Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters
Page 16 of 20
Page 16 of 20 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
First topic message reminder :
Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நன்றி ஐயா!T.N.Balasubramanian wrote:அருமை
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (17)
வடமொழிக்கு இல்லாத சிறப்பு தமிழுக்குண்டு. துள்ளல் இசையுடன் பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் மட்டும் உள்ளன.
இந்த ஓசை நயத்துடன் திருமழிசையாழ்வார் பாடிய இப்பாசுரம் ஒன்றில், "கடலில் எழும் அலை போல பிரம்மம் உலகத்தைப் படைத்தும், எழுந்த அலை கடலுக்குள் மறைவது போல உலகத்தை அழித்தும்' விடுவதாக கூறியுள்ளார்.
கடலுக்குள்ளே அலை இருந்தாலும், அலையை கடலில் இருந்து பிரிக்க முடியாது. இந்த உலகமும் சிருஷ்டிக் காலத்தில் பிரம்மத்திற்குள்ளே எழுந்தும், பிரளய காலத்தில் மறைந்தும் விடுகிறது.
சித்து, அசித்து, ஈஸ்வரன் என மூன்று இருக்கின்றன. சித்து என்பது அறிவுப்பொருள். அசித்து என்பது அறிவற்றது. அதாவது ஜடப்பொருள். உலகத்தில் நம் கண்களால் காண்பது அனைத்தும் அசித்து தான்.
ஈஸ்வரன் என்பது கடவுள். ஆத்மாவுக்கு (உயிருக்கு) அறிவு உண்டு. உயிரற்ற பொருட்களுக்கு அறிவு என்பதே கிடையாது.
சித்தையும், அசித்தையும் இணைப்பது கடவுளாகிய ஈஸ்வரன். வழியில் செல்லும் ஒரு நபரை "கிருஷ்ணா' என்று கூப்பிட்டால், அவர் குரல் வந்த திசையை நோக்கித் திரும்புவார். கிருஷ்ணா என்னும் பெயர் உடம்புக்குத் தானே ஒழிய உயிருக்கு இல்லை. ஆனால், கூப்பிட்டதும் உடம்பு தானே திரும்புகிறது. உடம்பு நம்முடைய உடமையாகவே இருக்கிறது.
என் உடம்பு, என் புத்தகம், என் ஜெபமாலை என்று தானே சொல்கிறோம். "நான்' என்னும் உணர்வு ஒருபோதும் நம்மை விட்டு நீங்குவதில்லை.
விபத்தில் சிக்கிய ஒருவர் மயக்கநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் மயக்கம் தெளிந்ததும் கேட்கும் முதல் கேள்வி "நான் எங்கிருக்கிறேன்' என்பது தான். அவர் மட்டும் தான் என்பதில்லை. எப்போதும் மயக்கத்தில் தான் நாமும் இருக்கிறோம். இந்த உடம்பையே நாமாக எண்ணுவதும் ஒரு வித மயக்கநிலை தான்.
உண்மையில் உடலைக் காட்டிலும் உயர்ந்ததான ஆத்மா தான் நாம் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால் மயக்கம் ஓடி விடும். அதன் பின்னர் நாம் கடவுளை அடையும் வழியைத் தேட முடியும்.
ஒருவர் இரவு நேரத்தில் தன்னை மறந்து தூங்குவார். இடி அவர் மீது விழுந்தால் கூட தூக்கம் கலையாது. அப்படி ஒரு தூக்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும், "நான் சுகமாகத் தூங்கினேன்' என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வார்.
புறவுலக சிந்தனையே இல்லாமல் போன ஒருவருக்கு எங்கிருந்து வந்தது இந்த சுகானுபவம்? இதுவே உடலுக்கும் வேறாக இருக்கும் ஆத்மாவின் அனுபவமே இது. "நான்' என்று சொல்லும் போதெல்லாம் அது ஆத்மா ஒன்றையே குறிக்கும்.
இந்த ஓசை நயத்துடன் திருமழிசையாழ்வார் பாடிய இப்பாசுரம் ஒன்றில், "கடலில் எழும் அலை போல பிரம்மம் உலகத்தைப் படைத்தும், எழுந்த அலை கடலுக்குள் மறைவது போல உலகத்தை அழித்தும்' விடுவதாக கூறியுள்ளார்.
கடலுக்குள்ளே அலை இருந்தாலும், அலையை கடலில் இருந்து பிரிக்க முடியாது. இந்த உலகமும் சிருஷ்டிக் காலத்தில் பிரம்மத்திற்குள்ளே எழுந்தும், பிரளய காலத்தில் மறைந்தும் விடுகிறது.
சித்து, அசித்து, ஈஸ்வரன் என மூன்று இருக்கின்றன. சித்து என்பது அறிவுப்பொருள். அசித்து என்பது அறிவற்றது. அதாவது ஜடப்பொருள். உலகத்தில் நம் கண்களால் காண்பது அனைத்தும் அசித்து தான்.
