Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல நடிகை கல்பனா காலமானார்!
+3
பது
ராஜா
ayyasamy ram
7 posters
Page 1 of 1
பிரபல நடிகை கல்பனா காலமானார்!
![பிரபல நடிகை கல்பனா காலமானார்! PcpfuH8jTzK1qBPhA5wI+kalpana](https://www.filepicker.io/api/file/PcpfuH8jTzK1qBPhA5wI+kalpana.jpg)
-
மலையாள - தமிழ் நடிகையான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51.
தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா, சின்னவீடு, சதிலீலாவதி, காக்கி சட்டை போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
-
தினமணி
Re: பிரபல நடிகை கல்பனா காலமானார்!
நாடக நடிகர் வி.பி.நாயர், விஜயலட்சுமி தம்பதியரின் மூத்த
மகள்தான் கல்பனா. இயற்பெயர் கல்பனா ரஞ்சனி.
இவரது தங்கைதான் நடிகை ஊர்வசி, இவரது இயற் பெயர்
கலாரஞ்சனி.
மலையாள நடிகர் அனிலை திருமணம் செய்து கொண்ட கல்பனா,
கடந்த 2012-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.
இந்த தம்பதியருக்கு 16 வயதில் ஸ்ரீமாயி என்ற மகள் உண்டு.
விவாகாரத்துக்கு பிறகு மகளுடன் கல்பனா வாழ்ந்து வந்தார்.
கடந்த 1983-ம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள இயக்குநர்
எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய 'மஞ்சு' என்ற படத்தில்தான்
கல்பனா முதலில் அறிமுகம் ஆனார்.
அதற்கு இரண்டு வருடம் கழித்து தமிழில் அப்பாவி மனைவியாக
அவர் நடித்த 'சின்னவீடு ' சக்கை போடு போட்டது.
அதுபோல் ' சதிலீலாவதி ' படத்திலும் கல்பனாவின் நடிப்பு பேசப்
பட்டது.
அதற்கு பின், தமிழகத்தில் நடிகை கல்பனா பற்றிய பேச்சு இல்லை.
அவரது இறப்பு செய்திதான் இப்போது எட்டியிருக்கிறது!
-
-------------
Re: பிரபல நடிகை கல்பனா காலமானார்!
நடிகை கல்பனா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 51. அவருடைய உடல் விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது.
கல்பனா
பிரபல நடிகை ஊர்வசியின் மூத்த அக்காள், கல்பனா. 1983-ம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘மஞ்ச்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை, டைரக்டர் கே.பாக்யராஜ், ‘சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து கல்பனா ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.
கமல்ஹாசனுடன், ‘சதிலீலாவதி,’ ‘பம்மல் கே.சம்பந்தம்,’ மாதவனுடன், ‘டும் டும் டும்,’ சிவகார்த்திகேயனுடன், ‘காக்கி சட்டை’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
மாரடைப்பால் மரணம்
கல்பனா, ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார். நேற்று முன்தினம் இரவில் அங்கு நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குளியல் அறைக்கு சென்றார்.
அங்கு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் நாகார்ஜுன், உதயா, ஸ்ரீமன், பிரேம், நடிகை கோவை சரளா ஆகியோர் தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள். கல்பனாவின் உடலைப் பார்த்து அவர்கள் கண்கலங்கினார்கள்.
கொச்சியில் இறுதிச்சடங்கு
கல்பனாவின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான கொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அவருடைய உடலை ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி கொண்டு போக நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நடிகர்-நடிகைகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து கல்பனாவின் உடல் கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.
குடும்பம்
மரணம் அடைந்த நடிகை கல்பனாவுக்கு ஊர்வசியுடன் கலாரஞ்சனி என்ற தங்கையும் இருக்கிறார். மூன்று பேருமே சினிமாவில் நடித்து வந்தார்கள். கல்பனாவுக்கு வயது 51. நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், மலையாள டைரக்டர் அனில்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஸ்ரீமயி என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்
கல்பனா
பிரபல நடிகை ஊர்வசியின் மூத்த அக்காள், கல்பனா. 1983-ம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘மஞ்ச்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை, டைரக்டர் கே.பாக்யராஜ், ‘சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து கல்பனா ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.
கமல்ஹாசனுடன், ‘சதிலீலாவதி,’ ‘பம்மல் கே.சம்பந்தம்,’ மாதவனுடன், ‘டும் டும் டும்,’ சிவகார்த்திகேயனுடன், ‘காக்கி சட்டை’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
மாரடைப்பால் மரணம்
கல்பனா, ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார். நேற்று முன்தினம் இரவில் அங்கு நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குளியல் அறைக்கு சென்றார்.
அங்கு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் நாகார்ஜுன், உதயா, ஸ்ரீமன், பிரேம், நடிகை கோவை சரளா ஆகியோர் தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள். கல்பனாவின் உடலைப் பார்த்து அவர்கள் கண்கலங்கினார்கள்.
கொச்சியில் இறுதிச்சடங்கு
கல்பனாவின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான கொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அவருடைய உடலை ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி கொண்டு போக நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நடிகர்-நடிகைகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து கல்பனாவின் உடல் கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.
குடும்பம்
மரணம் அடைந்த நடிகை கல்பனாவுக்கு ஊர்வசியுடன் கலாரஞ்சனி என்ற தங்கையும் இருக்கிறார். மூன்று பேருமே சினிமாவில் நடித்து வந்தார்கள். கல்பனாவுக்கு வயது 51. நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், மலையாள டைரக்டர் அனில்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஸ்ரீமயி என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: பிரபல நடிகை கல்பனா காலமானார்!
இருதய நோய் உள்ளவர்கள் தனிமையில் உறங்க கூடாது
யாரேனும் துணையிருந்தால் வலி வந்ததும் முதல் உதவி
சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க ஏதுவாகும்
-
யாரேனும் துணையிருந்தால் வலி வந்ததும் முதல் உதவி
சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க ஏதுவாகும்
-
Re: பிரபல நடிகை கல்பனா காலமானார்!
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ..................
........எனக்கு இவங்க நடிப்பு பிடிக்கும், போன வாரம் தான் மீண்டும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்தோம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரபல நடிகை கல்பனா காலமானார்!
மேற்கோள் செய்த பதிவு: 1189635ayyasamy ram wrote:இருதய நோய் உள்ளவர்கள் தனிமையில் உறங்க கூடாது
யாரேனும் துணையிருந்தால் வலி வந்ததும் முதல் உதவி
சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க ஏதுவாகும்
-
எத்தனை மனிதர் அருகில் இருந்தாலும்
...எத்தனை காவல் சூழ இருந்தாலும்
அத்தனையும் மீறி எருமை வாகனத்தில்
...ஆருயிர் பறித்திட எமனங்கு வந்திடுவான் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பிரபல நடிகை கல்பனா காலமானார்!
பிறப்பையும் இறப்பையும் தேர்ந்தெடுக்கும் உயிர் ஒன்று உண்டெனில் சொல்வீரே!!!
இரண்டிற்கும் இடையில் உள்ள பயணத்தை வேண்டுமெனில் தேர்ந்தெடுக்க இயலும்.
இரண்டிற்கும் இடையில் உள்ள பயணத்தை வேண்டுமெனில் தேர்ந்தெடுக்க இயலும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரபல நடிகை கல்பனா காலமானார்!
பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு !
...இறந்தால் பிறப்பு மீண்டும் உண்டு !
திறந்த கதவு ஒருநாள் மூடும் !
...மூடிய கதவு மறுநாள் திறக்கும் !
இறந்தவன் சொர்க்கம் நரகம் அடைதல்
...இவ்வுலகில் செய்யும் செயலே ஆகும் !
மறந்தும் பிறன்கேடு சூழா திருந்தால்
...மரணம் அவர்க்குத் தள்ளிப் போகும் !
...
...இறந்தால் பிறப்பு மீண்டும் உண்டு !
திறந்த கதவு ஒருநாள் மூடும் !
...மூடிய கதவு மறுநாள் திறக்கும் !
இறந்தவன் சொர்க்கம் நரகம் அடைதல்
...இவ்வுலகில் செய்யும் செயலே ஆகும் !
மறந்தும் பிறன்கேடு சூழா திருந்தால்
...மரணம் அவர்க்குத் தள்ளிப் போகும் !
...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
» தூக்கத்தில் பிரிந்த உயிர்: பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் காலமானார்
» பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!
» பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்
» பிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்
» தூக்கத்தில் பிரிந்த உயிர்: பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் காலமானார்
» பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!
» பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்
» பிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|