Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters
Page 14 of 20
Page 14 of 20 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
First topic message reminder :
Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (13)
அவர்தான் வேதவியாசர். நாராயணரே வியாசராக அவதரித்து மகாபாரதம், பாகவதம், பதினெண் புராணம் எல்லாம் எழுதினார். வியாசர் என்ற சொல்லுக்கு "பகுத்துக் கொடுத்தவர்' என்பது பொருள். வேதங்களை நான்காகப் பகுத்துக் கொடுத்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
கலியுகத்திற்கு முந்திய கிருத யுகம், துவாபர யுகம், திரேதா யுகங்களில் நான்கு வேதங்களும் ஒன்றாகவே இருந்தன. இதை ரிக்,யஜுர், சாம, அதர்வணம் என நான்காகப் பகுத்தளித்த வியாசரின் பரம்பரை மிகவும் விசேஷமானது.
அவரின் பரம்பரை பிரம்மாவில் தொடங்கும். படைப்புக் கடவுளான பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர். இவர் தான், ராமன் அவதரித்த ரகு வம்சத்தின் குலகுரு. அவரது பிள்ளை சக்தி. சக்தியின் மகன் பராசரர்.
பராசரருக்குப் பிறந்தவர் தான் வேதவியாசர். வியாசரின் மகன் சுகர். இப்படி அவருடைய பரம்பரையில் வந்த அனைவருமே தவ சிரேஷ்டர்கள். அதிலும் சுகருக்கு கண்ணில் காணும் எல்லாமே தெய்வீகம் தான். பேதநிலையைக் கடந்து எல்லாவற்றையும் ஒன்றாகக் காண்பவர்.
வியாசர் வயதில் பெரியவர். அவருக்கு 120 வயது. சுகருக்கோ வயது 16. வயதான தந்தையுடன் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தார் சுகர். அங்கு நீராடிக் கொண்டிருந்த பெண்கள் சுகரைக் கண்டு சிறிதும் வெட்கப்படாமல் நீராடிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாசரைக் கண்டு வெட்கப்பட்டு மேலாடையால் தங்களை மூடிக் கொண்டனர். ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்ற உண்மையை அந்த பெண்களிடமே கேட்டார் வியாசர்.
"கட்டிளங்காளையாக இருந்தாலும், இச்சை சிறிதும் இல்லாமல் மண், பெண், மரம், கல் என எல்லாவற்றையும் ஒன்றாக உணரும் பக்குவ ஆன்மாவாக உங்கள் பிள்ளை சுகர் இருக்கிறார்,'' என்றனர் அவர்கள்.
தன் பிள்ளையின் தெய்வீக மேன்மையை இதன் மூலம் உணர்ந்து கொண்டார் வியாசர். உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கின்றன. இதைக் கடந்து கரை சேர படகு தேவை.
ஆண்டாள் திருப்பாவை முப்பதாவது பாசுரத்தில் "வங்கக்கடல் கடைந்த மாதவன்' என்று பாடுகிறாள். வங்கம் என்றால் "கப்பல்'. கடலைக் கடக்க கப்பல் உதவுவது போல, மனித வாழ்வு என்னும் சம்சாரக் கடலைக் கடக்க புராணங்கள் துணை செய்கின்றன.
சத்வ, ரஜோ, தமோ என்னும் முக்குணங்களைக் கொண்டவனாக மனிதன் இருக்கிறான். சாதுவான நல்ல குணமே சத்வம். அதாவது தெளிந்த சிந்தனையுடன் அமைதியாக இருப்பது. ரஜோ குணம் என்பது கோபம், ஆசை, வேகம் என உலகியலில் ஈடுபடுவது. தமோ குணம் என்பது சோம்பல், தாமதம், மயக்கம் நிறைந்திருப்பது.
கலியுகத்திற்கு முந்திய கிருத யுகம், துவாபர யுகம், திரேதா யுகங்களில் நான்கு வேதங்களும் ஒன்றாகவே இருந்தன. இதை ரிக்,யஜுர், சாம, அதர்வணம் என நான்காகப் பகுத்தளித்த வியாசரின் பரம்பரை மிகவும் விசேஷமானது.
அவரின் பரம்பரை பிரம்மாவில் தொடங்கும். படைப்புக் கடவுளான பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர். இவர் தான், ராமன் அவதரித்த ரகு வம்சத்தின் குலகுரு. அவரது பிள்ளை சக்தி. சக்தியின் மகன் பராசரர்.
பராசரருக்குப் பிறந்தவர் தான் வேதவியாசர். வியாசரின் மகன் சுகர். இப்படி அவருடைய பரம்பரையில் வந்த அனைவருமே தவ சிரேஷ்டர்கள். அதிலும் சுகருக்கு கண்ணில் காணும் எல்லாமே தெய்வீகம் தான். பேதநிலையைக் கடந்து எல்லாவற்றையும் ஒன்றாகக் காண்பவர்.
வியாசர் வயதில் பெரியவர். அவருக்கு 120 வயது. சுகருக்கோ வயது 16. வயதான தந்தையுடன் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தார் சுகர். அங்கு நீராடிக் கொண்டிருந்த பெண்கள் சுகரைக் கண்டு சிறிதும் வெட்கப்படாமல் நீராடிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாசரைக் கண்டு வெட்கப்பட்டு மேலாடையால் தங்களை மூடிக் கொண்டனர். ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்ற உண்மையை அந்த பெண்களிடமே கேட்டார் வியாசர்.
"கட்டிளங்காளையாக இருந்தாலும், இச்சை சிறிதும் இல்லாமல் மண், பெண், மரம், கல் என எல்லாவற்றையும் ஒன்றாக உணரும் பக்குவ ஆன்மாவாக உங்கள் பிள்ளை சுகர் இருக்கிறார்,'' என்றனர் அவர்கள்.
தன் பிள்ளையின் தெய்வீக மேன்மையை இதன் மூலம் உணர்ந்து கொண்டார் வியாசர். உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கின்றன. இதைக் கடந்து கரை சேர படகு தேவை.
ஆண்டாள் திருப்பாவை முப்பதாவது பாசுரத்தில் "வங்கக்கடல் கடைந்த மாதவன்' என்று பாடுகிறாள். வங்கம் என்றால் "கப்பல்'. கடலைக் கடக்க கப்பல் உதவுவது போல, மனித வாழ்வு என்னும் சம்சாரக் கடலைக் கடக்க புராணங்கள் துணை செய்கின்றன.
சத்வ, ரஜோ, தமோ என்னும் முக்குணங்களைக் கொண்டவனாக மனிதன் இருக்கிறான். சாதுவான நல்ல குணமே சத்வம். அதாவது தெளிந்த சிந்தனையுடன் அமைதியாக இருப்பது. ரஜோ குணம் என்பது கோபம், ஆசை, வேகம் என உலகியலில் ஈடுபடுவது. தமோ குணம் என்பது சோம்பல், தாமதம், மயக்கம் நிறைந்திருப்பது.
Last edited by விமந்தனி on Tue Feb 23, 2016 4:16 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
ஒருவரை எதிர்பார்ப்புடன் உதவி கேட்டுச் செல்லும்போது,"நிச்சயமா செய்து தருவேன்; என்னை நம்புங்கள்' என்று பண்புடன் நடந்து கொள்வது சத்வ குணம். செய்ய வாய்ப்பிருந்தாலும் கோபமாக வந்தவரைப் புறக்கணிப்பது ரஜோகுணம். அதைக் கண்டு கொள்ளாமல், சிந்திக்காமல் சோம்பலுடன் இருப்பது தமோகுணம்.
தமிழ் இலக்கியத்தில் தாண்டவம், பிள்ளைத்தமிழ், கலம்பகம் என்று எத்தனையோ பாடல் வகை உண்டு. அதில் "எழுகூற்றிருக்கை' என்பதும் ஒரு வகை. இதைக் "கணக்கு பாடல்' என்று சொல்லலாம். அதாவது, எண்களால் நிரல்படச் சொல்லி பாடுவது.
ஆழ்வார்களில் அதிகப் பாசுரங்களைப் பாடிய திருமங்கையாழ்வார் இப்பாடல் வகையில் "திருவெழுகூற்றிருக்கை' என்றொரு பாடல் பாடியிருக்கிறார். அதில் முக்குணம் பற்றிய குறிப்பு வருகிறது. "முக்குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றனில் இருந்து' என்று நமக்கு வழிகாட்டுகிறார் அவர். முக்குணத்தில் ரஜோ, தமோ குணத்தை கைவிட்டு சத்வகுணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருள்.
இந்த மூன்று குணங்களின் அடிப்படையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குணத்திற்கும் ஆறு வீதமாக பதினெட்டு புராணங்கள் உள்ளன. அதில் சத்வ குணத்தைப் போற்றும் விதத்தில் அமைந்த ஆறில் உயர்ந்ததாக இருப்பது விஷ்ணு புராணம்.
