புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 15 of 20 •
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy](https://www.filepicker.io/api/file/8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy.jpg)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 UpmAbqkhRqK3UMuI0Biy+00000](https://www.filepicker.io/api/file/UpmAbqkhRqK3UMuI0Biy+00000.gif)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy](https://www.filepicker.io/api/file/8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy.jpg)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 UpmAbqkhRqK3UMuI0Biy+00000](https://www.filepicker.io/api/file/UpmAbqkhRqK3UMuI0Biy+00000.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (15)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 UB8nHUQKSFuAsiHYXFbF+15](https://www.filepicker.io/api/file/UB8nHUQKSFuAsiHYXFbF+15.jpg)
அர்த்த பஞ்சகம் என்றால் என்னென்ன தெரியுமா?
ஜீவாத்மா, பரமாத்மா, உபாயம், பிரதிபந்தகம், கைங்கர்ய சொரூபம் என்னும் ஐந்துமே அர்த்த பஞ்சகம்.
ஜீவாத்மா என்பது "நாம் யார்' என்பதைப் பற்றிச் சொல்வது.
உயிர்களைப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் கடவுளின் தன்மையை விளக்குவது பரமாத்மா.
உயிர், கடவுள் இந்த இரண்டிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கடவுளை அடையும் வழியைச் சொல்வது மூன்றாவதான உபாயம்.
இதில் ஆயிரமாயிரம் வழிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் பலவித சமய நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
கடவுளை அடைய விடாமல் தடுக்கும் சம்சார பந்தத்தைப் பற்றிச் சொல்வது பிரதி பந்தகம். முக்தி நிலையில் கடவுளை அடைந்த உயிர், நித்யமான இன்பத்தை அடையும். இதற்கு கைங்கர்ய சொரூபம் என்று பெயர். இந்த நிலையை அடைந்தால், உயிர் எல்லை இல்லாத ஆனந்தத்தை அனுபவித்தபடி இருக்கும்.
ஒரு வீட்டில் பத்து படி அளவுக்கு பால் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே சாப்பிட்டால் ருசி இருக்குமா? அதே பாலை அடுப்பில் ஏற்றி சுண்டக் காய்ச்சுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பாலின் அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் ஒன்பதே முக்கால்படி பால் வற்றி கால் படியாகி விட்டது என்றால், அந்த பால் எந்தளவு சுவையாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதைத் தான் திரட்டுப்பால் என்பார்கள்.
கண்ணனுக்கு மிகவும் பிடித்த நைவேத்யம் திரட்டுப்பால் தான். இது போல எந்த ஒரு விஷயத்திலும் திரட்டுப்பால் போல விசேஷமான பகுதி ஒன்று உண்டு.
ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் அதில் விபீஷண சரணாகதி,
மகாபாரதத்தில் பகவத்கீதை,
வேதத்தில் புருஷ சூக்தம்,
தர்ம சாஸ்திரத்தில் மனுநீதி என்பதெல்லாம் சிறப்பான பகுதிகள்.
அதுபோல, புராணத்தில் விஷ்ணு புராணம் தான் திரட்டுப்பால் போல
விசேஷமானது
ஒருநாள் காலை அனுஷ்டானங்களை எல்லாம் முடித்துவிட்டு பராசரர் அமர்ந்திருந்தார். மைத்ரேயர் அவரிடம் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் கேட்க வந்தார். எல்லாம் தான் தெரிந்து விட்டதே என்று எண்ணிக் கொண்டு குரு என்பவர் சும்மா இருக்க கூடாதாம்! தனக்குரிய அனுஷ்டானத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஜீவாத்மா, பரமாத்மா, உபாயம், பிரதிபந்தகம், கைங்கர்ய சொரூபம் என்னும் ஐந்துமே அர்த்த பஞ்சகம்.
ஜீவாத்மா என்பது "நாம் யார்' என்பதைப் பற்றிச் சொல்வது.
உயிர்களைப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் கடவுளின் தன்மையை விளக்குவது பரமாத்மா.
உயிர், கடவுள் இந்த இரண்டிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கடவுளை அடையும் வழியைச் சொல்வது மூன்றாவதான உபாயம்.
இதில் ஆயிரமாயிரம் வழிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் பலவித சமய நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
கடவுளை அடைய விடாமல் தடுக்கும் சம்சார பந்தத்தைப் பற்றிச் சொல்வது பிரதி பந்தகம். முக்தி நிலையில் கடவுளை அடைந்த உயிர், நித்யமான இன்பத்தை அடையும். இதற்கு கைங்கர்ய சொரூபம் என்று பெயர். இந்த நிலையை அடைந்தால், உயிர் எல்லை இல்லாத ஆனந்தத்தை அனுபவித்தபடி இருக்கும்.