ஈஸ்வரன் என்பது கடவுள். ஆத்மாவுக்கு (உயிருக்கு) அறிவு உண்டு. உயிரற்ற பொருட்களுக்கு அறிவு என்பதே கிடையாது.
சித்தையும், அசித்தையும் இணைப்பது கடவுளாகிய ஈஸ்வரன். வழியில் செல்லும் ஒரு நபரை "கிருஷ்ணா' என்று கூப்பிட்டால், அவர் குரல் வந்த திசையை நோக்கித் திரும்புவார். கிருஷ்ணா என்னும் பெயர் உடம்புக்குத் தானே ஒழிய உயிருக்கு இல்லை. ஆனால், கூப்பிட்டதும் உடம்பு தானே திரும்புகிறது. உடம்பு நம்முடைய உடமையாகவே இருக்கிறது.
என் உடம்பு, என் புத்தகம், என் ஜெபமாலை என்று தானே சொல்கிறோம். "நான்' என்னும் உணர்வு ஒருபோதும் நம்மை விட்டு நீங்குவதில்லை.
விபத்தில் சிக்கிய ஒருவர் மயக்கநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் மயக்கம் தெளிந்ததும் கேட்கும் முதல் கேள்வி "நான் எங்கிருக்கிறேன்' என்பது தான். அவர் மட்டும் தான் என்பதில்லை. எப்போதும் மயக்கத்தில் தான் நாமும் இருக்கிறோம். இந்த உடம்பையே நாமாக எண்ணுவதும் ஒரு வித மயக்கநிலை தான்.
உண்மையில் உடலைக் காட்டிலும் உயர்ந்ததான ஆத்மா தான் நாம் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால் மயக்கம் ஓடி விடும். அதன் பின்னர் நாம் கடவுளை அடையும் வழியைத் தேட முடியும்.
ஒருவர் இரவு நேரத்தில் தன்னை மறந்து தூங்குவார். இடி அவர் மீது விழுந்தால் கூட தூக்கம் கலையாது. அப்படி ஒரு தூக்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும், "நான் சுகமாகத் தூங்கினேன்' என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வார்.
புறவுலக சிந்தனையே இல்லாமல் போன ஒருவருக்கு எங்கிருந்து வந்தது இந்த சுகானுபவம்? இதுவே உடலுக்கும் வேறாக இருக்கும் ஆத்மாவின் அனுபவமே இது. "நான்' என்று சொல்லும் போதெல்லாம் அது ஆத்மா ஒன்றையே குறிக்கும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
கடவுள் கொள்கையை மறுக்கும் நாஸ்திகர்களும் சித்து, அசித்து இரண்டையும் ஒத்துக் கொள்வார்கள். அனுபவிக்கும் நாம், அனுபவிக்கப்படும் உலகம் இரண்டும் இருக்கின்றன. இந்த இரண்டையும் இணைக்கும் கடவுளைத் தான் அவர்கள் மறுக்கின்றனர்.
ஒருவர் தான் சமைத்த உணவைத் தன் வீட்டில் அமர்ந்து சாப்பிடத் தயாராகிறார். இலையைப் போட்டு சாதத்தை வைக்கும் நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை கேட்டால் என்ன செய்வது? வேறு வழியின்றி உணவை விட்டு எழுந்து கதவைத் திறந்து பார்த்தால், வந்திருப்பவர் அடுத்த வீட்டுக்காரரின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கிறார். அவருக்கு வழிகாட்டி விட்டு திரும்பவும் வீட்டுக்குள் வருகிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.
வீடு, உணவு, மாடு, மனை எல்லாம் நமக்குச் சொந்தமானது என்றாலும், இன்னதை இன்னார் இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று மூன்றாவது சக்தி ஒன்று நமக்கு மேலே இருந்து செலுத்திக் கொண்டிருக்கிறது. அது தான் ஈஸ்வரன்.
இதையே உபநிஷதமும், "எவனிடத்தில் இருந்து உலகம் எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டதோ, எவனருளால் உலகம் காக்கப்படுகிறதோ, எவனிடத்தில் இந்த உலகம் சென்று சேருமோ அந்த பரம்பொருளையே விஷ்ணு' என்று குறிப்பிடுகிறது.
பராசரர் மைத்ரேயருக்கு பரம்பொருளின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார். எப்போதும் மாறுதல் என்பதே இல்லாதவராக, தூய்மை மிக்கவராக, அழிவில்லாத நித்யமானவராக, பெரிதினும் பெரிதானவராக, ஒரே வடிவுடையவராக, இயல்பு மாறாதவராக விளங்கும் பரம்பொருளே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்தியாகவும் திகழ்கிறார்.
தாயின் கர்ப்பத்தில் இருந்து தானே நாம் பிறந்தோம். வயிற்றில் கருநிலை கொள்கிறது. அது வளர வளர தாயின் வயிறு பெருத்தும், கால், கைகள் நீர் சுரந்தும் உடம்பில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாகும் அல்லவா? ஒருஉயிர் தன்னைப் போல இன்னொரு உயிரைப் படைக்கும் போது, இருக்கும் நிலையில் இருந்து பலவித மாறுதல் ஏற்படும்.
இதை "விகாரம்' என்கிறது சாஸ்திரம். இருத்தல், பிறத்தல், மாற்றம், வளர்தல், தேய்தல், அழிதல் என்று இதை ஆறு வித விகாரம் என்று சொல்வர். உலகிலுள்ள அத்தனை உயிருக்கும் இந்த ஆறும் உண்டாகின்றன.
பரம்பொருளுக்கும் இந்த மாற்றங்கள் உண்டாகுமா என்று கேட்டால் அது தான் இல்லை. பரம்பொருள் எப்போதும் மாறாமல் இருக்கிறது என்கிறார் பராசரர்.
அவரின் உடம்பில் ஓருபக்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் "மூலப்பிரகிருதி' என்னும் தத்துவத்தில் இருந்து உலகத்தைப் படைத்தார். அதிலிருந்தே நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் எல்லாம் வந்தன. இவை சம்பந்தப்படாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை.
சாப்பிடும் சாதம் அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
அரிசி எங்கிருந்து வந்தது? மண் தானே அதைக் கொடுத்தது. அதை தண்ணீரில் இட்டு அடுப்பில் கொதிக்க வைக்கிறோம். ஆக நீரும், நெருப்பும் வந்தாகி விட்டது. நெருப்பு எரிய காற்றின் உதவி தேவைப்படுகிறது.
ஆகாயம் என்பது தான் வெளி. எந்த பொருள் என்றாலும் அது இடத்தை அடைத்துக் கொண்டு தானே இருக்கும். அது தான் ஆகாய தத்துவம். இதைப் போலவே, உடம்பும் பஞ்சபூத சேர்க்கையால் ஆனது. இந்த பஞ்சபூதங்கள் அசித்து. அதாவது அறிவற்றவையாக இருக்கின்றன.
உடம்பு இயங்க வேண்டுமானால் உயிர் வேண்டும் அல்லவா! அதற்காக, அவர் உடம்பின் மற்றொரு பக்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாவை(உயிர்களை) உடம்போடு இணைத்தார்.
இந்த உயிர்கள் கர்மவினையோடு இருக்கின்றன. அதாவது பாவம், புண்ணிய பதிவுகளோடு இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் பாவம், புண்ணியம் ஏன் உண்டாகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
வேதம் வகுத்த தர்மத்தை சரிவரச் செய்தால் புண்ணியம். அது கூடாது என மறுத்ததை செய்யாமல் இருப்பதும் புண்ணியம் தான். வேதம் சொன்ன தர்மத்தை மீறினாலும், அது மறுத்ததை செய்து வந்தாலும் பாவமே உண்டாகும்.
பிரளய காலத்தில் உலகமே அழிந்து போனாலும், உயிர்கள் செய்தபாவ, புண்ணியக் கணக்கு மட்டும் அழிவதில்லை. அதற்காக உள்ள கணக்கு புத்தகம் பாதுகாப்பாகவே இருக்கும். அது எங்கு வைத்துப் பாதுகாக்கப் படுகிறது என்பதை பிறகு பார்க்கலாம்.
ஒருவர் தான் சமைத்த உணவைத் தன் வீட்டில் அமர்ந்து சாப்பிடத் தயாராகிறார். இலையைப் போட்டு சாதத்தை வைக்கும் நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை கேட்டால் என்ன செய்வது? வேறு வழியின்றி உணவை விட்டு எழுந்து கதவைத் திறந்து பார்த்தால், வந்திருப்பவர் அடுத்த வீட்டுக்காரரின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கிறார். அவருக்கு வழிகாட்டி விட்டு திரும்பவும் வீட்டுக்குள் வருகிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.
வீடு, உணவு, மாடு, மனை எல்லாம் நமக்குச் சொந்தமானது என்றாலும், இன்னதை இன்னார் இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று மூன்றாவது சக்தி ஒன்று நமக்கு மேலே இருந்து செலுத்திக் கொண்டிருக்கிறது. அது தான் ஈஸ்வரன்.
இதையே உபநிஷதமும், "எவனிடத்தில் இருந்து உலகம் எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டதோ, எவனருளால் உலகம் காக்கப்படுகிறதோ, எவனிடத்தில் இந்த உலகம் சென்று சேருமோ அந்த பரம்பொருளையே விஷ்ணு' என்று குறிப்பிடுகிறது.
பராசரர் மைத்ரேயருக்கு பரம்பொருளின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார். எப்போதும் மாறுதல் என்பதே இல்லாதவராக, தூய்மை மிக்கவராக, அழிவில்லாத நித்யமானவராக, பெரிதினும் பெரிதானவராக, ஒரே வடிவுடையவராக, இயல்பு மாறாதவராக விளங்கும் பரம்பொருளே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்தியாகவும் திகழ்கிறார்.
தாயின் கர்ப்பத்தில் இருந்து தானே நாம் பிறந்தோம். வயிற்றில் கருநிலை கொள்கிறது. அது வளர வளர தாயின் வயிறு பெருத்தும், கால், கைகள் நீர் சுரந்தும் உடம்பில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாகும் அல்லவா? ஒருஉயிர் தன்னைப் போல இன்னொரு உயிரைப் படைக்கும் போது, இருக்கும் நிலையில் இருந்து பலவித மாறுதல் ஏற்படும்.
இதை "விகாரம்' என்கிறது சாஸ்திரம். இருத்தல், பிறத்தல், மாற்றம், வளர்தல், தேய்தல், அழிதல் என்று இதை ஆறு வித விகாரம் என்று சொல்வர். உலகிலுள்ள அத்தனை உயிருக்கும் இந்த ஆறும் உண்டாகின்றன.
பரம்பொருளுக்கும் இந்த மாற்றங்கள் உண்டாகுமா என்று கேட்டால் அது தான் இல்லை. பரம்பொருள் எப்போதும் மாறாமல் இருக்கிறது என்கிறார் பராசரர்.
அவரின் உடம்பில் ஓருபக்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் "மூலப்பிரகிருதி' என்னும் தத்துவத்தில் இருந்து உலகத்தைப் படைத்தார். அதிலிருந்தே நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் எல்லாம் வந்தன. இவை சம்பந்தப்படாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை.
சாப்பிடும் சாதம் அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
அரிசி எங்கிருந்து வந்தது? மண் தானே அதைக் கொடுத்தது. அதை தண்ணீரில் இட்டு அடுப்பில் கொதிக்க வைக்கிறோம். ஆக நீரும், நெருப்பும் வந்தாகி விட்டது. நெருப்பு எரிய காற்றின் உதவி தேவைப்படுகிறது.
ஆகாயம் என்பது தான் வெளி. எந்த பொருள் என்றாலும் அது இடத்தை அடைத்துக் கொண்டு தானே இருக்கும். அது தான் ஆகாய தத்துவம். இதைப் போலவே, உடம்பும் பஞ்சபூத சேர்க்கையால் ஆனது. இந்த பஞ்சபூதங்கள் அசித்து. அதாவது அறிவற்றவையாக இருக்கின்றன.
உடம்பு இயங்க வேண்டுமானால் உயிர் வேண்டும் அல்லவா! அதற்காக, அவர் உடம்பின் மற்றொரு பக்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாவை(உயிர்களை) உடம்போடு இணைத்தார்.
இந்த உயிர்கள் கர்மவினையோடு இருக்கின்றன. அதாவது பாவம், புண்ணிய பதிவுகளோடு இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் பாவம், புண்ணியம் ஏன் உண்டாகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
வேதம் வகுத்த தர்மத்தை சரிவரச் செய்தால் புண்ணியம். அது கூடாது என மறுத்ததை செய்யாமல் இருப்பதும் புண்ணியம் தான். வேதம் சொன்ன தர்மத்தை மீறினாலும், அது மறுத்ததை செய்து வந்தாலும் பாவமே உண்டாகும்.
பிரளய காலத்தில் உலகமே அழிந்து போனாலும், உயிர்கள் செய்தபாவ, புண்ணியக் கணக்கு மட்டும் அழிவதில்லை. அதற்காக உள்ள கணக்கு புத்தகம் பாதுகாப்பாகவே இருக்கும். அது எங்கு வைத்துப் பாதுகாக்கப் படுகிறது என்பதை பிறகு பார்க்கலாம்.
இன்னும் இனிக்கும்.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
அடாடா, அடுத்ததும் போட்டு விட்டீர்கள், நான் தான் இன்னும் படிக்கலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
இந்த உயிர்கள் கர்மவினையோடு இருக்கின்றன. அதாவது பாவம், புண்ணிய பதிவுகளோடு இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் பாவம், புண்ணியம் ஏன் உண்டாகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
அந்த காலத்திலும் பதிவுகள் /மதிப்பீடுகள் இருந்துள்ளன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
ஒருவர் தான் சமைத்த உணவைத் தன் வீட்டில் அமர்ந்து சாப்பிடத் தயாராகிறார். இலையைப் போட்டு சாதத்தை வைக்கும் நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை கேட்டால் என்ன செய்வது? வேறு வழியின்றி உணவை விட்டு எழுந்து கதவைத் திறந்து பார்த்தால், வந்திருப்பவர் அடுத்த வீட்டுக்காரரின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கிறார். அவருக்கு வழிகாட்டி விட்டு திரும்பவும் வீட்டுக்குள் வருகிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.
வீடு, உணவு, மாடு, மனை எல்லாம் நமக்குச் சொந்தமானது என்றாலும், இன்னதை இன்னார் இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று மூன்றாவது சக்தி ஒன்று நமக்கு மேலே இருந்து செலுத்திக் கொண்டிருக்கிறது. அது தான் ஈஸ்வரன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி விமந்தனி...ஆனால் பாருங்கோ மேலே உள்ள 2 பத்திகளும் தொடர்பில்லாமல் இருக்கே, ஏதும் விட்டுப்போச்சா? ..............
வீடு, உணவு, மாடு, மனை எல்லாம் நமக்குச் சொந்தமானது என்றாலும், இன்னதை இன்னார் இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று மூன்றாவது சக்தி ஒன்று நமக்கு மேலே இருந்து செலுத்திக் கொண்டிருக்கிறது. அது தான் ஈஸ்வரன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி விமந்தனி...ஆனால் பாருங்கோ மேலே உள்ள 2 பத்திகளும் தொடர்பில்லாமல் இருக்கே, ஏதும் விட்டுப்போச்சா? ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (18)
மகாவிஷ்ணுவின் திருவுள்ளத்தில் தான் உயிர்கள் செய்த பாவ,புண்ணியக்கணக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதில் மண்ணில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பக்கம் இருக்கும். செய்த புண்ணியம் வரவு வைக்கப்படும். பாவம் பற்று வைக்கப்படும்.
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தாலும், இந்த கணக்கு அழியப் போவதில்லை. புண்ணியம் அதிகமாகி விட்டால் அந்த உயிர் வைகுண்டத்திற்குச் செல்லும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புண்ணியத்தை அனுபவிக்கும் உலகமாக சொர்க்கம் இருக்கிறது. பாவத்தை அனுபவிப்பதற்கு நரகத்திற்குச் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்த பாவம், புண்ணியம் இரண்டும் இல்லாமல் போனால் தான் வைகுண்டத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
உயிரைப் பற்றியிருக்கும் கர்மவினைகளால் தான் பாவமும், புண்ணியமும் உண்டாகிறது.
சிறைச்சாலையில் இருப்பவன் இரும்புக் கம்பிகளுக்குள் அடைபட்டால் என்ன! அல்லது தங்க கம்பிகளுக்குள் அடைபட்டால் என்ன! சிறை சிறை தானே! அங்கே அவன் சுதந்திரம் அற்றவனாகவே இருக்கிறான்.
அதுபோல, கர்மவினைகளில் சிக்கியிருக்கும் உயிருக்கும் மோட்சகதி கிடைப்பதில்லை. புண்ணியம் என்பது தங்கச்சங்கிலி போலவும், பாவம் என்பது இரும்புச் சங்கிலி போலவும் தான் இருக்கிறது. இரண்டு சங்கிலிகளுமே கடவுளை அடைவதற்குத் தடையாகவே இருக்கிறது.
இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு தொழில் நிறுவனம் நடத்துகிறார்கள் என்றால் ஆண்டு தோறும் அதில் கிடைக்கும் லாபத்தை பிரித்துக் கொள்வார்கள். நிறுவனத்தையே கலைத்து விடும் முடிவுக்கு வந்து விட்டால், முதலும், லாபமுமாக பிரித்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவார்கள் தானே!
அதுபோல, ஒருவருக்கு வைகுண்டத்தில் இடம் தர முடி வெடுத்து விட்டால், கடவுளும் அவருடைய பாவ, புண்ணியக் கணக்கையே நேர் செய்து பற்று, வரவு இல்லாமல் செய்து விடுகிறார்.
ஒரு வங்கியில் ஆயிரமாயிரம் சேமிப்பு கணக்குகள் இருக்கும். இதில் ஒருவரின் கணக்கில் வைக்க வேண்டிய வரவோ, பற்றோ இன்னொருவர் கணக்கில் சேர்த்து விடும் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், பூலோகத்தில் கணக்கில் அடங்காத ஜீவராசிகள் இருக்கின்றன. அவை செய்த பாவ, புண்ணிய கணக்குகள் இம்மியும் பிசகுவதில்லை. அவரவர் செய்த வினைப்பயனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அவரவரே அனுபவிக்கும் நியதியை உண்டாக்கி வைத்திருக்கிறார்.
பிரம்ம பதவிக்காக புண்ணியம் செய்த உயிரைத் தேர்ந்துஎடுத்து விஷ்ணு படைக்கிறார். அதன்பின் பூலோகத்தில் சிருஷ்டி தொழிலை பிரம்மாவின் மூலம் நடத்த தொடங்குகிறார்.
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தாலும், இந்த கணக்கு அழியப் போவதில்லை. புண்ணியம் அதிகமாகி விட்டால் அந்த உயிர் வைகுண்டத்திற்குச் செல்லும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புண்ணியத்தை அனுபவிக்கும் உலகமாக சொர்க்கம் இருக்கிறது. பாவத்தை அனுபவிப்பதற்கு நரகத்திற்குச் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்த பாவம், புண்ணியம் இரண்டும் இல்லாமல் போனால் தான் வைகுண்டத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
உயிரைப் பற்றியிருக்கும் கர்மவினைகளால் தான் பாவமும், புண்ணியமும் உண்டாகிறது.
சிறைச்சாலையில் இருப்பவன் இரும்புக் கம்பிகளுக்குள் அடைபட்டால் என்ன! அல்லது தங்க கம்பிகளுக்குள் அடைபட்டால் என்ன! சிறை சிறை தானே! அங்கே அவன் சுதந்திரம் அற்றவனாகவே இருக்கிறான்.
அதுபோல, கர்மவினைகளில் சிக்கியிருக்கும் உயிருக்கும் மோட்சகதி கிடைப்பதில்லை. புண்ணியம் என்பது தங்கச்சங்கிலி போலவும், பாவம் என்பது இரும்புச் சங்கிலி போலவும் தான் இருக்கிறது. இரண்டு சங்கிலிகளுமே கடவுளை அடைவதற்குத் தடையாகவே இருக்கிறது.
இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு தொழில் நிறுவனம் நடத்துகிறார்கள் என்றால் ஆண்டு தோறும் அதில் கிடைக்கும் லாபத்தை பிரித்துக் கொள்வார்கள். நிறுவனத்தையே கலைத்து விடும் முடிவுக்கு வந்து விட்டால், முதலும், லாபமுமாக பிரித்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவார்கள் தானே!
அதுபோல, ஒருவருக்கு வைகுண்டத்தில் இடம் தர முடி வெடுத்து விட்டால், கடவுளும் அவருடைய பாவ, புண்ணியக் கணக்கையே நேர் செய்து பற்று, வரவு இல்லாமல் செய்து விடுகிறார்.
ஒரு வங்கியில் ஆயிரமாயிரம் சேமிப்பு கணக்குகள் இருக்கும். இதில் ஒருவரின் கணக்கில் வைக்க வேண்டிய வரவோ, பற்றோ இன்னொருவர் கணக்கில் சேர்த்து விடும் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், பூலோகத்தில் கணக்கில் அடங்காத ஜீவராசிகள் இருக்கின்றன. அவை செய்த பாவ, புண்ணிய கணக்குகள் இம்மியும் பிசகுவதில்லை. அவரவர் செய்த வினைப்பயனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அவரவரே அனுபவிக்கும் நியதியை உண்டாக்கி வைத்திருக்கிறார்.
பிரம்ம பதவிக்காக புண்ணியம் செய்த உயிரைத் தேர்ந்துஎடுத்து விஷ்ணு படைக்கிறார். அதன்பின் பூலோகத்தில் சிருஷ்டி தொழிலை பிரம்மாவின் மூலம் நடத்த தொடங்குகிறார்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
என்ன தான் பிரம்மா சிருஷ்டி நடத்தினாலும் அதற்கும் காரணம் என்னவோ பெருமாள் தான். எப்படி என்றால், வைத்தியம் செய்த ஆஸ்பத்திரி சென்ற அனுபவம் நம் எல்லோருக்கும் இருக்கும். மருத்துவர் வியாதியை பரிசோதித்து விட்டு, அதற்கான மருந்தை ஊசியில் ஏற்றிக் கொண்டு லாவகமாக கையில் போட்டு விடுவார். ஊசி உடம்பிற்குள் நுழைந்தாலும், உள்ளே சென்று குணப்படுத்துவது என்னவோ மருந்து தானே!
அதுபோல, உலகத்தில் படைப்புத் தொழிலை பிரம்மா தான் நடத்துகிறார் என்றாலும், அவருக்குள் இருந்தும் வழிநடத்தும் அந்தர் ஆத்மா பரம்பொருள் விஷ்ணுவே. இப்படியே, எல்லா உயிர்களுக்குள்ளும் அந்தர் ஆத்மாவாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
மருந்து உடம்புக்குள் சென்றால் நோய் தீருவது போல, அந்தர்ஆத்மாவான எம்பெருமானே உயிர்களை சம்சார பந்தத்தில் இருந்து காத்தருள்கிறார். அண்டங்கள் (உலகங்கள்) ஏழு இருக்கின்றன. அந்த ஒவ்வொரு உலகத்திற்கும் தனித்தனி பிரம்மா இருக்கிறார்கள்.
பராசரர் இந்த இடத்தில், ""அவனே படைக்கிறான்; அவனே படைக்கப்படுகிறான். அவனே காக்கிறான்; அவனே காக்கப்படுகிறான்' என்று வேதாந்தம் பேசுகிறார்.
வேதாந்தம் என்றால் புரிந்தது போல இருக்கும். ஆனால், முழுமையாகப் புரியாது.
மயில் ஆடுகிறது என்றால் உங்களுக்கு அர்த்தம் புரிகிறது. மயிலே ஆட்டப்படுகிறது என்றால் அசைந்தாடும் தோகையும் மயிலின் உடம்பில் ஒரு பாகம் தானே! அதைப் போலவே பரம்பொருளான விஷ்ணுவே படைக்கிறான்; படைக்கப்படுகிறான் என்று குறிப்பிடுகிறார்.
பிரம்மாவின் ஆயுளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் பராசரர். பிரம்மாவின் ஆயுளுக்கும், மனிதனின் ஆயுளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. முதலில் மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம் 60,70 ஆயுள் கொண்ட மனித வாழ்விலேயே எத்தனையோ கஷ்டங்கள் குறுக்கிடுகிறது.
அந்தக் காலத்தில் 50 வயதுக்கு மேலே தான் வியாதியே எட்டிப் பார்க்கும். ஆனால், இப்போதெல்லாம் 30 வயதில் கூட மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது.
ஆழ்வார்கள் மனித உடம்பை, "ஓட்டை மாடம்' என்று குறிப்பிடுகின்றனர். உடம்பில் வியாதி வராத வரை பிழைத்துக் கொண்டோம். வந்து விட்டால் அப்புறம் நைந்து கிழிந்த வேட்டி கதை தான். ஒருபுறம் தைத்தால் இன்னொரு புறம் கிழிந்து போவது போல, ஒரு வியாதிக்கு வைத்தியம் பார்க்க இன்னொரு வியாதி உடம்பில் புகுந்து கொள்கிறது.
மகாபாரதக் கதையில் நச்சுப் பொய்கையில் நீர் குடிக்கச் செல்லும்போது, யட்சன் கேட்ட கேள்விக்கு தர்மபுத்திரர் விடை சொல்லும் பகுதி விசேஷமானது. யட்சன், ""உலகில் அதிசயமானது எது?'' என்று கேட்க, ""ஒன்பது வாசல் கொண்ட உடம்புக்குள் உயிர் தங்கியிருப்பது தான்'' என்று பதில் சொல்வார் தர்மர்.
உடம்பில் கண், காது, மூக்கு, வாய், மல,ஜல துவாரம் என ஒன்பது துவாரம் இருந்தாலும், உயிர் அது வழியே சென்று விடாமல் தானே இருக்கிறது. கூண்டுக்கிளியைப் பார்த்திருப்பீர்கள். இறக்கை வீசி வானில் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகூண்டைத் திறந்தாலும் பறக்காமல் அதற்குள்ளேயே உயிர் வாழ்வது போல, உடம்புக்குள் உயிரும் சிறைப்பட்டே கிடக்கிறது.
யட்சன் தர்மரிடம் தொடர்ந்து, ""உயிரையும் விட அதிசயமானது எது?'' என்று கேட்க, ""தன்னோடு வாழ்ந்த மனிதன் இறந்து போவதைக் கண்டும் கூட "போறவன் எல்லாம் போகட்டும்! நான் மட்டும் உலகில் நிரந்தரமானவன் என்று கருதிக் கொண்டு வாழ்வது தான் இன்னும் அதிசயம்'' என்று சொல்வார்.
தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய "திருமாலை' என்னும் 45 பாசுரங்கள் விசேஷமானவை. ""திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்'' என்றே சொல்வார்கள்.
இதில் மனிதன் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்தாலும் கூட, எப்படியெல்லாம் காலத்தை வீணாக்கி விடுகிறான் என்பதை ஆழ்வார் பட்டியலிடுகிறார். அதை தொடர்ந்து பார்ப்போம்.
அதுபோல, உலகத்தில் படைப்புத் தொழிலை பிரம்மா தான் நடத்துகிறார் என்றாலும், அவருக்குள் இருந்தும் வழிநடத்தும் அந்தர் ஆத்மா பரம்பொருள் விஷ்ணுவே. இப்படியே, எல்லா உயிர்களுக்குள்ளும் அந்தர் ஆத்மாவாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
மருந்து உடம்புக்குள் சென்றால் நோய் தீருவது போல, அந்தர்ஆத்மாவான எம்பெருமானே உயிர்களை சம்சார பந்தத்தில் இருந்து காத்தருள்கிறார். அண்டங்கள் (உலகங்கள்) ஏழு இருக்கின்றன. அந்த ஒவ்வொரு உலகத்திற்கும் தனித்தனி பிரம்மா இருக்கிறார்கள்.
பராசரர் இந்த இடத்தில், ""அவனே படைக்கிறான்; அவனே படைக்கப்படுகிறான். அவனே காக்கிறான்; அவனே காக்கப்படுகிறான்' என்று வேதாந்தம் பேசுகிறார்.
வேதாந்தம் என்றால் புரிந்தது போல இருக்கும். ஆனால், முழுமையாகப் புரியாது.
மயில் ஆடுகிறது என்றால் உங்களுக்கு அர்த்தம் புரிகிறது. மயிலே ஆட்டப்படுகிறது என்றால் அசைந்தாடும் தோகையும் மயிலின் உடம்பில் ஒரு பாகம் தானே! அதைப் போலவே பரம்பொருளான விஷ்ணுவே படைக்கிறான்; படைக்கப்படுகிறான் என்று குறிப்பிடுகிறார்.
பிரம்மாவின் ஆயுளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் பராசரர். பிரம்மாவின் ஆயுளுக்கும், மனிதனின் ஆயுளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. முதலில் மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம் 60,70 ஆயுள் கொண்ட மனித வாழ்விலேயே எத்தனையோ கஷ்டங்கள் குறுக்கிடுகிறது.
அந்தக் காலத்தில் 50 வயதுக்கு மேலே தான் வியாதியே எட்டிப் பார்க்கும். ஆனால், இப்போதெல்லாம் 30 வயதில் கூட மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது.
ஆழ்வார்கள் மனித உடம்பை, "ஓட்டை மாடம்' என்று குறிப்பிடுகின்றனர். உடம்பில் வியாதி வராத வரை பிழைத்துக் கொண்டோம். வந்து விட்டால் அப்புறம் நைந்து கிழிந்த வேட்டி கதை தான். ஒருபுறம் தைத்தால் இன்னொரு புறம் கிழிந்து போவது போல, ஒரு வியாதிக்கு வைத்தியம் பார்க்க இன்னொரு வியாதி உடம்பில் புகுந்து கொள்கிறது.
மகாபாரதக் கதையில் நச்சுப் பொய்கையில் நீர் குடிக்கச் செல்லும்போது, யட்சன் கேட்ட கேள்விக்கு தர்மபுத்திரர் விடை சொல்லும் பகுதி விசேஷமானது. யட்சன், ""உலகில் அதிசயமானது எது?'' என்று கேட்க, ""ஒன்பது வாசல் கொண்ட உடம்புக்குள் உயிர் தங்கியிருப்பது தான்'' என்று பதில் சொல்வார் தர்மர்.
உடம்பில் கண், காது, மூக்கு, வாய், மல,ஜல துவாரம் என ஒன்பது துவாரம் இருந்தாலும், உயிர் அது வழியே சென்று விடாமல் தானே இருக்கிறது. கூண்டுக்கிளியைப் பார்த்திருப்பீர்கள். இறக்கை வீசி வானில் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகூண்டைத் திறந்தாலும் பறக்காமல் அதற்குள்ளேயே உயிர் வாழ்வது போல, உடம்புக்குள் உயிரும் சிறைப்பட்டே கிடக்கிறது.
யட்சன் தர்மரிடம் தொடர்ந்து, ""உயிரையும் விட அதிசயமானது எது?'' என்று கேட்க, ""தன்னோடு வாழ்ந்த மனிதன் இறந்து போவதைக் கண்டும் கூட "போறவன் எல்லாம் போகட்டும்! நான் மட்டும் உலகில் நிரந்தரமானவன் என்று கருதிக் கொண்டு வாழ்வது தான் இன்னும் அதிசயம்'' என்று சொல்வார்.
தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய "திருமாலை' என்னும் 45 பாசுரங்கள் விசேஷமானவை. ""திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்'' என்றே சொல்வார்கள்.
இதில் மனிதன் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்தாலும் கூட, எப்படியெல்லாம் காலத்தை வீணாக்கி விடுகிறான் என்பதை ஆழ்வார் பட்டியலிடுகிறார். அதை தொடர்ந்து பார்ப்போம்.
இன்னும் இனிக்கும்..........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
ஆனால், பூலோகத்தில் கணக்கில் அடங்காத ஜீவராசிகள் இருக்கின்றன. அவை செய்த பாவ, புண்ணிய கணக்குகள் இம்மியும் பிசகுவதில்லை. அவரவர் செய்த வினைப்பயனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அவரவரே அனுபவிக்கும் நியதியை உண்டாக்கி வைத்திருக்கிறார்.
சரிதான், ஆனால் சிலசமையங்களில் நம் செய்கையை நாமே பார்க்கும்போது, இது பூர்வஜன்ம கர்மாவா?...இல்லை அடுத்த ஜன்மத்திர்க்காக நாம் இப்போ செய்து கொண்டிருக்கும் பாவமா என்று புரிய மாட்டேன் என்கிறதே?
சரிதான், ஆனால் சிலசமையங்களில் நம் செய்கையை நாமே பார்க்கும்போது, இது பூர்வஜன்ம கர்மாவா?...இல்லை அடுத்த ஜன்மத்திர்க்காக நாம் இப்போ செய்து கொண்டிருக்கும் பாவமா என்று புரிய மாட்டேன் என்கிறதே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
விமந்தனி , என் கேள்வி மேலே பார்த்தீங்களா?.ஏதும் நடுவே விட்டுப்போச்சா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 16 of 20 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20
Similar topics
» பக்தியில் பலவகை உண்டு. - --வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - தமிழ் MP3
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - தமிழ் MP3
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
Page 16 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|