புராணங்களுக்கு ஐந்து விதமான லட்சணங்கள் உண்டு. அதில் முதலாவது குறிக்கோள். குறிக்கோள் என்றதும், நம் வாழ்க்கையே குறிக்கோளை நோக்கி செல்வது தான். ஆனால், எல்லாருக்கும் எப்போதும் ஒரே குறிக்கோள் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒருவரே வாழ்வில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு இருக்க முடியாது.
இரண்டு வயதில் இருந்த எதிர்பார்ப்பு அப்படியே ஆயுளுக்கும் நீடிப்பதில்லை. வயதுக்கேற்ப குறிக்கோள் மாறுகிறது. இருக்கும் இடத்தைப் பொறுத்தும், வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டைப் பொறுத்தும் அதன் தாக்கம் மாறிக் கொண்டே இருக்கும். பசியால் வாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் விஷ்ணு புராணத்தை எடுத்துச் சொன்னால் கேட்க முடியுமா? அவருக்கு சாப்பாடு தான் முக்கியம்.
கால் பந்தாட்டம் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் கால்பந்தாட்ட வீரர்கள் பந்து செல்லும் இடத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். பந்தும் ஓரிடத்தில் நிற்காது. ஆளாளுக்கு உதைக்க பந்து இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், எதை மாற்றினாலும் பந்து அடைய வேண்டிய இலக்கான "கோல் போஸ்ட்' மாறப் போவதில்லை.
அது போலத் தான் மனித வாழ்க்கையும். மனதிற்குள் எத்தனை ஆட்டம் நாம் ஆடிக் கொண்டிருந்தாலும் கடைசியில் சென்று சேர வேண்டிய குறிக்கோள் மாறப்போவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கை, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இறுதியில் வாழ்வு முடிவுக்கு வரத் தான் போகிறது.
வாழ்வில் இன்பதுன்பம் கலந்திருப்பதை, "முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் கெட்டவனும் இல்லை' என்று கூட சொல்லி வைத்தார்கள்.
நவக்கிரகங்களில் சனீஸ்வரர் ஒருராசியில் இரண்டரை வருஷம் சஞ்சரிப்பார். ராசி சக்கரத்தை அவர் கடக்க 30வருஷம் ஆகும். அதற்கேற்ப வாழ்வின் போக்கு மாறி விடும் என்பதால் தான் இப்படி சொன்னார்கள்.
ஆனால், இன்ப துன்பம் என்பது வெள்ளை வேட்டி போல இருக்கிறது. வேட்டியின் அடியில் இருக்கும் சரிகை நடக்கிறப்போ லேசா பளபளக்கும். அதுபோல, வாழ்வில் அப்பப்போ இன்பம் தலைகாட்டும். ஆனால், பெரும்பாலும் சந்திப்பது என்னவோ துன்பம் தான்.
இதை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லி வாழ்வின் முடிவான குறிக்கோளை எடுத்துச் சொல்வது புராணம் தான். பழையதாக இருந்தாலும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் விதத்தில் என்றும் புதியதாக இருந்து நமக்கு இன்றும் வழிகாட்டி நிற்கிறது. அதிலும் இந்த வரிசையில் முதலிடம் பிடிக்கும் விஷ்ணு புராணத்திற்குள் இனி நுழைவோம்.
தமிழ் இலக்கியத்தில் தாண்டவம், பிள்ளைத்தமிழ், கலம்பகம் என்று எத்தனையோ பாடல் வகை உண்டு. அதில் "எழுகூற்றிருக்கை' என்பதும் ஒரு வகை. இதைக் "கணக்கு பாடல்' என்று சொல்லலாம். அதாவது, எண்களால் நிரல்படச் சொல்லி பாடுவது.
ஆழ்வார்களில் அதிகப் பாசுரங்களைப் பாடிய திருமங்கையாழ்வார் இப்பாடல் வகையில் "திருவெழுகூற்றிருக்கை' என்றொரு பாடல் பாடியிருக்கிறார். அதில் முக்குணம் பற்றிய குறிப்பு வருகிறது. "முக்குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றனில் இருந்து' என்று நமக்கு வழிகாட்டுகிறார் அவர். முக்குணத்தில் ரஜோ, தமோ குணத்தை கைவிட்டு சத்வகுணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருள்.
இந்த மூன்று குணங்களின் அடிப்படையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குணத்திற்கும் ஆறு வீதமாக பதினெட்டு புராணங்கள் உள்ளன. அதில் சத்வ குணத்தைப் போற்றும் விதத்தில் அமைந்த ஆறில் உயர்ந்ததாக இருப்பது விஷ்ணு புராணம்.
புராணங்களுக்கு ஐந்து விதமான லட்சணங்கள் உண்டு. அதில் முதலாவது குறிக்கோள். குறிக்கோள் என்றதும், நம் வாழ்க்கையே குறிக்கோளை நோக்கி செல்வது தான். ஆனால், எல்லாருக்கும் எப்போதும் ஒரே குறிக்கோள் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒருவரே வாழ்வில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு இருக்க முடியாது.
இரண்டு வயதில் இருந்த எதிர்பார்ப்பு அப்படியே ஆயுளுக்கும் நீடிப்பதில்லை. வயதுக்கேற்ப குறிக்கோள் மாறுகிறது. இருக்கும் இடத்தைப் பொறுத்தும், வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டைப் பொறுத்தும் அதன் தாக்கம் மாறிக் கொண்டே இருக்கும். பசியால் வாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் விஷ்ணு புராணத்தை எடுத்துச் சொன்னால் கேட்க முடியுமா? அவருக்கு சாப்பாடு தான் முக்கியம்.
கால் பந்தாட்டம் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் கால்பந்தாட்ட வீரர்கள் பந்து செல்லும் இடத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். பந்தும் ஓரிடத்தில் நிற்காது. ஆளாளுக்கு உதைக்க பந்து இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், எதை மாற்றினாலும் பந்து அடைய வேண்டிய இலக்கான "கோல் போஸ்ட்' மாறப் போவதில்லை.
அது போலத் தான் மனித வாழ்க்கையும். மனதிற்குள் எத்தனை ஆட்டம் நாம் ஆடிக் கொண்டிருந்தாலும் கடைசியில் சென்று சேர வேண்டிய குறிக்கோள் மாறப்போவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கை, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இறுதியில் வாழ்வு முடிவுக்கு வரத் தான் போகிறது.
வாழ்வில் இன்பதுன்பம் கலந்திருப்பதை, "முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் கெட்டவனும் இல்லை' என்று கூட சொல்லி வைத்தார்கள்.
நவக்கிரகங்களில் சனீஸ்வரர் ஒருராசியில் இரண்டரை வருஷம் சஞ்சரிப்பார். ராசி சக்கரத்தை அவர் கடக்க 30வருஷம் ஆகும். அதற்கேற்ப வாழ்வின் போக்கு மாறி விடும் என்பதால் தான் இப்படி சொன்னார்கள்.
ஆனால், இன்ப துன்பம் என்பது வெள்ளை வேட்டி போல இருக்கிறது. வேட்டியின் அடியில் இருக்கும் சரிகை நடக்கிறப்போ லேசா பளபளக்கும். அதுபோல, வாழ்வில் அப்பப்போ இன்பம் தலைகாட்டும். ஆனால், பெரும்பாலும் சந்திப்பது என்னவோ துன்பம் தான்.
இதை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லி வாழ்வின் முடிவான குறிக்கோளை எடுத்துச் சொல்வது புராணம் தான். பழையதாக இருந்தாலும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் விதத்தில் என்றும் புதியதாக இருந்து நமக்கு இன்றும் வழிகாட்டி நிற்கிறது. அதிலும் இந்த வரிசையில் முதலிடம் பிடிக்கும் விஷ்ணு புராணத்திற்குள் இனி நுழைவோம்.
இன்னும் இனிக்கும்.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
அருமை விமந்தனி,
வியாசர் --சுகர் ---வயது --
வயதிற்கும் --மனோ நிலைக்கும் வேறுபாடுகளை அழகாக கூறியுள்ளனர் ,நீராடிய பெண்கள் .
வேத வியாசரின் தாயார் யாரென அறிவீர்கள் அல்லவா ?
வேதவியாசர் பிறப்பு எப்பிடி ஏற்பட்டது தெரியுமா ?
ரமணியன்
வியாசர் --சுகர் ---வயது --
வயதிற்கும் --மனோ நிலைக்கும் வேறுபாடுகளை அழகாக கூறியுள்ளனர் ,நீராடிய பெண்கள் .
வேத வியாசரின் தாயார் யாரென அறிவீர்கள் அல்லவா ?
வேதவியாசர் பிறப்பு எப்பிடி ஏற்பட்டது தெரியுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
//கால் பந்தாட்டம் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் கால்பந்தாட்ட வீரர்கள் பந்து செல்லும் இடத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். பந்தும் ஓரிடத்தில் நிற்காது. ஆளாளுக்கு உதைக்க பந்து இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், எதை மாற்றினாலும் பந்து அடைய வேண்டிய இலக்கான "கோல் போஸ்ட்' மாறப் போவதில்லை.
அது போலத் தான் மனித வாழ்க்கையும். மனதிற்குள் எத்தனை ஆட்டம் நாம் ஆடிக் கொண்டிருந்தாலும் கடைசியில் சென்று சேர வேண்டிய குறிக்கோள் மாறப்போவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கை, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இறுதியில் வாழ்வு முடிவுக்கு வரத் தான் போகிறது. //
எத்தனை அழகாய் சொல்கிறார் .........
அது போலத் தான் மனித வாழ்க்கையும். மனதிற்குள் எத்தனை ஆட்டம் நாம் ஆடிக் கொண்டிருந்தாலும் கடைசியில் சென்று சேர வேண்டிய குறிக்கோள் மாறப்போவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கை, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இறுதியில் வாழ்வு முடிவுக்கு வரத் தான் போகிறது. //
எத்தனை அழகாய் சொல்கிறார் .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (14)
வழிப்போக்கன் ஒருவன் காட்டுவழியில் சென்று கொண்டிருந்தான். திடீரென புலி ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது. கண்ணை மூடிக்கொண்டு ஓடத் தொடங்கினான். வழியில் பாழுங்கிணறு ஒன்று இருந்தது. புதர் மண்டிக் கிடந்ததால், தெரியாமல் அந்த கிணற்றுக்குள் காலை வைத்து விட்டான். சரசரவென கீழே இழுத்துச் செல்லப்பட்டான். பாதிக் கிணற்றில் படர்ந்து கிடந்த கொடியைக் கையால் பற்றிக் கொண்டு நின்றான். அந்த சமயத்தில், புலி ஒன்று உணவு தேடி கிணற்றுப் பக்கம் வந்தது. உள்ளே இருந்தவனைப் பார்த்ததும், இரையாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அங்கேயே நின்றது.
அச்சத்துடன் கீழே குனிந்தான். பயம் மேலும் அதிகரித்தது. ஆழத்தில் விஷ நாகங்கள் புற்றில் தலையை நீட்டிய படி இருந்தன. அப்போது அவன் பற்றியிருந்த கொடியின் வேரை பொந்திலுள்ள பெருச்சாளி ஒன்று கடிக்கும் சத்தம் காதில் விழுந்தது.
பசி, தாகம், நடந்து வந்த களைப்பு எல்லாம் சேர்ந்து அவன் மயக்கநிலையில் இருந்தான். அந்த சமயத்தில் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த தேனடையில் இருந்து தேன் துளி வழிந்து, சரியாக அவன் நாக்கில் பட்டது.
"என்ன இன்பம்... இந்த இன்பம்...'' என்று அவன் மனம் சந்தோஷம் கொண்டது.
இந்த வழிப்போக்கன் வேறு யாருமல்ல... நாம் தான்...... புலியும், பாம்பும் துன்புறுத்த காத்திருக்கும் நேரத்தில் கூட, தேனை ருசிக்கும் வழிப்போக்கனின் மனநிலையில் தான் மனிதன் இருக்கிறான்.
சம்சார பந்தத்தில் சிக்கிக் கொண்ட மனிதனுக்கு திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயம் எல்லாம் தேன்துளி மகிழ்ச்சி போல அவ்வப்போது வந்து போகிறது. ஆனால், இன்பம் நிரந்தரமாக கிடைப்பதில்லை. நிலையான இன்பம் பெற ஒரே வழி கடவுளைச் சரணடைவது தான். அதையே பேரின்பம் என்று சொல்கிறார்கள்.
அப்போது வேண்டும் அளவுக்கு தேனைப் பருகி மகிழலாம். கடவுளைப் பற்றியும், அவரை அறியும் வழிமுறையைப் பற்றியும் எடுத்துச் சொல்வதால் தான், புராணத்திற்கு இவ்வளவு ஏற்றமும் சிறப்பும் அளிக்கிறோம். அதனால் தான் தனக்கு மரணம் நேரப் போகிறது என்பதை அறிந்த பரீட்சித்து மன்னன் சுகபிரம்மத்திடம் பாகவத புராணத்தைக் கேட்டான்.
அச்சத்துடன் கீழே குனிந்தான். பயம் மேலும் அதிகரித்தது. ஆழத்தில் விஷ நாகங்கள் புற்றில் தலையை நீட்டிய படி இருந்தன. அப்போது அவன் பற்றியிருந்த கொடியின் வேரை பொந்திலுள்ள பெருச்சாளி ஒன்று கடிக்கும் சத்தம் காதில் விழுந்தது.
பசி, தாகம், நடந்து வந்த களைப்பு எல்லாம் சேர்ந்து அவன் மயக்கநிலையில் இருந்தான். அந்த சமயத்தில் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த தேனடையில் இருந்து தேன் துளி வழிந்து, சரியாக அவன் நாக்கில் பட்டது.
"என்ன இன்பம்... இந்த இன்பம்...'' என்று அவன் மனம் சந்தோஷம் கொண்டது.
இந்த வழிப்போக்கன் வேறு யாருமல்ல... நாம் தான்...... புலியும், பாம்பும் துன்புறுத்த காத்திருக்கும் நேரத்தில் கூட, தேனை ருசிக்கும் வழிப்போக்கனின் மனநிலையில் தான் மனிதன் இருக்கிறான்.
சம்சார பந்தத்தில் சிக்கிக் கொண்ட மனிதனுக்கு திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயம் எல்லாம் தேன்துளி மகிழ்ச்சி போல அவ்வப்போது வந்து போகிறது. ஆனால், இன்பம் நிரந்தரமாக கிடைப்பதில்லை. நிலையான இன்பம் பெற ஒரே வழி கடவுளைச் சரணடைவது தான். அதையே பேரின்பம் என்று சொல்கிறார்கள்.
அப்போது வேண்டும் அளவுக்கு தேனைப் பருகி மகிழலாம். கடவுளைப் பற்றியும், அவரை அறியும் வழிமுறையைப் பற்றியும் எடுத்துச் சொல்வதால் தான், புராணத்திற்கு இவ்வளவு ஏற்றமும் சிறப்பும் அளிக்கிறோம். அதனால் தான் தனக்கு மரணம் நேரப் போகிறது என்பதை அறிந்த பரீட்சித்து மன்னன் சுகபிரம்மத்திடம் பாகவத புராணத்தைக் கேட்டான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக இந்த மண்ணில் பிறவி எடுத்து இருக்கிறோம்? சமான்ய நிலையில் நாம் எல்லாம் ஒவ்வொரு குறிக்கோளுடன் இருப்பதாக எண்ணுகிறோம்.
கோகுலாஷ்டமிக்கு வீட்டில் 17, 20, 27 பலகாரம் செய்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதில் யார் வீட்டில் அதிகம் செய்தது என்று போட்டாபோட்டி கூட நடக்கும். ஆனால், எல்லா பலகாரமும் இனிப்புச் சுவை கொண்டது தானே! நெய், இனிப்பு, மாவு மூன்றும் தான் பலகாரம், பட்சணத்திற்கு அடிப்படை.
சாப்பாட்டு விஷயத்தில் கூட"காய்கறியில் புடலங்காய் தான் பிடிக்கும். உருளைக் கிழங்கு தான் பிடிக்கும்' என்று சொல்கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும் தான்.
அப்புறம் எந்த உணவாக இருந்தாலும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவது போல, உயிர்கள் பிறவி எடுத்திருப்பதே கடவுளை அறிவதற்காகத் தான்.
உலகத்தில் உயிர்கள் படைக்கப்பட்டது எப்படி? அந்த உயிர்கள் எப்படி அழிகின்றன? எந்தெந்த மன்னர்கள் இந்த உலகை ஆட்சி செய்தார்கள்? சூரியன், சந்திரன், வருணன், வாயு என்பதெல்லாம் யார்? சூரிய, சந்திர வம்சத்தில் யாரெல்லாம் வந்தார்கள்? சூரியன், சந்திரனால் பருவநிலை எப்படி உண்டாகிறது? மழை எப்படி பெய்கிறது? மனுக்கள் ஏற்படுத்திய தர்மங்கள் என்னென்ன? மனிதனுக்கு இன்பம் துன்பம் ஏன் உண்டாகிறது? உலகில் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன் இந்த பாகுபாடு எப்படி ஏற்பட்டது? பாவம் எது? புண்ணியம் எது? என்பதெல்லாம் சீடர்கள் கேள்வி கேட்க, குரு பதில் அளிப்பது போல உரையாடலாக விஷ்ணு புராணத்தின் பகுதிகள் அமைந்துள்ளன.
சீடராக இருக்கும் மைத்ரேயர் கேள்வியைக் கேட்க, பராசரர் பதில் அளிப்பது போல கேள்வி பதிலாகவே அமைந்துள்ளது. கதை போலச் செல்லும் இதில் அங்கங்கே தத்துவார்த்தங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த உடம்பை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சிக்கலான அமைப்பு. இதை சரிபடுத்திக் கொள்ள எத்தனை வைத்திய முறைகள். அதுவும் நரம்பு, எலும்பு, தோல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வைத்தியர்கள்.
எத்தனை முறைகள் இருந்தாலும், பகவானால் படைக்கப்பட்ட இந்த சரீரத்தை பற்றி அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியுமா? பத்மாசனத்தில் அரை மணிநேரம் அமர்ந்து விட்டால், 27,000 நரம்புகளும் ஒருவரின் கட்டுக்குள் வந்து விடும் என்கிறது யோக சாஸ்திரம். அந்த அளவுக்கு நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் கூர்மையான புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. மேலெழுந்தவாரியாக அணுகினால் புரியாமல் போய் விடும். புராணமும் இப்படித் தான் அணுகுவதற்கு கடினமாக இருந்தது.
மூலத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் சிரமம் இருந்தது. இதனால் தான், எத்தனையோ பெரியவர்கள், உரையாசிரியர்கள் புராணத்திற்கு எளிய விளக்கவுரை அளித்திருக்கிறார்கள்.
காசி, சேது, கயா, கங்கை, புஷ்கரம் என்று எத்தனையோ புண்ணிய ÷க்ஷத்திரங்கள் இருக்கின்றன. இத்தனை தலங்களையும் தரிசித்தால் புண்ணியம் உண்டாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
அதனால் உண்டாகும் புண்ணியத்தை தராசின் ஒரு தட்டில் வைத்து விட்டு, மறுதட்டில் விஷ்ணு புராணத்தைக் கேட்டதால் உண்டாகும் புண்ணியத்தை வைத்துப் பார்த்தால் அந்த தட்டு கனத்தால் தாழ்ந்து விடும்.
இதன் காரணமாகவே, பதினெண் புராணங்களில் இந்த புராணத்தை "புராண ரத்தினம்' என்று சிறப்பாகச் சொல்கிறார்கள்.
இதில் "அர்த்த பஞ்சகம்' என்று ஒன்று இருக்கிறது. "பொருள் பொதிந்த ஐந்து விஷயம்' என்பது இதன் பொருள். இந்த ஐந்தைத் தெரிந்து கொண்டு விட்டாலே நம்முடைய இந்த ஜன்மம் கடைத்தேறி விடும். ஆனால், நாம் எல்லோரும் இந்த ஐந்தை விட்டு விட்டு, ஐந்தாயிரம் விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். தெரிந்து கொள்ள வேண்டிய அந்த ஐந்து தான் என்னென்ன?
கோகுலாஷ்டமிக்கு வீட்டில் 17, 20, 27 பலகாரம் செய்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதில் யார் வீட்டில் அதிகம் செய்தது என்று போட்டாபோட்டி கூட நடக்கும். ஆனால், எல்லா பலகாரமும் இனிப்புச் சுவை கொண்டது தானே! நெய், இனிப்பு, மாவு மூன்றும் தான் பலகாரம், பட்சணத்திற்கு அடிப்படை.
சாப்பாட்டு விஷயத்தில் கூட"காய்கறியில் புடலங்காய் தான் பிடிக்கும். உருளைக் கிழங்கு தான் பிடிக்கும்' என்று சொல்கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும் தான்.
அப்புறம் எந்த உணவாக இருந்தாலும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவது போல, உயிர்கள் பிறவி எடுத்திருப்பதே கடவுளை அறிவதற்காகத் தான்.
உலகத்தில் உயிர்கள் படைக்கப்பட்டது எப்படி? அந்த உயிர்கள் எப்படி அழிகின்றன? எந்தெந்த மன்னர்கள் இந்த உலகை ஆட்சி செய்தார்கள்? சூரியன், சந்திரன், வருணன், வாயு என்பதெல்லாம் யார்? சூரிய, சந்திர வம்சத்தில் யாரெல்லாம் வந்தார்கள்? சூரியன், சந்திரனால் பருவநிலை எப்படி உண்டாகிறது? மழை எப்படி பெய்கிறது? மனுக்கள் ஏற்படுத்திய தர்மங்கள் என்னென்ன? மனிதனுக்கு இன்பம் துன்பம் ஏன் உண்டாகிறது? உலகில் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன் இந்த பாகுபாடு எப்படி ஏற்பட்டது? பாவம் எது? புண்ணியம் எது? என்பதெல்லாம் சீடர்கள் கேள்வி கேட்க, குரு பதில் அளிப்பது போல உரையாடலாக விஷ்ணு புராணத்தின் பகுதிகள் அமைந்துள்ளன.
சீடராக இருக்கும் மைத்ரேயர் கேள்வியைக் கேட்க, பராசரர் பதில் அளிப்பது போல கேள்வி பதிலாகவே அமைந்துள்ளது. கதை போலச் செல்லும் இதில் அங்கங்கே தத்துவார்த்தங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த உடம்பை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சிக்கலான அமைப்பு. இதை சரிபடுத்திக் கொள்ள எத்தனை வைத்திய முறைகள். அதுவும் நரம்பு, எலும்பு, தோல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வைத்தியர்கள்.
எத்தனை முறைகள் இருந்தாலும், பகவானால் படைக்கப்பட்ட இந்த சரீரத்தை பற்றி அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியுமா? பத்மாசனத்தில் அரை மணிநேரம் அமர்ந்து விட்டால், 27,000 நரம்புகளும் ஒருவரின் கட்டுக்குள் வந்து விடும் என்கிறது யோக சாஸ்திரம். அந்த அளவுக்கு நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் கூர்மையான புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. மேலெழுந்தவாரியாக அணுகினால் புரியாமல் போய் விடும். புராணமும் இப்படித் தான் அணுகுவதற்கு கடினமாக இருந்தது.
மூலத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் சிரமம் இருந்தது. இதனால் தான், எத்தனையோ பெரியவர்கள், உரையாசிரியர்கள் புராணத்திற்கு எளிய விளக்கவுரை அளித்திருக்கிறார்கள்.
காசி, சேது, கயா, கங்கை, புஷ்கரம் என்று எத்தனையோ புண்ணிய ÷க்ஷத்திரங்கள் இருக்கின்றன. இத்தனை தலங்களையும் தரிசித்தால் புண்ணியம் உண்டாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
அதனால் உண்டாகும் புண்ணியத்தை தராசின் ஒரு தட்டில் வைத்து விட்டு, மறுதட்டில் விஷ்ணு புராணத்தைக் கேட்டதால் உண்டாகும் புண்ணியத்தை வைத்துப் பார்த்தால் அந்த தட்டு கனத்தால் தாழ்ந்து விடும்.
இதன் காரணமாகவே, பதினெண் புராணங்களில் இந்த புராணத்தை "புராண ரத்தினம்' என்று சிறப்பாகச் சொல்கிறார்கள்.
இதில் "அர்த்த பஞ்சகம்' என்று ஒன்று இருக்கிறது. "பொருள் பொதிந்த ஐந்து விஷயம்' என்பது இதன் பொருள். இந்த ஐந்தைத் தெரிந்து கொண்டு விட்டாலே நம்முடைய இந்த ஜன்மம் கடைத்தேறி விடும். ஆனால், நாம் எல்லோரும் இந்த ஐந்தை விட்டு விட்டு, ஐந்தாயிரம் விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். தெரிந்து கொள்ள வேண்டிய அந்த ஐந்து தான் என்னென்ன?
இன்னும் இனிக்கும்.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
சத்யவதியின் பிள்ளையான இவர் தானே மகாபாரதத்தின் கதாநாயகர்...? அறியாதவரும் உண்டா...?T.N.Balasubramanian wrote:வியாசர் --சுகர் ---வயது --
வயதிற்கும் --மனோ நிலைக்கும் வேறுபாடுகளை அழகாக கூறியுள்ளனர் ,நீராடிய பெண்கள் .
வேத வியாசரின் தாயார் யாரென அறிவீர்கள் அல்லவா ?
வேதவியாசர் பிறப்பு எப்பிடி ஏற்பட்டது தெரியுமா ?
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
தேன் துளிகள்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
மேற்கோள் செய்த பதிவு: 1195215விமந்தனி wrote:சத்யவதியின் பிள்ளையான இவர் தானே மகாபாரதத்தின் கதாநாயகர்...? அறியாதவரும் உண்டா...?T.N.Balasubramanian wrote:வியாசர் --சுகர் ---வயது --
வயதிற்கும் --மனோ நிலைக்கும் வேறுபாடுகளை அழகாக கூறியுள்ளனர் ,நீராடிய பெண்கள் .
வேத வியாசரின் தாயார் யாரென அறிவீர்கள் அல்லவா ?
வேதவியாசர் பிறப்பு எப்பிடி ஏற்பட்டது தெரியுமா ?
ரமணியன்
மகாபாரதம் அவரின் சுயசரிதைதானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
T.N.Balasubramanian wrote:
மகாபாரதம் அவரின் சுயசரிதைதானே !
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 14 of 20 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20
Similar topics
» பக்தியில் பலவகை உண்டு. - --வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - தமிழ் MP3
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - தமிழ் MP3
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
Page 14 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|