ஒரு வீட்டில் பத்து படி அளவுக்கு பால் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே சாப்பிட்டால் ருசி இருக்குமா? அதே பாலை அடுப்பில் ஏற்றி சுண்டக் காய்ச்சுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பாலின் அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் ஒன்பதே முக்கால்படி பால் வற்றி கால் படியாகி விட்டது என்றால், அந்த பால் எந்தளவு சுவையாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதைத் தான் திரட்டுப்பால் என்பார்கள்.
கண்ணனுக்கு மிகவும் பிடித்த நைவேத்யம் திரட்டுப்பால் தான். இது போல எந்த ஒரு விஷயத்திலும் திரட்டுப்பால் போல விசேஷமான பகுதி ஒன்று உண்டு.
ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் அதில் விபீஷண சரணாகதி,
மகாபாரதத்தில் பகவத்கீதை,
வேதத்தில் புருஷ சூக்தம்,
தர்ம சாஸ்திரத்தில் மனுநீதி என்பதெல்லாம் சிறப்பான பகுதிகள்.
அதுபோல, புராணத்தில் விஷ்ணு புராணம் தான் திரட்டுப்பால் போல
விசேஷமானது
ஒருநாள் காலை அனுஷ்டானங்களை எல்லாம் முடித்துவிட்டு பராசரர் அமர்ந்திருந்தார். மைத்ரேயர் அவரிடம் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் கேட்க வந்தார். எல்லாம் தான் தெரிந்து விட்டதே என்று எண்ணிக் கொண்டு குரு என்பவர் சும்மா இருக்க கூடாதாம்! தனக்குரிய அனுஷ்டானத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குருவாக இருப்பவர், சீடர்களுக்கு உபதேசிப்பதைத் தானும் அனுஷ்டிப்பவராக இருக்கவேண்டும். அதுவே குரு ஸ்தானத்திற்கு லட்சணம். ஊருக்குத் தான் உபதேசம் என்று வாயளவில் சொல்லிக் கொண்டிருந்தால் அது நாயின்வால் போல ஆகி விடும் என்பார்கள்.
இப்படித் தான் குரு ஒருவர் தன் சீடரிடம், ""உபதேசம் மட்டுமே செய்து கொண்டிருந்து, அதற்குத் தகுந்த நடத்தை இல்லாவிட்டால், நாய் வால் போலாகிவிடும்,'' என்று சொல்லி விட்டார்.
உடனே சீடனுக்கு சந்தேகம் வந்து விட்டது.
"குருவே! தேவையில்லாத பொருள் எதையும் பெருமாள் உலகில் படைத்ததில்லை என்று அன்றொரு நாள் சொன்னீர்கள்! இப்போதோ வெறும் உபதேசம் மட்டும் செய்து விட்டு, அதன்படி நடக்காவிட்டால் குருவின் நிலை, நாய் வால் போலாகி விடும் என்கிறீர்களே?'' என்று கேட்டு விட்டான்.
அதற்கு குரு,""உண்மை தானப்பா! பெருமாள் எதையும் தேவையில்லாமல் படைத்தது இல்லை. பாண்டித்யம் பெற்ற பலர் உலகில் இருப்பார்கள். ஆனால், உபதேசிப்பதை அவர்களே பின்பற்ற மாட்டார்கள்.
அவர்களுக்கு உவமை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நாய் வாலைப் பெருமாள் படைத்தார்'' என்று விளக்கம் கொடுத்தார்.
அது சரி! சிங்கம், புலி,பசு எல்லா மிருகத்திற்கும் தானே வால் இருக்கிறது. நாய்க்கு மட்டுமா வால் இருக்கிறது? ஏன் நாய் வாலை மட்டும் சொல்ல வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறது அல்லவா! பொதுவாக மர்ம ஸ்தானத்தை மறைப்பது, ஈ, எறும்பால் தொல்லை நேரும் போது அசைத்து விரட்டுவது என்பது வாலின் பயன்பாடு.
ஆனால், இந்த இரண்டையுமே நாயால் செய்ய முடிவதில்லை. பெயரளவில் நாய்க்கு வாலுண்டே தவிர, அதனால் பயன் இருப்பதில்லை.
பராசர மகரிஷியின் பக்கத்தில் பணிவுடன் நின்றார் மைத்ரேயர். குருவை அணுகும் சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
நேருக்கு நேராக நின்றால் அது குருவுக்குச் சமம் என்பதாகி விடும். குருவின் பின்புறம் நின்றால் அவரின் அருட்பார்வை சீடன் மீது விழாமல் போய் விடும்.
அதனால், பக்கத்தில் பணிவுடன் நின்று தான் பேச வேண்டும் என்பார்கள்.
மைத்ரேயர் பராசரரை அணுகி, ""இந்த உலகம் எதனால் ஆக்கப்பட்டது? இது எதிலிருந்து தோன்றியது? ஆயிரமாயிரம் வேறுபாடுகள் இந்த உலகில் ஏன் உண்டானது? நேற்று என்பது எங்கே போனது? இன்று எங்கே போகிறது? நாளை என்பது என்ன? '' என்று தன் சந்தேகத்தை குருவின் முன் வைத்தார்.
அதற்கான விளக்கம் தர முன்வந்த பராசரர், தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும், மைத்யேர் கேட்ட கேள்விக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லத் தொடங்கினார்.
"விஸ்வாமித்திரரின் தூண்டுதலால், என் தந்தையாகிய சக்திமுனிவரை பிரம்ம ராட்சஷன் ஒருவன் கொன்று விட்டான். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிரம்ம ராட்சஷன் மீது எழுந்த கோபத்தால் ராட்சஷ வர்க்கத்தையே அழிக்க முடிவெடுத்து வேள்வி ஒன்றைத் தொடங்கினேன். பரசுராமர் எப்படி தன் கோடரியால் க்ஷத்திரிய வம்சத்தையே அழிக்க துணிந்தாரோ, அதுபோல என் சபதமும் அமைந்தது.
அப்போது என்னைக் காண வசிஷ்டரும், புலஸ்தியரும் வந்தனர். ஒருவன் செய்த தவறுக்காக, ஒரு வம்சத்தையே அழிக்கத் துணிவது தர்மம் ஆகாது. ஒருவரைத் தீயவன் என்று முடிவெடுத்து அழிக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் கிடையாது என்று எடுத்துரைத்து வேள்வியைத் தடுத்தனர். நானும் அவர்களின் உபதேசத்தை ஏற்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
உடனே அவர்கள் "சிறுவனாக இருந்தாலும், பிடிவாதம் கொள்ளாமல் ஏற்றுக் கொண்ட உனக்கு இரு வரங்களைத் தர விரும்புகிறோம். முதல் வரத்தின் பயனாக, பிரம்மம் என்பது எது என்பதை எளிதாக நீ புரிந்து கொள்வாய். இரண்டாவது வரத்தால் பிரம்மத்தின் தன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பாக்கியமும் உனக்கு கிட்டும்' என்று வாழ்த்தி விட்டு புறப்பட்டனர்.
அதன் பயனாகவே "மைத்ரேயா! நீயும் இப்போது என்னிடம் கேள்வி கேட்கிறாய்'' என்று சீடனின் கேள்விக்கு விடையளிக்கத் தொடங்கினார் பராசரர்.
பராசரர் மட்டும் இந்த வரத்தைப் பெற்றதாக எண்ணி விடாதீர்கள். நல்லவர்களால் வழங்கப்படும் எந்த விஷயமும் தனிப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் கிடைப்பது அல்ல..... அதன் பயன் உலகம் முழுமைக்கும் தான். எப்படி என்கிறீர்களா?
உங்களுக்கான விடையை கீதாசிரியன் கிருஷ்ணரே பகவத்கீதையில் விளக்குகிறார்.. பொறுத்திருங்கள் சொல்கிறேன்!
இப்படித் தான் குரு ஒருவர் தன் சீடரிடம், ""உபதேசம் மட்டுமே செய்து கொண்டிருந்து, அதற்குத் தகுந்த நடத்தை இல்லாவிட்டால், நாய் வால் போலாகிவிடும்,'' என்று சொல்லி விட்டார்.
உடனே சீடனுக்கு சந்தேகம் வந்து விட்டது.
"குருவே! தேவையில்லாத பொருள் எதையும் பெருமாள் உலகில் படைத்ததில்லை என்று அன்றொரு நாள் சொன்னீர்கள்! இப்போதோ வெறும் உபதேசம் மட்டும் செய்து விட்டு, அதன்படி நடக்காவிட்டால் குருவின் நிலை, நாய் வால் போலாகி விடும் என்கிறீர்களே?'' என்று கேட்டு விட்டான்.
அதற்கு குரு,""உண்மை தானப்பா! பெருமாள் எதையும் தேவையில்லாமல் படைத்தது இல்லை. பாண்டித்யம் பெற்ற பலர் உலகில் இருப்பார்கள். ஆனால், உபதேசிப்பதை அவர்களே பின்பற்ற மாட்டார்கள்.
அவர்களுக்கு உவமை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நாய் வாலைப் பெருமாள் படைத்தார்'' என்று விளக்கம் கொடுத்தார்.
அது சரி! சிங்கம், புலி,பசு எல்லா மிருகத்திற்கும் தானே வால் இருக்கிறது. நாய்க்கு மட்டுமா வால் இருக்கிறது? ஏன் நாய் வாலை மட்டும் சொல்ல வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறது அல்லவா! பொதுவாக மர்ம ஸ்தானத்தை மறைப்பது, ஈ, எறும்பால் தொல்லை நேரும் போது அசைத்து விரட்டுவது என்பது வாலின் பயன்பாடு.
ஆனால், இந்த இரண்டையுமே நாயால் செய்ய முடிவதில்லை. பெயரளவில் நாய்க்கு வாலுண்டே தவிர, அதனால் பயன் இருப்பதில்லை.
பராசர மகரிஷியின் பக்கத்தில் பணிவுடன் நின்றார் மைத்ரேயர். குருவை அணுகும் சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
நேருக்கு நேராக நின்றால் அது குருவுக்குச் சமம் என்பதாகி விடும். குருவின் பின்புறம் நின்றால் அவரின் அருட்பார்வை சீடன் மீது விழாமல் போய் விடும்.
அதனால், பக்கத்தில் பணிவுடன் நின்று தான் பேச வேண்டும் என்பார்கள்.
மைத்ரேயர் பராசரரை அணுகி, ""இந்த உலகம் எதனால் ஆக்கப்பட்டது? இது எதிலிருந்து தோன்றியது? ஆயிரமாயிரம் வேறுபாடுகள் இந்த உலகில் ஏன் உண்டானது? நேற்று என்பது எங்கே போனது? இன்று எங்கே போகிறது? நாளை என்பது என்ன? '' என்று தன் சந்தேகத்தை குருவின் முன் வைத்தார்.
அதற்கான விளக்கம் தர முன்வந்த பராசரர், தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும், மைத்யேர் கேட்ட கேள்விக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லத் தொடங்கினார்.
"விஸ்வாமித்திரரின் தூண்டுதலால், என் தந்தையாகிய சக்திமுனிவரை பிரம்ம ராட்சஷன் ஒருவன் கொன்று விட்டான். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிரம்ம ராட்சஷன் மீது எழுந்த கோபத்தால் ராட்சஷ வர்க்கத்தையே அழிக்க முடிவெடுத்து வேள்வி ஒன்றைத் தொடங்கினேன். பரசுராமர் எப்படி தன் கோடரியால் க்ஷத்திரிய வம்சத்தையே அழிக்க துணிந்தாரோ, அதுபோல என் சபதமும் அமைந்தது.
அப்போது என்னைக் காண வசிஷ்டரும், புலஸ்தியரும் வந்தனர். ஒருவன் செய்த தவறுக்காக, ஒரு வம்சத்தையே அழிக்கத் துணிவது தர்மம் ஆகாது. ஒருவரைத் தீயவன் என்று முடிவெடுத்து அழிக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் கிடையாது என்று எடுத்துரைத்து வேள்வியைத் தடுத்தனர். நானும் அவர்களின் உபதேசத்தை ஏற்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
உடனே அவர்கள் "சிறுவனாக இருந்தாலும், பிடிவாதம் கொள்ளாமல் ஏற்றுக் கொண்ட உனக்கு இரு வரங்களைத் தர விரும்புகிறோம். முதல் வரத்தின் பயனாக, பிரம்மம் என்பது எது என்பதை எளிதாக நீ புரிந்து கொள்வாய். இரண்டாவது வரத்தால் பிரம்மத்தின் தன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பாக்கியமும் உனக்கு கிட்டும்' என்று வாழ்த்தி விட்டு புறப்பட்டனர்.
அதன் பயனாகவே "மைத்ரேயா! நீயும் இப்போது என்னிடம் கேள்வி கேட்கிறாய்'' என்று சீடனின் கேள்விக்கு விடையளிக்கத் தொடங்கினார் பராசரர்.
பராசரர் மட்டும் இந்த வரத்தைப் பெற்றதாக எண்ணி விடாதீர்கள். நல்லவர்களால் வழங்கப்படும் எந்த விஷயமும் தனிப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் கிடைப்பது அல்ல..... அதன் பயன் உலகம் முழுமைக்கும் தான். எப்படி என்கிறீர்களா?
உங்களுக்கான விடையை கீதாசிரியன் கிருஷ்ணரே பகவத்கீதையில் விளக்குகிறார்.. பொறுத்திருங்கள் சொல்கிறேன்!
இன்னும் இனிக்கும்......
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 A4riy9BRE6d4cy9q5wBz+00000](https://www.filepicker.io/api/file/a4riy9BRE6d4cy9q5wBz+00000.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திட்டு வாங்கும் பாலோ ஆண்பால்
திட்டும் பாலோ பெண் பால்
திகட்டா பாலாகட்டும்
சம்சார பந்தம்
திட்டும் பாலோ பெண் பால்
திகட்டா பாலாகட்டும்
சம்சார பந்தம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எப்படியோ வாழ்க்கை திகட்டாமல் இருந்தால் சரி.யினியவன் wrote:திட்டு வாங்கும் பாலோ ஆண்பால்
திட்டும் பாலோ பெண் பால்
திகட்டா பாலாகட்டும்
சம்சார பந்தம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திகட்டாமத்தானே உங்களுக்கு 25 வருடம் ஓடிடிச்சு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
அளவாக பதிவு இடுவதால்
நிறைவாகப் படிக்க முடிகிறது ,
நிறைவாகப் படிப்பதால்,
படித்தாலே இனிக்கிறது ,
திரட்டுப் பால் போல் .!
ரமணியன்
நிறைவாகப் படிக்க முடிகிறது ,
நிறைவாகப் படிப்பதால்,
படித்தாலே இனிக்கிறது ,
திரட்டுப் பால் போல் .!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (16)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 Axt24iKRHW6pGc2Qrplq+16](https://www.filepicker.io/api/file/axt24iKRHW6pGc2Qrplq+16.jpg)
கண்ணன் பகவத் கீதையை அர்ஜூனனுக்காக மட்டுமா உபதேசித்தான்?
கீதையின் 18வது அத்தியாயத்தில், "மா மேகம் சரணம் வ்ரஜ'' என்று சரண ஸ்லோகம் இடம்பெற்றிருக்கும். "என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு' என்று கண்ணனே சொல்கிறான்.
அப்படியானால் கண்ணனின் உபதேசத்தைத் தொடர்ந்து அர்ஜூனனின் சரணாகதி பற்றித்தானே அடுத்த ஸ்லோகம் இருக்க வேண்டும். கீதை மட்டுமில்லாமல், மகாபாரதம் முழுவதுமே அர்ஜூன சரணாகதி பற்றிய குறிப்பு எங்குமே பார்க்க முடியாது.
கேட்டது என்னவோ அர்ஜூனன் என்றாலும், உலக நன்மைக்காகத் தான் கண்ணன் இதை உபதேசித்தான் என்பது தான் இதன் அடிப்படை.
புராணம், இதிகாசம், சாஸ்திரம் இப்படியான உயர்ந்த விஷயம் எல்லாம் ஒருவருக்காக எழுந்தது அல்ல. அது உலக நன்மை கருதி உண்டானது.
மைத்ரேயர் வாயிலாக விஷ்ணு புராணத்தின் மகத்துவத்தை உலகமே அறிந்து கொண்டது.
"உலகம் எதுவாக இருக்கிறது?' என்று கேட்ட மைத்ரேயரின் கேள்விக்கு பதிலாக, ""இந்த உலகம் விஷ்ணுவிடம் இருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவனையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த்துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான். அவனே உலகமாக இருக்கிறான்,'' என்று பராசரர் பதிலளித்தார்.
மைத்ரேயர் கேட்ட கேள்வியும், பராசரர் சொன்ன பதிலும் உயர்வான விஷயங்கள். நம்மைப் போன்றவர்களுக்கு இதன் விசேஷ உள்ளர்த்தங்கள் புரிவதில்லை.
இப்படித்தான், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் 16ஆண்டு காலம் உணவு, உறக்கம் இல்லாமல் புளிய மரத்தடியில் கண்மூடி தியானத்தில் இருந்தார். அவர் அமர்ந்திருந்த புளியமரமும் புனிதம் பெற்றது. இதனால், "திருப்புளியாழ்வார்' என்று அந்த மரத்திற்கே பெயர் வைத்து விட்டார்கள். அவரைத் தரிசிக்க வடநாட்டில் இருந்து மதுரகவி ஆழ்வார் வந்தார்.
நம்மாழ்வார் வெளியுலக பிரக்ஞை அற்றவராக அசைவற்று இருந்ததைப் பார்த்தார். அவர் மீது கல்லை வீசிப் பார்த்த போது லேசாகக் கண் திறந்தார். அவரிடம், "செத்ததின் வயிற்றில் சிறியது கிடக்கில் எத்தை தின்று எங்கே கிடக்கும்' என்று கேள்வி கேட்டார் மதுரகவியார்.
நம்மாழ்வாரும், "அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார். இந்த கேள்வியும், பதிலும் பார்த்தால் ஏதும் நம்மைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை.
அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு குரு, சீடராக மாறினர்.
""ஜீவாத்மாவாகிய உயிர்களிடம், கடவுளைப் பற்றிய அறிவு உண்டானால் என்ன செய்யும்?'' என்பது தான் மதுரகவியாழ்வாரின் கேள்வி. ""கடவுளின் திருவடி இன்பத்திலே உயிர் ஒன்றி விடும்'' என்பது நம்மாழ்வாரின் பதில்.
தத்துவார்த்தமான இதனைக் கேட்பவருக்கு விளக்கிச் சொன்னால் தான் புரிகிறது. பராசரர், மைத்ரேயர் உரையாடலும் இப்படித் தான் இருந்தது.
உதாரணத்திற்கு ஒரு மண்பாண்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மண்பாண்டம் செய்ய வேண்டுமானால், மண், குயவன், தண்டச் சக்கரம் ஆகிய மூன்றும் அடிப்படைக் காரணங்கள். அது போல வேட்டிக்கு பஞ்சு, நெசவாளி, தறி மூன்றும் அடிப்படை.
சங்கிலி செய்ய வேண்டுமானால் தங்கம், பொற்கொல்லர், கொல்லரின் கருவி ஆகிய மூன்றும் அவசியம்.
எந்த பொருள் செய்ய வேண்டுமானாலும் இந்த மூன்று காரணம் இல்லாமல் முடியாது. ஆனால், உலக சிருஷ்டிக்கு இது பொருந்துவதில்லை. அங்கு பண்ணுவதும், பண்ணப்படுவதும் ஒன்று தான்.
கீதையின் 18வது அத்தியாயத்தில், "மா மேகம் சரணம் வ்ரஜ'' என்று சரண ஸ்லோகம் இடம்பெற்றிருக்கும். "என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு' என்று கண்ணனே சொல்கிறான்.
அப்படியானால் கண்ணனின் உபதேசத்தைத் தொடர்ந்து அர்ஜூனனின் சரணாகதி பற்றித்தானே அடுத்த ஸ்லோகம் இருக்க வேண்டும். கீதை மட்டுமில்லாமல், மகாபாரதம் முழுவதுமே அர்ஜூன சரணாகதி பற்றிய குறிப்பு எங்குமே பார்க்க முடியாது.
கேட்டது என்னவோ அர்ஜூனன் என்றாலும், உலக நன்மைக்காகத் தான் கண்ணன் இதை உபதேசித்தான் என்பது தான் இதன் அடிப்படை.
புராணம், இதிகாசம், சாஸ்திரம் இப்படியான உயர்ந்த விஷயம் எல்லாம் ஒருவருக்காக எழுந்தது அல்ல. அது உலக நன்மை கருதி உண்டானது.
மைத்ரேயர் வாயிலாக விஷ்ணு புராணத்தின் மகத்துவத்தை உலகமே அறிந்து கொண்டது.
"உலகம் எதுவாக இருக்கிறது?' என்று கேட்ட மைத்ரேயரின் கேள்விக்கு பதிலாக, ""இந்த உலகம் விஷ்ணுவிடம் இருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவனையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த்துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான். அவனே உலகமாக இருக்கிறான்,'' என்று பராசரர் பதிலளித்தார்.
மைத்ரேயர் கேட்ட கேள்வியும், பராசரர் சொன்ன பதிலும் உயர்வான விஷயங்கள். நம்மைப் போன்றவர்களுக்கு இதன் விசேஷ உள்ளர்த்தங்கள் புரிவதில்லை.
இப்படித்தான், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் 16ஆண்டு காலம் உணவு, உறக்கம் இல்லாமல் புளிய மரத்தடியில் கண்மூடி தியானத்தில் இருந்தார். அவர் அமர்ந்திருந்த புளியமரமும் புனிதம் பெற்றது. இதனால், "திருப்புளியாழ்வார்' என்று அந்த மரத்திற்கே பெயர் வைத்து விட்டார்கள். அவரைத் தரிசிக்க வடநாட்டில் இருந்து மதுரகவி ஆழ்வார் வந்தார்.
நம்மாழ்வார் வெளியுலக பிரக்ஞை அற்றவராக அசைவற்று இருந்ததைப் பார்த்தார். அவர் மீது கல்லை வீசிப் பார்த்த போது லேசாகக் கண் திறந்தார். அவரிடம், "செத்ததின் வயிற்றில் சிறியது கிடக்கில் எத்தை தின்று எங்கே கிடக்கும்' என்று கேள்வி கேட்டார் மதுரகவியார்.
நம்மாழ்வாரும், "அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார். இந்த கேள்வியும், பதிலும் பார்த்தால் ஏதும் நம்மைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை.
அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு குரு, சீடராக மாறினர்.
""ஜீவாத்மாவாகிய உயிர்களிடம், கடவுளைப் பற்றிய அறிவு உண்டானால் என்ன செய்யும்?'' என்பது தான் மதுரகவியாழ்வாரின் கேள்வி. ""கடவுளின் திருவடி இன்பத்திலே உயிர் ஒன்றி விடும்'' என்பது நம்மாழ்வாரின் பதில்.
தத்துவார்த்தமான இதனைக் கேட்பவருக்கு விளக்கிச் சொன்னால் தான் புரிகிறது. பராசரர், மைத்ரேயர் உரையாடலும் இப்படித் தான் இருந்தது.
உதாரணத்திற்கு ஒரு மண்பாண்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மண்பாண்டம் செய்ய வேண்டுமானால், மண், குயவன், தண்டச் சக்கரம் ஆகிய மூன்றும் அடிப்படைக் காரணங்கள். அது போல வேட்டிக்கு பஞ்சு, நெசவாளி, தறி மூன்றும் அடிப்படை.
சங்கிலி செய்ய வேண்டுமானால் தங்கம், பொற்கொல்லர், கொல்லரின் கருவி ஆகிய மூன்றும் அவசியம்.
எந்த பொருள் செய்ய வேண்டுமானாலும் இந்த மூன்று காரணம் இல்லாமல் முடியாது. ஆனால், உலக சிருஷ்டிக்கு இது பொருந்துவதில்லை. அங்கு பண்ணுவதும், பண்ணப்படுவதும் ஒன்று தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பிரம்மமே (தெய்வமே) உலகமாக இருக்கிறது. உலகமே பிரம்மரூபம் தான். எந்த ஒரு குயவனும் "நான் குடமாக ஆவேன்' என்று சொல்ல முடியாது. மண்ணும், குயவனும் தனித்தனி தான். ஆனால், "நான் உலகமாக ஆவேன்' என்று பிரம்மம் சொல்கிறது. அப்படியானால் பிரம்மமும், உலகமும் ஒன்று தானே என்று கேட்க முடியுமா என்றால் அதுவும் கிடையாது.
விளக்கம் ஒன்றைத் தெரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
பழுதாகிப் போன கடிகாரம் ஒன்று இருந்தது. அதை கடிகாரக் கடைக்குச் சென்று பழுது பார்த்துத் தரும் படி கொடுத்தால் தெரியும்.
பழுதுபார்ப்பவர் அதில் உள்ள முள் அத்தனையையும் கழற்றி வைத்துக் கொண்டு பழுது பார்ப்பார். அங்கு போய்ப் பார்த்தால், நாம் கொடுத்த ஒரு கடிகாரம் அக்கு வேறு ஆணிவேறாக கழற்றப்பட்டு 150 கடிகாரம் போல பரப்பிக் கிடக்கும். கேட்டால், "இதோ 5 நிமிஷம் பொறுங்கள் கடிகாரம் தயாராயிடும்' என்று சொல்வார் கடைக்காரர். உண்மையாகவே, கண்மூடித் திறப்பதற்குள் அத்தனையையும் ஒன்றாக்கி கையில் கொடுத்து விடுவார்.
பொற்கொல்லர் தங்கவேலை செய்து கொண்டிருக்கும் போது தங்கத் துகள் கீழே விழுந்து கொண்டிருக்கும். வேலை முடிந்ததும் மெழுகு உருண்டையை எடுத்துக் கொண்டு ஒற்றி எடுத்தால் போதும். அத்தனை துகளும் அதில் ஒட்டிக் கொண்டு விடும். உலகில் கூடியிருக்கும் அத்தனை பேருக்குள்ளும் பிரம்மமே இருக்கிறது. ஆனால், நாம் தான் வேறு வேறாக உணர்கிறோம்!
எப்படி என்றால், அத்தனை தங்கமும் மெழுகில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், தங்கமும், மெழுகும் வேறு வேறாக இருப்பது போல!
ஆண்மயிலுக்குத் தோகை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பெண்மயிலான லட்சுமியைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் ஆண்மயிலான திருமால் தோகை விரித்து ஆடுகிறார்.
தோகை விரிப்பது தான் உலக சிருஷ்டி. ஆடி முடித்ததும் மயில் தன் அழகிய சிறகை ஒடுக்கி ஒன்றாக்கி விடுவது போல, உலகை ஒடுக்கி தன்னுள்ளே சேர்த்துக் கொள்கிறார். அது தான் உலகத்தின் அழிவு.
தனக்குரிய வீட்டினைக் கட்டும் சிலந்திப் பூச்சி தன் எச்சிலிலே இழையைப் பின்னிக் கொண்டு அதிலே தங்கிக் கொள்கிறது. அதே சிலந்தி அந்த இழைகளை வாய்க்குள் இழுத்துக் கொள்ளவும் செய்யும்.
இந்த இரண்டும் படைத்தல், அழித்தல் ஆகிய இரண்டும் போல இருக்கிறது. மயிலுக்குள் தோகையும், பூச்சிக்குள் நூல் இழையும் அடங்கி இருப்பது போல உயிர்களும், உலகமும் பிரம்மத்திற்குள் அடங்கி இருக்கின்றன.
இதே தத்துவத்தை துள்ளல் ஓசை நயத்துடன் ஒரு ஆழ்வார் பாசுரம் வேறுவிதமாகச் சொல்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.
விளக்கம் ஒன்றைத் தெரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
பழுதாகிப் போன கடிகாரம் ஒன்று இருந்தது. அதை கடிகாரக் கடைக்குச் சென்று பழுது பார்த்துத் தரும் படி கொடுத்தால் தெரியும்.
பழுதுபார்ப்பவர் அதில் உள்ள முள் அத்தனையையும் கழற்றி வைத்துக் கொண்டு பழுது பார்ப்பார். அங்கு போய்ப் பார்த்தால், நாம் கொடுத்த ஒரு கடிகாரம் அக்கு வேறு ஆணிவேறாக கழற்றப்பட்டு 150 கடிகாரம் போல பரப்பிக் கிடக்கும். கேட்டால், "இதோ 5 நிமிஷம் பொறுங்கள் கடிகாரம் தயாராயிடும்' என்று சொல்வார் கடைக்காரர். உண்மையாகவே, கண்மூடித் திறப்பதற்குள் அத்தனையையும் ஒன்றாக்கி கையில் கொடுத்து விடுவார்.
பொற்கொல்லர் தங்கவேலை செய்து கொண்டிருக்கும் போது தங்கத் துகள் கீழே விழுந்து கொண்டிருக்கும். வேலை முடிந்ததும் மெழுகு உருண்டையை எடுத்துக் கொண்டு ஒற்றி எடுத்தால் போதும். அத்தனை துகளும் அதில் ஒட்டிக் கொண்டு விடும். உலகில் கூடியிருக்கும் அத்தனை பேருக்குள்ளும் பிரம்மமே இருக்கிறது. ஆனால், நாம் தான் வேறு வேறாக உணர்கிறோம்!
எப்படி என்றால், அத்தனை தங்கமும் மெழுகில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், தங்கமும், மெழுகும் வேறு வேறாக இருப்பது போல!
ஆண்மயிலுக்குத் தோகை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பெண்மயிலான லட்சுமியைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் ஆண்மயிலான திருமால் தோகை விரித்து ஆடுகிறார்.
தோகை விரிப்பது தான் உலக சிருஷ்டி. ஆடி முடித்ததும் மயில் தன் அழகிய சிறகை ஒடுக்கி ஒன்றாக்கி விடுவது போல, உலகை ஒடுக்கி தன்னுள்ளே சேர்த்துக் கொள்கிறார். அது தான் உலகத்தின் அழிவு.
தனக்குரிய வீட்டினைக் கட்டும் சிலந்திப் பூச்சி தன் எச்சிலிலே இழையைப் பின்னிக் கொண்டு அதிலே தங்கிக் கொள்கிறது. அதே சிலந்தி அந்த இழைகளை வாய்க்குள் இழுத்துக் கொள்ளவும் செய்யும்.
இந்த இரண்டும் படைத்தல், அழித்தல் ஆகிய இரண்டும் போல இருக்கிறது. மயிலுக்குள் தோகையும், பூச்சிக்குள் நூல் இழையும் அடங்கி இருப்பது போல உயிர்களும், உலகமும் பிரம்மத்திற்குள் அடங்கி இருக்கின்றன.
இதே தத்துவத்தை துள்ளல் ஓசை நயத்துடன் ஒரு ஆழ்வார் பாசுரம் வேறுவிதமாகச் சொல்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.
இன்னும் இனிக்கும்......
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 15 6q1ZGgJ3QGStZGQwTRsC+00000](https://www.filepicker.io/api/file/6q1ZGgJ3QGStZGQwTRsC+00000.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
அருமை
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 20
|
|