Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
3 posters
Page 1 of 1
ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' (PETA - People for the Ethical treatment of animals ) இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறது.
'' ஜல்லிக்கட்டு" என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுள்ள பீட்டா நிறுவனத்தின் மறுமுகத்தைம் 'ஹாஃபிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் சுருக்கமான விவரம் இது...
யார் இந்த PETA?
சர்வதேச அளவில், விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஓர் நிறுவனமாகத் தன்னை காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனம், 1980ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. விலங்குகளை உண்ணவோ, அவற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது, விலங்குகளை வைத்து எந்த மருத்துவ ஆய்வும் செய்யக் கூடாது என்பதெல்லாம் இவர்களின் முக்கியக் கொள்கை. அதே சமயம் செல்லப்பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 லட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். லாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த ’பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், அனாதையாக அலையும் அப்பாவி விலங்குகளைக் காப்பாற்றி அவற்றிற்குப் புகலிடம் அளிக்கும் சரணாலயமாக 'பீட்டா' செயல்படுகிறது என்று மக்களிடம் நிலவும் நம்பிக்கைதான். ஆனால் உண்மையில் 'கருணைக் கொலை' என்ற பெயரில் ’பீட்டா’ விலங்குகள் இனத்தையே அழித்து வருவதாக அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. இங்கு அனாதையாக மீட்கப்படும் செல்லப்பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் வந்து மீட்டு செல்லவில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணை கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை பீட்டா நிறுவனம் கொன்று குவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்த இந்தச் செய்தி தற்போது, ஆவணப்படங்களுடன் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ’பீட்டா’ வின் முகத்திரையைக் கிழிக்குமாறு சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார் 'நேதன் இனொக்ராட்' என்ற சமூக ஆர்வலர். ஹாஃபிங்டன் போஸ்டில் வெளி வந்துள்ள, அந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அதிர வைக்கும் ரகம்.
* பீட்டா நிறுவனத்தின் வண்டிகளிலேயே விலங்குகளைக் கொல்வதற்கான விஷ ஊசிகளைக் கொண்ட பைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன.
* பீட்டா நிறுவனம், கொல்லப்பட்டச் சில வகை விலங்குகளின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க, 9000 டாலர்கள் செலவில், ஒரு பெரிய குளிர்பதன இயந்திரத்தையே இயக்கி வருகிறது.
* 2011-ம் ஆண்டு மட்டும் சுமார் 96% விழுக்காடு வீட்டு விலங்குகளைக் கொன்றிருக்கிறது ‘பீட்டா’. அதேபோல 2012-ல் 602 நாய்கள், 1045 பூனைகள் கொன்று குவித்திருக்கிறது.
*மொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், சுமார் 30 ஆயிரம் விலங்குகளைக் கொன்றிருக்கிறது ’பீட்டா’.
*இந்த விலங்குகளைப் பற்றிய கணக்கோ, புள்ளிவிவரமோ எந்த கணக்கேடுகளிலும் தென்படவில்லை. கருணைக் கொலை என்ற பெயரில் அமைதியாகக் கொல்லப்படும் இந்த விலங்குகள், சத்தமின்றி அப்புறப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில், குப்பைகளைக் கட்டுவது போல, பிளாஸ்டிக் பைகளில் மூட்டை கட்டப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.
* இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, ’பீட்டா’வில் அதிரடி சோதனை ஒன்று நடத்திய போது, தெரிய வந்த உண்மை அதிர்ச்சியளிக்கிறது. ’பீட்டா’ வால் விளம்பரப்படுத்தப்படுவது போல, விலங்குகளுக்கான காப்பகங்கள் எதுவும் அங்கு இல்லையென்றும், வெறும் கூண்டுகளில்தான் விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
*வீதிகளில் திரிந்து கொண்டிருக்கும் பூனைகள், பீட்டாவின் கூண்டுகளில் போதிய இடமில்லாவிட்டால், அவற்றைப் பிடிக்கும் இடங்களிலேயே சத்தமில்லாமல கொலை செய்யப்படுவதும் உண்டாம்.
* விலங்குகளின் உரிமைகளை காப்பாற்றுவதாக சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், அதன் வாழ்வாதாரத்தை மதிப்பதேயில்லை.
* விலங்குகளை தத்துக் கொடுப்பதற்காக எந்த வகையிலும் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் விலங்குகளுக்கு இன விருத்திக் கட்டுப்பாடு செய்யுங்கள் என்று அவற்றின் பாலின உரிமையை கூட பீட்டா பறிக்கிறது.
* இவர்களின் அதிகபட்ச விளம்பரங்கள், மாடல் அழகிகளை படமெடுத்து, அதன் மூலம் விலங்குகளைக் காப்பாற்றச் சொல்வதேயாகும்.
* இது குறித்து குரலெழுப்பிய சில ஆர்வலர்களிடம், சட்டரீதியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறது பீட்டா .
ஜல்லிக்கட்டை 'பீட்டா' எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தின் மாட்டுப் பால் சந்தை, ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழங்கும் ஒரு பெரும் வர்த்தகம். ஜல்லிக்கட்டு காளைகள்தான் தமிழகத்தை பொறுத்தவரை, இன விருத்திக்கு முக்கியமானவை.
ஜல்லிக்கட்டு என்ற ஒன்றை அழித்து விட்டால், நாட்டு காளைகள் இனம் மங்கி அழியத் தொடங்கி விடும். இதனால் கலப்பின காளைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர முடியும். இதற்காகத்தான் ஜல்லிக்கட்டை இவ்வளவு தீவிரமாக பீட்டா எதிர்க்கிறதாம். மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருந்து நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து முழுமையான உண்மைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் கண்டுணர்ந்து உலகறியச் செய்ய வேண்டும்!
தன் கையில் ரத்தத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர் கையை கழுவ முயற்சிக்கிறது பீட்டா!
- ச.அருண், கோ.இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்கள்)
பின்குறிப்பு: வாசகர்களுக்கு PETA செயல்பாடுகள் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிந்தால், அதை விகடனுடன் பகிர்ந்து கொள்ளலாம். அது தொடர்பான தங்கள் செய்திகளை news@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். நன்றி!
நன்றி : விகடன் (காப்பி செய்ய கூடாது என்று தான் protect செய்திருந்தார்கள் அனைவருக்கும் இந்த செய்தி போகவேண்டுமென்பதால் தான் காப்பி செய்தேன்)
கட்டுரையின் மூலம் , ஆங்கில வடிவம் காண
http://www.huffingtonpost.com/nathan-j-winograd/peta-kills-puppies-kittens_b_2979220.html?ir=India&adsSiteOverride=in
தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' (PETA - People for the Ethical treatment of animals ) இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறது.
'' ஜல்லிக்கட்டு" என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுள்ள பீட்டா நிறுவனத்தின் மறுமுகத்தைம் 'ஹாஃபிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் சுருக்கமான விவரம் இது...
யார் இந்த PETA?
சர்வதேச அளவில், விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஓர் நிறுவனமாகத் தன்னை காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனம், 1980ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. விலங்குகளை உண்ணவோ, அவற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது, விலங்குகளை வைத்து எந்த மருத்துவ ஆய்வும் செய்யக் கூடாது என்பதெல்லாம் இவர்களின் முக்கியக் கொள்கை. அதே சமயம் செல்லப்பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 லட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். லாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த ’பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், அனாதையாக அலையும் அப்பாவி விலங்குகளைக் காப்பாற்றி அவற்றிற்குப் புகலிடம் அளிக்கும் சரணாலயமாக 'பீட்டா' செயல்படுகிறது என்று மக்களிடம் நிலவும் நம்பிக்கைதான். ஆனால் உண்மையில் 'கருணைக் கொலை' என்ற பெயரில் ’பீட்டா’ விலங்குகள் இனத்தையே அழித்து வருவதாக அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. இங்கு அனாதையாக மீட்கப்படும் செல்லப்பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் வந்து மீட்டு செல்லவில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணை கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை பீட்டா நிறுவனம் கொன்று குவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்த இந்தச் செய்தி தற்போது, ஆவணப்படங்களுடன் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ’பீட்டா’ வின் முகத்திரையைக் கிழிக்குமாறு சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார் 'நேதன் இனொக்ராட்' என்ற சமூக ஆர்வலர். ஹாஃபிங்டன் போஸ்டில் வெளி வந்துள்ள, அந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அதிர வைக்கும் ரகம்.
* பீட்டா நிறுவனத்தின் வண்டிகளிலேயே விலங்குகளைக் கொல்வதற்கான விஷ ஊசிகளைக் கொண்ட பைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன.
* பீட்டா நிறுவனம், கொல்லப்பட்டச் சில வகை விலங்குகளின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க, 9000 டாலர்கள் செலவில், ஒரு பெரிய குளிர்பதன இயந்திரத்தையே இயக்கி வருகிறது.
* 2011-ம் ஆண்டு மட்டும் சுமார் 96% விழுக்காடு வீட்டு விலங்குகளைக் கொன்றிருக்கிறது ‘பீட்டா’. அதேபோல 2012-ல் 602 நாய்கள், 1045 பூனைகள் கொன்று குவித்திருக்கிறது.
*மொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், சுமார் 30 ஆயிரம் விலங்குகளைக் கொன்றிருக்கிறது ’பீட்டா’.
*இந்த விலங்குகளைப் பற்றிய கணக்கோ, புள்ளிவிவரமோ எந்த கணக்கேடுகளிலும் தென்படவில்லை. கருணைக் கொலை என்ற பெயரில் அமைதியாகக் கொல்லப்படும் இந்த விலங்குகள், சத்தமின்றி அப்புறப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில், குப்பைகளைக் கட்டுவது போல, பிளாஸ்டிக் பைகளில் மூட்டை கட்டப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.
* இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, ’பீட்டா’வில் அதிரடி சோதனை ஒன்று நடத்திய போது, தெரிய வந்த உண்மை அதிர்ச்சியளிக்கிறது. ’பீட்டா’ வால் விளம்பரப்படுத்தப்படுவது போல, விலங்குகளுக்கான காப்பகங்கள் எதுவும் அங்கு இல்லையென்றும், வெறும் கூண்டுகளில்தான் விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
*வீதிகளில் திரிந்து கொண்டிருக்கும் பூனைகள், பீட்டாவின் கூண்டுகளில் போதிய இடமில்லாவிட்டால், அவற்றைப் பிடிக்கும் இடங்களிலேயே சத்தமில்லாமல கொலை செய்யப்படுவதும் உண்டாம்.
* விலங்குகளின் உரிமைகளை காப்பாற்றுவதாக சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், அதன் வாழ்வாதாரத்தை மதிப்பதேயில்லை.
* விலங்குகளை தத்துக் கொடுப்பதற்காக எந்த வகையிலும் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் விலங்குகளுக்கு இன விருத்திக் கட்டுப்பாடு செய்யுங்கள் என்று அவற்றின் பாலின உரிமையை கூட பீட்டா பறிக்கிறது.
* இவர்களின் அதிகபட்ச விளம்பரங்கள், மாடல் அழகிகளை படமெடுத்து, அதன் மூலம் விலங்குகளைக் காப்பாற்றச் சொல்வதேயாகும்.
* இது குறித்து குரலெழுப்பிய சில ஆர்வலர்களிடம், சட்டரீதியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறது பீட்டா .
ஜல்லிக்கட்டை 'பீட்டா' எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தின் மாட்டுப் பால் சந்தை, ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழங்கும் ஒரு பெரும் வர்த்தகம். ஜல்லிக்கட்டு காளைகள்தான் தமிழகத்தை பொறுத்தவரை, இன விருத்திக்கு முக்கியமானவை.
ஜல்லிக்கட்டு என்ற ஒன்றை அழித்து விட்டால், நாட்டு காளைகள் இனம் மங்கி அழியத் தொடங்கி விடும். இதனால் கலப்பின காளைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர முடியும். இதற்காகத்தான் ஜல்லிக்கட்டை இவ்வளவு தீவிரமாக பீட்டா எதிர்க்கிறதாம். மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருந்து நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து முழுமையான உண்மைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் கண்டுணர்ந்து உலகறியச் செய்ய வேண்டும்!
தன் கையில் ரத்தத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர் கையை கழுவ முயற்சிக்கிறது பீட்டா!
- ச.அருண், கோ.இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்கள்)
பின்குறிப்பு: வாசகர்களுக்கு PETA செயல்பாடுகள் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிந்தால், அதை விகடனுடன் பகிர்ந்து கொள்ளலாம். அது தொடர்பான தங்கள் செய்திகளை news@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். நன்றி!
நன்றி : விகடன் (காப்பி செய்ய கூடாது என்று தான் protect செய்திருந்தார்கள் அனைவருக்கும் இந்த செய்தி போகவேண்டுமென்பதால் தான் காப்பி செய்தேன்)
கட்டுரையின் மூலம் , ஆங்கில வடிவம் காண
http://www.huffingtonpost.com/nathan-j-winograd/peta-kills-puppies-kittens_b_2979220.html?ir=India&adsSiteOverride=in
Re: ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
-
விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு
-
Re: ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
இவனுகள துப்பாக்கியாலே சுடுனும் அண்ணே .
ஊருக்கு தான் உபதேசம் ..வெட்டி பசங்க ..
தூத்துக்குடி பக்கம் அம்பது திமிங்கிலம் சாகுது .. அத கேக்க துப்பு இல்ல ..துப்பு கெட்ட பொழப்புக்கு ஒரு அமைப்பு ...
ஊருக்கு தான் உபதேசம் ..வெட்டி பசங்க ..
தூத்துக்குடி பக்கம் அம்பது திமிங்கிலம் சாகுது .. அத கேக்க துப்பு இல்ல ..துப்பு கெட்ட பொழப்புக்கு ஒரு அமைப்பு ...
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Similar topics
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» “மகாத்மா காந்தியை பின்பற்றுங்கள்” ஆப்பிரிக்க தலைவர்களுக்கு ஒபாமா அறிவுரை.!!
» தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி
» ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» “மகாத்மா காந்தியை பின்பற்றுங்கள்” ஆப்பிரிக்க தலைவர்களுக்கு ஒபாமா அறிவுரை.!!
» தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|