Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters
Page 18 of 20
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
First topic message reminder :
Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
"கர்மாவின் படி அவரவருக்கு பாவத்தையும், புண்ணியத்தையும் தருபவன் நீ தானே! ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டு இயக்குபவன் நீ தானே! நீ நினைத்தால் துரியோதனனை நல்லவனாக்கி விட முடியாதா? தவறு செய்யும் குழந்தையை தடுத்து நிறுத்துவது தாயின் கடமை தானே!
நீ நினைத்தால் யுத்தத்தையே நிறுத்தி விடலாமே! இத்தனை கஷ்டம் உனக்குத் தேவையா? '' என்று கேட்டார் உதங்க மகரிஷி. தயக்கத்துடன் கண்ணன் மகரிஷியிடம், ""அவசர வேலையாக துவாரகைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இன்னொரு சமயத்தில் இதைப் பற்றி பேசுவோமே!'' என்று புறப்பட்டான்.
"ஏன் கண்ணா! என் கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியவில்லையா? பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வெற்றி என்னவோ உனக்குத் தானே. அது போகட்டும். அர்ஜூனனுக்கு காட்டிய விஸ்வரூப தரிசனத்தைக் காண என் மனம் விரும்புகிறது.
அதற்கு இப்போதே அருள் செய்ய வேண்டும்,'' என்று மகரிஷி கண்ணனை வேண்டி நின்றார்.
"துவாரகைக்குப் போய் நான் என்ன செய்யப் போகிறேன். ஒன்றும் அவசரமில்லை,'' என்று சொல்லி விஸ்வரூபதரிசனத்தை உதங்க மகரிஷிக்கு அப்போதே கண்ணன் காட்டி அருளினான். கர்மாவுக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
பிரம்மசூத்திரத்தில் வியாசர் இதனை அழகாக விளக்குகிறார். அவரவர் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் வாழ்க்கை நடக்கிறது. இந்த கர்ம நியதியும் கடவுளுக்குக் கட்டுப்பட்டது தான். இருந்தாலும், கடவுள் மீது பழி ஏதும் சொல்ல முடியாது என்பதைச் சொல்லியுள்ளார்.
இதை இப்படி சொன்னால் நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள். மா, தென்னை என எந்த மரமானாலும் தண்ணீர் விடுவதும், உரம் போடுவதும் பொதுவான விஷயம் தான்.
ஆனால், எப்படி தண்ணீர் விட்டாலும் எல்லா மரமும் தென்னையாகவோ, மா மரமாகவோ மாறுவதில்லை. விதையின் அடிப்படையில் தான் ஒரு மரம் உருவாகிறது. மற்றபடி தண்ணீரும், உரமும் அதன் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன அவ்வளவே.
இந்த தண்ணீரையும், உரத்தையும் போன்றது தான் கடவுளின் அருள். ஆனால், அந்தந்த விதையைப் போல உயிர்களின் வினைப்பதிவான கர்மா இருக்கிறது.
இதையே இன்னொரு விதமாகவும்சொல்லலாம். தாய் குழந்தைக்கு நடை கற்றுத் தருவதைப் பார்த்திருப்பீர்கள். தாயார் குழந்தையை கூடத்தில் நிறுத்தி விட்டு,
தானாகவே நடந்து வரும்படி விட்டு விடுவாள். தளர் நடையிட்டபடி குழந்தையும் கீழே மேலே விழுந்து எழ ஆரம்பிக்கும். ஆனால், குழந்தை அழாதவரை தாய் அதைத் தூக்கி விடச் செல்ல மாட்டாள்.
அதற்காக தாயின் கட்டுப்பாட்டில் குழந்தை இல்லை என்று சொல்லி விடமுடியுமா? அவளது கண் வட்டத்திற்குள் தான் குழந்தை இருக்கிறது.
ஆனாலும், குழந்தைக்கு என்று சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது. அதுவாகவே செயல்படும்படி தாய் விட்டு விடுவது போலவே, பகவானும் உயிர்களை சுதந்திரமாக செயல்பட விட்டிருக்கிறார்.
ஒரு நிறுவனத்தின் எல்லா பணிகளையும் முதலாளியே செய்து கொண்டிருக்க முடியாது. பண நிர்வாகம், கொள்முதல், விற்பனை, பணிநியமனம் எல்லாம் அந்தந்த பிரிவில் இருக்கும் மேலாளர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அதற்காக முதலாளியின் கட்டுப்பாட்டில் நிறுவனம் இல்லாமல் போய்விட்டதாகாது.
பணியாளர்களின் பின்னணியில் அத்தனையும் நடந்தாலும், முதலாளியின் கண் பார்வையில் தான் நிர்வாகம் நடந்து கொண்டிருக்கும். பணியாளர்கள் சரியான வழியில் நடந்தால் சம்பள உயர்வு, சலுகை எல்லாம் கிடைக்கும். இல்லாவிட்டால் பணியில் இருந்து விலக நேரிடும்.
இதைப்போலவே, கடவுளும் உயிர்களுக்கு கண், காது, மூக்கு என்று அத்தனை அவயங்களும் கொடுத்திருக்கிறார். இது நல்லது, இது கெட்டது என்று சிந்திக்கும் புத்தியும் கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு சுதந்திரமாகச் செயல்பட விட்டிருக்கிறார்.
அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நல்லவனாக உயர்ந்து விட்டால் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அதை விடுத்து, மனம் போன போக்கில் நடந்து வந்தால் அதற்கு தண்டனையாக நரகவாழ்வு கிடைக்கிறது.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொண்டவர்களாவோம்.
நீ நினைத்தால் யுத்தத்தையே நிறுத்தி விடலாமே! இத்தனை கஷ்டம் உனக்குத் தேவையா? '' என்று கேட்டார் உதங்க மகரிஷி. தயக்கத்துடன் கண்ணன் மகரிஷியிடம், ""அவசர வேலையாக துவாரகைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இன்னொரு சமயத்தில் இதைப் பற்றி பேசுவோமே!'' என்று புறப்பட்டான்.
"ஏன் கண்ணா! என் கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியவில்லையா? பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வெற்றி என்னவோ உனக்குத் தானே. அது போகட்டும். அர்ஜூனனுக்கு காட்டிய விஸ்வரூப தரிசனத்தைக் காண என் மனம் விரும்புகிறது.
அதற்கு இப்போதே அருள் செய்ய வேண்டும்,'' என்று மகரிஷி கண்ணனை வேண்டி நின்றார்.
"துவாரகைக்குப் போய் நான் என்ன செய்யப் போகிறேன். ஒன்றும் அவசரமில்லை,'' என்று சொல்லி விஸ்வரூபதரிசனத்தை உதங்க மகரிஷிக்கு அப்போதே கண்ணன் காட்டி அருளினான். கர்மாவுக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
பிரம்மசூத்திரத்தில் வியாசர் இதனை அழகாக விளக்குகிறார். அவரவர் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் வாழ்க்கை நடக்கிறது. இந்த கர்ம நியதியும் கடவுளுக்குக் கட்டுப்பட்டது தான். இருந்தாலும், கடவுள் மீது பழி ஏதும் சொல்ல முடியாது என்பதைச் சொல்லியுள்ளார்.
இதை இப்படி சொன்னால் நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள். மா, தென்னை என எந்த மரமானாலும் தண்ணீர் விடுவதும், உரம் போடுவதும் பொதுவான விஷயம் தான்.
ஆனால், எப்படி தண்ணீர் விட்டாலும் எல்லா மரமும் தென்னையாகவோ, மா மரமாகவோ மாறுவதில்லை. விதையின் அடிப்படையில் தான் ஒரு மரம் உருவாகிறது. மற்றபடி தண்ணீரும், உரமும் அதன் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன அவ்வளவே.
இந்த தண்ணீரையும், உரத்தையும் போன்றது தான் கடவுளின் அருள். ஆனால், அந்தந்த விதையைப் போல உயிர்களின் வினைப்பதிவான கர்மா இருக்கிறது.
இதையே இன்னொரு விதமாகவும்சொல்லலாம். தாய் குழந்தைக்கு நடை கற்றுத் தருவதைப் பார்த்திருப்பீர்கள். தாயார் குழந்தையை கூடத்தில் நிறுத்தி விட்டு,
தானாகவே நடந்து வரும்படி விட்டு விடுவாள். தளர் நடையிட்டபடி குழந்தையும் கீழே மேலே விழுந்து எழ ஆரம்பிக்கும். ஆனால், குழந்தை அழாதவரை தாய் அதைத் தூக்கி விடச் செல்ல மாட்டாள்.
அதற்காக தாயின் கட்டுப்பாட்டில் குழந்தை இல்லை என்று சொல்லி விடமுடியுமா? அவளது கண் வட்டத்திற்குள் தான் குழந்தை இருக்கிறது.
ஆனாலும், குழந்தைக்கு என்று சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது. அதுவாகவே செயல்படும்படி தாய் விட்டு விடுவது போலவே, பகவானும் உயிர்களை சுதந்திரமாக செயல்பட விட்டிருக்கிறார்.
ஒரு நிறுவனத்தின் எல்லா பணிகளையும் முதலாளியே செய்து கொண்டிருக்க முடியாது. பண நிர்வாகம், கொள்முதல், விற்பனை, பணிநியமனம் எல்லாம் அந்தந்த பிரிவில் இருக்கும் மேலாளர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அதற்காக முதலாளியின் கட்டுப்பாட்டில் நிறுவனம் இல்லாமல் போய்விட்டதாகாது.
பணியாளர்களின் பின்னணியில் அத்தனையும் நடந்தாலும், முதலாளியின் கண் பார்வையில் தான் நிர்வாகம் நடந்து கொண்டிருக்கும். பணியாளர்கள் சரியான வழியில் நடந்தால் சம்பள உயர்வு, சலுகை எல்லாம் கிடைக்கும். இல்லாவிட்டால் பணியில் இருந்து விலக நேரிடும்.
இதைப்போலவே, கடவுளும் உயிர்களுக்கு கண், காது, மூக்கு என்று அத்தனை அவயங்களும் கொடுத்திருக்கிறார். இது நல்லது, இது கெட்டது என்று சிந்திக்கும் புத்தியும் கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு சுதந்திரமாகச் செயல்பட விட்டிருக்கிறார்.
அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நல்லவனாக உயர்ந்து விட்டால் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அதை விடுத்து, மனம் போன போக்கில் நடந்து வந்தால் அதற்கு தண்டனையாக நரகவாழ்வு கிடைக்கிறது.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொண்டவர்களாவோம்.
இன்னும் இனிக்கும்........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
எல்லாம் பெருமாள் காட்டிய வழி......T.N.Balasubramanian wrote:கூர்மாவதாரம் .......பன்றியாக அவதாரம் ......நன்றி .
அறிவது என்னவென்றால் ,
மனைவிக்காக கணவன் எதையும் செய்யலாம் என்று
அன்று அவர் அவதார புருஷனாக வந்து எடுத்துக் காண்பிக்க ,
இன்றும் எல்லா ஆண்களும் அதையே பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
"நான் இன்று இருக்கும் நிலை இறைவன் எனக்கு அளித்த பரிசு! நான் செய்து காட்ட வேண்டிய நாளைய நிலை தான் நான் திரும்ப அவருக்கு நான் அளிக்கும் பரிசு"
சில சமயம் இதில் தவறுகிறோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
சில சமயமா......?T.N.Balasubramanian wrote:"நான் இன்று இருக்கும் நிலை இறைவன் எனக்கு அளித்த பரிசு! நான் செய்து காட்ட வேண்டிய நாளைய நிலை தான் நான் திரும்ப அவருக்கு நான் அளிக்கும் பரிசு"
சில சமயம் இதில் தவறுகிறோம் .
ரமணியன்
பெரும்பாலும் அப்படி நினைப்பதே அரிதாக தான் இருக்கிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (23)
மூவகை குணங்களில் தாழ்ந்த குணமான தமோ குணம் கொண்ட உடலெடுத்தார் பிரம்மா. தன் தொடைப்பகுதியில் இருந்து அசுரர்களைப் படைத்தார். அப்போது இரவு நேரமாக இருந்தது. அதனால், அசுரர்களுக்கு எப்போதும் இரவில் உடல் பலம் அதிகமாக இருக்கும்.
அதன் பின், நற்குணமான சத்வ குணத்தில் உடம்பு எடுத்து தேவர்களை தன் மேற்பாகத்தில் இருந்து படைத்தார். அப்போது பகல் பொழுதாக இருந்ததால், தேவர்கள் பகலில் பலமுடையவர்களாக இருந்தனர்.
மீண்டும் நல்ல உடம்பான சத்வகுண உடம்பெடுத்து பிதுர்களான முன்னோர்களைப் படைத்தார். அப்போது மாலைப் பொழுதாக இருந்தது. மத்தியானத்திற்குப் பிறகு சாயந்தர நேரத்தில் தான் பிதுர்களுக்குப் பலம் உண்டாகும்.
இதனால், பிதுர்தர்ப்பணமான சிரார்த்தத்தை காலையில் செய்வது கூடாது. காலை 11.30 மணிக்கு மேல் நீராடி, மத்தியான நேரத்தில் தான் சிரார்த்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால், தற்காலத்தில் காலையில் எழுந்ததும் சூடாக காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விட்டோம். அதனால், மதியம் 3 மணிவரை சாப்பிடாமல் இருந்து சிராத்தம் கொடுப்பது என்பது கடினமான விஷயமாகி விட்டது. இன்னும் சொல்லப்போனால், சிராத்தம் கொடுப்பது பிதுருக்கா அல்லது பிள்ளைக்கா என்ற நிலையே உண்டாகும் அளவுக்கு சிலர் சாப்பிடாமல் சோர்ந்து விடுகிறார்கள்.
கடைசியாக விடியற்காலைப் பொழுதில் பிரம்மா மனிதர்களைப் படைத்தார். மனிதனுக்கு பலம் மிக்க காலம் என்பது அதிகாலைப்பொழுது தான்.
4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர். அறிவை வளர்க்கும் அருமையான பொழுதை வீணடிப்பது இன்றைய தலைமுறையினரின் இயல்பாகிப் போனது.
ஏதோ கிராமப்புற விவசாயிகள் இன்றும் முன்நேரத்தில் தூங்கி எழுந்து, வயல் பணிக்குக் காலையில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மற்றபடி மேற்கத்திய கலாச்சாரத்தால், அசுரவேளையான இரவில் விழித்திருப்பதும், காலையில் சூரியன் உதித்து வெகுநேரமாகியும் தூங்குவதையும் இளைய சமுதாயம் ஏற்றுக் கொண்டு விட்டது.
படிக்கும் மாணவர்கள் என்றில்லாமல் எந்த வயதினரும் பிரம்ம முகூர்த்தவேளையான ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் பணிகளைச் செய்வதால் புத்திகூர்மை, தேஜஸ், பலம் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் யாரும் விழித்திருப்பது நல்லதல்ல.
மனிதர்களில் நால்வகை வர்ணம் உருவானது. அவர்கள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்பட்டனர். இந்த நால்வகை வர்ணத்தையும் தானே ஏற்படுத்தியதாக பகவத்கீதையில் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு எடுத்துரைத்துள்ளார்.
தலைப்பகுதியில் இருந்து பிறந்தவர்கள் பிராமணர். ஏனென்றால் பிராமணன் வேதத்தை அத்யாபனம்(ஓதுதல்) செய்தே தன் ஜீவனத்தைக் கழிக்க வேண்டியவனாக இருக்கிறான். பிரம்மத்தை (தெய்வ) பற்றிய அறிவைப் பெறாத வரை, பிராமணன் என்னும் தகுதியை ஒருவன் அடைய முடியாது.
க்ஷத்திரியர்கள் என்னும் வீரர்கள் தோளில் இருந்து பிறந்தவர்கள். நாட்டைக் காக்கும் வீரர்களுக்கு போரிட வலிமை தேவை என்பதால் இவர்கள் தோளில் இருந்து வந்தார்கள்.
தொடையில் இருந்து வந்தவர்கள் வைசியர்கள். பயிர்த்தொழில், பசுக்களைப்பாதுகாப்பது, வணிகம் செய்வது ஆகிய தொழிலில் வைசியர்கள் ஈடுபட்டனர்.
இந்த மூவகையினருக்கும் உதவி செய்பவர்களாக கடவுளின் திருவடியில் இருந்து வந்தவர்கள் சூத்திரர்கள். ஓடி ஓடி உழைக்க வேண்டியவர்களாக, அத்தனை உயிர்களுக்கும் சோறு போடுபவர்களாக இவர்கள் தான் இருக்கிறார்கள்.
அதன் பின், நற்குணமான சத்வ குணத்தில் உடம்பு எடுத்து தேவர்களை தன் மேற்பாகத்தில் இருந்து படைத்தார். அப்போது பகல் பொழுதாக இருந்ததால், தேவர்கள் பகலில் பலமுடையவர்களாக இருந்தனர்.
மீண்டும் நல்ல உடம்பான சத்வகுண உடம்பெடுத்து பிதுர்களான முன்னோர்களைப் படைத்தார். அப்போது மாலைப் பொழுதாக இருந்தது. மத்தியானத்திற்குப் பிறகு சாயந்தர நேரத்தில் தான் பிதுர்களுக்குப் பலம் உண்டாகும்.
இதனால், பிதுர்தர்ப்பணமான சிரார்த்தத்தை காலையில் செய்வது கூடாது. காலை 11.30 மணிக்கு மேல் நீராடி, மத்தியான நேரத்தில் தான் சிரார்த்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால், தற்காலத்தில் காலையில் எழுந்ததும் சூடாக காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விட்டோம். அதனால், மதியம் 3 மணிவரை சாப்பிடாமல் இருந்து சிராத்தம் கொடுப்பது என்பது கடினமான விஷயமாகி விட்டது. இன்னும் சொல்லப்போனால், சிராத்தம் கொடுப்பது பிதுருக்கா அல்லது பிள்ளைக்கா என்ற நிலையே உண்டாகும் அளவுக்கு சிலர் சாப்பிடாமல் சோர்ந்து விடுகிறார்கள்.
கடைசியாக விடியற்காலைப் பொழுதில் பிரம்மா மனிதர்களைப் படைத்தார். மனிதனுக்கு பலம் மிக்க காலம் என்பது அதிகாலைப்பொழுது தான்.
4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர். அறிவை வளர்க்கும் அருமையான பொழுதை வீணடிப்பது இன்றைய தலைமுறையினரின் இயல்பாகிப் போனது.
ஏதோ கிராமப்புற விவசாயிகள் இன்றும் முன்நேரத்தில் தூங்கி எழுந்து, வயல் பணிக்குக் காலையில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மற்றபடி மேற்கத்திய கலாச்சாரத்தால், அசுரவேளையான இரவில் விழித்திருப்பதும், காலையில் சூரியன் உதித்து வெகுநேரமாகியும் தூங்குவதையும் இளைய சமுதாயம் ஏற்றுக் கொண்டு விட்டது.
படிக்கும் மாணவர்கள் என்றில்லாமல் எந்த வயதினரும் பிரம்ம முகூர்த்தவேளையான ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் பணிகளைச் செய்வதால் புத்திகூர்மை, தேஜஸ், பலம் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் யாரும் விழித்திருப்பது நல்லதல்ல.
மனிதர்களில் நால்வகை வர்ணம் உருவானது. அவர்கள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்பட்டனர். இந்த நால்வகை வர்ணத்தையும் தானே ஏற்படுத்தியதாக பகவத்கீதையில் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு எடுத்துரைத்துள்ளார்.
தலைப்பகுதியில் இருந்து பிறந்தவர்கள் பிராமணர். ஏனென்றால் பிராமணன் வேதத்தை அத்யாபனம்(ஓதுதல்) செய்தே தன் ஜீவனத்தைக் கழிக்க வேண்டியவனாக இருக்கிறான். பிரம்மத்தை (தெய்வ) பற்றிய அறிவைப் பெறாத வரை, பிராமணன் என்னும் தகுதியை ஒருவன் அடைய முடியாது.
க்ஷத்திரியர்கள் என்னும் வீரர்கள் தோளில் இருந்து பிறந்தவர்கள். நாட்டைக் காக்கும் வீரர்களுக்கு போரிட வலிமை தேவை என்பதால் இவர்கள் தோளில் இருந்து வந்தார்கள்.
தொடையில் இருந்து வந்தவர்கள் வைசியர்கள். பயிர்த்தொழில், பசுக்களைப்பாதுகாப்பது, வணிகம் செய்வது ஆகிய தொழிலில் வைசியர்கள் ஈடுபட்டனர்.
இந்த மூவகையினருக்கும் உதவி செய்பவர்களாக கடவுளின் திருவடியில் இருந்து வந்தவர்கள் சூத்திரர்கள். ஓடி ஓடி உழைக்க வேண்டியவர்களாக, அத்தனை உயிர்களுக்கும் சோறு போடுபவர்களாக இவர்கள் தான் இருக்கிறார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
மனு தர்மத்தில் வர்ணாசிரம தர்மம் கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விஷயத்தைச் சரியாக புரிந்து கொள்ளாததால், மனு தர்மத்தைப் பற்றி தவறாகப் பலரும் கருதுகின்றனர். ஆழ்வார்களின் பாசுரங்களைப் படிக்க வேண்டுமானால் பெரியவாச்சான்பிள்ளை போன்றவர்களின் விளக்கவுரையைப் படிப்பது தான் நல்லது.
அவரவர் இஷ்டத்திற்கு ஏதாவது ஒன்றைப் படித்து விட்டு குறை கூறிக் கொண்டு திரிவதில் பயனில்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் பிரிவு இல்லாமல் இருக்க முடியாது. ஜாதி மட்டுமில்லாமல், மொழி, மாநிலம், நாடு என்றெல்லாம் பிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைலோகாசாரியார் என்ற மகான் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றிச் சொல்லும்போது, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் மீது பக்தி கொண்டவன் உயர்ந்தவன், இல்லாதவன் தாழ்ந்தவன் என்று தான் சொல்கிறாரே தவிர, ஜாதி அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிக்கவில்லை.
விபீஷணன் அரக்கனான ராவணனின் தம்பி. பிரகலாதன் இரண்யகசிபு என்னும் அரக்கனின் மகன். இந்த இருவரும் எம்பெருமானைச்சரணடைந்ததால் பிரகலாத ஆழ்வான், விபீஷணாழ்வான் என்று ஆழ்வாராதிகளாகப் போற்றப்படுகின்றனர். அவர்கள் பிறந்த குலம் குறித்து நாம் சிந்திப்பதில்லை.
பக்தியுணர்வின் காரணமாக அவர்களைப் போற்றி வணங்குகிறோம். பிராமணராகப் பிறந்தால் மட்டுமே எம்பெருமானைச் சரணடைந்து முக்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தை அடைய முடியும் என்று எந்த ஆச்சார்யார்களாவது சொல்லியிருக்கிறார்களா என்றால் இல்லை. யாராக இருந்தாலும், உண்மையான பக்தி ஒன்றே பகவானைச் சென்றடைவதற்கான ஒரே தகுதி.
ஆழ்வார்கள் பன்னிருவர் என்று சொல்கிறோமே. அவர்கள் அத்தனை பேரும் அந்தணர்களாகவா இருக்கிறார்கள்! அதில் –
திருப்பாணாழ்வார் என்பவர் யாழ் வைத்துப்பாடும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர்.
திருமங்கையாழ்வார் கள்ளர் குலத்தில் அவதரித்தவர்.
உயர்ந்தவராக தன்னைக் கருதும் அந்தணர் என்றாலும், ஆழ்வார் பன்னிருவரையும் சேவிக்காவிட்டால் வைஷ்ணவராக இருக்கவே முடியாது. ஆழ்வார் வரிசையில் எல்லா சமூகத்தினரும் இருப்பதில் இருந்தே, கடவுளை அடைவதில் ஜாதிப்பாகுபாடு கிடையாது என்பது தெளிவாகி விட்டது.
வேறுபாடு என்பது வாழ்விற்கு இன்றியமையாதது என்பது அடிப்படை. கையில் விரல்கள் ஐந்து இருக்கின்றன. எல்லாம் ஒரே நீளத்தில், அகலத்தில் இருந்தால் நம்மால் பயன்படுத்த முடியுமா?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாக இருப்பதால் தானே வெவ்வேறு பணிகளை செய்ய முடிகிறது. அவைகளுக்கு கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் என்றெல்லாம் தனித்தனிப் பெயர் கொடுத்து வைத்திருக்கிறோம். விரல் தான் இப்படி என்று எண்ண வேண்டாம். கையாக இருந்தாலும் வலக்கை, இடக்கை என்று பகுப்பு இருக்கிறதே. பகுப்பு இல்லாவிட்டால் வாழ்க்கையின் இயக்கமே நின்று விடும்.
ஆனால், அதற்காக இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற பாகுபாடு கற்பிப்பது கூடாது. அவரவர் பணிகளைச் சரிவர செய்து வந்தாலே போதும். உலக இயக்கம் செம்மையாக நடந்து கொண்டிருக்கும்.
அவரவர் இஷ்டத்திற்கு ஏதாவது ஒன்றைப் படித்து விட்டு குறை கூறிக் கொண்டு திரிவதில் பயனில்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் பிரிவு இல்லாமல் இருக்க முடியாது. ஜாதி மட்டுமில்லாமல், மொழி, மாநிலம், நாடு என்றெல்லாம் பிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைலோகாசாரியார் என்ற மகான் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றிச் சொல்லும்போது, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் மீது பக்தி கொண்டவன் உயர்ந்தவன், இல்லாதவன் தாழ்ந்தவன் என்று தான் சொல்கிறாரே தவிர, ஜாதி அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிக்கவில்லை.
விபீஷணன் அரக்கனான ராவணனின் தம்பி. பிரகலாதன் இரண்யகசிபு என்னும் அரக்கனின் மகன். இந்த இருவரும் எம்பெருமானைச்சரணடைந்ததால் பிரகலாத ஆழ்வான், விபீஷணாழ்வான் என்று ஆழ்வாராதிகளாகப் போற்றப்படுகின்றனர். அவர்கள் பிறந்த குலம் குறித்து நாம் சிந்திப்பதில்லை.
பக்தியுணர்வின் காரணமாக அவர்களைப் போற்றி வணங்குகிறோம். பிராமணராகப் பிறந்தால் மட்டுமே எம்பெருமானைச் சரணடைந்து முக்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தை அடைய முடியும் என்று எந்த ஆச்சார்யார்களாவது சொல்லியிருக்கிறார்களா என்றால் இல்லை. யாராக இருந்தாலும், உண்மையான பக்தி ஒன்றே பகவானைச் சென்றடைவதற்கான ஒரே தகுதி.
ஆழ்வார்கள் பன்னிருவர் என்று சொல்கிறோமே. அவர்கள் அத்தனை பேரும் அந்தணர்களாகவா இருக்கிறார்கள்! அதில் –
திருப்பாணாழ்வார் என்பவர் யாழ் வைத்துப்பாடும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர்.
திருமங்கையாழ்வார் கள்ளர் குலத்தில் அவதரித்தவர்.
உயர்ந்தவராக தன்னைக் கருதும் அந்தணர் என்றாலும், ஆழ்வார் பன்னிருவரையும் சேவிக்காவிட்டால் வைஷ்ணவராக இருக்கவே முடியாது. ஆழ்வார் வரிசையில் எல்லா சமூகத்தினரும் இருப்பதில் இருந்தே, கடவுளை அடைவதில் ஜாதிப்பாகுபாடு கிடையாது என்பது தெளிவாகி விட்டது.
வேறுபாடு என்பது வாழ்விற்கு இன்றியமையாதது என்பது அடிப்படை. கையில் விரல்கள் ஐந்து இருக்கின்றன. எல்லாம் ஒரே நீளத்தில், அகலத்தில் இருந்தால் நம்மால் பயன்படுத்த முடியுமா?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாக இருப்பதால் தானே வெவ்வேறு பணிகளை செய்ய முடிகிறது. அவைகளுக்கு கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் என்றெல்லாம் தனித்தனிப் பெயர் கொடுத்து வைத்திருக்கிறோம். விரல் தான் இப்படி என்று எண்ண வேண்டாம். கையாக இருந்தாலும் வலக்கை, இடக்கை என்று பகுப்பு இருக்கிறதே. பகுப்பு இல்லாவிட்டால் வாழ்க்கையின் இயக்கமே நின்று விடும்.
ஆனால், அதற்காக இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற பாகுபாடு கற்பிப்பது கூடாது. அவரவர் பணிகளைச் சரிவர செய்து வந்தாலே போதும். உலக இயக்கம் செம்மையாக நடந்து கொண்டிருக்கும்.
இன்னும் இனிக்கும்......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர். அறிவை வளர்க்கும் அருமையான பொழுதை வீணடிப்பது இன்றைய தலைமுறையினரின் இயல்பாகிப் போனது.
சொந்த அனுபவம் உண்டு . பலன் அடைந்ததும் உண்டு .
4.30 காலை எழுந்தால் அன்று 24 மணி நேரத்திற்கு பதிலாக
26/27 மணிகள் நமக்கு கிடைத்து இருப்பது போல் இருக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நானும் ட்ரை பண்ணிட்டே தான் இருக்கேன்.T.N.Balasubramanian wrote:4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர். அறிவை வளர்க்கும் அருமையான பொழுதை வீணடிப்பது இன்றைய தலைமுறையினரின் இயல்பாகிப் போனது.
சொந்த அனுபவம் உண்டு . பலன் அடைந்ததும் உண்டு .
4.30 காலை எழுந்தால் அன்று 24 மணி நேரத்திற்கு பதிலாக
26/27 மணிகள் நமக்கு கிடைத்து இருப்பது போல் இருக்கிறது .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர்.
இப்படி சொல்லி சொல்லி, எங்க அம்மா எங்களை எழுப்பி விடுவது வழக்கம்...........ஆனால் அந்த வழக்கம் அம்மா ஆத்தோடு போச்சு............கோடை விடுமுறை தினத்தில் கூட சூரியோதயத்துக்கு முன் எல்லோரும் குளித்து விடணும் என்பது எங்கள் அம்மா ஆத்தில் எழுதாத சட்டம்...............
ஆனால் கல்யாணம் ஆகி வந்து ஒரு நாள் கூட அப்படி எழுந்தது இல்லை........... ....பாட்டியே 5.30க்குத் தான் எழுந்திருப்பார்கள்..........நாங்க அப்புறம் தான்.........அதே போலத்தான் இப்போ ஆர்த்தி கிருஷ்ணாவையும் நான் எழுப்பவே மாட்டேன்..........குழந்தைகள் கொஞ்சநாள் தூங்கட்டுமே என்று விட்டுடுவேன்
பாவம், இத்தனைநாள் பரீட்சை அது இது என்று கால நேரம் இல்லாமல் எழுந்து படித்தார்களே அதனால் இப்போ அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவேன் ; )
இப்படி சொல்லி சொல்லி, எங்க அம்மா எங்களை எழுப்பி விடுவது வழக்கம்...........ஆனால் அந்த வழக்கம் அம்மா ஆத்தோடு போச்சு............கோடை விடுமுறை தினத்தில் கூட சூரியோதயத்துக்கு முன் எல்லோரும் குளித்து விடணும் என்பது எங்கள் அம்மா ஆத்தில் எழுதாத சட்டம்...............
ஆனால் கல்யாணம் ஆகி வந்து ஒரு நாள் கூட அப்படி எழுந்தது இல்லை........... ....பாட்டியே 5.30க்குத் தான் எழுந்திருப்பார்கள்..........நாங்க அப்புறம் தான்.........அதே போலத்தான் இப்போ ஆர்த்தி கிருஷ்ணாவையும் நான் எழுப்பவே மாட்டேன்..........குழந்தைகள் கொஞ்சநாள் தூங்கட்டுமே என்று விட்டுடுவேன்
பாவம், இத்தனைநாள் பரீட்சை அது இது என்று கால நேரம் இல்லாமல் எழுந்து படித்தார்களே அதனால் இப்போ அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவேன் ; )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
Similar topics
» பக்தியில் பலவகை உண்டு. - --வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - தமிழ் MP3
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - தமிழ் MP3
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
Page 18 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|