ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

4 posters

Go down

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Empty ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

Post by ராஜா Wed Jan 13, 2016 7:18 pm

ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழர்களாகிய நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, அரசும் கோர்ட்டும் நல்லாவே விளையாடுகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னால், ஒரு மிகப் பெரிய வியாபார சதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுத் தடைக்கும், வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்த உண்மை புலப்படும். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக பால் மற்றும் அது சார்ந்த வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது.

இந்த பால் வணிகத்தின் தேவையை, 85 சதவீதத்திற்கும் அதிகமாக இந்திய கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகளே பூர்த்தி செய்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய பால் சந்தையில் நுழைய முடியாத நிலை நீண்டகாலமாகவே நீடிக்கிறது. இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது.ஏனெனில் இந்த சர்வதேச பால் நிறுவனங்கள்தான் ஜெர்சி இன மாடுகளை, கலப்பின பசுக்களை தமிழகம் உள்ளிட்ட பாரம்பர்ய விவசாய மாநிலங்களுக்கு அனுப்பிவைத்து, நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்தன.



ஜல்லிக்கட்டு என்பது மனிதர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவதற்கு மட்டும் நடத்தப்படுவது அல்ல. காளைகளின் ஓட்டத் திறனையும், உடல் வலிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அதே நேரத்தில், காளையை பராமரிக்கும் உரிமையாளர் தனது காளையை எந்த அளவிற்கு ஆரோக்கியத்துடன் வளர்த்துள்ளார் என்று பெருமிதம் கொள்ளும் நிகழ்வும் ஆகும்.மேலும் ஜல்லிக்கட்டு காலம் தவிர்த்து மற்ற காலங்களில் இந்த காளைகள், இன பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் முக்கியமானதொன்று.

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Jallikattu%20one%20pic

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தடை செய்வதன் மூலமாக காளைகளின் பராமரிப்பு நாளடைவில் குறைந்து விடும். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் சில வருடங்களில் வெகுவாகக் குறையும். தமிழகத்தின் கறவை மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறையும். பால் தேவைக்குப் பெரும் திண்டாட்டம் நிலவும். இதனைத்தான் உலக பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இதன் மூலமாக நமது பால் சந்தையில் வலுவாகக் காலூன்ற நினைக்கின்றன. சோப், பேஸ்ட், முகப்பூச்சு கிரீம்கள், பவுடர்கள், குளிர்பானங்கள், குடி தண்ணீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்று அனைத்து பொருட்களிலும் வணிக ரீதியாக நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது பால் வணிகத்தைக் குறிவைத்துள்ளன.

இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் பிரதேசங்களில் வளரக் கூடிய ஜெர்சி ரக பசுக்களை இந்தியாவில் இறக்குமதி செய்து பணம் சம்பாதிக்க நினைக்கும் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், அவை இந்திய சூழ்நிலையில் வாழ இயலாதவை என்பதை உணரவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளின் தட்ப வெப்ப நிலை வேறு, நமது நாட்டில் உள்ள பருவநிலை வேறு. அவைகளுக்கென்று குளிரூட்டப்பட்ட மாட்டு பண்ணைகள் வேண்டும். நமது பசுக்களை போல காடு மேடு எல்லாம் திரிந்து மேய்ந்து அவை பால் தராது. அவைகளுக்கென்று தனியாக உணவுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதாவது தற்போது செல்வந்தர் வீடுகளில், நடுத்தர வர்க்க வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு ரக நாய்களுக்கு உணவுகள் அயல்நாடுகளில் இருந்து வருவதைப்போல.

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Newsiland

நமது நாட்டில் உள்ள தட்பவெட்ப நிலைக்கு ஒத்துவராத ஜெர்சி ரக பசுக்கள் சில நாட்களிலே உடல்நிலை சரி இல்லாமல் ஆகும். அதற்கும் மருந்துகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதையெல்லாம் இங்கு உள்ள சாதாரண விவசாயினால் செய்ய முடியாது. அதனால் இதனை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் இதற்கென பிரத்யேகப் பண்ணைகளை அமைப்பார்கள். இன்று பல மாடுகளின் உரிமையாளராக இருக்கும் விவசாயிகள் இந்த பண்ணையில் கூலி தொழிலாளி ஆவார்கள். அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.

தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும்.

2015 - ம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, பிரேசிலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.4 மில்லியன் அளவிற்கு ஏற்றுமதி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக மட்டும் கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்கு எதிராக எத்தனை விலங்குகள் நல அமைப்பு போரட்டங்கள் நடத்தின?அவ்வாறு நடத்தினாலும் அது ஜல்லிக்கட்டை தடை செய்வதிற்கு எடுத்த முயற்சிகள் அளவுக்கு, இதைத் தடுக்க முயற்சி எடுக்காதது ஏன்? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..!


-எஸ்.கே பிரேம் குமார்
( மாணவ பத்திரிக்கையாளர் )
நன்றி - விகடன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Empty Re: ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

Post by கார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 7:22 pm

இங்கேயுமாடா உங்க கார்பொரேட் குப்பை .... என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் நான் ரெடி, நீ ரெடியா பயம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Empty Re: ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

Post by krishnaamma Wed Jan 13, 2016 7:44 pm

//இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தடை செய்வதன் மூலமாக காளைகளின் பராமரிப்பு நாளடைவில் குறைந்து விடும். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் சில வருடங்களில் வெகுவாகக் குறையும். தமிழகத்தின் கறவை மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறையும். பால் தேவைக்குப் பெரும் திண்டாட்டம் நிலவும். இதனைத்தான் உலக பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.//


அடப்பாவிகளா?...................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.................... கோபம்
.
.
.
அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும். 



நிஜம் தான்..................சோகம் 
.
.
.
தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..! 



இது ரொமப சரி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Empty Re: ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

Post by Dr.S.Soundarapandian Wed Jan 13, 2016 7:49 pm

சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Empty Re: ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்
» கார்ப்பரேட் கேண்டிடேட்!
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum