ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

+3
M.Jagadeesan
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
7 posters

Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by கார்த்திக் செயராம் Thu Jan 28, 2016 11:10 am

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் பழ.கருப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நன்றி விகடன்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 11:51 am

நான் இந்த நீக்கத்தை ஜனுவரி 17/18 தேதி வாக்கிலேயே எதிர்பார்த்தேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by M.Jagadeesan Thu Jan 28, 2016 12:33 pm

ஒருவரை கட்சியை விட்டு நீக்கும் முன்பாக , அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் .

முதலில் அவரை நேரில் கூப்பிட்டு ஏன் இப்படி பேசினீர்கள் என்று விளக்கம் கேட்கலாம் .

அல்லது


அவருக்கு SHOW CAUSE நோட்டீஸ் அனுப்பி , அவருடைய பதில் வரும்வரையில் காத்திருக்கலாம் .



அவசர கதியில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கப்படும் முடிவுகள் ,கட்சிக்கும் , தலைமைக்கும் கெட்ட பெயரையே உருவாக்கும் . சில நாட்களுக்கு முன்பு முன்னாள் DGP நடராசன் விஷயத்தில் , நடந்தது என்னவென்று தெரியாமல் கட்சியை விட்டு நீக்கினார் . பிறகு உண்மை தெரிந்தவுடன் , அவரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டார் . நடந்த தவறுக்கு முதல்வர் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (தெரிந்து செயல் வகை-467 )


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 1:12 pm

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 7MLH2Wj3QTqzhnSElw7J+karupa
-
என் கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதிவிட்டேன்.
அவைத் தலைவர் ஊரில் இல்லை என்பதால்,
ராஜினாமா கடிதத்தை கொடுக்க முடியவில்லை என்று
தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by கார்த்திக் செயராம் Thu Jan 28, 2016 1:44 pm

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். VttDiSdSr6zxgY9CByIY+06TH_PALA_KARUPPIA_2712989f


சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பழ.கருப்பையா, அதிமுக ஆட்சியில் கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், தன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுவதாக பழ.கருப்பையா விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

"கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால், அப்படி விலக்கப்படுகின்ற அளவுக்கு நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றே கருதுகிறேன். எனக்கும், கட்சியின் தலைமைக்கும் சிறு இடைவெளி இருந்தது. அது பற்றி ஜனநாயகத்தில் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் காமராஜர் மீது பற்று கொண்டு, அவரைப் பின்பற்றி நடப்பவன். ஒருவேளை, இதுவே என் மீதான நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம்.

நான் 'துக்ளக்' விழாவில் பொதுவான அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய பேச்சு காரணமாகவே கட்சியில் இருந்து என்னை நீக்கியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக அரசு எப்படி செயல்படுகிறது, நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். அதையொட்டிதான் பொதுவாக பேசினேன். அதற்காக நீக்கியிருக்கிறார்கள்.

என் தரப்பு நியாங்களைச் சொல்லி, கட்சித் தலைமையிடம் நான் சமாதானம் பேசப்போவது இல்லை. அவர்கள் கட்சி நடத்தும் பாங்கு என்பது வேறு. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அனுபவம் கருதியும், ஈடுபாடு கருதியும் என்னை அழைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போது பேசுவார். ஆனால், ஆளும் கட்சியாக ஆன பிறகு, அவரை என்னால் நெருங்க முடியவில்லை. எனினும், அவர் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை.

என் அனுபவத்தையும் கருத்துகளையும் சுதந்திரமாகச் சொல்வதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் சட்டமன்றத்தில் இடம் இருக்காது. ஆளும் கட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காதது ஏற்கத்தக்கதுதான். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் கூட பேச அனுமதிக்காதது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், கட்சியின் தலைமையை நேரடியாக சந்தித்து என் பிரச்சினைகளைச் சொல்ல பல முறை முயற்சி செய்திருக்கிறேன். என்றாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

ஆடு, மாடு மேய்ப்பது போன்ற அளவில்தான் கட்சியில் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கு மதிப்ப் இருக்கிறது. இந்தப் போக்கை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது. இப்படிப்பட்ட பின்னணியில், என்னை கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்கிறேன். அதற்கு எதிர்வினையாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். சில காலம் இருந்தாலும் அந்தப் பதவியை வகிப்பது நெறி சார்ந்தது அல்ல. எம்.எல்.ஏ பதவிக்கு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம். அதற்காக அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. நான் மக்களுக்குத்தான் பதிலளிக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைத்தது உண்டு. எனினும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.

எனவே, நான் நீக்கப்பட்ட இந்தத் தருணத்தில் என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதுகுறித்து பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். (ராஜினாமா கடித்ததின் நகலை காண்பித்தார்). நான் மனபூர்வமாக ராஜினாமா செய்கிறேன் என்று அதில் என் கைப்பட எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்கச் சென்றால், அவர் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள எவரிடம் நேரடியாக கொடுக்க முடியவில்லை. எனவே, என் ராஜினாமாவை இங்கு அறிவிக்கிறேன்.

இந்த ஆட்சியில் கழிவுநீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சம் தந்தாக வேண்டிய அவல நிலை. கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் - ஊழல் பெருகிவிட்டது. அதிகாரிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். இந்தப் போக்கு சரியானது அல்ல.

தமிழகத்தில் மதுவிலக்கு என்பது அவசியம். ஏழைகளின் பணத்தை வாங்கி, அவர்களிடம் இலவசம் வழங்குவது நியாயம் இல்லை.

பான்பராக் தடை செய்யப்பட்ட பொருள். அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அந்த பான்பராக் அதிகம் புழங்குவது என் துறைமுகம் தொகுதிதான். ஆனால், எல்லா மட்டத்திலும் போராடி முயற்சி செய்தும் தடை செய்ய முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக தோற்றுப்போனேன். என் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழகத்தில் எதிர்க்கருத்துகள் சொல்வதற்கே முடியாத நிலை உள்ளது. இந்த மோசமான சூழல் மாற வேண்டும். எதிர்க்கருத்தை ஏற்காக எந்தக் கட்சியும் வளராது" என்றார் பழ.கருப்பையா.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த துறைமுகம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாதாக அறிவித்தார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. இவர் பேச்சாளர், எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஹிந்து


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by யினியவன் Thu Jan 28, 2016 1:51 pm

தன்மானம், சுயமரியாதை, சூடு சொரணை இருப்பவர் எவரும் அங்கே இருக்க முடியாது.

அதை எல்லாம் இழந்தாலே அங்கே இருக்க இயலும். அடிப்படைத் தகுதியே முதுகெலும்பு உடைக்கப்பட்ட பின் தான் பெறுகிறார்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 2:13 pm

பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, பதவிக்காலம்
முடியும்போதுதான் ஞானோதயம் வரும் போலும்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by K.Senthil kumar Fri Jan 29, 2016 3:40 am

வெளியில் தெரியாமல் வாங்கிகொல்வது அல்லது வாங்கி கட்டிகொல்வது பிறகு வெளியே வந்து வீர வசனம் பேசுவது ......


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by T.N.Balasubramanian Fri Jan 29, 2016 8:13 am

K.Senthil kumar wrote:வெளியில் தெரியாமல் வாங்கிகொல்வது அல்லது வாங்கி கட்டிகொல்வது பிறகு வெளியே வந்து வீர வசனம் பேசுவது ......
மேற்கோள் செய்த பதிவு: 1190561

வாங்கி கொல்வதா ? கிரிமினல் குற்றமாயிற்றே !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Jan 29, 2016 10:59 am

முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைத்தது உண்டு. எனினும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.

இந்நிலை இனியும் தொடரும்... அனைவரும் அறிந்ததே... எல்லா அரசில்வாதிகளிடமும் குறைகள் இருக்கின்றன. கொஞ்சமாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் (இலவசங்கள் கொடுத்து அல்ல). ஒக்கேனக்கல் கூட்டுநதிநீர் திட்டம் வேலூர் மாவட்டத்திற்கும் வந்தது. என் தெருவில் கூட இணைப்பு கொடுத்தார்கள்... 13000 கேட்டார்கள். 6 ஆயிரத்துக்குப் பில் கொடுத்தார்கள். தண்ணீர் இன்னும் வரவில்லை. மீதி பில் தொகை 7000க்குக் கேட்டால்... கேட்டால்... கேட்டால்... பதில் இல்லை. ஒரு வீட்டிற்கே 7 ஆயிரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

அவர் தொகுதியில் ஆக்கரமிப்பு செய்த இடத்தை அம்மா அவர்கள் ஆக்கிரமித்தவரைக் கூப்பிட்டு அதை கொடுத்துவிடு என்றால் ஒரு வாரத்திற்குள்ளாகவே உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு வந்து அந்த இடத்தைக் கொடுத்துவிடுவார். அம்மா அவரை அழைத்து சொல்வாரா?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Empty Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum