ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

+4
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
சசி
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by சசி Thu Jan 28, 2016 3:22 pm

First topic message reminder :

பதின் பருவம். 
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!! 
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும் 
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!! 

இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!!  விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!! 
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்!  பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!! 

வாலிப வயதில் எதார்த்தமாய்  ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில்  விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!! 
இவள் சிந்திய ஒற்றை  புன்னகை அவனை நிலை குலைய செய்தன!!  மகிழ்ச்சி வெள்ளத்தில்  இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க  அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! 

காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள 
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!! 
பெண்  வீட்டில் பிரச்சினை பிறந்தது  ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும்  வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம்  விட்டு விடு!!   மகளே பெற்றோர் கதறினர் 

அம்மா காதலில்  விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்! 
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!! 

பெண்ணே உன் விருப்பப்படி  என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது!  மன்னித்துவிடு--- இது தாய் 
வேண்டாம் விட்டு விடு  அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!! 

ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம்  அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!!  வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!! 
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!!  கைப்பற்றி  நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!! 

மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!!  மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!! 
கலப்பின் மிகுதியால்  கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்!   உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!! 

மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!! 
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது த‌ற்போதைய நடைமுறை!! 
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!! 
பரிசோதனைகள் முடிவில்  கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! 

இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!!  காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!!  தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும்  அதன் பலனை தற்பொழுது  அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!! 
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி! 
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான் 
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??

தொடரும்....


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by T.N.Balasubramanian Fri Jan 29, 2016 7:34 pm

உங்கள் எழுத்து நடை , கவிதை போலுள்ளது .
நல்ல ஓட்டம் . விவாதிக்க,  நிச்சயமாக பல விஷயங்கள் உள்ளன .
பல பின்னூட்டங்களை எதிர்ப் பார்க்கலாம் .

ரமணியன்

{பிகு
sasi quote
"நல்ல பதிவு ஐயா, தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்."
மேற்கோள் செய்த பதிவு: 1189372 quote

ஈகரை உறவுகளுக்காக எனது நெருங்கிய உறவினரின் நண்பர் விஷயத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் ." என்று 25 தேதிய பதிவில் கூறிய படி , 26 தேதி  நான் எழதிய  மஹா பெரியவா III பதிவிட்டுளேன் .பார்க்கவும் "}
ர...ன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by சசி Fri Jan 29, 2016 9:46 pm

M.Jagadeesan wrote:திருநங்கை என்ற வார்த்தை புதிய கண்டுபிடிப்பு . " அலி " என்ற சொல்லை மாணிக்கவாசகரே தம்முடைய திருவெம்பாவையில் பயன்படுத்தியுள்ளார் . தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து இனி " திருநங்கை " என்று
அழைக்கிறேன் .

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்

கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
மேற்கோள் செய்த பதிவு: 1190684


ஐயா மிக்க நன்றி. இப்படி ஒரு பாடலை பதிவுசெய்ததற்கு. நீங்கள் தமிழ் அறிஞர்.
இலக்கியத்தில் இருந்து பதிவு செய்து உள்ளீர்கள். 
அவர்கள் பாமரர்கள் அவர்களை இழி சொல்லாக அலி என்றழைத்து அந்த வார்த்தையின் மதிப்பை குறைத்து விட்டார்கள். அதனால் தான் கூறினேன் ஐயா மன்னிக்கவும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by T.N.Balasubramanian Fri Jan 29, 2016 10:26 pm

திரு நங்கை புதிய கண்டுபிடிப்புதான்
திரு என்ற முன் அடைமொழி ஆண்களுக்கும்
திருமதி பெண்களுக்கும் உரித்தானது
இவர்கள் ஆண் +பெண்
அதாவது திரு நங்கை .
போற்றப்படவேண்டிய காரணப்பெயர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by K.Senthil kumar Sat Jan 30, 2016 6:47 am

தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
இருவரின் தவறும் கிடையாது அது நியதி ..

2.காதலே தவறா??
எண்ணத்தில் ,நினைவில் தவறுதல் என்பதுதான் காதலே ...ஆகவே காதலை தவறு என்று சொல்ல முடியாது .
காதலிக்காதவர்கள் பாலிய திருமணம் செய்தவர்கலாகத்தான் இருக்கமுடியும்
இன்றைய காலகட்டத்தில் அது அனைவரையும் ஆட்கொண்டு விடும் அதை பலர் வெளி சொல்வதில்லை  அவ்வளவுதான் .


3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
ஆண்மகனை நம்பி காதலிப்பது தவறில்லை கண்டதும் காதல்தான் தவறு .

4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
காதலின் ஆரம்பம் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை பின் தும்பை விடுத்து வாலை பிடித்தால் பிடிப்பவர் தான் விழவேண்டும் .

5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு உள்ளானார்?
வாலிப வயது
காதலில் திளைப்பவர்களுக்கு இனிமையான காலம்
காதலிக்காதவர்களுக்கு இம்சையான காலம் இம்சையை விட்டொழிக்க இச்சையை தேடியிருப்பார்

6.அவனை பாலியல் இச்சைக்கு தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இன்றைய காலத்தில் மாறிவரும் சமூக பழக்கவழக்கமே ..

7.பெற்றோர் வளர்ப்பா?
ஒரு எல்லை வரை பெற்றோரின் வளர்ப்பு பின் அவரவர் பொறுப்பு .

8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?

கொடுமையிலும் கொடுமை வறுமையே ...

9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
ஆண்களுக்கு காமம் என்பது பூமியில் கனலும் எரிமலை குழம்பு போன்றது அது என்றாவது ஒருநாள் வெடித்து வெளி ஏறிவிடும் .
அப்பொழுதெல்லாம் தவம் செய்தவர்கள் காமத்தை கட்டு படுத்த வில்லை மனதை வேறு திசையில் செலுத்தினார்கள் அந்த வித்தை தெரியாதவர்களால் என்ன செய்ய இயலும் .
இப்பொழுதெல்லாம் அதை கட்டுபடுத்துவதால் தான் பாலியல் வன்னுகர்வு அரங்கேறுகிறது .

10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
இல்லையம்மா நான் படித்த பள்ளியில் நீதி போதனை வகுப்பென்றால் மைதானம் செல்ல வேண்டும் என்பது விதி இன்று அந்த பெயரில் வகுப்புகளே இல்லை இன்னும் சொல்லபோனால் விளையாட்டு வகுப்பு கூட அதிக பள்ளிகளில் இல்லை .




அருமை சசி...
விவாத்திற்கு ஏற்ற நல்ல பதிவு
நேற்றே பார்த்து விட்டேன் இன்றுதான் பதிவிட நேரமிருந்தது .


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by சசி Sat Jan 30, 2016 8:37 am

நன்றி செந்தில் தோழரே. 
விவாதம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது . வாலிப வயதில் தவறு 
செய்வதற்கான சூழ்நிலை தற்காலத்தில் அதிகம். அந்த சூழ்நிலையிலிருந்து வெளி வர நாம் பள்ளி கல்லூரிகளில் விவாதங்கள் எதுவும் நடத்துவதில்லை. சரி எது தவறு எது என்பதை பெற்றோர் மட்டும் அல்ல ஆசிரியர்களும் சொல்லி தரவேண்டும். அதற்கான வாய்ப்பு தற்காலத்தில் இல்லை. கல்வியே காசாகி விட்டதால் ஒரு பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது. 

ஊடகங்களில் இலவசமாக இச்சையை தூண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகம். 
மது அனைத்துக்கும் மேலாக அவனை படுகுழியில் தள்ளி விடுகிறது. அதனை கண்காணிக்க பெற்றோர் இருக்க வேண்டும் 

இவையெல்லாவற்றையும் மீறி ஒருவன் மீறி
வெளியே வருகிறவன் நல்ல குடிமகன் ஆகிறான். 
நிச்சயமாக பெற்றோரின் பங்கு குழந்தைகள் வளர்ப்பில் அதிகம் வேண்டும். ஒரு நல்ல மகனை உருவாக்கி தருவது தாய்  தந்தையின் கடமை. அதை நாம் சரியாக செய்தால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். 

முன்பு போல் பள்ளி கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் கொண்டு வர வேண்டும். வரலாற்றில் உள்ள நாயகன் நாயகிகள் எப்படி வாழ்ந்தனர்?நல்ல கதைகளை சுவாரசியமாக சொல்லி தரவேண்டும். சுவாரசியம் இல்லை என்றால் மாணவர்களுக்கு பிடிக்காது. இந்த இடத்தில் ஆசிரியரின் பங்கு உண்டு. 

பாலியல் கல்வி போதிக்க வேண்டும். 16.வயது தருமாறும் வயது. அந்த வயதில் சரியான வழி காட்டுதல் இருந்தால் 
தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by சசி Sat Jan 30, 2016 12:04 pm

கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by krishnaamma Sat Jan 30, 2016 12:35 pm

சசி wrote:கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......

ஐயோ, அதெல்லாம் இல்லை சசி...........என்பதில்கள் கொஞ்சம் பத்தாம் பசிலித்தனமாய் இருக்கும் அது தான், எல்லாத்தையும் வெறுமன படித்தேன் இப்போ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by சசி Sat Jan 30, 2016 8:00 pm

krishnaamma wrote:
சசி wrote:கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......

ஐயோ, அதெல்லாம் இல்லை சசி...........என்பதில்கள் கொஞ்சம் பத்தாம் பசிலித்தனமாய் இருக்கும் அது தான், எல்லாத்தையும்  வெறுமன படித்தேன் இப்போ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190832

என்னமா இப்படி சொல்கிறீர்கள்.?நல்ல பல கருத்துகளை எளிய முறையில் அழகாக குறிப்பிடுபவர்கள் நீங்கள்.  பெண்ணாக கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் நீங்கள்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:58 am

சசி wrote:
krishnaamma wrote:
சசி wrote:கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......

ஐயோ, அதெல்லாம் இல்லை சசி...........என்பதில்கள் கொஞ்சம் பத்தாம் பசிலித்தனமாய் இருக்கும் அது தான், எல்லாத்தையும்  வெறுமன படித்தேன் இப்போ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190832

என்னமா இப்படி சொல்கிறீர்கள்.?நல்ல பல கருத்துகளை எளிய முறையில் அழகாக குறிப்பிடுபவர்கள் நீங்கள்.  பெண்ணாக கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் நீங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1190976

சரி, உங்களுக்கு எதுக்கு குறை..............போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by krishnaamma Wed Feb 03, 2016 11:27 am

என் பதிலை நான் ரொம்ப பெரிசாய் எழுதிவிட்டேன்......கொஞ்சம் பொறுமையாய் படியுங்கோ.................

ஏண்டா கேட்டோம் என்று ஆனால் நான் பொறுப்பல்ல ஜாலி ஜாலி ஜாலி ...படித்துவிட்டு அடிக்க ஓடி வராதீங்கோ.....எதானாலும் பேசி தீர்க்கலாம் புன்னகை

அந்த பத்து கேள்விகளில் 8 வது தவிர, மற்ற எல்லாத்துக்கும் பதில் ஒரே பதிவாக போடுகிறேன் சசி புன்னகை
..அனைத்துக்குமே என்றும் சொல்லலாம் தான், என்றாலும் 8க்கு மட்டும் ஒரு பாயிண்ட் அதிகமாய் எழுதணும் அது தான்.........

ஒரே வார்த்தை இல் சொல்லணும் என்றால், நாம் - பெற்றவர்கள் - வளர்ப்பின் குறைபாடு மட்டுமே அல்லது வேறு இல்லை.............ஆமாம், இன்று வரை படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளை வயது ஆகிவிட்ட காரணத்தினாலேயே 'சட்' என்று கல்யாணம் செய்து கொடுத்துவிடுகிறோம், அவர்களுக்கு பிள்ளை வளர்ப்பு பற்றி தெரியலை..........தங்கள் வீடுகளிலும் கற்கவில்லை, அதற்கான நேரமும் இல்லை, அப்போ என்னத்த வளர்ப்பார்கள்?..............

வேலைக்குப் போகும் பெண்களின் குழந்தைகளை கேட்டுப்பாருங்கள் தங்களுக்கு வேலைக்குப் போகாத பெண்கள் தான் மனைவியாக வரணும் என்று பெரும்பாலும் சொல்வார்கள்................கோபிக்க வேண்டாம், இந்தியாவில் எடுத்த ஒரு கணக்கெடுப்பில் ரிசல்ட் இது...............ஏன் என்றால், குழந்தைக்கு என்று சம்பாதிக்க வெளிய போகும் பெண் தான் என்னவெல்லாம் இழக்கிறாள், அவளிடமிருந்து பெறவேண்டிய எத்தனையை குழந்தையும் அவள் குடும்பமும் இழக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்........

மேலும் இங்கு நம் தளத்திலேயே நிறைய கதைகள் போடப்பட்டிருக்கு, ஒரு டீச்சர் அம்மாவிடம் வரும் குழந்தை இன் டிவி கட்டுரை, தன் அப்பாவின் ஒரு நாள் சம்பளத்தை சேர்த்து வைத்துக்கொண்டு, அதை அவரிடம் கொடுத்துவிட்டு, தன்னுடன் இருக்க சொல்லும் குழந்தை இன் கதை இப்படிப் பலப்பல.................

(நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்! )


இதெல்லாம் படித்து விட்டும் , கண்டுக்காமல் வீட்டை விட்டு வெளியே போனால்?................அதற்காக வேலைக்கு போகும் பெண்கள் எல்லோரையும் வீட்டிலேயே இருங்கோ, என்றோ, அல்லது வீட்டில் இருப்பவர்களின் குழந்தைகள் எல்லாம் பத்தரை மாற்றுத் தங்கம் என்றோ நான் சொல்ல வரலை, நூல் கண்டு சிக்காகிவிட்டது, அதை எங்கிருந்தாவது அவிழ்க்க முயலணும் இல்லையா, ஏதாவது, எங்காவது ஒரு நுனி வேண்டுமே?...அதத்தான் தேடி தொடுகிறேன்............

இப்போ முதல் பிரச்னைக்கு வருகிறோம், கல்யாணம் ஆனதும் நாம் அப்பா அம்மா ஆக தகுதியாக இருக்கிறோமா என்று முதலில் நாமே நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளணும்............நான் சொல்வது மன ரீதியாக.......நேற்று வரை நாமே குழந்தை இன்று திடீரென்று கல்யாணம் ஆனதும் பொறுப்பு வந்துடுமா?....வெளி நாடுகளில் கேள்விப்பட்டு இருப்பிர்கள் LIVING TOGETHER என்று அப்படி இருப்பவர்கள் எப்போ தங்களுக்கு குழந்தை வேண்டும் என்று நினைக்கிரர்களோ அப்போ தான் கல்யாணம் செய்து கொள்வார்கள். ...................

இந்த உதாரணத்தை, ஜஸ்ட் பொறுப்புக்காக மட்டுமே சொன்னேன்.....................அது போல முதலில் கொஞ்சம் நிதானித்து, நாம் யார், நம் பொறுப்பென்ன, எங்கு வந்திருக்கோம் என்று யோசிக்கணும்...............இப்போ நான் இருக்கும் இருப்பில் குழந்தை பெற்றுக்கொண்டால், என்னால் அதை நம் அம்மா அப்பா போல வளர்க்க முடியுமா?................

அதாவது, என்னைப்பார்த்து அது கற்றுக்கொள்ளும் அளவிற்கு என்னிடம் குணங்கள் இருக்கா?...............நான் என்னென்ன மாறணும்?............யோசிக்கணும்..........எல்லா பெண்குழந்தைகளுக்கும் தங்களின் அப்பாதான் ஹீரோ, மற்றும் அவள் சந்திக்கும் முதல் ஆண் அவர் தான்.................அதே போலத்தான் ஆண் குழந்தைகளுக்கும் தங்களின் அம்மா தான் சூப்பர் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும்.................

எனவே, தனக்கு வந்துள்ள பாட்னரிடம், அந்த சாயலை எதிர் பார்ப்பார்கள்......இதற்கு பிள்ளையாரும் விதி விலக்கல , தன் அம்மா போலவே பெண் வேண்டும் என்று குளத்தங்கரை இல் உட்கார்ந்து இருக்கார் பாருங்கோ புன்னகை ..............

தன் அப்பாவின் உன்னத குணத்தை கணவனிடம் தேடும் பெண், தன் அம்மாவின் குணத்தை மனைவிடம் தேடும் கணவன் இருவரும், இப்போ தாங்கள் அப்பா அம்மா ஆனால், நம் அப்பா அம்மா எவ்வளவு கிரேட் டோ அது போல நடக்க முடியுமா? என்று கொஞ்சம் சிந்திக்கணும்............இப்படி யோசித்து 'செட்டில் ' ஆகும் வரை கல்யாணத்தையே தள்ளிப்போட்டலும் தப்பில்லை. புன்னகை .அது வொர்த்.........நாம் மட்டுமா பிள்ளை பெறுகிறோம் ஆடு மாடு கூடத்தான் பெற்றுக்கொள்கிறது, அது போல ஆய்டக்கூடாது என்றால் கொஞ்சம் மெனக்கெடணும் தானே?.................

அந்த காலத்தில் சத் புத்திரன் , சத் புத்திரி வேண்டும் என்றால் இன்ன இன்ன நக்ஷத்திரத்தில் தான் கூடணும் என்கிற விதியை பின் பற்றினார்கள்...............வேண்டாத நேரம், வேண்டாத காலத்தை ஒதுக்கி, தங்களுக்கு வேண்டியபடி குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள் ......இப்போ அதெல்லாம் போச்சு.......யாரும், பெரியவா சொல்வதை கேட்பது இல்லை புன்னகை

குறைந்த பக்ஷம், கீழே நான் இனி சொல்வதையாவது செய்ய முடிகிறதா பாருங்கள்! .ஏன் என்றால், நம்முடைய எதிர்காலம் மட்டும் அல்ல , நம் நாட்டின் வரும்காலம் கூட நம் குழந்தைகள் கை இல் தானே இருக்கு?....சசி சொன்னது போல சமுக எற்ற இறகங்களை நம்முடைய மெனக்கெடல்கள் சரி செய்யும் என்றால் , மெனக்கெடலாம் தானே?

தொடரும்..................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 3 Empty Re: பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum