
மேற்கோள் செய்த பதிவு: 1191795


[size=34]நன்றி அம்மா, தனி திரி துவங்கி விடுங்கள். விருப்பம் பயன்படுத்தி உள்ளேன். எனக்கு வருத்தம் மாக இருந்தது.இவ்வளவு நேரம் சிரமப்பட்டு பதிவு செய்ய சொல்லி விட்டேனே என்று. மன்னிக்கவும். நல்ல பல கருத்துகளை தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக