Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters
Page 2 of 20
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
First topic message reminder :
Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
படிக்க படிக்க இனிமை
நன்றி விமந்தனி, தொடருங்கள் . ஆவலுடன் காத்திருக்கிறோம் .
நன்றி ayyasami ram , M Jagadeesan அரிய தகவல்களுக்கு .
ரமணியன்
நன்றி விமந்தனி, தொடருங்கள் . ஆவலுடன் காத்திருக்கிறோம் .
நன்றி ayyasami ram , M Jagadeesan அரிய தகவல்களுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
ayyasamy ram wrote:
-
இன்னும் இனிக்கட்டும்...!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
T.N.Balasubramanian wrote:படிக்க படிக்க இனிமை
நன்றி விமந்தனி, தொடருங்கள் . ஆவலுடன் காத்திருக்கிறோம் .
நன்றி ayyasami ram , M Jagadeesan அரிய தகவல்களுக்கு .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (2)
சரி...
அப்படியானால், பகவானை எப்படி தான் நம் மனதில் நிலை நிறுத்துவது?
பகவானின் நினைவு, நம் மனதுக்குள் வர வேண்டுமானால், முதலில் தர்மகாரியம் செய்தாக வேண்டும். தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் சேரச்சேர பகவானின் நினைவு தானாகவே வர ஆரம்பிக்கும்.
தர்மகாரியங்கள் நம் மனதில் சம்ஸ்காரத்தை (தீயதைப் போக்கி நல்லதைக் கொண்டு வருதல்) ஏற்படுத்தும். இயற்கை வைத்தியம் செய்யும்போது, கெட்ட உணவை மாற்றி நல்ல உணவு தருவது போல நம் மனதிலுள்ள அழுக்கையும் போக்க தர்மச் செயல்கள் துணை நிற்கும்.
மனிதஉடலில் மூத்திரம், மலம் வியர்வை ஆகிய அழுக்குகள் உள்ளன. இவற்றை வெளியேற்ற வழிகள் உள்ளன. ஆனால், மனதிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கென உறுப்புகள் ஏதுமில்லை. ஏனெனில், மனது துப்புவதில்லை. தர்மம் செய்யச்செய்ய புண்ணியம் சேரும். அது மனதிலுள்ள மாசைப் போக்கும். நல்ல விஷயங்களை நோக்கி முன்னேறினாலே போதும். மனம் சீராக ஆரம்பிக்கும்.
கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான செயல்களே அதிகமாக நடக்கின்றன. துவாதசியன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது மிகச்சிறந்த தர்மம். இப்போது பசுவையே காணவில்லையே! பிராணிகளை இம்சை செய்யாமல் இருப்பது தர்மம். ஆனால், அது மீறப்படுகிறது.
குளம் வெட்டுவது மிகமிக பெரிய தர்மம். ஆனால், தண்ணீர் வேண்டும். இப்போது, விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எச்சரிக்கிறார்கள். பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இயற்கை பாழ்படுத்தப்பட்டிக்கிறது. இன்று விஞ்ஞானிகள் சொல்லும் இந்தக் கருத்தை, வேதங்கள் எப்போதோ சொல்லிவிட்டன. அதை நாம் கடைபிடிக்கவில்லை.
குளுகுளு(ஏசி) வசதி கூடாது. சுற்றுச்சூழல் கெட்டு விடும் என்றார்கள். ஆனால், அதைத் தாராளமாகச் செய்தாயிற்று. எல்லா வசதியையும் மனிதன் தனக்கு செய்து கொண்டு விட்டான். முதலில் ஆறுகளில் தண்ணீர் காணாமல் போனது, பிறகு மணல் காணாமல் போனது, இப்போது பல இடங்களில் ஆறுகளையே காணவில்லை.
கலியுகத்தில், தாவரங்களுக்கும், பிராணிகளுக்கும் இம்சை செய்யப்படுகிறது. இதோடு விட்டதா! மனிதர்களை வாயாலேயே கொல்கிறார்கள். சரி...இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.
அப்படியானால், பகவானை எப்படி தான் நம் மனதில் நிலை நிறுத்துவது?
பகவானின் நினைவு, நம் மனதுக்குள் வர வேண்டுமானால், முதலில் தர்மகாரியம் செய்தாக வேண்டும். தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் சேரச்சேர பகவானின் நினைவு தானாகவே வர ஆரம்பிக்கும்.
தர்மகாரியங்கள் நம் மனதில் சம்ஸ்காரத்தை (தீயதைப் போக்கி நல்லதைக் கொண்டு வருதல்) ஏற்படுத்தும். இயற்கை வைத்தியம் செய்யும்போது, கெட்ட உணவை மாற்றி நல்ல உணவு தருவது போல நம் மனதிலுள்ள அழுக்கையும் போக்க தர்மச் செயல்கள் துணை நிற்கும்.
மனிதஉடலில் மூத்திரம், மலம் வியர்வை ஆகிய அழுக்குகள் உள்ளன. இவற்றை வெளியேற்ற வழிகள் உள்ளன. ஆனால், மனதிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கென உறுப்புகள் ஏதுமில்லை. ஏனெனில், மனது துப்புவதில்லை. தர்மம் செய்யச்செய்ய புண்ணியம் சேரும். அது மனதிலுள்ள மாசைப் போக்கும். நல்ல விஷயங்களை நோக்கி முன்னேறினாலே போதும். மனம் சீராக ஆரம்பிக்கும்.
கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான செயல்களே அதிகமாக நடக்கின்றன. துவாதசியன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது மிகச்சிறந்த தர்மம். இப்போது பசுவையே காணவில்லையே! பிராணிகளை இம்சை செய்யாமல் இருப்பது தர்மம். ஆனால், அது மீறப்படுகிறது.
குளம் வெட்டுவது மிகமிக பெரிய தர்மம். ஆனால், தண்ணீர் வேண்டும். இப்போது, விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எச்சரிக்கிறார்கள். பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இயற்கை பாழ்படுத்தப்பட்டிக்கிறது. இன்று விஞ்ஞானிகள் சொல்லும் இந்தக் கருத்தை, வேதங்கள் எப்போதோ சொல்லிவிட்டன. அதை நாம் கடைபிடிக்கவில்லை.
குளுகுளு(ஏசி) வசதி கூடாது. சுற்றுச்சூழல் கெட்டு விடும் என்றார்கள். ஆனால், அதைத் தாராளமாகச் செய்தாயிற்று. எல்லா வசதியையும் மனிதன் தனக்கு செய்து கொண்டு விட்டான். முதலில் ஆறுகளில் தண்ணீர் காணாமல் போனது, பிறகு மணல் காணாமல் போனது, இப்போது பல இடங்களில் ஆறுகளையே காணவில்லை.
கலியுகத்தில், தாவரங்களுக்கும், பிராணிகளுக்கும் இம்சை செய்யப்படுகிறது. இதோடு விட்டதா! மனிதர்களை வாயாலேயே கொல்கிறார்கள். சரி...இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
தர்மத்தைக் கடைபிடிப்பது என்பது ஒரே நாளில் வந்து விடாது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும். பொது உபயோகத்திற்காக ஒரு குளம், கிணறு வெட்டப் போகிறீர்கள். அதற்கே ஆயிரம் எதிர்ப்பு வரும். காரணம், இதற்கு முன் நாம் தர்மம் செய்யாததால் தான் இதுபோன்ற எதிர்ப்பே வருகிறது. அதற்காக அந்தச் செயலை விட்டு விடக்கூடாது. எதிர்ப்பை ஊக்கத்துடன் வென்று தர்மத்தைச் செய்தாக வேண்டும்.
தர்மம் என்றால் ஏதோ பெரிய அளவில் செய்தாக வேண்டுமென்பதில்லை. ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த வியாபாரம் லட்சரூபாய் முதலீடு உரியதாக மாறுவது போல், கொஞ்சம் கொஞ்சமாக புண்ணியம் செய்தாலே போதும். ஒன்றுமே இல்லையா! கஷ்டப்படும் 2 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாலே (இலவச டியூஷன்) போதும். பத்து கோடி ரூபாயில் பள்ளிக்கூடம் கட்டி தான், பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதில்லை.
தர்மத்தை வெறுப்பவர்கள் இப்போது அதிகம். இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு கிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.
இந்த சிக்கலில் இருந்து மீள வழியுண்டா?
உண்டு... பகவானைப் பிரார்த்தித்தால் மீண்டு விடலாம். அவனை வணங்க வேண்டுமானால் பல ரூபங்களில் உள்ளான் என்கிறார்களே! நான் எந்த ரூபத்தில் வணங்குவது என்ற கேள்வி எழும்.
அவன் சூஷ்ம ரூபமாக இருக்கிறான். "சூஷ்மம்' என்றால் "சிறிய' "அல்பம்' என்று பொருள் கொள்ளலாம். "ரூபம்' என்றால் "வடிவம்'. அதாவது, அவன் சிறிய வடிவமாக உள்ளான். அச்சுதன் என்று அவனைச் சொல்கிறார்களே! அவனுக்கு சின்ன அச்சுதன், பெரிய அச்சுதன் என்றெல்லாம் பாகுபாடுஉண்டா? சிறிய வடிவாக உள்ள அவன், நம் மனதிற்குள் நிற்பானா?
கலியுகத்தில் பகவானை மனதில் இருத்தி தியானம் செய்வது என்பது லேசில் வராது. இதில் அவன் மிகச்சிறிதாக இருந்தால், அவனை எப்படி மனதில் இருத்தி தியானிப்பது?
ஒரு வேலைக்கு போக வேண்டுமானால், பயிற்சி வகுப்பு, நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று பலபடிகளைத் தாண்டிப் போக வேண்டியுள்ளது. அதுபோல், தியானம் செய்யவும் பல படிகளைத் தாண்டியாக வேண்டும்.
எந்தப் படிக்கட்டில் தவறு செய்தாலும் தியானம் சித்திக்காது. அப்படியானால் ஒருமனதாக தியானம் செய்வது
எப்படி? முதலில், பகவானை புருஷோத்தமன் என நம்ப வேண்டும். அதாவது<, எல்லாரையும் விட உயர்ந்தவன் என நினைக்க வேண்டும்.
ஏகாதசியன்று பட்டினி கிடத்தல், அன்னதானம், குடிநீர் தானம் செய்தல், கோயில் கட்டுதல், கல்வி சொல்லிக் கொடுத்தல் ஆகிய தர்மகாரியங்களைச் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, புண்ணியம் சேரும். புண்ணியம் சேரச்சேர பகவானை தியானிக்கும் மனப்பக்குவம் வரும். அந்தப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தர்மம் செய்யச் செய்ய மனத்தெளிவு வரும். அதன்பின், பகவானைத் தியானிப்பதில் சிரமம் இருக்காது.
பகவானை எந்த உருவில் தியானிப்பது என்பதில் முதலில் சூஷ்மரூபத்தை எடுத்துக் கொள்ளலாம். அது கண்ணுக்கு தெரியாது. புலன்களுக்கு எட்டாதது. இந்திரியங்களால் அறிய முடியாதது. அதாவது, நமக்கு கட்டுப்படாதது. இதை எப்படி நாம் நினைப்பது!
தர்மம் என்றால் ஏதோ பெரிய அளவில் செய்தாக வேண்டுமென்பதில்லை. ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த வியாபாரம் லட்சரூபாய் முதலீடு உரியதாக மாறுவது போல், கொஞ்சம் கொஞ்சமாக புண்ணியம் செய்தாலே போதும். ஒன்றுமே இல்லையா! கஷ்டப்படும் 2 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாலே (இலவச டியூஷன்) போதும். பத்து கோடி ரூபாயில் பள்ளிக்கூடம் கட்டி தான், பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதில்லை.
தர்மத்தை வெறுப்பவர்கள் இப்போது அதிகம். இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு கிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.
இந்த சிக்கலில் இருந்து மீள வழியுண்டா?
உண்டு... பகவானைப் பிரார்த்தித்தால் மீண்டு விடலாம். அவனை வணங்க வேண்டுமானால் பல ரூபங்களில் உள்ளான் என்கிறார்களே! நான் எந்த ரூபத்தில் வணங்குவது என்ற கேள்வி எழும்.
அவன் சூஷ்ம ரூபமாக இருக்கிறான். "சூஷ்மம்' என்றால் "சிறிய' "அல்பம்' என்று பொருள் கொள்ளலாம். "ரூபம்' என்றால் "வடிவம்'. அதாவது, அவன் சிறிய வடிவமாக உள்ளான். அச்சுதன் என்று அவனைச் சொல்கிறார்களே! அவனுக்கு சின்ன அச்சுதன், பெரிய அச்சுதன் என்றெல்லாம் பாகுபாடுஉண்டா? சிறிய வடிவாக உள்ள அவன், நம் மனதிற்குள் நிற்பானா?
கலியுகத்தில் பகவானை மனதில் இருத்தி தியானம் செய்வது என்பது லேசில் வராது. இதில் அவன் மிகச்சிறிதாக இருந்தால், அவனை எப்படி மனதில் இருத்தி தியானிப்பது?
ஒரு வேலைக்கு போக வேண்டுமானால், பயிற்சி வகுப்பு, நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று பலபடிகளைத் தாண்டிப் போக வேண்டியுள்ளது. அதுபோல், தியானம் செய்யவும் பல படிகளைத் தாண்டியாக வேண்டும்.
எந்தப் படிக்கட்டில் தவறு செய்தாலும் தியானம் சித்திக்காது. அப்படியானால் ஒருமனதாக தியானம் செய்வது
எப்படி? முதலில், பகவானை புருஷோத்தமன் என நம்ப வேண்டும். அதாவது<, எல்லாரையும் விட உயர்ந்தவன் என நினைக்க வேண்டும்.
ஏகாதசியன்று பட்டினி கிடத்தல், அன்னதானம், குடிநீர் தானம் செய்தல், கோயில் கட்டுதல், கல்வி சொல்லிக் கொடுத்தல் ஆகிய தர்மகாரியங்களைச் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, புண்ணியம் சேரும். புண்ணியம் சேரச்சேர பகவானை தியானிக்கும் மனப்பக்குவம் வரும். அந்தப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தர்மம் செய்யச் செய்ய மனத்தெளிவு வரும். அதன்பின், பகவானைத் தியானிப்பதில் சிரமம் இருக்காது.
பகவானை எந்த உருவில் தியானிப்பது என்பதில் முதலில் சூஷ்மரூபத்தை எடுத்துக் கொள்ளலாம். அது கண்ணுக்கு தெரியாது. புலன்களுக்கு எட்டாதது. இந்திரியங்களால் அறிய முடியாதது. அதாவது, நமக்கு கட்டுப்படாதது. இதை எப்படி நாம் நினைப்பது!
இன்னும் இனிக்கும்......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (3)
நம் உடம்பு கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், ஆத்மாவை நம்மால் பார்க்க முடிகிறதா! எக்ஸ்ரே இயந்திரத்தால் கூட ஆத்மாவைப் படம் பிடிக்க முடியாது. ஏனெனில், அது கண்ணுக்குத் தெரியாதது. மிகவும் சூட்சுமமானது. அப்படியே தெரிந்தாலும் அதனால் நன்மை ஏதும் உண்டா? பணம் குறைந்த அளவு இருந்தால் ஐஸ்வர்யம் இல்லை என்று குறைப்பட்டுக் கொள்ளலாம்.
பருமனாக இருப்பவன், ஒல்லியானவனைப் பார்த்து பொறாமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆத்மா என்ற சூட்சுமம் மறைவாக இருப்பதால், யாருக்குஎன்ன நஷ்டம்? ஆனால், அளவில் சிறிய ஆத்மாவுக்கு சக்தி அதிகம் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டது. அதற்கு ஒன்றுமே ஆவதில்லை. அது உருவில் சிறியது. பந்து போல் எழுந்து உட்கார்ந்து விடும்.
அதேநேரம் பெரியவர்கள் விழுந்தால், "ஐயோ..அப்பா..'' என எழுவதற்குள் உயிரே போய் விடும். அளவில் பெரிதாக இருந்தாலும் சக்தி குறைந்து விடுகிறது. பெரிய சரீரத்திற்கு சக்தி குறைவு.
சூட்சுமமான ஆத்மாவுக்கு பலம் மிக அதிகம். அது மிகச்சிறிய ஒன்று தான். ஆனால், எல்லாம் செய்யும். இதை "அணுமாத்ர ரூபம்' என்பார்கள். அதாவது மிகவும் சிறியது என்று பொருள். அணுவை விட சிறியதாக ஆத்மா இருந்தாலும், சக்தி மட்டும் மிக அதிகம். சிறிய ஆத்மா பிரிந்து விட்டால், இந்த பெரிய உடலே சாய்ந்து விடுகிறது.
இதன் பெருமையை இன்னும் அளவிடலாம். உடலுக்கு தான் உயரம், எடை எல்லாம் இருக்க வேண்டும்.
ஒருவர் 72 கிலோ எடை இருந்தார். அதை 62 ஆக குறைக்க யோசனை சொன்னார் வைத்தியர். தினமும் 10 பழம் சாப்பிடணும் என்றார். வந்தவர், ""சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா'' என்றார். இப்படி கேட்டால் என்னாகும். 72 கிலோ 82 ஆகி விடும். இதுதான் பெரிய உடலின் நிலை.
ஆனால், நம் உடல் எடை எவ்வளவு கூடினாலும், குறைந்தாலும் நமக்குள் இளைப்பான ஒரு நல்லவர் இருக்கிறார். அவரது பெயரே ஆத்மா. இவர் எடை கூடுவதுமில்லை. குறைவதுமில்லை.
உருவத்தை தான் மனிதர்களால் கேலி செய்ய முடியும். ஒரு வீட்டின் உள்ளே இருப்பவர் ஏதோ இன்னொருவரைப் பற்றி குறை கூறி பேசிக்கொண்டிருக்கிறார். நாம் கதவைத் தட்டுகிறோம். உடனே, பேச்சை மாற்றி விட்டு "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே' என்று மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போல நடித்து கதவைத் திறக்கிறார்.
ஒருவரது குணநலன்களையோ, உடலமைப்பையோ, கொண்டு இவ்வாறு பரிகசிப்பது நல்லதல்ல என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பா, அம்மாவுக்கு வீட்டில் சிராத்தம் வரும். அந்தக் காலத்தில் திதி கொடுத்து முடிய மாலை நான்கு மணி ஆகி விடும். அதன் பிறகு தான் சாப்பாடு. திதி பண்ணுகிறவருக்கே திதி கொடுக்க வேண்டி வந்து விடுமோ என்னும் அளவுக்கு நேரம் இழுக்கும். அதுவரை நாம் பட்டினியாக இருப்போம். உடலை அந்தளவு படுத்திய காலங்கள் உண்டு.
ஆத்மாவுக்கு இப்படிப்பட்ட சிக்கலே கிடையாது. ஏனெனில் அது அப்படியே இருப்பது. யார் கண்ணுக்கும் தெரியாது. எனவே அதை யாராலும் குறை சொல்லவும் முடியாது. அதற்கு பசிக்கவும் செய்யாது. சாப்பாடே தேவையில்லை.
உடலில் அழுக்கு இருந்தால் குளித்து கழுவுகிறோம்.
மனதிலுள்ள அழுக்கை என்ன செய்வது? ஒருவர் சொன்னார்.. ""ராமா..ராமா..என்று அவன் நாமத்தை தினமும் 1008 தடவை சொல்லு,'' என்று.
அதைக் கேட்டவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
அரை மணி நேரம் இப்படி மந்திரம் சொல்லி என்னாகப் போகுது அப்படி சொன்னால் கைமேல் என்ன கிடைக்கும்?'' என்று.
இப்படியெல்லாம், கேட்குமளவுக்கு மனதில் அழுக்கு இருக்கிறது. வண்டியிலுள்ள அழுக்கை உப்புத்தாள் வைத்து எடுப்பது போல, மனதிலுள்ள இந்த அழுக்கையும் உப்புத்தாள் வைத்து எடுக்க வேண்டும். அந்த உப்புத்தாள் தான் தர்ம காரியம்.
பருமனாக இருப்பவன், ஒல்லியானவனைப் பார்த்து பொறாமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆத்மா என்ற சூட்சுமம் மறைவாக இருப்பதால், யாருக்குஎன்ன நஷ்டம்? ஆனால், அளவில் சிறிய ஆத்மாவுக்கு சக்தி அதிகம் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டது. அதற்கு ஒன்றுமே ஆவதில்லை. அது உருவில் சிறியது. பந்து போல் எழுந்து உட்கார்ந்து விடும்.
அதேநேரம் பெரியவர்கள் விழுந்தால், "ஐயோ..அப்பா..'' என எழுவதற்குள் உயிரே போய் விடும். அளவில் பெரிதாக இருந்தாலும் சக்தி குறைந்து விடுகிறது. பெரிய சரீரத்திற்கு சக்தி குறைவு.
சூட்சுமமான ஆத்மாவுக்கு பலம் மிக அதிகம். அது மிகச்சிறிய ஒன்று தான். ஆனால், எல்லாம் செய்யும். இதை "அணுமாத்ர ரூபம்' என்பார்கள். அதாவது மிகவும் சிறியது என்று பொருள். அணுவை விட சிறியதாக ஆத்மா இருந்தாலும், சக்தி மட்டும் மிக அதிகம். சிறிய ஆத்மா பிரிந்து விட்டால், இந்த பெரிய உடலே சாய்ந்து விடுகிறது.
இதன் பெருமையை இன்னும் அளவிடலாம். உடலுக்கு தான் உயரம், எடை எல்லாம் இருக்க வேண்டும்.
ஒருவர் 72 கிலோ எடை இருந்தார். அதை 62 ஆக குறைக்க யோசனை சொன்னார் வைத்தியர். தினமும் 10 பழம் சாப்பிடணும் என்றார். வந்தவர், ""சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா'' என்றார். இப்படி கேட்டால் என்னாகும். 72 கிலோ 82 ஆகி விடும். இதுதான் பெரிய உடலின் நிலை.
ஆனால், நம் உடல் எடை எவ்வளவு கூடினாலும், குறைந்தாலும் நமக்குள் இளைப்பான ஒரு நல்லவர் இருக்கிறார். அவரது பெயரே ஆத்மா. இவர் எடை கூடுவதுமில்லை. குறைவதுமில்லை.
உருவத்தை தான் மனிதர்களால் கேலி செய்ய முடியும். ஒரு வீட்டின் உள்ளே இருப்பவர் ஏதோ இன்னொருவரைப் பற்றி குறை கூறி பேசிக்கொண்டிருக்கிறார். நாம் கதவைத் தட்டுகிறோம். உடனே, பேச்சை மாற்றி விட்டு "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே' என்று மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போல நடித்து கதவைத் திறக்கிறார்.
ஒருவரது குணநலன்களையோ, உடலமைப்பையோ, கொண்டு இவ்வாறு பரிகசிப்பது நல்லதல்ல என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பா, அம்மாவுக்கு வீட்டில் சிராத்தம் வரும். அந்தக் காலத்தில் திதி கொடுத்து முடிய மாலை நான்கு மணி ஆகி விடும். அதன் பிறகு தான் சாப்பாடு. திதி பண்ணுகிறவருக்கே திதி கொடுக்க வேண்டி வந்து விடுமோ என்னும் அளவுக்கு நேரம் இழுக்கும். அதுவரை நாம் பட்டினியாக இருப்போம். உடலை அந்தளவு படுத்திய காலங்கள் உண்டு.
ஆத்மாவுக்கு இப்படிப்பட்ட சிக்கலே கிடையாது. ஏனெனில் அது அப்படியே இருப்பது. யார் கண்ணுக்கும் தெரியாது. எனவே அதை யாராலும் குறை சொல்லவும் முடியாது. அதற்கு பசிக்கவும் செய்யாது. சாப்பாடே தேவையில்லை.
உடலில் அழுக்கு இருந்தால் குளித்து கழுவுகிறோம்.
மனதிலுள்ள அழுக்கை என்ன செய்வது? ஒருவர் சொன்னார்.. ""ராமா..ராமா..என்று அவன் நாமத்தை தினமும் 1008 தடவை சொல்லு,'' என்று.
அதைக் கேட்டவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
அரை மணி நேரம் இப்படி மந்திரம் சொல்லி என்னாகப் போகுது அப்படி சொன்னால் கைமேல் என்ன கிடைக்கும்?'' என்று.
இப்படியெல்லாம், கேட்குமளவுக்கு மனதில் அழுக்கு இருக்கிறது. வண்டியிலுள்ள அழுக்கை உப்புத்தாள் வைத்து எடுப்பது போல, மனதிலுள்ள இந்த அழுக்கையும் உப்புத்தாள் வைத்து எடுக்க வேண்டும். அந்த உப்புத்தாள் தான் தர்ம காரியம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
அமிர்த சுதா என்ற நூலில், அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா,வாக்ஷித்வம், இஷாத்வம் ஆகிய எட்டு வகை சித்திகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சித்திகளை அடைந்த சித்தர்கள் இப்போதும் நம்மிடையே இருக்கிறார்கள்.
கலியுகம் மொத்தம் 4லட்சத்து 32 ஆயிரம் வருஷங்கள். இப்போது தான் 5116ம் ஆண்டை எட்டியிருக்கிறோம். அஷ்டமாசித்திகளை அடைந்த வசிஷ்டர் 71 சதுர்யுகம் வாழ்வார். ஒருசதுர்யுகம் என்றால் 43 லட்சத்து 21 ஆயிரம் ஆண்டுகள். இதை 71ஆல் பெருக்கினால்....!
அவ்வளவு வருஷம் வாழ்பவர் வசிஷ்டர்.
இன்றைய சூழ்நிலையில் நம்மால் அஷ்டமாசித்திகளை அடைய முடியுமா என்றால் முடியவே முடியாது. நிலைமை அப்படி இருக்கிறது.
திருமலைக்கும், சோளிங்கருக்கும் போய் மலை ஏற ஆசை இருக்கிறது. ஆனால் கால் ஆபத்து தடுக்கிறது. மலை ஸ்தலங்களில் நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஏதோ கயிறு கட்டி (ரோப்கார்) தூக்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு தான் உடலின் நிலை இருக்கிறது.
இப்படியிருக்க, இந்த உடலைக் கொண்டு அஷ்டமாசித்திகளை அடைவது என்றால் எப்படி?
அப்படி கஷ்டம் என்று சொல்லும் அளவுக்கு இந்த அஷ்டமா சித்திகளில் தான் என்ன இருக்கிறது?
அனிமா என்றால் அணுத்தன்மையை அடைதல். அதாவது, நம் உருவத்தை ஒரு அணுவின் அளவுக்கு சுருக்கிக் கொள்ளுதல். ஆறு அடி உள்ளவன் இந்த சித்தியைப் பெற்றால், புள்ளியளவு கூட தன்னைச் சுருக்கும் ஆற்றல் பெறுவான்.
லகிமா என்றால் லேசாக மாறுதல்.
"இலகுவான' (லேசான) என்று சொல்கிறோமே! அந்தச் சொல் கூட இந்த சித்தியில் இருந்து வந்தது தான். அதாவது, கனமான இந்த உடலை லேசாக்கி இறகு போல பறத்தல்.
நம் உடலை ஓரளவுக்கேனும் நாம் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது.
சாப்பிட்ட பின்னும் கூட வேகமாக நடக்குமளவு நம் சாப்பாட்டின் அளவைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மூச்சு விட வேண்டும்.
ராமனும் லட்சுமணனும் ராவணனுடன் சண்டை போட்டனர். லட்சுமணன் மயங்கி விட்டான். அவனை மிக எளிதாக தூக்கி விடலாம் எனக்கருதி முயற்சித்தான் ராவணன். முடியவில்லை. 20கைககளையும் சேர்த்து தூக்கமுயன்றான். அப்போதும் முடியவில்லை.
ஆனால், ஆஞ்சநேயர் வந்தார். ஒரே கையால் எளிதாக அவனைத் தூக்கி விட்டார். காரணம் என்ன! ராவணனுக்குள் நல்ல எண்ணம் இல்லை.
தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இதுபோன்ற சித்திகள் எல்லாம் வராது.
ஆஞ்சநேயர் நல்ல எண்ணத்தின் வடிவம். அவரால் எளிதாக லட்சுமணனைத் தூக்க முடிந்தது.
நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் இத்தகைய சித்திகள் கைகூடும்.
தொடரும்.
கலியுகம் மொத்தம் 4லட்சத்து 32 ஆயிரம் வருஷங்கள். இப்போது தான் 5116ம் ஆண்டை எட்டியிருக்கிறோம். அஷ்டமாசித்திகளை அடைந்த வசிஷ்டர் 71 சதுர்யுகம் வாழ்வார். ஒருசதுர்யுகம் என்றால் 43 லட்சத்து 21 ஆயிரம் ஆண்டுகள். இதை 71ஆல் பெருக்கினால்....!
அவ்வளவு வருஷம் வாழ்பவர் வசிஷ்டர்.
இன்றைய சூழ்நிலையில் நம்மால் அஷ்டமாசித்திகளை அடைய முடியுமா என்றால் முடியவே முடியாது. நிலைமை அப்படி இருக்கிறது.
திருமலைக்கும், சோளிங்கருக்கும் போய் மலை ஏற ஆசை இருக்கிறது. ஆனால் கால் ஆபத்து தடுக்கிறது. மலை ஸ்தலங்களில் நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஏதோ கயிறு கட்டி (ரோப்கார்) தூக்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு தான் உடலின் நிலை இருக்கிறது.
இப்படியிருக்க, இந்த உடலைக் கொண்டு அஷ்டமாசித்திகளை அடைவது என்றால் எப்படி?
அப்படி கஷ்டம் என்று சொல்லும் அளவுக்கு இந்த அஷ்டமா சித்திகளில் தான் என்ன இருக்கிறது?
அனிமா என்றால் அணுத்தன்மையை அடைதல். அதாவது, நம் உருவத்தை ஒரு அணுவின் அளவுக்கு சுருக்கிக் கொள்ளுதல். ஆறு அடி உள்ளவன் இந்த சித்தியைப் பெற்றால், புள்ளியளவு கூட தன்னைச் சுருக்கும் ஆற்றல் பெறுவான்.
லகிமா என்றால் லேசாக மாறுதல்.
"இலகுவான' (லேசான) என்று சொல்கிறோமே! அந்தச் சொல் கூட இந்த சித்தியில் இருந்து வந்தது தான். அதாவது, கனமான இந்த உடலை லேசாக்கி இறகு போல பறத்தல்.
நம் உடலை ஓரளவுக்கேனும் நாம் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது.
சாப்பிட்ட பின்னும் கூட வேகமாக நடக்குமளவு நம் சாப்பாட்டின் அளவைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மூச்சு விட வேண்டும்.
ராமனும் லட்சுமணனும் ராவணனுடன் சண்டை போட்டனர். லட்சுமணன் மயங்கி விட்டான். அவனை மிக எளிதாக தூக்கி விடலாம் எனக்கருதி முயற்சித்தான் ராவணன். முடியவில்லை. 20கைககளையும் சேர்த்து தூக்கமுயன்றான். அப்போதும் முடியவில்லை.
ஆனால், ஆஞ்சநேயர் வந்தார். ஒரே கையால் எளிதாக அவனைத் தூக்கி விட்டார். காரணம் என்ன! ராவணனுக்குள் நல்ல எண்ணம் இல்லை.
தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இதுபோன்ற சித்திகள் எல்லாம் வராது.
ஆஞ்சநேயர் நல்ல எண்ணத்தின் வடிவம். அவரால் எளிதாக லட்சுமணனைத் தூக்க முடிந்தது.
நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் இத்தகைய சித்திகள் கைகூடும்.
தொடரும்.
இன்னும் இனிக்கும்.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நல்ல எண்ணங்களை கடைப்பிடிப்போம் .
நன்றி , தொடருங்கள் .
ரமணியன்
நன்றி , தொடருங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
T.N.Balasubramanian wrote:நல்ல எண்ணங்களை கடைப்பிடிப்போம் .
நன்றி , தொடருங்கள் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
Similar topics
» பக்தியில் பலவகை உண்டு. - --வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும்..மனகோலம்
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும்..மனகோலம்
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
Page 2 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|